ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி…. December 7, 2018 ஜனநாயகத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் பேரணி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் எனும் தொனிப் பொருளில் றைஸ் சிறீலங்கா மற்றும் இலங்கை மெதடிஸ்த திரு அவையின் வட கிழக்கு மறை மாவட்டம் என்பன இணைந்து இந்த பேரணியை நடாத்திஉள்ளன. மட்டக்களப்பு நகரின் காந்திப்பூங்காவுக்கு முன்பாக இடம் பெற்ற ஜனநாயகத்தை வலியுறுத்தும் குரல் பேரணியில் சமயப் பிரமுகர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கையின் ஜனநாயகத்தை வலியுறுத்துவதுடன் நிலையான அமைதியும் நிரந்தரமான சமாதானமும் ஏற்பட வேண்டுமெனவும் இதன் போது வலியுறுத்தியுள்ளனர். தாய் நாட்டின் நற…
-
- 0 replies
- 416 views
-
-
27 OCT, 2023 | 06:12 PM மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் கீரிமலை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஜோசப் சுதர்சன் என்பவர் ஆவார். இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது : கல்லூண்டாய் பகுதியில் நேற்றிரவு சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சைக்கிளில் சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சி…
-
- 0 replies
- 438 views
- 1 follower
-
-
போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி சிறப்பாக பேணுவதற்கு அரசாங்கம் முடிவு. போர்நிறுத்த உடன்படிக்கையை பலப்படுத்தி அதனை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங் கத்தின் உயர்மட்ட தரப்பினருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தால் போர்நிறுத்த உடன்படிக்கையின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டியேற்படும் என்று அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் உள்ள லொட்ஜ்களில் காரணமின்றி தங்கியுள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைமையே காணப்படுகின்றது. நாட…
-
- 1 reply
- 964 views
-
-
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆக்கியோரின் மரணதண்டனை தொடர்பிலான தீர்ப்பினையும் அத்துடன் இந்திய ஜனாதியால் நிராகரிக்கப்பட்ட தண்டனைக்குறைப்பு வேண்டுதலையும் சர்வதேச மன்னிப்பு சபை விமர்ச்சித்துள்ளது. மட்டுமன்ரி மரணதண்டனை தீர்ப்பிர்கு தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. . காலங்கடந்த தீர்ப்பினையும், மரண தடண்டனை தீர்ப்பினையும் ஏற்க முடியாது எனவும் அது மேலும் கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE…
-
- 4 replies
- 1k views
-
-
தமிழக அகதிமுகாம்களில் தங்கியிருந்த 2500 இலங்கையர்களைக் காணவில்லை:. தமிழகத்திலுள்ள பல்வேறு அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல்போயிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தமிழ்நாடு உளவுப் பிரிவு பொலிஸார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்திலுள்ள அகதிமுகாம்களில் தற்போது 19 ஆயிரத்து 200 இலங்கையர்கள் தங்கியிருப்பதாகவும் இவர்களில் 2 ஆயிரத்து 500 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உளவுப் பிரிவு பொலிஸாரின் கவனயீனமே இவ்வாறு அகதிகள் காணாமல்போயுள்ளமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம், திருச்சி, கொட்டப்பட்டுஆகிய அகதிமுகாம்களிலேய…
-
- 4 replies
- 1.5k views
-
-
மகிந்தவை பிரதமராக்கியே தீருவேன்! - விமல் வீரவன்சவின் சபதம். [Wednesday 2015-04-15 08:00] முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பொதுத்தேர்தலில் போட்டியிட வைத்து பிரதமராக்கிக் காட்டப் போவதாக விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். போலியான வாக்குறுதிகளை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களை தம்வசப்படுத்திக் கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்தக் குற்றச்சாட்டை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற செவ்வியின் போது சுமத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்ச, பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையை…
-
- 0 replies
- 337 views
-
-
முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார்?: ஆளுநர் அலவி மௌலானா சிறிலங்காவில் முஸ்லிம்கள் கடத்தப்படாதபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் ஓலமிடுகிறார் என்று மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அலாவி மௌலானா கூறியுள்ளதாவது: அரசியல் இலாபங்களுக்காக ஆட்கடத்தல் சம்பவங்களை ஐக்கிய தேசியக் கட்சி பெரிதாக்குகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரே முஸ்லிம் வர்த்தகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுந்தகவல்களில் கடத்தப்போவதாகவும் பணத்தைக் கொடுத்துவிட்டுத் தப்பிக் கொள்ளுமாறும் தகவல்கள் அனுப்புகின்றனர். அதேபோல் இந்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏன் பெரிய இரைச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறார் எனப் புரியவில்லை. ஒன்றிரண்…
-
- 0 replies
- 988 views
-
-
[saturday, 2011-08-27 12:02:50] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டாமென அமெரிக்காவின் உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கிடம் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ரொபேர்ட் பிளேக் கொழும்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு இந்த வலியுறுத்தலை விடுத்திருப்பதாக பி.ஆர்.வெப் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளது. பல வருடங்களாக தமிழ்ப் பொதுமக்களின் பாரிய துன்பங்களை அவர் விளங்கிக்கொள்ள வேண்டுமென அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் 40 ஆயிரம் தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அண்மையில் ஐ.நா. அறிக்கையில் த…
-
- 0 replies
- 640 views
-
-
இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது. யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென மூவாயிரத்து ஜநூறிற்கும் அதிகமான இளைஞர்,யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்தபோதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் இல்லாதேயுள்ளது. காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.பின்னர் அவர்களிற்கு என்ன நடந்ததென்பது தெரியாதேயுள்ளது. ஆனாலும் ஆக்…
-
- 0 replies
- 613 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் 2023 உத்தியோகபூர்வ அறிக்கை . தலைமைச் செயலகம் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2023 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர்நாள். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான போராட்டமாக முன்னிறுத்திய உத்தமர்களைப் போற்றிவழிபடும் புனிதநாள். மனித சுயத்தின் ஆசைகளைத் துறந்து, மானுடத்தின் உரிமைகளுக்கான பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய புனிதர்களை எம் நெஞ்சங்களில் இருத்தி நெய்விளக்கேற்றி நினைவேந்தி உறுதிகொள்ளும் எழுச்சிநாள். உலகில் மிகவும் தொன்மையான எமது தேசிய இன…
-
- 1 reply
- 534 views
-
-
மன்னாரில் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் தாக்கியழிப்பு: 5 இராணுவத்தினர் பலி புதன்கிழமை 27 யூன் 2007 05:53 ஈழம் வவுனியாவிலிருந்து த.சுகுணன் தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கிய பகுதியில் உள்ள சிறிலங்கா இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 5 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். தள்ளாடி படைத்தளத்தில் இருந்து மன்னார்ப் பக்கமான இராணுவத்தினரின் 500 மீற்றர் நீளமான காவலரண்கள் மீது அதிகாலை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அக்காவலரண்களை அழித்துள்ளனர். இச்சம்பவத்தில் 5 இராணுவத்தினர் கொல்லப்படஇ இழப்புக்களுடன் இராணுவ…
-
- 6 replies
- 2.3k views
-
-
Published By: VISHNU 18 DEC, 2023 | 08:34 PM (நா.தனுஜா) நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு அரச மற்றும் ஊழல் எதிர்ப்பு மறுசீரமைப்புக்கள் இன்றியமையாதவையாகும். இம்மறுசீரமைப்புக்களுக்கு உரியவாறான முக்கியத்துவம் வழங்கப்படாவிடின், அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை மீண்டும் கடன்நெருக்கடியில் சிக்கிக்கொள்ளக்கூடிய அபாயம் காணப்படுவதாக 6 அமைப்புக்களை உள்ளடக்கிய 'பொருளாதார மீட்சிக்கான ஊழல் எதிர்ப்பு சீர்திருத்த சிவில் சமூகக் கூட்டமைப்பு' எச்சரித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஊழல் எதிர்ப்புசார் மறுசீரமைப்புக்களில் நிலவும் முன்னேற்றமின்மை குறித்து ட்ரான்ஸ்பே…
-
- 0 replies
- 134 views
- 1 follower
-
-
ஞாயிறு 15-07-2007 03:45 மணி தமிழீழம் [மயூரன்] இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் விரைவில் - சிறீலங்கா சமாதானச் செயலகம் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் விரைவில் முன்வைக்கப்படும் என சிறீலங்கா சமாதான செயலகம் அறிவித்துள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் சபையில் இலங்கையில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள தீர்வுதிட்டம் விரைவில் வெளியிடப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் நீண்ட அறிக்கை ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் சமாதான செயலகம் வெளியிட்டுள்ளது. …
-
- 0 replies
- 776 views
-
-
75 தொடக்கம் நூறுபேர்வரையான காயப்பட்டவர்களை ஏற்றி வைத்திருந்த வாகனத்தை இரணுவத்தினர் எரித்து விட்டனர் 14 செப்டம்பர் 2011 'நான் ஆறுமுகம். நான் விரைவில் சாகப் போகிறேன். நான் மரணமடைந்த பிறகு யாரும் அழ அனுமதிக்க வேண்டாம்.' இந்த வாசகங்களுடன் ஆரம்பிக்கிறது இந்த விவரணப்படம். கிளிநொச்சியின் போரினால் சிதைந்த ஒரு வீட்டின் சுவரில் காணப்படும் இந்த வாசகத்துடன் ஆரம்பிக்கிறது காட்டுமிராண்டித்தனமான மிருக பலமும் வெள்ளைப் பொய்களும் (ளுசi டுயமெய : றூவைந டுநைள யனெ டிசரவந குழசஉந) என்ற விவரணப்படம். போரின் இறுதி நாட்களில் என்ன நடைபெற்றது, போர் முடிவடைந்த பிற்பாடு தற்காலிக முகாம்களில் அடைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது போர் முடிவடைந்து இரண்ட வருடங்களுக்குப் பின்னரும் இன்று இலங்கையில…
-
- 1 reply
- 1k views
-
-
இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை: இலங்கைக்கு எதுவித பாதிப்புமில்லை பப்புவா நியூகினி தீவில் இன்று 7.4 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தோனேசியா மற்றும் சுலைமான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பப்புவா நியூகினியா தீவில் ராபாலுவுல நகரத்திலிருந்து தெற்காக 15 கிலோமீற்றர் தூரத்திலேயே ஜி.எம்.டி நேரப்படி 1.40க்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த சுனாமி எச்சரிக்கையினால் இலங்கைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. http://onlineuthayan.com/News_More.php?id=311484017005573413
-
- 0 replies
- 285 views
-
-
நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்துக்குள் பிரச்சினைகளை தீர்க்க முடியாது – ரவூப் ஹக்கீம் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் எழுதிய ‘ஏ.ஆர். மன்சூர் வாழ்வும் பணிகளும்’ நூல் வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் நடைபெற்றபோது, அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், “வெற்றிகளை வைத்து அரசியல்வாதிகளை எடைபோடுவதில்லை. தோல்விகளை கண்டு துவண்டுபோகாமல், தனது அரசியல் அந்தஸ்தை காப்பாற்றிக்கொண்டு எப்படி வாழ்கிறார் என்பதை வைத்துத்தான் எடைபோடப்படுகின்றனர். அந்தவகையில் மன்சூர் என்ற அரசியல்வாதி மரணிக்கும் வரை தனது அரசியல் அந்தஸ்தை இழக்கவில்லை. அவர் மக்கள் சேவையை தனது ம…
-
- 0 replies
- 358 views
-
-
கறுப்பு ஜூலை அழியாத வடுக்கள்! -(தாயகன்) [22 - Jஉல்ய் - 2007] * 24 வருட நினைவு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இனவெறியும் மதவெறியும் கொண்ட அரசாங்கத்தின் இன அழிப்பு மற்றும் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் தமது இதயங்களில் மாறா வடுவை ஏற்படுத்தி விட்ட `கறுப்பு ஜூலை' தின நிகழ்வுகளை நாளை அனுஷ்டிக்கின்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஐ.தே.க.வினால் இனக்கலவரம் என்கின்ற பெயரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலைக்கு நாளையுடன் 24 வயதாகிறது. தமிழ் மக்களின் மனங்களின் சிங்களத்தின் கொடூரத்தை வடுவாக்கி விட்ட அந்த இனப்படுகொலை `கறுப்பு ஜூலை' என்கின்ற பெயரில் தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுள்ள அதேவேளை, அந்த கறுப்பு ஜூலையே சிங்களத்தின் வீழ்ச்சிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
[ திங்கட்கிழமை, 19 செப்ரெம்பர் 2011, 00:27 GMT ] [ கார்வண்ணன் ] மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில்தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிஸ் மறுப்பு மேஜர் ஜெனரல் ஜெகத் டயசை பதில் தூதுவராக ஏற்றுக்கொள்ள சுவிற்சர்லாந்து அரசாங்கம் மறுத்து விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜேர்மனி, சுவிற்சர்லாந்து, வத்திக்கான் ஆகிய நாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர் ரி.பி.மடுவெகெதரவின் பதவிக்காலம் கடந்த ஜுன் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் பேர்லினில் உள்ள சிறிலங்காவின் பிரதித் தூதுவர் மேஜர் ஜெனரல் ஜெகத் டயசிடம் பதில் தூதுவருக்குரிய பொறுப்புகளை ஒப்படைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை பதில் தூதுவராக ஏற்றுக் க…
-
- 0 replies
- 547 views
-
-
180 நாள்களுக்குள், 53 பேர் மட்டு.வில் விபத்தில் சாவு. 180 நாள்களுக்குள் வீதி விபத்துக்களினால் மட்டக்களப்பில் 53 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகா ரசபை மட்டக்களப்பு மாவட்ட நிறை வேற்றுப் பொறியியலாளர் என். சசிநந்தன் தெரிவித்துள்ளார். மே 4 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை வீதிப்பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் அலுவலகத்தில் இதன் ஆரம்பவிழா கொண்டாடப்பட்டது. இதன்போது, வீதிகளில் பயணிக்கும்போது கடைப்பிடிக்கப்பட வேண்டியுள்ள வீதிச் சட்டங்களில்பின் பற்றப்பட வேண்டியுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்…
-
- 0 replies
- 362 views
-
-
Published By: VISHNU 11 JAN, 2024 | 09:06 PM சட்டமா அதிபரின் ஆலோசனை பெறும் வரை குருந்தூர்மலை வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எஸ்.தனஞ்சயன் தெரிவித்தார். குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றத்திலே வியாழக்கிழமை (11) எடுத்து கொள்ளப்பட்டது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். குருந்தூர்மலை பிரதேசத்திலே நீதிமன்ற கட்டளையை நிறைவேற்றப்பட வேண்டும் என அமைதி வழியிலே போராட்டத்தை நடாத்திய அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளடக்கிய நபர்களுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கான…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
ஆயுதக் களஞ்சியத்தில் வெடிவிபத்து ஒருவர் படுகாயம்! வீரவிலவில் சம்பவம்! Published on September 26, 2011-4:49 pm ஹம்பாந்தோட்டை வீரவில இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வீரவில இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலைக்குள் இவ்வெடிவிபத்து இன்று மாலை 3.45 அளவில் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். http://www.saritham.com/?p=35794
-
- 3 replies
- 380 views
-
-
இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம்,யுத்தத்தின் இறுதி தருணங்களிள் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைகுழு முன்னிலையில் சாட்சியமளித்ததாக தெரிவித்துள்ளார்.சிலோன் டுடேயிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆம் நான் யுத்தத்தின் இறுதி தருணங்கள் மற்றும் வெள்ளைக்கொடி விவகாரம் குறித்து நான் அறிந்தவற்றை எல்லாம் ஐ.நா விசாரணைக்குழுவிற்கு தெரிவித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் இறுதி தருணங்கள் குறித்த நம்பகத்தன்மை மிக்க தேசிய அல்லது சர்வதேச ஆணையத்தின் முன்பாக தான் அறிந்த அனைத்தையும் தெரிவிப்பதற்கு தயாhர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 603 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு புலி நீக்க அரசியலையும் தமிழ் தேசிய நீக்க அரசியலையும் செய்துவருகிறது: த.ம. கூ பேச்சாளர் அருந்தவபாலன் முன்னாள் முதலைமைசர் விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று தலைமை ஏன் அவசியம், தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறு புலி நீக்க அரசியல் மற்றும் தமிழ் தேசிய நீக்க அரசியலை செய்துவருகிறது, கொள்கை அடிப்படையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய அவசியம் போன்ற பல முக்கிய விடயங்கள் குறித்து தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கைபரப்பு செயலாளரும் பேச்சாளருமான அருந்தவபாலன் கனடாவின் CTR வானொலிக்கு அளித்த செவ்வியில் கலந்துரையாடுகிறார். http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசிய-கூட்டமைப்பு-13/
-
- 1 reply
- 304 views
-
-
மன்னார் கடற்படுக்கையில் இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கண்டியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். மன்னார் கடற்படுக்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாவது எண்ணெய் கிணறைத் துளையிடத் தொடங்கிய கெய்ன் இந்தியா நிறுவனமே இயற்கை எரிவாயு வயல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை இன்று காலை தமக்குத் தெரியப்படுத்தியதாக அவர் மேலும் கூறியுள்ளார். அதேவேளை மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் கிணறு துளையிடும் பணியின் போது கடந்தவாரம் எரிவாயு வயல்கள் அப் பகுதியில் இருப்பது கண்டறியப்பட்டதாக கெய்ன் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது. சிறிலங்காவில் எரி…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஆட்சி மாறியும் தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை ; பிரித்தானிய தூதரிடம் நல்லை ஆதீனம் சுட்டிக்காட்டு இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இலங்கைக்கான பிரித்தானியவின் உயர்ஸ்தானிகராக புதிதாக பதவியேற்ற ஜேம்ஸ் டறுஸ் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் நல்லை ஆதீனத்தைச் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது யுத்தத்திற்குப் பின்னர் யாழ். மாவட்டத்திலுள்ள நிலமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என நல்லை ஆதின குருமுதல்வர் உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்…
-
- 0 replies
- 379 views
-