Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்பதன் மூலம் மேலும் தமிழர்களின் ஆதரவு வி.புலிகளின்பாலே செல்லும்.

    • 2 replies
    • 1.5k views
  2. வன்னி முல்லைத்தீவு மக்களின் அவலங்கள் நீங்குவதற்கான எந்த நல்ல அறிகுறியும் தெரியவில்லை. போர்ப் பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தி யாவசியப் பொருள்கள் கிடைப்பதில்லை. தேவையை விட கால்வாசி, அரைக்கால்வாசியைப் பெற முடிந்தாலும் யானை விலை, குதிரை விலை கொடுக்க வக்கற்றவர்கள், அதற்கான பணப்புழக்கம் இல்லாதவர்கள், முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட நிலையில் பொழுதைக் கழித்து உடல் வற்றிச் சாகும் நிலைதான். முல்லைத்தீவுப் பகுதியில் அரிசி, கோதுமைமா மற்றும் உப உணவுப் பொருள்கள் போதியளவு இல்லை என்பது வெளிச்சம். பணப்புழக்கம் இல்லாத பகுதியில் அவற்றின் விலைகள் அவர்களுக்கு எட்டாத தொலைவில் உயரப் பறப்பது இயல்பே. தொழில் இன்றி, வருமானம் இன்றி, நிரந்தர அகதிகளாகி விட்ட லட்சக்கணக்கான மக்கள் தங்கியு…

    • 0 replies
    • 1.5k views
  3. நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்க கையொப்பமிட்டுள்ளேன் – ஜனாதிபதி போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு வெகு விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே நான்கு போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதற்காக தான் கையொப்பம் இட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/185235/

    • 9 replies
    • 1.5k views
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருடைய மனைவி மற்றும் மகள் என சந்தேகிக்கப்படும் இருவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி புலி முக்கியஸ்தரின் 30வயதுடைய மனைவியும் 13வயதுடைய மகளுமே இவ்வாறு நாட்டைவிட்டுத் தப்பிச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் மிகவும் இரகசியமான முறையில் ஹங்கேரி நாட்டுக்குத் தப்பிச் செல்ல முயன்ற போதே பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த இவர்கள் வவுனியா தற்காலிக நலன்புரி முகாமில் த…

    • 0 replies
    • 1.5k views
  5. ‘தேசத்தின் பேரன்னை’ பார்வதி அம்மாவுக்கான இரங்கற் செய்தி தலைமைச் செயலகம், த/செ/இ/செ/01/11 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 20/02/ 2011. அன்பான தமிழ் பேசும் மக்களே! தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் திருமதி பார்வதி வேலுப்பிள்ளை அவர்கள் இன்று (20/02/2011) வல்வெட்டித்துறையில் காலமானார். அன்னை பார்வதியம்மாவின் மறைவுச் செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங…

    • 0 replies
    • 1.5k views
  6. ஐ.தே.கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் தி. மகேஸ்வரன் கடந்த வருடம் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வைத்து பாதுகாப்பு உயரதிகாரிகளைப் பார்த்து ஓர் எச்சரிக்கையை விடுத்தார். நாட்டில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், கப்பம் அறவிடல், சட்ட விரோதப் படுகொலைகளைக் கண்டித்து ஆவேசமாக உரையாற்றிய அவர், ஆட்சியிலிருப்பவர்களின் தூண்டுதலின் பேரில் பாதுகாப்பு உயரதிகாரிகள் இத்தகைய அரச பயங்கரவாதத்துக்குத் தொடர்ந்தும் துணை போவார்களானால் அடுத்த ஆட்சியில் கட்டாயம் அதற்கு அவர்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும் என்ற அறிவுறுத்தலையே பகிரங்கமாக அவர் அன்று அங்கு வெளிப்படுத்தினார். ஆட்சிப் பீடத்தின் சட்டவிரோத செயற்பாடுகளுக்குத் துணைபோகும் அரச…

    • 0 replies
    • 1.5k views
  7. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பங்காளியான தமிழரசு கட்சியின் உபதலைவர், பேராசிரியர் எஸ்.கே. சிற்றம்பலம் அவர்கள் சீனாவால் அழைக்கப்பட்டுள்ளார். 27 ஆம் திகதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது தெரிவிக்கப்பட்டது. இது ஒரு வழமையான நிகழ்வுதான் என தமிழரசு கட்சி கூறியபோதும் முன்பு எப்போது இவ்வாறு அழைக்கப்பட்டனர் என கேட்கப்பட்டதற்கு பதில் தரப்படவில்லை. தமிழர் தேசிய கூட்டமைப்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாசைகளை அவர்களின் தனித்துவத்தை அழிப்பதே இந்தியாவின் நோக்கமாக பரவலாக எண்ணப்படுகின்றது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு எது நிராகரிக்கப்பட்டதோ அதை மகிந்த அரசால் தரமுடியாது. தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகள் …

    • 6 replies
    • 1.5k views
  8. புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து "கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார். சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானத…

  9. 'கனவு மெய்ப்பட்ட கொசொவோ!" 'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது." கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் (வுர்யுஊஐ) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:- 'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாற…

    • 2 replies
    • 1.5k views
  10. [size=6]கருணாநிதியின் கபட நாடகம்![/size] - பழ. நெடுமாறன் [size=4]தமிழீழம் உருவாக வேண்டும். அதை விரைவில் காண வேண்டும். அதற்காகவே வாழ விரும்புகிறேன். அதைக் கண்டபின் உயிரைவிடவும், காண்பதற்காக உயிரை விடவும் விரும்புகிறேன்'' என தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி திருவாரூரில் 9-6-12 அன்று நடைபெற்ற தனது 89-வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார்.[/size] [size=4]தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதம் ஏந்தியப் போராட்டமாக நடைபெற்ற, கடந்த 30 ஆண்டுகாலத்தில் மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் மு.கருணாநிதி. இவருடைய பதவிக் காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு இவர் எந்த அளவுக்கு உதவி செய்தார், துணை நின்றார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகு…

  11. ஈ.பி.டி.பியினருக்கு, பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும்! ஜ செவ்வாய்கிழமைஇ 10 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.டி.பி. யின் அலுவலகங்களில் இருந்து வரும் டக்ளசின் தோழர்கள் கடந்த ஐந்து நாட்களாக பச்சைத் தண்ணியுடனும் வெறும் பருப்புக் கறியுடனும் சோறுசாப்பிட்டு வருகின்றனர். என்னப் பிரச்சினை என்று கேட்டால்! கடைத் தெருவுக்கு வந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவோம் என்று பனாகொடை புகழ் கருணாவின் நபர்கள் மிரட்டல்கள் விடுத்திருக்கின்றராம். இதனால்தான் பச்சைத் தண்ணியும் பருப்புக்கறியும் சாப்பிடவேண்டியுள்ளது. அதிலும் அம்பாறை மாவட்டத்தில் இனிய பாரதி (இப்போது புளித்த பாரதி) ஏ.கே. 47 ரகத் துப்பாக்கியை தலைகீழாக தொங்கவிட்டுக்கொண்டு அலுவலகம் முன்பாக மோட்டார் சைக்க…

  12. முத்தையா முரளிதரனின் சாதனையின் போர்வையில் மறக்கடிப்பட்ட ஆதித் தீ கடந்த ஜூலை 22 இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி மிகப் பெரும் சாதனையை நிலை நாட்டினார். பேரானந்தத்தில் வெறிபிடித்தவர்கள் போல மைதானத்துக்குள் குதித்த ரசிகர்கள், சிங்கக் கொடியை அசைத்தபடி முரளியின் பின்னால் ஓடினர். சிங்கக் கொடியின் பிண்ணனியில் சக விளையாட்டு வீரர்களின் தோள்களில் பயணிக்கும் முரளியின் புகைப்படங்கள் தேசத்தின் எல்லாப் பத்திரிகைகளையும் பூரணப்படுத்தின. தனது திறமைக்குக் களம் தந்த விளையாட்டினை, வெற்றிகரமான ஒரு சாதனையோடு முடித்துக்கொண்ட முரளி, முழு இலங்கைக்குமே பெருமையைத் தேடித் தந்த ஒருவரென பத்திரிகைகள் எழுதி எழுதி மகிழ்ந்தன. …

  13. தெற்கே மகிந்தவையும் வடக்கே கஜேந்திரகுமாரயும் தோற்கடித்து இனவாதத்துக்கு இடமில்லை என இலங்கை மக்கள் ஒட்டு மொத்தமாக நிரூபித்து விட்டார்கள் என ஊடகவியலாளர் உபுல் ஜோசப் பெனாண்டோ, சிலோன் டுடே பத்திரிகையில் எழுதி உள்ளார். இந்த ஆரோக்கிய நிலைமையினை புதிய அரசு, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார் அவர். மகிந்தவுக்கு புதிதாக சொல்லிக் கொண்டு வாக்குக் கேட்க எதுவும் இருக்கவில்லை. இனவாதம் கதைத்தே கரை சேரலாம் என்று நினைத்தார். எனினும் மக்கள் அவரது எதிபார்ப்புக்கு செவி சாய்க்க வில்லை. மறுபுறத்தே, அதே போல் வீராவேசமாக பேசி தமிழர் வாக்குகளை பெற முடியும் என கணக்கு போட்ட கஜேந்திரகுமாரயும், வடக்கே மக்கள் வீட்டுக்கே அனுப்பி விட்டார்கள். ஐ தே க வாக்குகள் 2 மில்லியனில் இருந்து …

  14. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்து பேசிய தமிழக எம்பிக்கள் குழுவினர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்களது சொந்த இடங்களில் விரைவில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பல்வேறு முகாம்களில் உள்ளனர். அவர்களின் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக திமுக கூட்டணி எம்.பி.க்கள் குழுவினர் கடந்த 10ஆம் தேதி மதியம் கொழும்பு புறப்பட்டுச் சென்றனர். முதலில் விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்திய தமிழக குழுவினர், கடந்த 11ஆம் தேதி யாழ்ப்பாணம் சென்று, தமிழ் மக்…

    • 2 replies
    • 1.5k views
  15. மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்தியுள்ளது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம். மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை …

  16. வாஷ் அவுட் ஆனது ரத்தசரித்திரம் - நஷ்டத்தை ஈடுகட்ட இறங்கி வந்தார் சூரியா! தமிழ்சினிமா வரலாற்றில் தாயகத் தமிழர்கள், உலகத்தமிழர்களின் சாபத்துக்கு ஆளான ஒரு படமென்றால் அது ரத்தசரித்திரம்தான் என்கிறார்கள் கோலிவுட் செய்தியாளர்கள். தமிழர்களை மதிக்காத விவேக் ஓபராய், அவரை நியாப்படுத்திய சூரியா இருவரும் நடித்த படமென்பதால் அதை வெளியிட விடமாட்டோம் என்றார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர். இன்னொருபக்கம் ரத்தசரித்திரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி பதிப்புகளில் நடித்தற்கான ஊதியத்துக்குப் பதிலாக தமிழ் ரத்தசரித்திரம் படத்தின் விநியோக உரிமையை பெற்றுக்கொண்டாராம். சூரியா படத்தை வெளியிட்டால் கோபத்தில் இருக்கும் நாம் தமிழர் இயக்கம் பெரிய தடையாக இருக்கும் என்பதை உணர்ந்த சூரியா, அதை ஆளும் க…

  17. எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் பொதுமன்னிப்புக் காலத்திற்குள் சரணடையாத சேவையிலிருந்து தப்பியோடிய கடற்படையினரை கைது செய்வதற்கென நாடளாவிய ரீதியில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா கடற்படை அதிகாரி சோமதிலக்க திசாநாயக்க தெரிவித்துள்ளார். சேவையை விட்டுச் சென்றமைக்காக எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்காது அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் கால அவகாசத்தை மேலும் நீடிக்கப் போவதில்லை என்பதால் இந்தக் காலப்பகுதியில் சேவையில் இணைந்து கொள்வதே மதிநுட்பமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eelampage.com/?cn=28398

    • 3 replies
    • 1.5k views
  18. http://www.pathivu.com/tv/index.php?mact=N...nt01returnid=58

  19. ஜேர்மனியின் தேசிய மட்ட சாதனை மாணவர்களில் ஒருவராக தமிழ் சிறுமி! ஜேர்மனியின் தேசிய மட்ட கல்விச் சாதனையாளர்களில் ஒருவர் என்கிற பெருமை இலங்கைத் தமிழ் மாணவியான வீரசிங்கம் துர்க்கா (வயது 17) என்பவருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. “talent in the country” என்கிற அங்கீகாரத்தை இவ்வருடம் அங்கு பெற்றிருக்கும் 50 மாணவர்களில் இவரும் ஒருவர். சராசரி மாணவர்களை விட அதி கூடிய திறமை உடையவர்கள் என்று இவர்கள் 50 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஜேர்மனை தளமாக கொண்டு இயங்கும் Robert Bosch and Baden-Württemberg Foundation என்கிற சர்வதேச புகழ் வாய்ந்த உயர்கல்வி ஸ்தாபனத்தால்தான் இப்பெருமையும், அங்கிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. துர்க்கா இந்நிறுவனத்தின் புலமைப் பரிசிலுடன் உயர்க…

  20. சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. தமிழ்மக்கள் அனைவரும் இந்த தேர்தலில் சரத்பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் இன்று திங்கள் மாலை வவுனியா வெளிவட்ட வீதியில் நடைபெற்ற சனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தரங்கில் பேசியபோது குறிப்பிட்டார். நாம் சனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிக்க முன்வந்த விடயம் அறிவிக்கப்பட்ட பின்னர் மலையகத்திலும் தென்னிலங்கையில் வாழுகின்ற தமிழர் மக்கள் மத்தியில் பெரும் மாற்றம் (?)காணப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் வேண்டும் என்ற எங்களுடைய…

    • 13 replies
    • 1.5k views
  21. Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் 02.00 PM - தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. 02.02 PM - சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய மன்றுக்கு வருகை 02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டத்தை நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சமர்ப்பிக்கின்றார். 02.0…

  22. ரியாஜ் பதியுதின் விடுவிக்கப்பட்டமைக்கான காரணம் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதினின் சகோதரர் ரியாஜ் பதியுதின் பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்டமைக்கான சாட்சிகள் இல்லாமையின் காரணமாகவே விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (06) ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேயசிறி ரியாஜ் பதியுதினின் விடுதலை தொடர்பில் வினவிய போதே சமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகள் முடிவடையவில்லை எனவும், எதிர்காலத்தில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்டதன் மூலம் நிரபராதி என கருத முடியாது எனவும் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

  23. எமக்கு வாய்ப்பு தாருங்கள் - வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓட வைப்போம் மாகாண சபை தேர்தலின் போது, வாய்ப்புக் கொடுத்தால், வட மாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரசியல் நிலவரங்கள் தொடர்பான ஊடகவியலாளர்கள் மாநாடு இன்று (16) ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் மக்களின் பின்னடைவிற்கு அரசாங்கம் காரணம் அல்ல, தமிழ் தலைமைகள் தான் அழிவிற்கும் பின்னடைவிற்கும் காரணம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார். 30 வருடத்தில் மக்கள் எதுவும் பெறவில்லை, அந்த பின்னடைவிற்கு தமிழ் தலைமைகள் தான் காரணம். மாகாண சபையினை தும்புத்தடியாலும் தொடம…

    • 14 replies
    • 1.5k views
  24. கிழக்கில் இராணுவ ஆட்சிக்கு வித்து தமிழ் மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் கிடுக்கிப் பிடியை இறுக்கி, அவர்களை நசுக்கிவிடுவதற்கான எல்லா வழிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அது பல்வேறு வடிவங்களில், கோணங்களில், துறைகளில் வெகு லாவகமாக - கச்சிதமாக - நடைமுறைப்படுத்தப்படுகிறது. மிகக் குறிப்பாக, கிழக்கு, தமிழர்களின் பூர்வீக வாழ்விடம் இல்லை என்று ஆக்குவதற்கான சூழ்ச்சிகள் இன்று நேற்றுத் தொடங்கப்பட்டவை அல்ல. இலங்கை சுதந்திரம் அடைந்த ஒரு சில வருடங்களிலேயே அபிவிருத்தி என்ற போர்வையில், அரசுகளால் - சிங்களப் பேரினவாதத்தால் - நடத்தப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ச்சி நிரலில் முதலாவது இடத்தைப் பிடித்துக்கொண்டன. அதன் பின்னர், அபிவிருத்தியில் அங்குள்ள தமிழர்களின் பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.