ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
தமிழர்களுக்கான ஆகக் குறைந்த தீர்வுத் திட்ட வரைவு ஒன்றைத் தயாரிப்பதற்காக மூவர் கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் நேற்று இடம் பெற்ற தமிழ் அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிப் பிரதிநிதிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று மன்னார் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது. முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. முற்பகல் 11.30 மணி வரை நீடித்த இந்தக் கலந்துரையாடலில் எந்தத் தீர்மான முடிவும் எட்டப்படவி…
-
- 6 replies
- 961 views
-
-
மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவரவா சர்வஜன வாக்கெடுப்பு கோரப்படுகின்றது? டிலான் கேள்வி ; தமிழ்க் கூட்டமைப்புக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்கிறார் (ரொபட் அன்டனி) நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதி பதி முறையை நீக்கும் நோக்கில் புதிய அரசியலமைப்பை சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தினால் அரசியல் தீர்வை பெறுவதற்கான இறுதி சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுவோம். அத்துடன் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக உருவெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்தார். சர்வஜன வாக்கெ…
-
- 1 reply
- 266 views
-
-
இலங்கையின் மற்றுமொரு பரிணாமம் : மத்தலயில் குவியும் விமானங்கள்! கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை புனரமைப்பு நடவடிக்கை காரணமாக அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு மாற்றீடாக கடந்த 6ஆம் திகதியில் இருந்து மத்தல விமான நிலையத்தில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்றுவரை 84 வரையான விமான பயணங்கள் மத்தல விமான நிலையத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் முகாமையாளர் உபுல் கலன்சூரிய தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவையின் பீஜிங் மற்றும் ஷாங்காய் விமான பயணங்கள் இரண்டும், பிளே டுபாய் விமான சேவையும், இந்தோனேஷியாவின் ஸ்ரீ விஜய விமான சேவையும் தற்போது …
-
- 0 replies
- 254 views
-
-
வவுனியா தடுப்ப முகாமில் தனியே தடுத்து வைக்கப்பட்ட இளைஞர்களில் 22வயதுக்கு மேற்பட்டவர்களை சிங்கள இராணுவம் சுமார் 15 பேரூந்துகளில் ஏற்றிக் கொண்டு இருக்கின்றனர்
-
- 5 replies
- 1.5k views
-
-
"தமிழ் மக்களுக்கு இந்த நாட்டில் எந்தவித பிரச்சினைகளும் இல்லை. பிரச்சினைகள் இருப்பதாகக் கூறுபவர்கள் முடிந்தால் ஒரு பிரச்சினையையாவது சுட்டிக்காட்டட்டும். போருக்குப் பின்னர் வடபகுதியில் புதிதாக ஒரு விகாரையேனும் அமைக்கப்படவில்லை. இதனை நான் பொறுப்புடனேயே கூறுகின்றேன். எனது கூற்று தவறாயின், இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டவேண்டும். மாறாக, வீரவசனம் பேசுவதில் பயனில்லை'' இவ்வாறு தமிழ்க் கூட்டமைப்புக்கு சவால் விடுத்துள்ளது அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தமிழர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்களே தவிர, அவர்களின் வாழ்வைக் கெடுக்கவில்லை என்றும், தமிழ் மக்களைக் கூட்டமைப்பு அதலபாதாளத்தை நோக்கி அழ…
-
- 4 replies
- 1k views
-
-
மத்திய வங்கி மீதான தாக்குதல் 21 வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வில்லை இலங்கை மத்திய வங்கி தாக்கப்பட்டு எதிர்வரும் 31ம் திகதியுடன் 21 வருடங்கள் பூர்த்தியடைவதாகவும், எனினும் இதன்போது பாதி க்கப்பட்டவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அன்று முதல் இன்று வரையுள்ள அரசாங்கங்கள் தோல்வி யடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு மட்டுமே வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, மத்திய வங்கி தாக்குதலால் மரணித்த மற்றும் ஊனமுற்றவர்களுக்கான சங்கத்தின் தலைவர் எல்.டி.எல்.ஏ.குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். மேலும், இச் சம்பவத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு 55 வயதிலேயே …
-
- 0 replies
- 259 views
-
-
இலங்கை அரசு மாற்று வழிகளை நாட நாம் வழிவகுத்து விடக்கூடாது * இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவது சாத்தியமில்லை சென்னையில் இந்திய பிரதமர் அறிவிப்பு சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றுக்கு இராணுவத்தை அனுப்புவது எளிதான காரியமல்லவென்று தெரிவித்திருக்கும் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றையே தாங்கள் விரும்புவதாகக் கூறியிருக்கின்றார். சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் கருணாநிதியைப் பார்வையிட குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்ட கலாநிதி மன்மோகன் சிங் செய்தியாளர் மகாநாடொன்றிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார். பொதுத் தேர்தலின் பின்னர் தனது ச…
-
- 1 reply
- 1.1k views
-
-
‘5 - 10 வருடங்களில் போராட்டம் வெடிக்கும்?’ எஸ்.நிதர்ஸன் ‘யுத்தத்தின் பின்னர் கைதுசெய்யப்பட்ட 12,000 முன்னாள் போராளிகள், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தமது குடும்ப சிந்தனையுடன், வாழ்க்கையைக் கொண்டுநத்த கஷ்டப்பட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில், அவர்களை மீண்டும் கைது செய்து பிரச்சினை ஏற்படுத்தினால், இன்னும் 5 அல்லது 10 வருடங்களுக்குள், மற்றுமொரு போராட்டம் வெடிக்க வேண்டிய நிலமை ஏற்படும்” என்று, வடமாகாண சபை உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “தமி…
-
- 1 reply
- 462 views
-
-
வட மாகாண தேர்தலுக்கு தயார் - தேர்தல்கள் ஆணையாளர் வட மாகாண தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவித்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைத்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டதும் திகதி குறிப்பிடப்படும் என்று தெரிவித்த அவர் வடமாகாண தேர்தலை செப்டெம்பரில் நடத்துவது உறுதியென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 0 replies
- 245 views
-
-
எதிர்காலத்தில் வரக்கூடிய ஜனாதிபதிகள் கூட தமிழர்களின் தாயகமாக கொள்ளப்படும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கான அதிகாரங்களை அமைச்சரவையின் இந்த தீர்மானம் இல்லாமல் செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=16342
-
- 0 replies
- 462 views
-
-
விடுதலை புலிகளின் உடமைகளை தேடி கிளிநொச்சியில் அகழ்வு பணி கிளிநொச்சியின் இரு வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வுப் பணிக்காக அனுமதி பெறப்பட்டு அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரு அகழ்வுப் பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் …
-
- 1 reply
- 372 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார். seeman1 பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறி தொடர்ந்து விதவிதமான வீடியோக்களையும் வெவ்வேறு மனிதர்களின் உடல்களையும் இலங்கை ராணுவம் காட்டி வந்தது. விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது உறுதியாக மறுக்கப்பட்டு விட்டாலும், திரும்பத் திரும்ப இதே போன்ற செய்திகளையும் படங்களையும் காட்டி வந்தது இலங்கை ராணுவம். புதன்கிழமை மாலை அந்த உடலை கும்பலோடு கும்பலாக நந்திக் கடல் பகுதியில் புதைத்து விடப்போவதாகக் கூறியதோடு, பிரபாகரனின் மனைவி, இளைய மகன் மற்றும் மகளையும் கொன்று விட்டதாகக் கூறிக் கொண்டது. அதே நேரம் புலிகளுக்கு நெருக்கமான அமைப்புகள், பிரபலங…
-
- 2 replies
- 3.9k views
-
-
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. குறித்த தாக்குதல் வீடியோ காட்சிகள் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் சாரங்கன் மீது இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட குழு பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதோடு, மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்திவிட்டு…
-
- 0 replies
- 447 views
-
-
தற்போதைய அரசாங்கத்தைவிட்டு வேறு மார்க்கத்தில் எதனையும் செய்ய முடியாது அதனாலேயே அரச தூதுக்குழுவாக ஜெனிவா செல்கின்றேன் என்கிறார் ஜெஹான் (ரொபட் அன்டனி) அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜெனிவா சென்றாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்க ளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றும் காணி கள் மீளளிக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்துவேன். அத்துடன் காணாமல் போனோர் விடயத்தில் உண்மை கண்டறியப்படவேண்டும் என்பதற்கான அழுத்தங்களை ஜெனிவாவில் பிரயோகிப்பேன் என்று ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழு சார்பில் பங்கேற்கும் தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்…
-
- 0 replies
- 230 views
-
-
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கருவேலன்கண்டல் கிராம அலுவலர் பிரிவில் மானுருவி பகுதியில் அனுமதிப்பத்திரம் அற்ற காணி ஒன்றில் சட்டவிரோதமாக கிராம அலுவலர் ஒருவரால் பாரிய அளவில் கிரவல் அகழ்ந்து குவிக்கப்பட்டுள்ள போதும் இதற்கு எதிராக திணைக்களங்கள் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படடிருந்தது. இந்நிலையில் களத்தில் குதித்த ஒட்டுசுட்டான் பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக அகழ்ந்து குவிக்கப்பட்டிருந்த சுமார் 750 டிப்பர் லோட் கிரவலை தமது ஆளுகையின் கீழ் கொண்டுவந்ததுடன் குறித்த காணிக்கு உரிமை கோரிய கிராம அலுவலரின் மனைவியையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவ…
-
- 0 replies
- 338 views
-
-
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊடகவியலாளருமான போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்டனம் எதுவும் வெளியிடாமல் கவலை மட்டுமே தெரிவித்த சிறிலங்காவின் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன, இராணுவத்தினர்- வர்த்தகர்கள்- அரசியல்வாதிகள் போன்று விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களும் இருப்பதாகவும் அவ்வாறானவா்கள் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டிருப்பதாகவும் கூறினார். ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் லக்ஸ்மன் யாப்ப அபேவர்த்தன இந்த கருத்தை வெளியிட்டார். போத்தல ஜயந்த மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நாம் கவலைப்படுகின்றோம். கடந்த காலங்…
-
- 0 replies
- 437 views
-
-
போராட்டகார்களை காணாது மாற்றுபாதையூடாக சென்ற ஜனாதிபதி போராட்டகார்களை கவனிக்காது மாற்று பாதையூடாக வடமாகாண ஆளூநர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி சென்றுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடமாகாண ஆளூநர் அலுவலகத்தில் ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க ‘ அலுவலகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதனை முன்னிட்டு வருகைதரும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ். மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஆறாவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக உள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மா…
-
- 1 reply
- 371 views
-
-
20 கிலோ கொழுந்து பறித்தே ஆக வேண்டும்: தோட்ட நிர்வாகம் கெடுபிடி- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் 64 Views நாளொன்றுக்கு 20 கிலோ பச்சைத்தேயிலை கொழுந்து பறிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கும் நிர்வாகத்திற்கு எதிராக பொகவந்தலாவ பொகவான தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ குயினா தோட்ட பிரதான வீதித்தின் பொகவான சந்தியிலே 20-04-2021 காலை இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கும் போது, இதுவரை காலமும் 15 கிலோ பச்சைத் தேயிலை பறித்தோம் ஆனால் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பின் பின்னர் 20 கிலோ கொழுந்து நாளொன்று பரிக்க வேண்டும் என தோட்ட நிர்வாகம்…
-
- 2 replies
- 476 views
-
-
-எஸ்.கே.பிரசாத் யாழில் சுதந்திரக் கட்சி சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சர் மேர்வின் சில்வா 'யாழை விட்டு போக விரும்பவில்லை. இங்கு ஒரு பெண் பார்க்கவும்' என பொது மக்களிடம் கோரியுள்ளார். யாழ்.குருநகர் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 'யாழ் மாவட்டத்திற்கு நான் பல தடைவகள் வருகை தந்திருக்கின்றேன். இந்த முறை நான் வருகை தந்தததை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. எனது பழைய நண்பர்கள், நான் திரிந்த இடங்கள் எல்லாம் சுற்றி வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிருக்கின்றது. எனக்கு யாழை விட்டு போகவே விருப்பவில்லாமல் இருக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
பதில் தலைவரை கோரி கூட்டு எதிரணி குழப்பம் ஆளும்தரப்பு வெளிநடப்பு 21 ஆம் திகதி வரை சபை ஒத்திவைப்பு; கூட்டு எதிரணி வெற்றிகோஷம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிரணியினர் தமது அணிக்கு பதில் தலைவரை நியமிக்கக் கோரி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து கோஷங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு குழப்பம் விளைவித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்ட ஆளும் தரப்பினர் நேற்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன் காரணமாக எதிர்வரும் 21 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணி வரையில் சபை நடவடிக்கைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார். பாராள…
-
- 0 replies
- 232 views
-
-
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் மீது விமான நிலையத்தில் கடுமையான விசாரணை ஜ வெள்ளிக்கிழமைஇ 12 யூன் 2009இ 04:34.00 யுஆ புஆவு +05:30 ஸ வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு செல்லும் தமிழர்கள் விமான நிலையத்தில் வைத்து கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள்இ கனடாஇ அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்குச் செல்லும் தமிழர்களே இவ்வாறு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் குறித்த தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே விசாரணைகள் ஆரம்பமாகி விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல மணி நேர விசாரணைகள…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களை தயாரிக்க உதவும் அமைப்புகள் குறித்த விசாரணைகள் ஆரம்பம் : 19 ஜூலை 2013 இலங்கை இராணுவத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் திரைப்படங்களை தயாரிப்பதற்காக உதவிகளை வழங்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகள் குறித்து அரசாங்கமும், பாதுகாப்பு அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரோடர்டோம் ஹியுபேர்ட் சார்ள்ஸ் என்ற அமைப்பின் இலங்கையின் முகவர்கள் குறித்து ஏற்கனவே விசாரணைகளை ஆரமபித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்பின் தகவல்கள் தெரிவித்தன. இலங்கை இராணுவத்தினர் போர் குற்றவாளிகள் என்று சர்வதேச சமூகத்திற்கு மத்தியில், இராணுவத்தினருக்கும் அவமானமான நிலைமையை ஏற்படுத்தும், வகையில், ஏற்கனவே 04 திரைப்பட…
-
- 0 replies
- 248 views
-
-
ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது – ஜெர்மனி ஜனநாயகத்தை எட்டுவதற்கான இலங்கையின் அணுகுமுறை வரவேற்கப்பட வேண்டியது என ஜெர்மனி தெரிவித்துள்ளது. ஜெர்மனிய ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்லவுள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில்; இலங்கையின் சபாநாயகர் கரு ஜயசூரியவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெர்மன் ராஜதந்திரிகள் இலங்கைக்கு செல்ல உள்ளனர். http://globaltamilnews.net/archives/22144
-
- 0 replies
- 345 views
-
-
முல்லைத்தீவ முள்ளியவளை குமுழமுனை வீதியில் உள்ள கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.. முள்ளியவளை பிரதேச்தில் ஏற்கனவே நீராவிப்பிட்டி தண்ணீரூற்று போன்ற பகுதிகளில் பெருமளவான முஸ்லீம் மக்கள் குடியேறி இனக்கலப்பு திருமணங்களும் நடைபெற்று வருகின்ற நிலையில் முறிப்பு ஊடாக குமுழமுனை செல்கின்ற பகுதியில் காணப்படும் கற்பூரபுல்வெளி எனப்படும் பகுதியில் முஸ்லீம் மக்களை குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முள்ளியவளை பிரதேசத்தை சுற்றிலும் முஸ்லீம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் அதிகாரம் கொண்ட முஸ்லீம் வர்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது முள்ளியளை ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள தேக்கங் …
-
- 0 replies
- 378 views
-
-
2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 …
-
- 1 reply
- 878 views
-