Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை- மன்னார் நீதிமன்றம் தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை விடுதலை செய்யுமாறு மன்னார் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த 18 ஆம் திகதி, இராமேசுவரம் மண்டபம் பகுதிகளிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 43 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அதேபோன்று புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களையும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்காகவே படகுகளுடன் அடுத்தடுத்த நாள்களில் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். இதன்படி 68 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மன்னார் நீதிமன்றம்,…

  2. டக்ளஸ் தேவானந்தாவின் நிதி ஒதுக்கீட்டில் பாசையூர் கடலில் வெளிச்ச வீடு! கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாசையூர் கடற்கரை பகுதியில் வெளிச்சவீடு அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது தொடர்பான கள ஆய்வுப் பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் பிரதேச செயயாளர் சுதர்சன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் மற்றும் துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. பல தசாப்த காலமாக பாஷையூர், குருநகர், சாவற்கட்டு, காக்கைதீவு, நாவாந்துறை உள்ளிட்டபல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் சங்கமித்து தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்படும் இந்த இடத்தில் வெள…

  3. தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் – இரா.துரைரெட்னம் தற்போது ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பகரமான செயற்பாடுகள் ஒரு வகையில் எங்களை பலமுள்ளதாக மாற்றும்.அதற்கேற்றாற்போல் தமிழ் தலைமைகள் தங்களைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தியாவினை தமிழர்களுக்கு விரோதமானதாக மட்டும் பார்க்காமல் தமிழர்களின் நலன்சார்ந்த விடயங்களில் இந்தியா செயற்பாடேயாகும் எனவும் அவர் தெரிவித்தார். தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு சுயாட்சி…

  4. வங்கி கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணி வேறு பிரிவுகளுக்கு மாற்றப்படுகிறதா? – கப்ரால் விளக்கம்! இலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் உள்ள அந்நிய செலாவணியை வேறு பிரிவுகளுக்கு மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான பிரசாரங்கள் வெளியாகி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் அவரது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள வெளிநாட்டு நாணய வைப்பாளர்களின் கணக்குகளில் உள்ள வைப்புத்தொகைகளில் 25வீதம் உள்ளூர் நாணயங்களுக்…

    • 1 reply
    • 231 views
  5. இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளது – பசில் இலங்கை இந்த ஆண்டில் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து சிங்கள வார இதழொன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரசாங்கத்தினால் குறித்த கடனை உரிய முறையில் திருப்பி செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செலுத்தப்பட வேண்டிய கடன் தவணைகள் இதுவரையில் எவ்வித பிரச்சினையும் இன்றி செலுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் இவ்வாறே செயற்படுவதாகவும் நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கடன் செலுத்தப்படும் அதேவேளை, மக்களுக்கு நிவாரணம் வழங…

    • 1 reply
    • 413 views
  6. இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BASIL RAJAPAKSE படக்குறிப்பு, பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர் இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி இரவு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இலங்…

  7. (எம்.நியூட்டன்) யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மலேரியா நோயாளி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை இனங்காணப்பட்டுள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவிலிருந்து அண்மையிலேயே யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கடந்த ஒரு மாதத்தில் யாழ்.போதனா மருத்துவமனையில் இனங்காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளி இவராவார். முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. யாழ்.போதனா வைத்தியசாலையில் மூன்றாவது மலேரியா நோயாளி இனங்காணப்பட்டார் | Virakesari.lk

  8. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் நியமனம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்நியமனக்கடிதம் வழங்கிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தனது பதவியை பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருந்த வைத்தியர்.த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை வைத்தியர் கே.நந்தகுமாரன்…

  9. அடிப்படை கொள்கையை நீக்கி ஆவணங்கள் அனுப்புவது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம்! அரியநேத்திரன் January 4, 2022 இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வு என்பது வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டித்தீர்வு என்பதை இலங்கை தமிழரசுகட்சியின் கொள்கையாகவே இன்றுவரை உள்ளது. அடிப்படை கொள்கையை நீக்கி சர்வதேச அரங்கில் ஆவணங்கள் அனுப்புவது எதிர்காலத்தில் எமது இறுதிதீர்வுக்கு தடைகளாக அமையலாம். சமஷ்டி அடிப்படையிலேயே சர்வதேசத்தில் யாருக்காவது எழுத்துமூல ஆவணமாக அனுப்பபடவேண்டுமே தவிர அதனை வெட்டிக்குறைத்து மாற்றம் செய்து அனுப்புவது என்பது எமது நிலைப்பாட்டில் தளம்பல் போக்கையே பிரதிபலிக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை …

  10. அமைச்சர்கள் பதவிகளை இழக்க நேரிடும்! ஜனாதிபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை! அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள் பதவியை இழக்க நேரிடும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த விடயம் குறித்து திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சனம் செய்வோர், பதவி விலகி எதிர்க்கட்சிக்கு சென்று அங்கிருந்து எதிர்க்கட்சியின் பணிகளை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்யாது அரசாங்கத்தை விமர்சனம் செய்தால் அவர்களை பணி நீக்க தயங்கப்போவதில்லை என ஜனாதிபதி திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார். மிகவும் நெருக்கடியான தருணத்தில் அரசாங்கம்…

  11. நட்புறவு இனி நேர்மையாக இருக்காது – சீனாவிற்கு விஜேதாச பகிரங்க கடிதம்!! இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார். உலக வல்லரசாக மாறுவதற்கான சீனாவின் பயணத்தில் இலங்கையும் போர்க்களங்களில் ஒன்றாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம் என குறிப்பிட்டுள்ளார். ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீ…

  12. மூட்டைகளை கட்டிக்கொண்டு இராஜாங்க அமைச்சில் இருந்து வெளியேறினார் சுசில் ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீண்டும் சட்டத்தரணி பணிக்கு திரும்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து தான் நீக்கப்பட்டமையை ஊடகங்கள் மூலமே அறியக் கிடைத்தது என்றும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விவசாயமும் அரசாங்கத்தின் கொள்கை திட்டமும் தோல்வியடைந்துவிட்டன என்று பதிலளித்ததாக சுசில் பிரேமஜயந்த கூறினார். திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் இருந்தாலும் முடிவுகளை எடுப்பவர்கள் கல்வியை மதிப்ப…

    • 7 replies
    • 634 views
  13. இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளது – இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.தற்போது அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றாலும், மருந்து இறக்குமதியில் உள்ள தடைகளை விரைவில் சரி செய்யாவிட்டால், அடுத்த சில மாதங்களில் பல அத்தியாவசிய மருந்து களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளட தங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என…

  14. யாழில் இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் இராணுவப் பொலிஸாரினால் கைது காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் இராணுவ பொலிஸாரினால் நேற்று திங்கட்கிழமை தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதேவேளை டிசெம்பர் 9ஆம் திகதிக்கும் 23ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன.அத்துடன் உயர் பாதுகாப்பு வலயங்களி…

  15. மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர் சுமந்திரன் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க காரணமாக இருந்தவர் எம்.ஏ.சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் .இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார். 13வது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும் தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 369 views
  16. இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா என்பது தொடர்பில் கட்சிகளின் தலைவர்கள் கூடிப்பேசவுள்ளனர் இந்தக் கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. தமிழ் பேசும் கட்சிகளின் ஒருங்கிணைவுப் பணியை முன்னெடுத்த ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சொந்தக் காரணங்களின் காரணமாக அவசரமாக நேற்று முன்தினம் மன்னாருக்குத் திரும்பியுள்ள நிலையில் பெரும்பாலும் இன்றையதினத்திற்குள் அவர் மீண்டும் கொழும்பு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அவர் கொழும்பு திரும்பியதும் தமி…

  17. பரந்தன் பகுதியில் அண்மைக் காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி பரந்தன் வர்த்தக சங்கத்தினரால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொலை, வாள்வெட்டு, வழிப்பறி மற்றும் அடிதடி எனப் பரந்தனில் தொடர்ச்சியாக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் இதனால் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பற்ற அச்சமான சூழ்நிலை காணப்படுவதால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கடையடைப்பை மேற்கொள்வதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவங்களில் தொடர்ச்சியாக ஒரு குழுவினரே ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் பல தடவைகள் முறையிட்டும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கவில்…

  18. இலங்கை அரசியல்: "5 பிள்ளைகளை பெற்றெடுக்கும் சட்டம் வேண்டும்" - முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கையில் திருமணமான தம்பதிகள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்து வளர்க்கக்கூடிய வகையில், சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என தான் யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலைமை உருவாகியுள்ள பின…

  19. பிரதமர் இராஜினாமா?; அவசர ஊடக வெளியீடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன. சில நாட்களுக்கு முன்னரும் இன்றையதினமும் இவ்வாறான செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதம அமைச்சின் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் இராஜினாமா என்ற செய்தியில் எவ்விதமான உண்மையும் இல்லையென பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமர்-இராஜினாமா-அவசர-ஊடக-வெளியீடு/175-288541

  20. இன்று முதல் மீண்டும் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று முதல் மீண்டும் இடைநிறுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நிலவும் அந்நிய கையிருப்பு நெருக்கடி காரணமாக மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதில் எழுந்துள்ள சிக்கல்களின் விளைவாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தேவையான மசகு எண்ணெயை பெற்றுக் கொண்டதன் பின்னர் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிக்குள் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் தயாராகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு மசக…

  21. STFஆல் சுடப்பட்டதாக கருதப்படும், திருமலை மாணவர்களின் 16ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு! January 3, 2022 2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02.01.22) மாலை அனுஷ்டிக்கப்பட்டது. திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்…

  22. மூடிய கதவுகளுக்குள் அமைச்சரவை – IMF க்கு செல்வது குறித்து ஆய்வு! January 3, 2022 நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ தலைமையில், இன்று (03.01.22) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக அறியமுடிகின்றது. சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்றைய விசேட அமைச்சரவையில் ஆகக் கூடுதலான கவனம் செலுத்தப்படுமென அறியமுடிகின்றது. இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய…

  23. 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று நிரந்தர நியமனம்! 51 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. அதன்படி பயிற்சியில் இருக்கும் 51,000 பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களில் ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு இன்று நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. 2021 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு ஒரு வருடம் நிறைவடைந்த பின்னர் ஏப்ரல் 1 ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. https://athavannews.com/2022/1259643

  24. எல்லை நிர்ணயம் – புனானை கிழக்கு மக்கள் போராட்டம்! மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராமசேவகர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் வீதியில் இறங்கி கவனயீர்ப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம் பெற்ற குறித்த போராட்டத்தில் தமிழ் சிங்களம் என இரு தரப்பும் இணைந்து இவ் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் தி…

  25. பால்மா கொள்வனவு செய்வதற்காக மிரிஹானையில் வரிசையில் நின்றிருந்தவர்கள், ஜனாதிபதி பயணிக்கும் போது ‘கூ’ எனச் சத்தமிட்டு கிண்டல் செய்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதனையடுத்து, அந்த வர்த்தக நிலையத்தை பொலிஸார், பலவந்தமாக பூட்டுப்போட்டு மூடிவிட்டனர் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில், அவ்வாறு எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லையெனவும், அந்தச்செய்தி முழுமையாகப் பொய்யானது எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மிரிஹானவில் பால்மா கொள்வனவு செய்வதற்காக நின்றிருந்த வரிசை தொடர்பில் தேடியறியுங்களென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/கோத்தாவுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.