ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143269 topics in this forum
-
யாழில் ஒரே நாளில் 5 பொதுமக்கள் படுகொலை யாழ்ப்பாணத்தில் ஒரே நாளில் 5 பொதுமக்கள் நேற்று வியாழக்கிழமை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வலிகாமம் பகுதியில் பேரம்பலம் நவக்குமார் (வயது 27), செல்லத்துரை கார்த்தீஸ்வரன் (வயது 36), ஐயாத்துரை குமாரகுலசிங்கம் (வயது 41) ஆகியோர் சந்தைக்கு ஈருருளியில் சென்றனர். ஆனால் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து மூவரையும் உறவினர்கள் தேடியபோது கைவிடப்பட்ட நிலையில் அவர்களது ஈருருளிகள் காணப்பட்டன. அதன் பின்னர் அளவெட்டி பெரியவிளான் சிறிலங்கா முன்னரங்க காவலரண் பகுதியில் நேற்று மாலை மூவரது உடல்களும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் சம்பவ இடத்துக்குச் சென்று உடல்களைப் பார…
-
- 1 reply
- 981 views
-
-
பனாமா, ஹொன்டூராஸ் நாடுகளில் பதிவு செய்யப்பட்ட புலிகளின் கப்பல் விடுதலைப் புலிகள் அமைப்பினரிடம் தற்காலத்துக்கேற்ற அதிநவீன தொழில்நுட்பங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்ட 11 நவீன கப்பல்கள் உள்ளன எனவும் இவை சர்வதேச கடற்பிராந்தியங்களில் போக்குவரத்துச் செய்து வருவதாகவும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் காப்புறுதி ஸ்தானபமாகிய சர்வதேச லோயிட்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்படும் லோயிட் லிஸ்ற் (Loyds List) அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. ஆசிய ப் பிராந்திய நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் பல்வேறு கப்பல் நிறுவனங்கள் தொடர்புடையவை எனவும் இந்த நிறுவனங்களின் சர்வதேச கப்பல் போக்குவரத்து செயற்பாடுகளின் கீழே மேற்படி விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான கப்பல்கள் சர்வதேச கடற்பிராந…
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழ். கிளைமோரில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயம் யாழ். கிளைமோர் தாக்குதலில் இரு சிறிலங்கா இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். வலிகாமம் கிழக்கில் நேற்று வியாழக்கிழமை காலை வீதி சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து அச்சுவேலி, நவக்கிரி, நிலாவரை ஆகிய பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கைகள நேற்று காலை முதல் பிற்பகல் வரை மேற்கொண்டனர். தேடுதல் நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்தினர் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாக்குதல் நடத்தியோர் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகிறது. இதில் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய…
-
- 0 replies
- 895 views
-
-
"சம்பூரை ஆக்கிரமிக்க 2 ஆயிரம் பேர்- தக்க வைக்க 20 ஆயிரம் பேர்" சிறிலங்கா இராணுவத்தினர் 2 ஆயிரம் பேர் சம்பூரை ஆக்கிரமித்திருக்கலாம் ஆனால் அதனைத் தக்க வைக்க 20 ஆயிரம் இராணுவத்தினர் தேவைப்படுவர் என்று சிறிலங்காவின் ஓய்வுபெற்ற ஏர் மார்சல் ஒருவரை மேற்கோள்காட்டி "இந்துஸ்தான் ரைம்ஸ்" கட்டுரை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 25 ஆண்டுகாலமாக தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் நீடித்து வரும் இராணுவ ரீதியான யுத்தத்தால் சிறிலங்காவில் இருந்த அரசாங்கங்கள் அனைத்தும் தெற்காசியாவிலேயே பாரிய அளவில் இராணுவ மயமாக்கப்பட்ட ஒருநாடாக சிறிலங்காவை உருவாக்கி உள்ளன. இந்த நிலைமைக்கு சிறிலங்கா அரசாங்கங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்…
-
- 0 replies
- 939 views
-
-
வியாழன் 21-09-2006 13:44 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழில் சிறீலங்காப் படையினரால் பாகிஸ்தான் ஆயுதங்கள் பாவனையில். பலாலி படைத்தலைமையகம் உட்பட ஊரெழு யாழ்ப்பாணம் கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக ஏவப்படும் ஆட்லெறிகள் மற்றும் பல் குழல் ஏவுகனைகளின் சத்தம் வேறுபட்டுக் காணப்படுவதாக பொதுவாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த வாரத்தில் பாகிஸ்தான் நாட்டில் இருந்த எடுத்து வரப்பட்ட ஆயுதங்களில் ஒரு பகுதியான ஆயுதங்களை படைத்தரப்பினர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இந்த சத்தத்தின் வேறுபாடுகள் எடுத்துக் காட்டுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள். கடந்த இரண்டு நாட்களாக வழமைக்கு மாறாக பலத்த எறிகனை வீச்சுக்கள் இரவு முழுவதும் வன்னிப் ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
வியாழன் 21-09-2006 15:34 மணி தமிழீழம் [மயூரன்] ஈழத் தமிழர்களுக்கு பாதிப்பென்றால் அதனை தட்டிக்கேட்க 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள் - வைகோ எந்த பாதிப்பு வந்தாலும் ஈழத்தமிழரை ஆதரிப்போம் அவர்களுக்கொன்று என்றால் அதைத் தட்டிக்கேட்பதற்கு ஆளில்லை என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கா ஆறுகோடி தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். கரூர் மாவட்ட ம. தி. மு. க. செயல் வீரர்கள் கூட்டம் கொங்கு திருமண மன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் மா. கட்டையன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, இப்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிற தி. மு. க. அரசு மக்களின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. மாறாக…
-
- 0 replies
- 936 views
-
-
வியாழன் 21-09-2006 15:38 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பில் கடத்தப்பட்ட வைத்தியர் கெக்கிராவ பகுதியில் விடுவிப்பு. கொழும்பு, புளூமென்டல் வீதியில் வைத்து கடந்த திங்கட்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்திச்செல்லப்பட்ட தமிழ் வைத்தியரான முருகேசு குணாளன் (வயது 51) நேற்றுமுன்தினம் இரவு கெக்கிராவ பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்ததாவது: கடந்த திங்கட்கிழமை பகல் வேளையில் கொழும்பு 11, புதுச்செட்டித்தெருவிலுள்ள தனது மருத்துவ நிலையத்திலிருந்து கொட்டாஞ்சேனை, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மேற்படி வைத்தியர், ஆயிரம் ரூபாவிற்கு காருக்கு பெற்றோல் நிரப்பியுள்ளார். பின்னர், பு…
-
- 0 replies
- 779 views
-
-
வியாழன் 21-09-2006 14:21 மணி தமிழீழம் [மயூரன்] பயங்கரவாதத்திற்கான சில காரணங்களை இராணுவ ரீதியில் அழிக்கமுடியாதென ஜனாதிபதி தெரிவிப்பு. பயங்கரவாதத்திற்கான சில காரணங்களை இராணுவ ரீதியில் அழிக்கமுடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழிழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ அல்லது அணுசரணையாளர்களின் உதவியுடனோ பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொது அவையில் நேற்று உரையாற்றிய அவர். தமிழPழ விடுதலைப்புலிகள் ஜனநாயக வழிக்கு திரும்புவர் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழிழ விடுதலைப்புலிகள் தமது நலத்திற்காக தமிழ் மக்களின் நீதியான நிலைப்பாடுகளை பிழையான வழியில் முன்கொண்டு செல்வதாக அவர் …
-
- 0 replies
- 681 views
-
-
அம்பாறையில் தொடரும் முழு அடைப்புப் போராட்டம் [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:40 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து அம்பாறை மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமையும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அம்பாறை, அக்கரைப்பற்று மற்றும் சம்பாந்துறை ஆகிய பிரதேசங்களில் முழு அளவிலான போராட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே சாஸ்திரவெளி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி எஸ்.என்.குணரத்னவும் மாற்றப்பட்டுள்ளார். http://www.eelampage.com/?cn=28913
-
- 0 replies
- 692 views
-
-
ஐ.தே.க.- சு.க.இணைந்து செயற்பட துணைக்குழு அமைப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:44 ஈழம்] [கொழும்பு நிருபர்] ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இணைந்து பொதுச்செயற்திட்டத்தில் செயற்படுவதற்காக துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நியமனத்தை கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜி.எல்.பீரீஸ் நேற்று வியாழக்கிழமை அறிவித்தார். ஜி.எல்.பீரிஸ் கூறியதாவது: ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 3 பேர் வீதம் இக்குழுவில் மொத்தம் 6 பேர் இடம்பெற உள்ளனர். கடந்த செப்ரெம்பர் 19 ஆம் நாள் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இத்துணை விவாதித்து ஒருமித்த கருத்தை உருவாக்கும். …
-
- 0 replies
- 797 views
-
-
தமிழ்ச்செல்வனுடன் இன்று பிறட்ஸ்கர் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 05:48 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். கிளிநொச்சியில் நடைபெறும் இச்சந்திப்பில் அண்மைய இணைத்தலைமை நாடுகள் கூட்டத்தின் செய்தி தெரிவிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது. பிரசெல்ஸில் நடைபெற்ற இணைத் தலைமை நாடுகள் கூட்ட முடிவில் சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் நிபந்தனையற்ற பேச்சுக்கு தயாராக உள்ளதாகவும் ஒக்டோபரில் ஓஸ்லோவில் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் இதனை நிராகரி…
-
- 0 replies
- 649 views
-
-
எம்.கே.நாராயணனுடன் த.தே.கூ. உறுப்பினர்கள் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2006, 00:22 ஈழம்] [ம.சேரமான்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வியாழக்கிழமை புதுடில்லியில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். சிவாஜிலிங்கம் புதுடில்லியிலிருந்து கூறியதாவது: தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதுடில்லியில் இந்திய வெளிவிவகார இணை …
-
- 0 replies
- 799 views
-
-
பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலங்குகிறது: இந்திய அதிகாரிகள் பாகிஸ்தான் இராணுவ உதவியால்தான் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பான அமைதிப் பேச்சுக்களிலிருந்து சிறிலங்கா விலகிச் செல்லுகிறது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவிப்பதாக "ஏசியா ரைம்ஸ்" ஓன்லைன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்டுரையின் தமிழ் வடிவம்: சிறிலங்கா இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே வார்த்தை யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொழும்பில் தனது தூதரக அதிகாரியை கொல்ல இந்திய உளவு நிறுவனம் முயற்சி…
-
- 0 replies
- 718 views
-
-
தென்திசையில் பூக்கும் புதியதொரு கியூபா பூங்குழலி போர் குதறிய ஈழ மண்ணில், அண்மையில் சிங்கள வெறியர்களின் மற்றுமொரு கொடூரப் படுகொலை. பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பராமரிப்பு இல்லமான செஞ்சோலை மீது 14.8.2006 அன்று விமானத் தாக்குதல். 61 இளம் குருத்துகள் பலி. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம். பலாலி ராணுவ விமானத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், யாழ்ப்பாணம், திரிகோணமலை மற்றும் மட்டகளப்பு நகரங்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து நின்ற வேளையில், ராணுவ ரீதியாக அவர்களை சந்திக்க முடியாமல், உளவியல் ரீதியாக புலிகளைத் தாக்கவே, அந்த இளம் குருத்துகளைக் கொன்று, தன் ரத்த வெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம். …
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமை: சு.ப.தமிழ்ச்செல்வன் இலங்கை நிலைமைகளை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதென்பது எமது தார்மீகக் கடமையாக நாம் நினைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் "தமிழ்முரசு" நாழிதழுக்கு அவர் அளித்த நேர்காணல்: கேள்வி: கிளாலியிலும், முகமாலையிலும், சம்பூரிலும் புலிகள் பாரிய தோல்வியைச் சந்தித்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாகச் கூறி வருகிறது. இந்த மூன்று இடங்களிலும் கள நிலைமை என்ன? பதில்: கிளாலி, முகமாலைப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவம் தன்னுடைய நிலைகளில் இருந்து 400-500 மீற்றருக…
-
- 0 replies
- 962 views
-
-
http://www.atimes.com/atimes/South_Asia/HI22Df01.html
-
- 0 replies
- 1.5k views
-
-
பளையில் விமானக் குண்டு வீச்சு- நாகர்கோவில் பகுதியில் மோதல் யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கி சிறிலங்கா இராணுவத்தினர் ஆர்ட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். முன்னதாக இன்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா விமானப் படையின் கிபீர் ஜெட் விமானங்கள் தென்மராட்சி பளை பிரதேசம் பச்சிலைப்பள்ளி கிராமத்தின் மீது 9 குண்டுகளை வீசியது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. தொடர்ந்து நாகர்கோவில் பகுதியில் இருதரப்புக்கும் இடையே மோர்ட்டார் மற்றும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கி நேற்று புதன்கிழமை மாலை 5 மணி முதல் இன்று வியாழக்கிழமை காலை 11 மணிவரை தொடர்ச்சியான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆயுதக் கடத்தல்களை தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்: மகிந்த ராஜபக்ச சிறியரக மற்றும் இலகுரக ஆயுதக் கடத்தல்கள் மூலம் அரசாங்கம் அல்லாத சக்திகளுக்கு எளிதில் ஆயுதங்கள் கிடைத்து விடுவதால் உள்நாட்டுப் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இதனைத் தடுக்க சர்வதேச சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 61 ஆம் ஆண்டுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்படும் எந்த ஒரு நல்லெண்ண நடவடிக்கைக்கும் சிறிலங்கா அரசாங்கம் நல்ல பதில் அளிக்க தயாராக உள்ளது. பயங்கரவாத இயக்கம் என்ற தன்மையிலிருந்து மாறி பேச்சுவார்த்தை, ஜனநாயக முறைக்கு தமிழீழ விட…
-
- 1 reply
- 1.1k views
-
-
லண்டனில் 33 உள்ளுராட்சிப் பகுதிகளில் இன்று உலக சமாதான நாள் (புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 17:03 ஈழம்)(ஐரோப்பிய நிருபர்) ஐ.நா சபையின் அனுசரணையுடன் உலகெங்கும் நடைபெற உள்ள "உலக சமாதான நாள்" நிகழ்வுகள் லண்டனில் இன்றூ வியாழக்கிழமை ஈழத்தமிழர்களால் நடத்தப்பட உள்ளன. பிரித்தானியா வாழ் தமிழீழ மக்களை ஒன்றிணைத்து கரோ கவுன்சிலர் தயா இடைக்காடர் தலைமையிலான "பிரித்தானியா தமிழ் கவுன்சிலர் அமைப்பு" இப் பாரிய ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளது. லண்டன் உள்ளுராட்சிப் பகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் 33 உள்ளூராட்சி மன்றங்களின் முன்பும் இந்த ஒன்று கூடல் நடைபெற இருக்கிறது. ஒன்று கூடல் நிகழ்வானது இன்று பிற்பகல் 12.00 மணிக்கு தொடங்கி இரவு 8.00 மணிவரை நடைபெற உள்ளது. …
-
- 1 reply
- 963 views
-
-
புலிகளின் போர்த்தந்திரம் குழம்பும் சிங்களத் தளபதிகள் இலங்கையில் போர் நிறுத்தம் புறக்கணிக்கப்பட்டு மீண்டும் போர் தொடங்கியுள்ளது. போர் நிறுத்தமும் அமைதிக்கான முயற்சிகளும் அனைத்துலக கண்காணிப்புடன் நடைபெற்றுவரும் காலக்கட்டத்தில் சிங்கள இராணுவ விமானங்கள் தொடர்ந்து திரிகோணமலை, மாவிலாறு, மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு இதைக் கண்டித்துத் தாக்குதலை நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதைச் செய்யவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்ற போர்வையில் சிங்கள இராணுவம் கீழ்க்கண்ட இலக்குகளை அடைய முற்பட்டது. 1. மாவிலாறு பகுதியைக் கைப்பற்றுவது. 2. இதன் மூலம் இராணுவத்தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகளுக்கான சமதரப்பு நிலைக்கு எதிர்ப்பு: நோர்வேயிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு "சமதரப்பு" நிலையை அளிக்கக்கூடாது என்று நோர்வேயிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். ஐ.நா. ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள மகிந்த ராஜபக்ச அங்கு நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்டொல்ட்ன்பெர்க்கை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது நோர்வே பிரதமரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது: நோர்வே மற்றும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இடையேயான இருதரப்பு உறவு மேம்படுத்தப்பட வேண்டும். இந்த இருதரப்பு உறவானது இரு இறைமையுள்ள அரசுகளுக்கு இடையேயானது. இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நோர்வே அரசாங்கமானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு இணையா…
-
- 0 replies
- 1k views
-
-
கதவடைப்புப் போராட்டதில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கி கடைகளை திறக்குமாறு கூறிய அதிரடிப்படையினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் மக்கள் மீது அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு. காயம் அடைந்த 10 பேர் பொத்துவில் மருத்துவமையிலும் படுகாயம் அடைந்த 4 பேர் கல்முனை மருத்துவமையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். -Tamilnet.com அம்பாறை உல்லைப் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் 14 பேர் காயம். புதன் 20-09-2006 15:38 மணி தமிழீழம் [மகான்] அம்பாறை உல்லை பகுதியில் இன்று காலை முஸ்லிம் மக்கள் மீது விசேட அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் 14 முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் நால்வரின் நிலை கவலைக்கிடமான ம…
-
- 0 replies
- 850 views
-
-
மூதூரில் சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட அரச சார்பற்ற பணியாளர்கள் 17 பேரில் 15 பேரின் உடல்களை மீண்டும் தோண்டியெடுக்க அனுராதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூதூர் படுகொலை வழக்கை சிறிலங்கா நீதித்துறை சேவைகள் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட அனுராதபுரம் நீதிபதி வசந்தா ஜினதாச விசாரித்தார். முன்னர் 17 உடல்களை தோண்டியெடுக்க வசந்த ஜினதாச உத்தரவிட்டிருந்தார். ஆனால் 17 பேரில் இருவரது உறவினர்கள் மட்டுமே அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதர 15 உடல்களையும் தோண்டியெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் சாட்சிகளை கந்தளாய் நீதிமன்றில் ஒக்டோபர் 4 ஆம் நாள் முன்னிலையாகவும் அவர் தாக்கீது…
-
- 0 replies
- 823 views
-
-
[புதன்கிழமை, 20 செப்ரெம்பர் 2006, 20:11 ஈழம்] [புதினம் நிருபர்] இந்திய வெளிவிவகார இணை அமைச்சர் அகமதுவை புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசினர். மேலும் புதிதாக பொறுப்பேற்க உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சிவசங்கர் மேனனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் ஈழத் தமிழரின் துயரங்கள் குறித்தும் இந்திய அமைச்சர் மற்றும் செயலாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விளக்கியுள்ளனர். முன்னதாக சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய சபையின் கருத்தரங்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்…
-
- 0 replies
- 754 views
-
-
உலக மனித உரிமை நிலையத்தின் அறிக்கை http://hrw.org/backgrounder/asia/srilanka0...anka0906web.pdf
-
- 1 reply
- 1.2k views
-