Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது – நீதியரசர் விக்னேஸ்வரன் இலங்கை மீது விசாரணை நடைபெறுமா என்பது தொடர்பில் இப்பொழுது எந்த எதிர்வு கூறலையும் செய்ய முடியாது என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையில் இறுதி யுத்தம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள், இந்நாள் முக்கிய பிரமுகர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட 200 தமிழர்கள் சார்பில் Global Rights Compliance LLP (GRC) என்ற சட்ட நிறுவனம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி…

  2. ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 203 பேருக்கு அரச நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு. October 30, 2021 ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ன கருவிற்கு அமைய நாட்டின் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வருமானம் குறைந்த குடும்பங்களை சார்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(30) பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்…

  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ். மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி பறிகொடுத்த தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியே போராட்டங்களை மேற்கொள்கின்றபோதும் அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் ஏன் அவர்கள் தம்மை …

  4. இந்திய மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றம் October 30, 2021 இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேரையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற அனுமதித்து பருத்தித்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கடற்படையிரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன் தினம் மீனவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பருத்துத்துறை நீதிமன்ற நீதிபதி, மீனவர்கள் அனைவரையும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கடற்படைத்…

  5. இலங்கைக்கு மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியது ஐரோப்பிய ஒன்றியம் தொற்றுநோயை நிர்வகிப்பதற்கான அதன் முயற்சிகளில் இலங்கைக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் (EU) மேலும் 2 மில்லியன் யூரோ நிதியை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான அலுவலகமான ECHO வழங்கும் இந்த மானியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் இலங்கையில் உள்ள World Vision மூலம் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த வளங்கள் Covid-19 மற்றும் இலங்கையில் அதன் சமூகப் பொருளாதார விளைவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான தற்போதைய ஐரோப்பிய ஒன்றிய ஆதரவை நிறைவு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய உதவித்தொகையானது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவ…

  6. எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எல்லை நிர்ணயம் என்ற பெயரில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்க அரசாங்கத்தால் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.திட்டமிட்ட வகையில் அனைத்து கோணங்களிலும் தமிழர்களை நசுக்கி, தமிழர்கள் தொடர்ந்தும் இந்த தீவில் வாழ முடியாத நிலையை உருவாக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.வவுனியா, பழைய பேருந்து நிலையம் முன்பாக தமிழர் பகுதியில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ப…

  7. காணாமல் போனோர் விவகாரத்திற்கு விரைவில் பரிகாரம் - டக்ளஸிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் காணாமல் போனோர் விவகாரதத்திற்கு பரிகாரம் காண்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையில் நேற்று (29.10.2021) இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதியினால் மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோரின் விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் காணாமல் போனோரின் உறவினர்களை சந்…

  8. யாழ்.போதனா இரத்த வங்கியில் குருதிகளுக்கு தட்டுப்பாடு! யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகை குருதிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது. எனவே குருதி கொடையாளர்கள் 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு இரத்த தானம் செய்ய முன்வருமாறு இரத்த வங்கி கோரியுள்ளது . அது தொடர்பில் இரத்த வங்கி குறிப்பிட்டு உள்ளதாவது, ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் பூர்த்தியானவர் மற்றும் புதிதாக இரத்ததானம் செய்யக் கூடியவர்கள் உங்களுக்கு அருகிலுள்ள இரத்த வங்கிக்குச் சென்று இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால், போட்ட தினத்திலிருந்து ஒரு கிழமையின் பி…

  9. இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்வு இலங்கையில் மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளன.இதனையடுத்து, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் போது சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இதேவேளை ஆயிரத்து 600 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.இதேவேளை, முன்னர் போன்று வழமையான நேரங்களுக்கு அமைய ந…

  10. தமிழ் MPக்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் என அறிவிப்பு! October 30, 2021 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்க வைக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெற்று அவற்றினை முன்னிறுத்தி தமது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்களாட்சி செயற்குழு அறிவித்துள்ளது. அவ்வேலைத்திட்டத்திறகான கேள்விக் கொத்துக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.மிக விரைவில் அவற்றை மக்கள் மத்தியில் சமர்ப்பித்து அவர்களிடம் அபிப்பிராயங்கள் பெறப்படுமென செயற்குழு சார்பில் சட்டத்தரணி எப்.எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தொருமிக்கும் வேலைத்திட்டத்தை ஆரமப்பித்துள்ள தமிழ் மக்களாட்சி செயற்குழுவின் ச…

  11. யாழ். பல்கலையில் 6 விரிவுரையாளர்களுக்கு பேராசிரியர்களாகப் பதவி உயர்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது. யாழ். பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பேராசிரியர் பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து மதிப்பீடுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் தகுதி பெற்ற 6 சிரேஷ்ட விரிவுரையாளர்களின் விபரங்கள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடைமுறைகளுக்கமைய அந்தந்த விண்ணப்பத் தினங்களில் இருந்து பேராசிரியர்களின் பதவி உயர்வைப் பேரவை அங்கீகர…

    • 1 reply
    • 518 views
  12. பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் பௌத்த தர்மம் என்பது மிகவும் உயர்ந்த தர்மம். நல்ல அறக்கருத்துகளை கொண்ட சமயம். ஆனால் இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பௌத்த பிக்குகள் அதர்மத்தினையே போதித்து வருகின்றனர். அவர்கள் தர்மத்தினைப் போதிப்பவர்களாகயிருந்தால் அட்டூழியங்களை செய்ய வரமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேரத்தடி என்னும் தமிழர் பகுதிக்குள் தொல்பொருள் செயலணியினால் எல்லைக்கற்கல் நடுவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட எத…

  13. வவுனியா வடக்கில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம் செய்ய தீர்மானம்! வவுனியா வடக்கில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றத்தினை கண்டித்து தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தினை நடத்தவுள்ளதாக வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா வடக்கில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தினை கண்டிக்கும் வகையில் போராட்டத்தினை நடத்துவதற்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் கூடிய தமிழ் தேசியக்கட்சிகள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மேற்கொண்ட கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரி…

  14. நியூசிலாந்தில் சிறுபான்மையினருக்கான உரிமை சமமாக வழங்குவதை போன்று இங்கும் வழங்கப்பட வேண்டும் – சாணக்கியன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கும், இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லட்டனுக்கும் இடையில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு குறித்து இரா.சாணக்கியன் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். “நியூசிலாந்து நாடானது எமது நாட்டைப் போன்றே அங்கும் சிறுபான்மை மற்றும் ஆதி குடியிருப்புக்களை கொண்ட நாடாகும் ஆனால் அங்கு அவர்களுக்கு உரிய சம உரிமை அந்நாட்டு பிரதமரினால் வழங்கப்படுகின்றது. அந் நாட்டு பிரதமர் எம்மைப் போன்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக திகழ்க…

  15. யாழில். மழைக்குள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்! October 30, 2021 யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலக முன்றலில் கொட்டும் மழையிலும் இன்றைய தினம் சனிக்கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தமது பிள்ளைகளை உலக நாடுகள் மீட்டுத்தர வேண்டும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், இந்த அரசாங்கத்தில் நம்பிக்கையில்லை, சர்வதேசமே நமக்கு தீர்வை கொடு போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். https:/…

    • 1 reply
    • 302 views
  16. புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு இடமளிக்க மாட்டோம் – சஜித் புவிசார் அரசியலில் இலங்கையை விளையாட்டுக் களமாக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவருக்கும் இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். காசல் வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “சீன உரம் கொண்ட கப்பல் எவ்வாறு இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவியது என்பது எமக்கு ஆச்சரியமாக உள்ளது. அது எவ்வாறு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் பிரவேசித்தது? எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட எவரையும் ஐக்கிய மக்கள் சக்தி அனுமதிக்காது. இலங்கைய…

    • 3 replies
    • 348 views
  17. இலங்கையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாது இயங்கிய ஒரே ஒரு வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இதுவரை காணப்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்வேறு கொடையாளர்களின் 40 மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை இலங்கை உணர்அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம திறந்து வைத்தார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் க.வாசுதேவா தலைமையி…

  18. இலங்கையின் அரச வங்கியான மக்கள் வங்கியை சீன தூதரகம் கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளதாக அறிவிப்பு மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக அலுவலகம் தெரிவித்துள்ளது.உரக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையில் நிலவிய உடன்படிக்கையை மீறி, கடன் நாணய கடிதத்துக்கான கொடுப்பனவை செலுத்தாததன் காரணமாக இலங்கையின் மக்கள் வங்கியை கருப்புப் பட்டியலில் உள்ளடக்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கையுடனான சர்வதேச வர்த்தகத்தில் இலங்கை மக்கள் வங்கியால் வழங்கப்பட்ட (கடன் கடிதம்) எல்/சியை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து சீன நிறுவனங்களும் சீனத் தூதரகம் அறிவித்துள்ள…

    • 6 replies
    • 663 views
  19. 1948 இலிருந்து தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனப்படுகொலையின் மற்றுமொரு பரிமாணமே 'ஒரே நாடு, ஒரே சட்டம்' - விசேட ஜனாதிபதி செயலணி - விக்னேஸ்வரன் (நா.தனுஜா) 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கையின் பிரகாரம், தற்போது நடைமுறையில் உள்ள ரோம டச்சுச்சட்டம், ஆங்கிலச்சட்டம், கண்டியச்சட்டம், தேசவழமைச்சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் என்பவற்றைப் புறக்கணித்து இலங்கையைத் தனிச்சிங்கள பௌத்த நாடாகக் கணித்துத் தனியொரு சட்டத்தை உருவாக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய செயலணி நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது 1948 ஆம் ஆண்டிலிருந்து அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் இனப்படுகொலையில் மற்றுமொரு பரிமாணமாகும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்…

  20. நாட்டரிசி... ஒரு கிலோ இன்று முதல், 98 ரூபாய்க்கு விற்பனை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஒரு கிலோகிராம் 98 ரூபாய்க்கு சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். சுங்கத்தின் சோதனை நடவடிக்கைகளின் பின்னர், இதுவரையில் நாட்டரிசி அடங்கிய 09 கொள்கலன்கள் தமது நிறுவனத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனூடாக நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1247288

    • 1 reply
    • 415 views
  21. துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை - மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார். துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார். இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார். இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/person-won-the-lottery…

    • 4 replies
    • 771 views
  22. (நா.தனுஜா) பதினொருபேர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரத்தில் நியாயமான காரணங்கள் எதனையும் கூறாமல் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்தும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் இன்றைய தினம் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கப்பம் பெறும் நோக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டில் கடற்படை அதிகாரிகளால் 11 பேர் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்னமும் அதற்…

    • 2 replies
    • 269 views
  23. (எம்.மனோசித்ரா) புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊக்குவித்துள்ளார். அதற்கமைய அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அணுகி வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். சிவில் சமூக அமைப்புக்களுடன் ஈடுபாடுகளை ஆரம்பித்துள்ள அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில சந்தேக நபர்களை விடுவித்துள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து, கணிசமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார். வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய செயலாளர் எலிசபெத் ட்ரஸ் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்ச…

  24. மட்டக்களப்பு வந்தாறுமூலை பேரம் பகுதியில் அமைந்திருக்கும் நீர்முக பிள்ளையார் ஆலயத்துக்குச் சொந்தமான பூர்வீக காணியில் தொல்பொருள் திணைக்களத்தினர் இன்றைய தினம் காணிகளை எல்லையிட முயன்றபோது அப்பகுதி விவசாயிகளால் மீளவும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் மாற்று இனத்தவர்கள் வந்து காணிகளை அபகரிப்பதற்கு தாங்கள் எந்த வகையிலும் இடமளிக்க முடியாது என அப்பிரதேச விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தெரிவித்தனர். இதுவரை காலமும் இந்த இடத்தை பாதுகாக்க பல வழியிலும் போராடிய நாங்கள் இனியும் எவருக்கும் விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லை. சுமார் 16 ஏக்கரில் உள்ள குறித்த காணியினை தொல்பொருள் எனும் பெயரில் அபகரிக்கும் நடவடிக்கை மிகவும் கண்டிக…

  25. ரெலோ அழைத்துள்ள கூட்டத்தில் தமிழரசு பங்கேற்காது; அரசியல் குழு நேற்றிரவு முடிவு October 29, 2021 அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபட்டு இந்தியாவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தல் என்ற நோக்கத்தின் பெயரில் வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் ரெலோ கூட்டியுள்ள கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றாது. எனினும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவை 6ஆம் திகதி அளவில் கூட்டவும், மேற்படி விடயத்தில் ரெலோ வழங்கியுள்ள அழைப்பை அந்தக் கூட்டத்தில் பரிசீலிக்கவும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுநேற்றிரவு தீர்மானித்தது. அரசியல் குழுவின் கூட்டம் கட்சித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.