Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும் – சுகாஷ் வெளிநாடுகளை நம்பி இருக்காது எமது பகுதியில் உள்ள வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும். நாம் வெறுமனே கோரிக்கையை மாத்திரம் விடாது தற்சார்பு பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் களத்தில் இறங்கவுள்ளோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார நிலை பற்றி சிந்திக்க வேண்டிய நிலையில் தமிழ் சமூகம் காணப்படுகின்றது. டொலரின் கையிருப்பு மிகவும் குறைந்து வருகின்றது. நாட்டினுடைய பொருளாதாரம் ப…

  2. கொழும்பு துறைமுக நகரத்தின் உல்லாச நடைபாதை இன்று திறப்பு – மக்களுக்கும் அனுமதி! கொழும்பு துறைமுக நகரத்தின் மரினா உல்லாச நடைபாதை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெறும் இந்த நிழ்வில், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியும் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வினை அடுத்து புகைப்படக் கண்காட்சியொன்றையும் இலங்கைக்கான சீன தூதரகம், விளையாட்டு அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மேலும் இதன்போது, ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படும் உல்லாச நடைபாதை சில தினங்களுக்கு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலத்திற்கு எதிரில் …

  3. ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கூறுவது சிரிப்பாக உள்ளது’ – மனோ ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுவது சிரிப்பாக உள்ளது’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர், ‘தனது ஆட்சியில் வெளிநாட்டு கடன் வாங்கவில்லை என ஜனாதிபதி கோட்டாபய கூறுவதை கேட்டு சிரிப்பு வருகிறது. ஒரு உதாரணம், பங்களாதேஷிடம் கடன் வாங்கிவிட்டு, தற்போது திருப்பி செலுத்தும் காலத்தை கெஞ்சி நீடித்து விட்டு, கடனே வாங்கவில்லை என்கிறார். இதையும் நாம் ‘கடனே’ என கேட்டு தொலைக்க வேண்டியிருக…

  4. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு! தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் மகளிர் வளர்ச்சி நாள் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழ்மை) யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. பெண்களே நம் தேசத்தின் கண்கள் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் எழுச்சியோடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரக…

  5. சீன வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு! சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொரோனா நிவாரணம் மற்றும் கொரோனா பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதிவில் கூறியுள்ளார். https://atha…

  6. கைதிகள் பேச்சை நம்பி வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர்: கைது செய்த காவல்துறை பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 45 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சந்திரசேகரன் இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுடன் ஏற்பட்ட நட்பினால் வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் வேலையும் கிடைக்காமல் மீண்டும் தன் தாய் நாட்டுக்கு திரும்பவும் முடியாமல் தவிர்த்து வந்தார். அவர் மீண்டும் இலங்கைக்கே கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது ராமேஸ்வரம் தமிழ்நாடு கடலோர காவல் குழும போலீசாரிடம் பிடிபட்டார். இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 25 வயதான சந்திரசே…

  7. மகிந்தவிற்கு கோட்டாபயவின் இரகசிய எச்சரிக்கை! எண்ணப்படும் நாட்கள் இலங்கையின் அரசியலமைப்பில் 13வது திருத்தம் இருக்கின்றது. அதை நாங்கள் இந்தியாவின் தீர்வாக கருதவில்லை. அதை கருதவும் முடியாது ஆனால் அது தான் இலங்கை அரசியலமைப்பில் இருக்கக்கூடிய ஒரே ஒரு அரசியல் பரவலாக்க சட்டம்* என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் *மனோ கணேசன்* தெரிவித்துள்ளார்.

    • 0 replies
    • 311 views
  8. (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல்வேறு பகுதிகளின் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது. ஹோட்டல்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்கின்றபோதிலும் அவை அவர்களது நாளாந்த தேவைக்கு பற்றாக்குறையாக காணப்படுவதன் காரணத்தினாலேயே விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டு வருதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். எரிவாயு தட்டுப்பாடு : 15 ஆயிரம் ஹோட்டல்கள் மூடல் | Virakesari.lk

  9. நாட்டின் வரலாற்றில் இவ்வளவு கஷ்டமான காலம் இருந்ததில்லை- வாசு (சி.எல்.சிசில்) இவ்வாறானதொரு இக்கட்டான காலகட்டம் இந்த நாட்டின் வரலாற்றில் நினைவுகூரப்படவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாவத்தகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, “இந்த நாட்டின் வரலாற்றில் பிரதமர் என்ற பெயர் அழியாத எழுத்துக்க ளால் எழுதப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வறிய, ஒடுக்கப்பட்ட மக்களைச் சென்றடைந்து, அவர்களின் நலனுக்காக இந்நாட்டில் பல்வேறு சட்டங்களை இயற்றி, இந்த நாட்டின் தேசிய பாரம…

    • 2 replies
    • 405 views
  10. நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.”-மைத்திரி அறிவிப்பு! நாட்டில் தற்போது ஆட்சியிலிருக்கும் அரசுக்கு விடைகொடுத்துவிடுத்து புதிய ஆட்சியமைக்க நாம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றோம்.” என ் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “நாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கான…

    • 4 replies
    • 466 views
  11. இறைவன் தண்டனை வழங்குவான் படுகொலை செய்யப்பட்ட லசந்தவிற்கு எதிராக அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்த ஜனாதிபதி வழக்கு தாக்குதல் செய்திருந்தார். அவருக்காக சட்டத்தரணியாக இருந்தவர் தான் இன்று நீதி அமைச்சர் எனவே லசந்த உட்பட படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்பது கஷ்டம் என பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12 வது நினைவேந்தல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (08) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாற…

  12. தலைநகரில் போராட்டத்துக்கு தயாராகும் வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள்! இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக தலைநகர் கொழும்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கிறோம் என வடக்கு மற்றும் தெற்கு மீனவ அமைப்புகள் கூட்டாக அறிவித்துள்ளன. அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்துடன் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்துடன் மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொண்டது. இது தொடர்பில் இரண்டு மீனவ அமைப்புகளும் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையி…

    • 14 replies
    • 647 views
  13. கொள்கலன்களை விடுவிக்க 5 மில்லியன் டொலர் துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க இலங்கை மத்திய வங்கி 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. மிகுதி கொள்கலன்களை திங்கட்கிழமை விடுவிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 14 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது. https://www.tamilmirror.lk/செய்திகள்/கொள்கலன்களை-விடுவிக்க-5-மில்லியன்-டொலர்/175-288854

    • 0 replies
    • 295 views
  14. முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ள பாரிய கடற்கலம் ! கே .குமணன் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயாறு கடற்பரப்பில் இன்று (08) பாரிய கடற்கலம் ஒன்று தலைகீழாக புரண்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது. சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்டதாக காணப்படும் இந்த கடற்கலம் செம்மலை கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கரை ஒதுக்கியுள்ளது. இன்று அதிகாலை தொழிலுக்காக சென்ற மீனவர்கள் குறித்த கடற்கலம் கரை ஒதுங்கியுள்ளதை கண்டு உரிய தரப்புகளுக்கு அறிவித்துள்ளனர். கரை ஒதுங்கியுள்ள கடற்கலத்தை கடற்படையினர் முதற் கட்டமாக பார்வையிட்டுள்ளதோடு பெருமளவான மக்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்…

  15. மட்டக்களப்பில் பதற்றம்! பிள்ளையானுக்கு ஏதிராக மாணவர்கள் போராட்டம் மட்டக்களப்பு சிவானந்தா பாடசாலையில் பதற்றமான நிலைஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த மாதம் ஊர் மக்களாலும் பாடசாலை பழைய மாணவர்களாலும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சில ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன்போது சில ஆசிரியர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காத்தான்குடி காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வந்த போதும் ஆசிரியர்களை அச்சுறுத்தியதன் காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் மாபெரும் ஆர்ப்ப…

  16. 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் – மைத்திரி! 20 ஆவது திருத்தச்சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு 19வது திருத்த சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகல் பகுதியில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘புதிய அரசொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுத்துவருகின்றோம். இராஜாங்க அமைச்சராக இருந்த சுசில் பிரேமஜயந்தவுக்கு 24 மணிநேரத்துக்குள் அதிஷ்டம் அடித்தது. நாளை எமக்கும் அது நடக்கலாம். எனவே, எதற்கும் தயாராகவே இருக்க வேண்…

    • 2 replies
    • 474 views
  17. வடக்கு ஆளுநரை பயன்படுத்தி புதிய நாடகங்கள் நடைபெறுகிறது – தி.நிரோஷ் நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளர் தி.நிரோஷ் தெரிவித்தார். யாழ் ஊடக மையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை அரசு இப்போது என்ன செய்கிறது என்றால் ,மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை கிள்ளி எறிந்து அதையும் மத்தியின் கீழ் தந்திரமாக எவ்வாறு கையகப்படுத்தலாம் என்று செயற்பட்டு வருகிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தி வரும் ஆயுதம் தான் உள்ளூராட்சி சபைகள். உள்ளூராட்சி சபைக…

  18. மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது மனம் கொதிக்கிறது- சஜித் நாட்டு மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று ( வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களே சிந்தித்து பாருங்கள். மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். இன்று குடிக்க பால் மா இல்லை. சமைக்க அரிசி இல்லை. விவசாயிகளுக்கான உரம் இல்லை. மக்கள் படும் அவலத்தை பார்க்கும் போது உண்மையில் மனம் கொதிக்கிறது. எந்த நம்பிக்கையில் இப்படியான ஆட்சியா…

  19. அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து. Colombo (News 1st) ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்காக மியன்மாருடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அரசாங்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி நாட்டில் களஞ்சியப்படுத்தி வைக்கும் நோக்கில் இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கு மியன்மாருடன் உடன்படிக்கை கைச்சாத்து - Newsfirst

  20. சுசில் நீக்கப்பட்டமை குறித்து சிராந்தி மூலமே மஹிந்த அறிந்ததாகத் தகவல் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுசில் பிரேமஜயந்தவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடும் போது, நீங்கள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் தெரிவித்துள்ளார். சுசில் பிரேமஜயந்தவை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியதையடுத்து, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தச் சம்பவம் தொடர்பில் வருத்தம் தெரிவித்திருந்தமை குற…

    • 6 replies
    • 443 views
  21. பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு வட மாகாண ஆளுநர் எச்சரிக்கை எழுத்தாளர் Staff Writer 09 Dec, 2021 | 7:01 PMColombo (News 1st) வட மாகாணத்திலுள்ள பொதுமக்கள் சேவை ஸ்தாபனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு பொறுப்புக்கூறல், கடமையுணர்வு மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பில் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பாணையொன்றை அனுப்பியுள்ளார். 09.12.2021 எனும் திகதியிடப்பட்டு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த குறிப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளில் கோர்ப்புகளை மற்றுமொருவருக்கு அனுப்பி, தமது வேலையை இன்னுமொருவர் செய்யும் வரை அதிகாரிகள் பார்த்துக்கொண்டு இருக்கின்றமை தொடர்பில் குறித்த குறிப்பாணையில் சுட்டிக…

    • 0 replies
    • 221 views
  22. வடக்கு மாகாண ஆளுநரின் எச்சரிக்கை சிறுபிள்ளைத்தனமானது - ந.ஸ்ரீகாந்தா வடக்கில் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான காணி அளவீடுகளுக்குத் தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா (Jeevan Thiyagaraja) எச்சரிப்பது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா (N.Srikantha) தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட காணி அளவீடுகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட மக்களும் அரசியல் செயற்பாட்ட…

    • 0 replies
    • 206 views
  23. (நா.தனுஜா) பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமலிருப்பதற்கு சட்டமா அதிபர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராகவும் தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (7) காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிவழியிலான கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு கப்பம் பெறும் நோக்கில் 5 மாணவர்கள் உள்ளடங்கலாக 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்து…

  24. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமைகளைப் பொறுப்பேற்றார். வடக்கு, கிழக்கு மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றப்பட்டதுடன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டார். இந்த நிலையில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டிருந்த மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள்,நீதிமன்ற உத்தியோகத்தர்களால் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்…

  25. (இராஜதுரை ஹஷான்) கோதுமை மா பற்றாக்குறை காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படும். கோதுமை மா தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு வழங்காவிடின் பொது மக்கள் ஒரு இறாத்தல் பாண் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாணைப் பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்படலாம் - அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.