ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
கே .குமணன் ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் இடையூறாக இருப்பதாகவும், பலதடவைகள் தாம் குருந்தூர்மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எடுத்த முயற்சிக்கு ரவிகரன் இடையூறாக இருந்ததாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொலைபேசிமூலம் தொடர்புகொண்ட முல்லைத்தீவு போலீசார் எதிர்வரும் செப்ரெம்பர் 02ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. குருந்தூர்மலை பௌத்த வழிபாடுகளுக்கு ரவிகரன் இடையூறாக இருப்…
-
- 1 reply
- 262 views
-
-
பொதுஜன பெரமுனவின் 13 பேர் எதிர்க்கட்சி பக்கம் சென்றனர்! ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 13 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி பக்கத்தில் இருந்து எதிர்க்கட்சி பக்கத்திற்கு சென்றுள்ளனர். ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, நாலக கொடஹேவா, சரித ஹேரத், சன்ன ஜயசுமன, கே.பி.எஸ். குமார சிறி, குணபால ரட்ணசேகர, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, உபுல் ஹலப்பதி, திலக் ராஜபக்ஷ, லலித் எல்லாவல ஆகியோர் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிவித்தலை வெளியிட்டு அவர்கள் எதிர்க்கட்சி பக்கம் சென்றுள்ளனர். http://www.samakalam.com/பொதுஜன-பெரமுனவின்-13-பே…
-
- 1 reply
- 426 views
-
-
ஜனாதிபதியின்... இன்றைய நாடாளுமன்ற உரை, முழுமையாக::: 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும்... 2022 டிசம்பருக்குள், ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2022 ஆம் ஆண்டின் எஞ்சியுள்ள காலப்பகுதிக்கான அரசின் ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான இரண்டாவது மதிப்பீடு ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தம் மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளையும், எதிர்வரும் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாகவும் அறிவக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குறித்த மதிப்பீட்டை சபையில் சமர்பித்து ஜனாதிபதி ஆற்றிய உரையின் சில முக்கிய தரவுகள் வருமாறு- ” புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும…
-
- 14 replies
- 841 views
-
-
ஸஹ்ரான் - புலஸ்தினி உறவை மறைத்தமை தொடர்பில் சஹ்ரானின் மனைவி மீது குற்றச்சாட்டு 31 Aug, 2022 | 11:08 AM உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில் ஆட்சேபனை பொலிஸாரினால் எழுப்பப்பட்ட நிலையில் எழுத்து மூல சமர்ப்பணத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு நேற்று (30) வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி வழக்கானது விசாரணைக்காக எடு…
-
- 0 replies
- 327 views
-
-
அரகலய மெய் சிலிர்க்க வைத்தது – ராஜபக்சாக்கள் நாட்டிற்கு செய்தவற்றால் நான் அவர்களை வெறுக்கின்றேன்.- அரகலய அவர்களை அகற்றியது குறித்து மகிழ்ச்சி- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா By Rajeeban 31 Aug, 2022 | 08:56 AM இலங்கை எதிர்கொண்டுள்ள நிதிபேரிடர் நிலைமை இரண்டு ராஜபக்சாக்களின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களின் விளைவு என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ராஜபக்சாக்களை ஆட்சியிலிருந்து அகற்றி அரகலய் மெய்சிலிர்க்க வைத்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். எங்கள் அமைப்புமுறை வீழ்ச்சியடைந்துள்ள போது வேண்டுமென்றே அழிக்கப்பட்டுள்ள போது நீங்கள் எப்படி நிலைமையை மாற்றுவீர்கள் என கேள்வி எழுப்பிய…
-
- 0 replies
- 252 views
-
-
வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் By T Yuwaraj 31 Aug, 2022 | 07:00 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்) ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள புள்ளி விபரங்கள் உள்ளிட்ட தகவல்கள் தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாகவும், இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (30) நிதி அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்ட அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்க…
-
- 0 replies
- 123 views
-
-
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சர்வதேச தினம் இன்று ! சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டங்கள் By VISHNU 29 AUG, 2022 | 07:25 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான இன்று செவ்வாய்க்கிழமை (30), சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் மூலம் தமக்கான நீதி வழங்கப்படவேண்டுமென வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தினர் வடக்கு - கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர். வருடாந்தம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பி…
-
- 4 replies
- 258 views
- 1 follower
-
-
மின்சார வேலியில் சிக்குண்டு காட்டு யானை உயிரிழப்பு : நவகத்தேகம பகுதியில் சம்பவம் By VISHNU 30 AUG, 2022 | 03:42 PM நவகத்தேகம பிரதேச செயலகத்திற்குற்பட்ட தம்மன்னாவெட்டிய கிராமத்தில் காட்டு யானையொன்று இன்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த காட்டு யானை கிராமத்திலேயே பல நாட்களாக அங்குமிங்கும் சுற்றித்திரிந்ததாக கிராம மக்கள் கூறியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த காட்டு யானை 25 வயதுடையது என மதிக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது த…
-
- 0 replies
- 191 views
- 1 follower
-
-
காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... உறவுகளால், யாழில் போராட்டம்! சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள UNHRC அலுவலகம் முன்பாகவே இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்தில் யாழ். பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1296700
-
- 3 replies
- 321 views
-
-
(நா.தனுஜா) பொருளாதார, நிதி மறுசீரமைப்பு மற்றும் கொள்கைவகுப்பு தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக நாட்டிற்கு வருகைதந்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டக்குழுவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நிதி நெருக்கடிக்கு உரியவாறான தீர்வைக் கண்டறிவதை முன்னிறுத்திய ஆரம்பகட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றதுடன், இதன் தொடர்ச்சியாக இரண்டாம் சுற்றுக்கலந்துரையாடல்களை நாளைய தினம் (26) நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி செயற்திட்டம் தொடர்பில் தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கான முதற்கட்ட நகர்வாக ஊழியர்மட்ட …
-
- 1 reply
- 300 views
- 1 follower
-
-
By VISHNU (தலைமன்னார் நிருபர்) மன்னார் தீவில் நடைபெற்று கொண்டிருக்கும் காற்றாலை நிர்மானத்தாலும் கனியவள மணல் அகழ்வாலும் மிகவும் குறுகிய காலத்துக்குள் மன்னார் தீவு கடலுக்குள் அமிழப் போகும் அபாயம் தோன்றியுள்ளமையால் மக்களின் குரல் ஒலிக்க தொடங்கியுள்ளதால் மன்னார் பிரஜைகள் குழு இதற்கான தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது. நாம் ஒன்றுபட்டு அழிவிலிருந்து தீவை காப்பாற்ற வேண்டும் என பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் 23 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை பிரஜைகள் குழுவின் அலுவலகத்தில் இதன் தலைவர் அருட்பணி அ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இடம…
-
- 11 replies
- 516 views
- 1 follower
-
-
வெளிநாடு சென்ற இலங்கை பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி! திடுக்கிடும் தகவல்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டு பணிப்பெண் என்ற போர்வையில் 30 பெண்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை டுபாயில் அஜ்மலில் உள்ள ரகசிய வீட்டில் தங்க வைத்து பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடூரமான சித்ரவதைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் பின்னால் ஒரு கும்பல் இயங்குவதாக தெரியவந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சு, சுவிஸ் அபிவிருத்தி முகவர் இணைந்து நடத்தும் பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான திட்டம் தொடர்பில் கம்…
-
- 0 replies
- 279 views
-
-
இடைக்கால வரவு செலவுத் திட்டம் இன்று! இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிற்பகல் 01.00 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுவார். பிற்பகல் 01 மணி முதல் 02 மணி வரை வரவு செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ஆற்றவுள்ளார். அதனையடுத்து நாளை (31) காலை 09.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளதுடன் அதன் பின்னர் திருத்தப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர…
-
- 0 replies
- 226 views
-
-
தேங்காய்க்கு... தட்டுப்பாடு ஏற்பட்டால், தென்னை அபிவிருத்தி அதிகார சபையே... பொறுப்பேற்க வேண்டும்? நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதற்கு தென்னை அபிவிருத்தி அதிகார சபையே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் புத்திக டி சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இரண்டு மாதங்களில் 2 மில்லியன் தேங்காய்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதால் எதிர்காலத்தில் சந்தையில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலப்பகுதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி குறைந்த காலப்பகுதியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 0 replies
- 284 views
-
-
அமைச்சுப் பதவியினை.. ஏற்பதற்கு தயார் – தம்மிக்க பெரேரா. பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பொறுப்புகளுடன் கூடிய அமைச்சுப் பதவியினை ஏற்பதற்குத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு தாம் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், தற்போதைய நெருக்கடி நிலைமையினை நிர்வகிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமானால் மீண்டும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்றுக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1296697
-
- 0 replies
- 176 views
-
-
நுரைச்சோலை அனல் மின்நிலைய சீன அதிகாரிகளுக்காக 12 வருடங்களாக பெருமளவு பணம் செலவு - முஜிபுர் ரஹுமான் By T. SARANYA 29 AUG, 2022 | 09:29 PM (இராஜதுரை ஹஷான்) நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள சீன நிறுவனத்தின் அதிகாரிகளுக்காக 12 வருடங்களாக பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளன. இந்த செலவுகள் மின்சாரக் கட்டணத்திலேயே உள்வாங்கப்பட்டுள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற மின்சார கட்டண உயர்வு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
சர்வதேச நாணய நிதியம் பலவந்தமாக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை - அலி சப்ரி By T YUWARAJ 30 AUG, 2022 | 06:19 AM (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியம் பலவந்தமான முறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வரவில்லை. எமது தேவைகாக அவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளும் போது நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்த வேண்டும். நட்டமடையும் அரச நிறுவனங்களை கால தேவைக்கமைய மறுசீரமைக்காவிடின் நாட்டு மக்களுக்கான அடிப்படை நலன்புரி சேவைகளை கூட வழங்க முடியாத நிலை ஏற்படும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி சபையில் தெரிவித்தார். பாராளுமன்றில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற மின்கட்டண …
-
- 0 replies
- 166 views
- 1 follower
-
-
கல்முனை... வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு, வெள்ளிக்கிழமைக்குள் தீர்வு? கல்முனை வடக்கு (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலக பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கிடையில் தீர்க்கமானதொரு நல்ல முடிவை வழங்குவதாக பிரதமரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சருமான தினேஸ் குணவர்த்த உறுதியளித்துள்ளார். கல்முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்த்தனவை, தானும் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனும் சந்தித்து கலந்தரையாடிய வேளையிலேயே இதனை பிரதமர் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. …
-
- 0 replies
- 202 views
-
-
தீர்வைக் காண்பதற்காக புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை! முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையிலான குழுவினர் தமிழ் அமைப்பு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பர் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் டெலிகொன்பரன்ஸ் முறை மூலம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகள் எழுப்பிய கரிசனைகள் குறித்து தீர்வை காண்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபஷ முன்னாள் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா தலைமையில் மூவர் கொண்ட குழுவை நியமி…
-
- 1 reply
- 226 views
-
-
இலங்கையை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன். நாடு இல்லாத தமிழ் இனம் இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று ச…
-
- 7 replies
- 768 views
-
-
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு! வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்த…
-
- 9 replies
- 1.1k views
-
-
16 இலட்சம் அரச ஊழியர்களில்... சுமார் 10 இலட்சம் பேர், வினைத்திறனான சேவையை செய்வதில்லை என குற்றச்சாட்டு! 16 இலட்சம் அரச ஊழியர்களில் சுமார் 10 இலட்சம் பேர் வினைத்திறனான சேவையை செய்வதில்லை என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அரச சேவையை அரச உத்தியோகத்தர்களாலேயே விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல்வாதிகள் பெரிய தியாகம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி முடிவு எடுக்க வேண்டும். அதேபோல பொது சேவை ஊழியர்களும் பணியாற்ற வ…
-
- 3 replies
- 709 views
- 1 follower
-
-
இலங்கை அரசுக்கு எதிராக பட்டம் விட்டு கொழும்பில் போராட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக, கொழும்பு 'காலி' முகத்திடலில் பட்டம் விட்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 'SHE TALKS' என்ற பெண்கள் அமைப்பினால் இந்த பட்டம் விடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்ற சட்டங்களை பயன்படுத்தி, அமைதி வழி போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுகின்றமை, அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றமை, போலீஸார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பட்டம் விடும் நடவடிக்கையை ஏற்பாடு செய்துள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிடுகின்றது. அடக்குமுறைகளுக்கு அச்சப்பட்…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு! ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளையும் அதன் நிர்வாகத்தையும், விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் அதன் நிர்வாகத்தின் 49 சதவீத பங்குகளையும் முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்குவதற்கான விலைமனுக்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பாக அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், "தற்போது ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் லாபம் ஈட்டுகிறது. எனவே, நாங்கள் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவன பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 51 சதவ…
-
- 4 replies
- 441 views
-
-
கோட்டா இலங்கை வருகிறார் ! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடுதிரும்ப உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை நாட்டிற்கு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்ற பாதுகாப்பு மற்றும் வசதிகள் வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் இப்போது செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/203774
-
- 0 replies
- 564 views
-