ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் வடக்கு - கிழக்கு ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும் - கலையரசன் By VISHNU 15 NOV, 2022 | 03:25 PM (இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு வருடத்திற்குள் தீர்வென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக நாம் அவருடன் சேர்ந்து பயணிக்க வேண்டுமானால் அவர் முதலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புகளை நிறுத்த வேண்டும். பாதுகாப்பு துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள இந்த வரவு செலவுத் திட்டம் யுத்தக் கால பாதீடாக காணப்படுகிறது என தமிழ் தேசியக்கூட்…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
சிறையில் அரசியல் கைதி என எவரும் இருக்கக் கூடாது : அரசியல் கைதி பார்த்தீபனின் சகோதரி உருக்கமான வேண்டுகோள் By VISHNU 15 NOV, 2022 | 05:01 PM இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன் சிறையில் அரசியல்கைதி என எவரும் இருக்க கூடாதென உருக்கமான கோரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்கள் அண்ணாவும் நானும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். நீண…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி உயரதிகாரிகளால் தென்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாந்தை கிழக்கு பிரதேசத்தின் கரும்புள்ளியான் ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் தமது பகுதிக்கே பெற்றுத் தருமாறு கோரி 07 பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். உலக வங்கியின் உதவியின் கீழ் கரும்புள்ளியான் குடி நீர் திட்டத்திற்கு என ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி தென்பகுதிக்கு மாற்றப்பட்டமை எமது பிரதேச மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பிப்பதற்கு ஜனவரி மாதம் பத்திரிகையில் கேள்வி கோரல் விளம்பரம் செய்யப்பட்டு …
-
- 3 replies
- 522 views
- 1 follower
-
-
சிறுவர்கள், பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முறையிட தொலைபேசி இலக்கங்கள் By VISHNU 15 NOV, 2022 | 03:17 PM சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகளிர் பணியகம் ஆகியவை இணைந்தே இந்த இலக்கங்களை அறிமுகம் செய்துள்ளன. சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற இலக்கத்துக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகள் 1938 என்ற இலக்கத்துக்கும் தெரிவிக்கலாம். வேலை நாட்களில் காலை 8.30…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
காகத்தின் கூட்டில் முட்டையிட்ட குயிலுக்கு நேர்ந்த கதியே ஜனாதிபதிக்கும் ஏற்படும் - ஹர்ஷ டி சில்வா By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 02:45 PM (இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்) 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சமூக பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்படவில்லை. அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கும் மக்களை அடக்குவதற்காக பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்குரோத்து நிலை அடைந்துள்ள நிலையிலும் அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜங்க அமைச்சுக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் 22வயதுடைய சுரேஸ் விதுசன் என்னும் இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் பாலி…
-
- 2 replies
- 404 views
-
-
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது தாக்குதல் - மூன்றரை வயது குழந்தை உயிரிழப்பு By T. SARANYA 15 NOV, 2022 | 01:39 PM (எம்.வை.எம்.சியாம்) மாத்தளை, ரன்பிமகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது மேற்கொண்ட வாள் தாக்குதல் காரணமாக மூன்றரை வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீது இவ்வாறு வாள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தாய் மற்றும் அவரது மூன்று பிள்ளைகள் குறித்த ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த பெண் அவரது மகள…
-
- 0 replies
- 131 views
- 1 follower
-
-
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்தாருக்கு நன்கொடை By T. SARANYA 15 NOV, 2022 | 12:51 PM பாராளுமன்ற உறுப்பினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொன்னூரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின்போது கொலை செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மனைவியிடம் நேற்று (14) கையளித்தார். பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தின் பின்னர் இந்த பணத்தை ஜனாதிபதி கையளித்தார். பிரதி சபாநாயகர் அஜித் ர…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை! இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையத்தை பார்வையிட்டதோடு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர் குறித்த விஜயத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும…
-
- 0 replies
- 267 views
-
-
மே 9ஆம் திகதி கோட்டாபயவை கொல்வதற்கு திட்டம் தீட்டப்பட்டது – விமல் வீரவன்ச கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்தபோது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தோடு, கோட்டை ஜனாதிபதி மாளிகை, மற்றும் அலரி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் பிரவேசித்து அவற்றை ஆக்கிரமித்திருந்தனர். இதன்போத…
-
- 0 replies
- 151 views
-
-
பருத்தித்துறையில் 13 இளைஞர்கள் கைது! சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை , சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 13 இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை , பாவனைகள் மற்றும் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் போன்ற அநாகரிக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் , பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் வீதி சுற்றுக்காவல் (ரோந்து) நடவடிக்கைகளை முன்னெடுத்த போது , வீதிகளில் அநாவசியமாக கூட்டம் கூடி நின்றமை , சந்தேகத்திற்கு இடமா…
-
- 0 replies
- 199 views
-
-
அஞ்சலிக்காக நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்! யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்புத்தர வேண்டுமென யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த…
-
- 0 replies
- 282 views
-
-
கிழக்கில் எனது அரசியல் பயணத்தை முடக்க சுமந்திரன் சதி – பிள்ளையான் குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சபையில் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும் இனிமேல் அவர் தமக்கு சம்பந்தமில்லாத விடயங்களை சிறப்புரிமையாக சபையில் முன் வைக்க இடமளிக்கக் கூடாதென்றும் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சபாநாயகரை கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் சிறப்புரிமை பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், தான் கிழக்கில் முன்னெடுக்கும் அரசியல் பயணத்தை முடக்கும் முயற்சிகளில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் சபையில் குறிப்பிட்டார். அது தொடர…
-
- 0 replies
- 179 views
-
-
தரமுயரும் காங்கேசன்துறை துறைமுகம் : 35 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க அங்கீகாரம் ! By DIGITAL DESK 2 15 NOV, 2022 | 10:41 AM பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, இதற்காக இலங்கை துறைமுக அதிகார சபைக்கும் திறைசேரிக்கும் இடையில் கடனுதவி ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் கை…
-
- 0 replies
- 214 views
- 1 follower
-
-
நாட்டின் சனத் தொகை கணக்கெடுப்பை அடுத்தாண்டு ஆரம்பத்தில் முன்னெடுக்க திட்டம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 04:13 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு அடுத்தாண்டு ஆரம்பத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிடுகிறது. இதன் முதல் கட்ட வரைபட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் பி.எம். பிரசாத் அநுர குமார குறிப்பிட்டார். அதன் இரண்டாம் கட்ட, பட்டியல் எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், இம்மாதம் மற்றும் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்றும் இதற்காக ஐக்கிய நாடுகளின் சனத்தொ…
-
- 0 replies
- 309 views
- 1 follower
-
-
இந்தியாவிலிருந்து வந்த பெண் உள்ளிட்ட மூவரிடம் கொள்ளை : உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் பொலிஸில் சரண் By VISHNU 14 NOV, 2022 | 08:09 PM (எம்.எப்.எம்.பஸீர்) இந்தியாவுக்கு சென்று துணி மணிகளை கொள்வனவு செய்து எடுத்து வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் போது, ஜா எல பகுதியில் வைத்து பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் பயணித்த வாகனத்தை மறித்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் உடமையிலிருந்த 40 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க வெளிநாட்டு நாணயம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், களனி வலய குற்ற விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் கொண்ட குழு நீதிமன்றில் இன…
-
- 3 replies
- 713 views
- 1 follower
-
-
கொரியாவுக்கு சென்ற இலங்கை மகளிர் றக்பி அணித்தலைவியை காணவில்லை By DIGITAL DESK 3 14 NOV, 2022 | 01:31 PM சர்வதேச றக்பி சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவதற்காக தென் கொரியாவுக்குச் சென்றிருந்த இலங்கை மகளிர் றக்பி அணியின் தலைவி துலானி பல்லேன்கொந்தகே காணாமல் போயுள்ளார். 7 பேர் கொண்ட அணிகளுக்கிடையிலான ஏசியன் றக்பி செவன்ஸ் தொடரின் 2 ஆவது கட்டப் போட்டியில் பங்குபற்றுவற்காக இலங்கையின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தென் கொரியாவுக்குச் சென்றிருந்தன. இப்போட்டிகளின் பின்னர் இலங்கை அணி தென்கொரியாவின் இன்சின் நகரிலிருந்து இன்று முற்பகல் இலங்கைக்குப் புறப்படவிருந்தது. இந்நிலையில் இலங்கை மகளிர் அணியின் தலைவி துலானி பல்லேகொந்…
-
- 1 reply
- 369 views
- 1 follower
-
-
ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பொதுச்செயலாளர் ரவிகருணாநாயக்க By RAJEEBAN 14 NOV, 2022 | 05:44 PM ரவிகருணாநாயக்க ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரவிகருணாநாயக்கவை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவும் இதனை விரும்புகின்றார் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் இது குறித்து ரவிகருணாநாயக்கவுடன் அவர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளன. ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார ஆளுநராக நியமிக…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
கிழக்கு ஆளுனர் மற்றும் வியட்நாம் தூதுவருக்கிடையில் சந்திப்பு By T. SARANYA 14 NOV, 2022 | 04:50 PM கிழக்கு மாகாணத்தின் வர்த்தகர்கள் மற்றும் வியட்நாம் இலங்கைத் தூதுவர் ஹோ தி தான் ட்ரூக் மற்றும் மாகாண ஆளுநர் அனுராதா யம்பத் ஆகியோர் தலைமையில் வியட்நாம்-இலங்கை வர்த்தக உச்சி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் பாசிக்குடா அமயா பீச் ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் வியட்நாம் வர்த்தகர்களுக்கு புதிய முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூர் வர்த்தகர்கள் வியட்நாமில் செய்யக்கூடிய முதலீட்டு வாய்ப்புகள் குறித…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு தட்டுப்பாடு : ஒரு ரிக்கெற்றை இரண்டாக வெட்டி வழங்க வேண்டியுள்ளதாம்! By T. SARANYA 14 NOV, 2022 | 04:10 PM பல முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கசுன் சாமர ஜயசேகர தெரிவித்துள்ளார். சிலாபம் மற்றும் லுணுவில நிலையங்களில் 20 ரூபா பெறுமதியான பயணச்சீட்டுகள் இல்லாததால், 40 ரூபா பயணச்சீட்டுகளை இரண்டாக வெட்டி இரண்டு பயணிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை, மருதானை, கம்பஹா, மொரட்டுவை, பாணந்துறை, வெயங்கொடை, கம்பஹா ஆகிய இடங்களில் அதிக எண்ணிக்கையில் ப…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
மின்னல் தாக்கி ஒருவர் பலி : இருவர் காயம் : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By DIGITAL DESK 2 14 NOV, 2022 | 12:25 PM (எம்.வை.எம்.சியாம்) புத்தளம், நவகத்தேகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் மின்னல் தாக்கி மூவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நவகத்தேகம - கிரிமெட்டியாவ பிரதேசத்தில் வயல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மூவர் மீது இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளது. இதன் போது காயமடைந்த மூவரும் அம்புலன்ஸ் மூலம் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார…
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
கஞ்சாவை பயிரிடுவது குறித்து ஆராய நிபுணர் குழு. ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1310497
-
- 1 reply
- 179 views
- 1 follower
-
-
தமிழ்க் கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் இணைய வேண்டும் – மஹிந்த தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெர…
-
- 2 replies
- 372 views
-
-
சிறுமியின் முகநூல் கணக்கை திருடி அதே சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்திய நபர் தொடர்பில் விசாரணை! By DIGITAL DESK 5 14 NOV, 2022 | 12:05 PM 17 வயது சிறுமியின் முகநூல் கணக்கை திருடி, அந்தக் கணக்கின் ஊடாக சிறுமியை விற்பனைக்கு விளம்பரப்படுத்தி சமூகமயப்படுத்தினார் எனக் கூறப்படும் தொலைபேசி பழுதுபார்ப்பவர் தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் தொலைபேசி பழுதுபார்ப்பவரிடம் தனது தொலைபேசியை பழுதுபார்ப்பதற்குக் கொடுத்ததாகவும், சில மணித்தியாலங்களின் பின்னர் அதனைப் பழுதுபார்த்து தன்னிடம் கொடுத்ததாகவும் சிறுமி செய்த முறைப்பாட்டில் தெரிவிக்க…
-
- 0 replies
- 156 views
- 1 follower
-
-
ஹிருணிக்கா பிரேமச்சந்திர கைது By T. SARANYA 14 NOV, 2022 | 01:37 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பல குற்றச்சாட்டுக்களின் கீழ் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/139984
-
- 1 reply
- 325 views
- 1 follower
-