Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொதுத் தேர்தலை நடத்தினால்... அரசியல் வாதிகளுக்கு, நாட்டு மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்-முருந்தெட்டுவே ஆனந்த தேரர். நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் அரசியல்வாதிகள் அமைச்சு பதவிகளுக்காக போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை பொதுத்தேர்தலை நடத்தினால் நாட்டு மக்கள் பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்பதோடு சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை …

  2. பல அமைச்சுப் பதவிகளை, கோரிய... ஆளும் கட்சி. மறுப்பு தெரிவித்தார்... ரணில் !! சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மேலும் அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இதன்போது சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட…

  3. கோட்டாக்கு... எட்டு அடுக்கு, பாதுகாப்பு வழங்க... பசில் ராஜபக்ஷ கோரிக்கை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எட்டு அடுக்கு பாதுகாப்பினை வழங்குமாறு பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு நாட்டை கட்டியெழுப்ப பொதுஜன பெரமுன நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் வலியறுத்…

  4. வசந்த முதலிகே, உள்ளிட்ட.... மூவரை, 90 நாட்களுக்கு தடுத்து வைத்து... விசாரணைகளை மேற் கொள்வதற்கு அனுமதி. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த, கல்வௌ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரிடம் போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அன…

  5. அனல் மின் நிலையத்திற்கு... இரண்டு வருடங்களுக்கு, நிலக்கரி வழங்குகின்றது... ரஷ்ய நிறுவனம். நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இரண்டு வருடங்களுக்கு நிலக்கரி வழங்க ரஷ்ய நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஜகத் பெரேரா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நிலக்கரி விநியோகத்திற்கான விலைமனு கோரலுக்கு பதிலளித்த இரண்டு நிறுவனங்களில், ரஷ்ய நிறுவனம் ஏலம் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாகவும், மற்றைய நிறுவனங்களும் இன்று 19 வரை மேன்முறையீடு செய்யலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒக்டோபர் இறுதி வரை போதுமான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். …

  6. ஜனாதிபதி மாளிகையில் இருந்த... நீச்சல் தடாகத்தில், சவக்காரம் போட்டு குளிக்கும் காட்சியை.. பார்த்த வெளிநாடடவர்கள்.. எம்மை ஏளனமாக பார்த்தனர். – கமல் குணரத்ன.- காட்டாட்சிமூலம் பிரச்சினைகளை தீர்க்க இடமளிக்கமுடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(19) நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வன்முறையை தூண்டி, பொலிஸாரை தாக்கி, மிகவும் கீழ்த்தரமான விமர்சித்தவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, அத்தகையவர்களுக்காக நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகின்றனர். அதுமட்டுமல்ல ச…

  7. எனது பாதுகாப்பிற்காக... வழங்கப்பட்ட கைத்துப்பாக்கியைக் கூட, இதுவரை பயன்படுத்தியது கிடையாது. -பந்துல குணவர்த்தன.- Share rதங்களின் கொள்கையை முன்னிலைப்படுத்தி வன்முறையில் ஒரு தரப்பினர் ஈடுபடுவார்களாயின் அந்நாட்டில் என்றும் தேசிய பாதுகாப்பு பலமானதாக இருக்காது என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வவொன்றில் உரையாற்றிய அவர், தனது அரசியல் காலத்தில் இதுவரை அமைச்சர்களுக்கான வாசஸ்தலத்தில் தான் வாழ்ந்ததில்லை என்றும் வீட்டுக்கான வாடகையைக் கூட அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டதில்லை என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தனக்கு அரசமைப்பின் 14 (ஊ) சரத்து இல்லாமல் செய்யப…

    • 1 reply
    • 257 views
  8. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் நெகிழவைத்த செயல்! வட தமிழீழம்:- யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்களின் செயல்பாடு நிகழ்வில் கூடியிருந்த பலரையும் நெகிழ வைத்துள்ளது. வென்மேரி அறக்கட்டளை நிறுவனத்தினால் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆளுமைகளுக்கான விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் மக்களுக்காக அரும் பணியாற்றிய பல்துறை சார்ந்தவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவ் விழாவில் வைத்தியத்துறையின் ஆளுமைக்கான விருது யாழ்.போதனா வைத…

    • 2 replies
    • 460 views
  9. மைத்திரிபால சிறிசேனவிடம்... குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணை! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(வியாழக்கிழமை) சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார். இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாகவே மைத்திரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து ம…

  10. கோட்டா... நாடு திரும்புவது குறித்து, தெரியாது – ரணில்! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக இலங்கைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com…

  11. அமைச்சர் பதவிகளை பெற்று... மக்களுக்கு சுமையாக மாற, விரும்பவில்லை – சஜித் தரப்பு! அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் நாடாளுமன்ற குழுக்களில் இருந்து கொண்டு நாட்டை கட்டியெழுப்ப ஆதரவு வழங்க காத்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியாக இந்நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

  12. சேதன உர இறக்குமதி, பரிவர்த்தனைகள்... தொடர்பில் விசேட விசாரணை பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்த சேதன உர இறக்குமதி பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கணக்காளர் நாயகம் டபிள்யூ.பி. விக்கிரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து சேதன உர இறக்குமதி மற்றும் இந்தியாவில் இருந்து திரவ சேதன உர இறக்குமதி ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை அறிக்கைகள் கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1295321

  13. தாய்வான் விவகாரத்தில் நான்சி பெலோசி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளார். ------------------ இரு பலம்பொருந்திய அயல்நாடுகளின் நலன்களிற்கு இடையில் சமநிலை காண்பது தற்போது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பசுபிக்கில் தென்சீன கடலில் காணப்படும் நிலை இந்து சமுத்திரத்தில் இந்து சமுத்தி;ரத்திற்குள் நுழைந்துவிடுமோ என்பது குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான மிக நீண்டபேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கேள்வி - இரு பலம் பொருந்திய அயல்நாடுகளின் போட்டி நலன்களிற்கு மத்தியில் எவ்வாறு சமநிலை காண்கின்றீர்கள்? பதில் - இரு பலம்பொருந்திய அயல்நாடுகளின் நலன்களிற்கு இடையில் சமநிலை காண்பது தற்போது மிகவ…

  14. By T. SARANYA 18 AUG, 2022 | 10:32 AM (எம்.வை.எம்.சியாம்) 17,000 க்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடந்த இரண்டு வாரங்களில் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அதிகார சபையின் பணிப்பாளர் தம்மிக விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 17,000 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு பிரிட்டன், இந்தியா, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள். நாளந்தம் 1,600 க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். மே மாதத்தில்…

  15. தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த 3.07.2022 அன்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கணவன் வீட்டில் இல்லாத வேளை அவரது 3 வயது பிள்ளை பார்த்து இருந்த சந்தர்ப்பத்தில் அயலவர் ஒருவரினால் கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் சுமார் 1 வயது மற்றும் 3 வயது பெண் குழந்தைகளின் தாய் என்பதுடன் மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில…

    • 3 replies
    • 496 views
  16. By VISHNU 18 AUG, 2022 | 09:19 PM கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் புதிய கட்டம் இன்று (18) திறந்து வைக்கப்பட்டது. குறித்த நேரத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னேடுக்கப்பட்டது. கட்டிடமானது முழுமையாக பூரணமடையாத நிலையில், இது ஒரு அரசியல் நோக்கத்திற்காக திறந்துவைக்கப்படுவதாக தெரிவித்து பல்கழைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழில்நுட்ப பீட கட்டிடம் திறந்துவைக்கப்படும் நிலையில் அங்கு சென்ற மாணவர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கதவு பூட்டப்பட்டிருந்த நிலையில், வெளியை வந்த மாணவர்கள் நிகழ்வு நடைபெறும் கட்டத்ததொகுயின் அருகே கவனயீர்ப்புப் போராட்டத்தில…

    • 30 replies
    • 1.8k views
  17. யாழ். இந்துக் கல்லூரியில் இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் ஹிந்தி மொழி வகுப்பு ஆரம்பிக்கப்ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார். தற்போது நாடு வறுமைகோட்டின் கீழ் உள்ளது அனைவரும் அறிந்த விடயமே இதனால் பல்வேறு நாடுகள் பல உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவும் தங்களால் முடிந்த உதவியை இலங்கைக்கு நிவாரணபொதி அனுப்புதல் போன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இதைனைத்தொடர்ந்து யாழில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியை யாழிற்கு வந்து பிரபல பாடசாலையான யாழ். இந்துக்கல்லூரியில் ஹிந்து மொழி கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் தமிழ் நாட்டில் ஹிந்தி மொழி…

  18. பல்கலைக்கழக மாணவவர்களின், போராட்டத்தினை கலைப்பதற்காக... பொலிஸார், கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம். அரசாங்கத்தின் அடங்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தினை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உரிமைக்காக கொழும்புற்கு செல்வோம் எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடக்குமுறையை நிறுத…

  19. 22ஆவது, திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக... மனுத்தாக்கல். அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 22ஆவது அரசியலமைப்பு திருத்தமானது, அரசியலமைப்பின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, அதன் சரத்துகளை ஏற்க வேண்டுமானால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்ஜன வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்க வேண்ட…

    • 3 replies
    • 647 views
  20. அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்? ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது…

    • 9 replies
    • 502 views
  21. போராட்டக் காரர்களிடமிருந்து, நட்டஈடு கோர... தயாராகின்றது அரசாங்கம்! காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியிருந்த போராட்டக்காரர்களினால் குறித்த பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டினை, அவர்களிடமிருந்து அறவிடுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். போராட்டம் இடம்பெற்ற பகுதியினை உரிமை கோரி ஒரு தரப்பினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது காணப்படும் சட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் காலி முகத்திட…

  22. ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லாவிற்கு... அமைச்சு பதவிகள் – புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கின்றது! சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளன. பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தநில…

  23. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக... இராமநாதன் நுண்கலைக் கழகம், பீடமாகத் தரமுயர்வு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)த் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் கடந்த 16ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு, அதிசிறப்பு வர்த்தமான அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. இராமநாதன் நுண்கலைக் கழகமானது, 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி முன்னாள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சு. நடேசபிள்ளையினால், அவரது மாமனாராகிய சேர் பொன்…

  24. யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்! 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது. இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன. சம்ப…

  25. தனிநபரொருவர்... ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு, சராசரியாக... "12 ஆயிரத்து 444 ரூபாய்" போதுமானது! இலங்கையில் தனிநபரொருவர், ஒரு மாதத்திற்கு வசிப்பதற்கு சராசரியாக 12 ஆயிரத்து 444 ரூபாய் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திற்கான அறிக்கையின்படி, தனிநபர் ஒருவரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்தபட்ச மாதச் செலவு 12 ஆயிரத்து 444 ரூபா என குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் வசிப்பதற்காக ஒருவருக்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 421 ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இது இலங்கையின் மாவட்டமொன்றில் நபரொருவர் தமது அடிப்படைத் தேவைகளை ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.