ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
ஐரோப்பாவில் ஆரம்பித்து, உலகெங்கும் விரிவு பெற்றுள்ள ஈழத்தமிழ் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் கண்டு சர்வதேச மீடியாக்கள் வியப்படைந்துள்ளன. உலகெங்கும் ஒரு கொடியின் கீழ் பல்லாயிரக்கணக்கில் திரளும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்ட ஒரு அமைப்பு எவ்விதம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகக் கருத முடியும், எனக் கேள்வி எழுப்பியுள்ளன. உணர்வெழுச்சியுடன் உலகெங்கும் திரண்ட தமிழ்மக்களின் போராட்டங்களையும், அதன் பின் பொதிந்திருக்கும் உண்மைநிலையையும் சர்வதேச மீடியாக்கள் தங்கள் பதிப்பக்களில் பகிரத் தொடங்கியுள்ளன. ஆரம்பிக்கபட்டு மூன்று நாட்களாகியும். ஆரம்பத்திலிருந்த அதே உணர்வெழுச்சியுடன் தொடரும் போராட்டங்கள் கண்டு உலக மக்கள் ஆச்சரியமடைந்துள்ளதுடன், இப் போராட்டம் குறித்து அறியும் ஆவலும் ப…
-
- 9 replies
- 2.8k views
-
-
சிறீலங்கா இராணுவத்துக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர்பாக தற்போது பாதுகாப்புக் கருதி எந்தவொரு தகவலையும் வெளியிடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய மக்களின் வாழ்வாதாரம் நிறைந்த பிரதேசத்தினை இதுவரை இராணுவத்தினர் விடுவிக்கவில்லை. இதனையடுத்து மாவை சேனாதிராஜாவுக்கும் இராணுவத்தினருக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து அப்பிரதேசத்திற்குள் அடங்கும் வீட்டின் உரிமையாளர்களுக்கு மாதாந்த வாடகை செலுத்தப்படும் எனவும் அதற்கான விபரங்களை இராணுவத்தினர் திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். ஆனால் அத்திட்டம் தற்போது கைவிடப்…
-
- 3 replies
- 703 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 'லக்பிம' ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர். இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன. படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய …
-
- 3 replies
- 1.9k views
-
-
மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் போன்ற துணிச்சல் மிக்கவர்கள் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவாகவேண்டும் என மட்டக்களப்பு - அம்பாறை மறை மாவட்டங்களுக்கான ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று நடைபெற்ற மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 11வது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு ஆசியுரை வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எங்கள் அனைவரையும் மீட்கவந்த யேசு கிறிஸ்து மனிதம் தளைக்க வேண்டும், மனித நேயம் உயரவேண்டும் என்பதற்காக பிறந்து அதற்காக வாழ்ந்து அதற்காக இறந்த அவரின் பிறப்பு நாளிலே மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் மரணித்தது மறக்கமுடியாது. இன்றும் எமது…
-
- 1 reply
- 338 views
-
-
முல்லைத்தீவு விடயத்தை சர்வதேசம் ஏன் கவனத்திற்கொள்ளவில்லை - இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் [ புதன்கிழமை, 15 ஏப்ரல் 2009, 04:17.22 PM GMT +05:30 ] இலங்கையின் முல்லைத்தீவு கரையோர பாதுகாப்பு வலய பகுதியில் மேற்கொள்ளப்படும் இரத்தபாதையே அமரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்திற்கு வந்துள்ள பாரிய முதல் பிரச்சினை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இனர் சிட்டி பிரஸ் செய்தியாளர்கள் இணைத்தளத்தின் ஊடாக நடத்திய கலந்துரையாடலில் “நகரத்தில் இருந்து பிரச்சினை” என்ற இனப்படுகொலை சம்பந்தமான நூலின் ஆசிரியையும் அமரிக்க தேசிய பாதுகாப்புத்துறை சிரேஸ்ட பணிப்பாளருமான சமந்தா பவர் என்பவர் சர்வதேசம் ஏன் இந்த பிரச்சினையை ஜி 8 மற்றும் ஏனைய மாநாடுகளில் எடுத்துக்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். …
-
- 0 replies
- 656 views
-
-
மே மாதம் வரையில் நாட்டில் உணவிற்கு தட்டுப்பாடு நிலவிக்கூடும் எதிர்வரும் 2017ம் ஆண்டு மே மாதம் வரையில் நாட்டில் உணவிற்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.நாட்டில் நிலவி வரும் கடுமையான வரட்சி காரணமாக இவ்வாறு உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மே மாதத்தின் பின்னரே நெல் விளைச்சல் பெற்றுக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் எனவே, இந்தக் காலம் வரையில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவும் என தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/12121
-
- 0 replies
- 190 views
-
-
யுத்தம் இடம்பெற்று 4 வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்தகாலத்தில் இருந்ததைப் போலவே காட்சியளிக்கின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை ராஜகிரியவில் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னாரில் தமிழ்- முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள் யுத்த காலத்தில் இருந்தவை போன்றே தற்போதும் காட்சியளிக்கின்றன. வடக்கின் வசந்தம் மற்றும் அபிவிருத்தி என்றெல்லாம் அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கு எந்தவிதம…
-
- 1 reply
- 461 views
-
-
புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை மறுப்பு! ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதனால், இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக அமையலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ப…
-
- 0 replies
- 321 views
-
-
உங்கள் உள்நாட்டு விவகாரத்துக்காக புலம்பெயர் தேசங்களில் நீங்கள் எப்படி நியாயம் கேட்க முடியும் எனப் புலம் பெயர்நாடுகளில் தமிழர் தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடைபெறம் நாடுகளில், சில ஊடககங்களும், சராசரி மக்களில் சிலரும் முன் வைக்கும் ஒரு வினாவாக உள்ளது. டென்மார்க்கில் சிறிலங்கா அரசின் இனப்படுகொலை தடுத்து நிறுத்துமாறு கோரி தொடர்ச்சியாக நடைபெற்று வரும், தமிழ் மக்களின் எழுச்சி போராட்டங்கள் ஏற்படுத்திய பாதிப்புக்கள், டென்மார்க் ஊடகங்களினையும், இலங்கை பிரச்சினை, எங்கிருந்து தொடங்கப்பட்டது தொடர்பான உண்மையான நிலவரங்களை சேகரிக்க தூண்டியது. இது தொடர்பாக டென்மார் ஒலிபரப்புச் சேவையொன்று, சிங்களவர்களையும், தமிழர்களையும் ஒருங்கே சந்தித்து இருதரப்பினமும், இப்பிரச்சினைக்கான அ…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 315 views
-
-
எங்கள் தமிழீழ பிரச்சினை பற்றி Mr. Fareed Zakaria (CNN) ஒரு survey எடுப்பதாக தகவல் கிடைத்தது. எங்களுடைய தமிழீழத்தை அங்கீகரிக்கும்படி அவருக்கு இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். FareedZakariaGPS@cnn.com
-
- 2 replies
- 1.8k views
-
-
விமல் கைது செய்யப்பட போகிறார் ; முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆருடம் பொதுமக்களை மட்டுமல்லாது பெளத்த தேரர்களையும் அடக்குமுறைக்கு உள்ளாக்கி ஆட்சி நடத்தவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது. பெளத்த மதத் தலைவர்களை கட்டுப்படுத்தினால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்னும் பலமாக முன்னெடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மிக விரைவிலேயே விமல் வீரவன்ஷ கைதாகப்போகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கண்டியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், அம்பாந்தோட்டையில் அரசாங்கம் முன்னெடுத…
-
- 1 reply
- 260 views
-
-
நெடுங்கேணி சிறுமி பாலியல் வல்லுறவு; குற்றவாளியை கைதுசெய்யுங்கள்; வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் நெடுங்கேணியில் 7 வயதுச் சிறுமியொருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியை கைதுசெய்யுமாறு கோரியும் இவ்வாறான சம்பவங்களைக் கண்டித்து சர்வோதயம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியொன்று வவுனியாவில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது வவுனியா கண்டி வீதியில் உள்ள பௌத்த விகாரைக்கு முன்பாக ஆரம்பித்து வவுனியா மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு கையளிப்பதற்கான மகஜர் ஓன்றை வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சரஸ்வதி மோகநாதனிடம் அரசசார்பற்ற பிரதிநிதிகளால் ஒப்படை…
-
- 0 replies
- 666 views
-
-
சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் கொழும்பில் காணாமல்போனோர் தொடர்பான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு பலவந்தமாகக் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டோரை கருப்பொருளாகக் கொண்டு 'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' (Appearing The Disappeared) எனும் கண்காட்சி மற்றும் 'மௌனிக்கப்பட்ட நிழல்கள்' (Silence Shadows) என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா என்பன இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையினால் (Amnesty International) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில் கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. 'காணாமல் போகச் செய்த அன்புக்குரியவர்களின் பிரவேசம்' எனும் கண்காட்…
-
- 0 replies
- 326 views
-
-
(ஆர்.யசி) இந்திய பாரதிய ஜனதா கட்சியினால் நேரடியாக இலங்கையில் அரசியல் கட்சியாக உருவாக முடியாது. ஆனால் அவர்களின் பிரதிநிதிகளாக இலங்கையில் ஒரு கட்சி உருவாகி அவர்களின் கொள்கைகளை இலங்கையில் நடைமுறைப்படுத்த எந்த தடைகளும் இல்லை. அனேகமாக பாரதிய ஜனதா கட்சியின் இலங்கை பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உருவாகலாம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் அரசியல் அஸ்திரமாக இன்னமும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுகின்றது என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனவும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய பாரதிய ஜனதா கட்சி இலங்கையிலும் ஆதிக்கம் செய்யும் என அமைச்சர் அமித் சஹா கூறியதாக வெளிவரும் செய்திகளில் உத்தியோகபூர்…
-
- 3 replies
- 568 views
-
-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரான வெள்ளைத்தம்பி அமீர்தீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.கடந்த மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குகளின் அடிப்படையில் உறுப்பினராக இவர் தெரிவானார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்துடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அதிலிருந்து விலகி அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்திருந்தார். இவரது ராஜினாமா காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு விருப்புத் தெரிவு வாக்கு அடிப்படையில் 7914 வாக்குகளைப் பெற்றிருந்த காத்தான்குடி நகர சபைத் தலைவரான யு.எல்.எம். முபீன் பதவி ஏற்கவிருக்கின்றார். தனது நியமனம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னர் தாம் பதவி ஏற்கவிருப…
-
- 0 replies
- 870 views
-
-
முதல் அமர்வில் உரையாற்றவுள்ள கனடா, ஆஸி.,சுவீடன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் (ரொபட் அன்டனி) ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடு கள் மனித உரிமை பேரவையி ன் 34 ஆவது கூட்டத் தொடரில் பிரிட்டன், அவுஸ்திரேலியா, சுவீடன், பிரான்ஸ், டென்மார்க், நெதர் லாந்து, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ள நிலையில் அவர் கள் இலங்கை விவகாரம் தொடர்பிலும் பிரஸ் தாபிப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதில் 27 ஆம்தி…
-
- 0 replies
- 182 views
-
-
சிறீலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் -அமெரிக்கா 44 Views சிறீலங்காவில், கடந்த கால துன்புறுத்தல்களுக்கான பொறுப்பு கூறலின்மை உள்ளிட்ட விடயங்களை முன்னிறுத்தி இம்முறை கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலர் அன்ரனி ஜே பிளிங்கன் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையை ஊக்கப்படுத்த அமெரிக்க மீண்டும் பேரவையில் இணைவதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க இராஜாங்க செயலர் அந்தோணி ஜே.பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்…
-
- 5 replies
- 558 views
-
-
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மக்களால் முற்றுகை ; காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் அனைத்து வாயில்களை அடைத்து புதுக்குடியிருப்பு மக்கள் கதவடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னால் உள்ள தமது காணிகளை 682 ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும் தமது வாழ்வியல் பிரதேசங்களை விடுவிக்குமாறும் கேப்பாப்புலவு மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுமாறு கோரியும் புதுக்குடியிருப்பு மக்கள் குறித்த போராட்டத்தை இன்று காலை 7 மணி முதல் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தி…
-
- 1 reply
- 371 views
-
-
எமக்கான நீதியை சர்வதேசமே பெற்றுக்கொடுக்க வேண்டும் – பா.அரியநேத்திரன் கோரிக்கை 24 Views சிறீலங்கா அரசுக்கு எதிராக பல போராட்டங்களை நடாத்தியும் எந்தவித பயனும் இல்லாத காரணத்தினால் இறுதியாக சர்வதேசத்தின் ஊடாக ஒரு நீதியை தாருங்கள் என்று கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். சிறீலங்காவில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான போராட்டம் மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இய…
-
- 0 replies
- 410 views
-
-
விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளது - அனந்தி சசிதரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாக குறிபப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே த…
-
- 6 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இறுதியாக கடுமையான மோதல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் செல்வதற்குத் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என உதவி நிறுவனங்களும் ஐ.நா. சபையும் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 342 views
-
-
"வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டார்கள்; எனவே தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது என்று இலங்கை அரசு நினைக்கின்றது. ஆனால், போர் முடிவடைந்த பின்னர்தான் தமிழ் மக்கள் ஏராளம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதை நாம் அவதானிக்கின்றோம். இந்நிலையில், தீர்வுக்கு அடித்தளமாகவுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு ஒழிக்க விடமாட்டோம். அதற்கெதிராகக் கடும் நடவடிக்கை எடுப்போம்.'' இவ்வாறு புதுடில்லி சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவிடம் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனும் நேற்று "உதயனி'டம் உறுதிப்படுத்தினார். இந்திய மத்திய அரசுடன் பேச்சு நடத்த…
-
- 0 replies
- 637 views
-
-
மட்டக்களப்பில் அகழ்வு பணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்கு அருகாமையிலுள்ள தனியார் காணியில் மனித எச்சங்கள் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் அகழ்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு துண்டுகள் , சில கம்பி துண்டுகள் , மனித பல் மற்றும் இரு வெள்ளிச் சங்கிலி துண்டுகள் உட்பட சில தடயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படு…
-
- 0 replies
- 319 views
-
-
இராணுவ நடவடிக்கை முடிந்தபட்சத்தில், நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சங்களை முடித்துக் கொள்ளுமாறும் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களுக்கு இடம்பெயர்ந்தோர்களிடம் செல்வதற்கான தடையொன்றுமில்லாத அனுமதியை வழங்குமாறும் அமெரிக்கா சிறிலங்காவிடன் கேட்டுள்ளது. சமாதானத்தைப் பாதுகாப்பதற்கு, கல்வி, சுகாதாரம், வதிவிடம், குடிநீர் மற்றும் உணவு போன்றவற்றை அடைவதற்கு சமமான வழிகளை சகல சிறுபான்மையினருக்கும் உறுதிப்படுத்தி, பாரபட்சங்கள் இல்லாமல் செய்வதற்கு எடுக்கக் கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சிறிலங்காவுக்கு நாம் ஊக்கமளிக்கிறோம் என ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் விசேட கூட்டத்தில் அமெரிக்காவின் ராஜதந்திர விவகாரங்களுக்கு தற்காலிகமாக பொறுப்பு வகி…
-
- 0 replies
- 733 views
-