ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
அரந்தலாவை பிக்குகள் படுகொலை : சி.ஐ.டி. சிறப்பு விசாரணை : கருணா அம்மானை கைதுசெய்யுமாறு மனுதாரர் கோரிக்கை ! (எம்.எப்.எம்.பஸீர்) அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மா அதிபர் நேற்று உயர் நீதிமன்றுக்கு அரிவித்தார். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி கலாநிதி அவந்தி பெரேரா இதனை உயர் நீதிமன்றின் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன, அச்சல் அவெங்கப்புலி மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் அறிவித்தார். அரந்தலாவையில் பிக்குகளைக் கொலை செய்த விவகாரத்தில் , தற்போது உயிருடன் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடியாக …
-
- 3 replies
- 711 views
-
-
கொரோனாவால்... உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கு, இடப்பற்றாக்குறை! மட்டக்களப்பு – ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்நௌபர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் சரீரங்களை அடக்கம் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் ஆயிரத்து 279 சரீரங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், இன்னும் 700 சரீரங்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம், 50க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் நிலையில், சரீரங்களை அடக்கம் செய்வதற்கான மற்றுமொரு இடத்தினை சுகாதாரத்துறை மற்…
-
- 0 replies
- 160 views
-
-
இதுவரையில்... தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத, 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று வாய்ப்பு! கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்று (வியாழக்கிழமை) தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதன்படி, அவர்களுக்கு சினோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸை செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, கொழும்பு- தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலை, ஐ.டி.எச் வைத்தியசாலை, அவிசாவளை வைத்தியசாலை, விஹாரமஹாதேவி பூங்கா ஆகிய இடங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1232521
-
- 0 replies
- 295 views
-
-
முல்லைத்தீவில் உள்ள யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான காணிகள் மக்களுக்கு பகிர்ந்தளிப்பு ! கே .குமணன் முல்லைத்தீவு மாவட்டம் சிலாவத்தைப் பகுதியில் உள்ள யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்துக்கு சொந்தமான சுவாமி தோட்டக்காணியில் குடியிருக்கும் மக்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. யாழ் ஆயர் இல்லத்தில் சுவாமி தோட்டத்துக்கு சொந்தமான தியோகு நகர் பகுதியில் ஏறத்தாழ 95 குடும்பங்கள், முதியோர் சங்கம், முன்பள்ளி, சைவ ஆலயம் பொது நோக்கு மண்டபம் என்பன அடங்கிய தியோகு நகர் எனும் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தில் உள்ள மக்களுக்கும், அமைப்புகளுக்கும் சைவ ஆலயத்திற்குமாக யாழ் கத்தோலிக்க திரு அவைக்குரிய காணியை யாழ்ப்பாண…
-
- 4 replies
- 412 views
-
-
நாங்கள் இறக்கும் தருவாயிலும் எமது பிள்ளைகளைத் தேடும் போராட்டம் தொடரும்: அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ShanaAugust 3, 2021 அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயிர்ப்புப் போராட்டமொன்று சங்கத்தின் அம்பாறை மாவட்டத் தலைவி திருமதி த.செல்வராணி தலைமையில் திருக்கோவில் குடிநிலம் செல்வ விநாயகர் முன்றலில் இடம்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, தாயின் கண்ணீர்ப் பயணத்திற்கு முடிவு கொடு, பத்து மாதம் சுமந்த வயிறு பற்றி எரிகின்றதே எங்கள் …
-
- 2 replies
- 273 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அநுராதபுரம் கெப்பிட்டிக்கொல்லாவ கிராம பிரிவை சேர்ந்த 1,417 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுடன் இணைத்து தமிழ் இன விகிதாசாரத்தை குறைத்தமைக்கான பரிசாகவே வவுனியா அரச அதிபராக இருந்த சமன் பந்துலசேனவுக்கு ஜனாதிபதியால் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டதென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் இன விகிதாசாரம் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது .அதற்காகவே காணி அபகரிப்புக்களும் சிங்கள குடியேற்றங்களும் தமிழர் பகுதிகளில் அரங்கேற்றப்படுகின்றன. இதற்கு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சலுகைகளுக்காக துணைபோகின்றனர…
-
- 1 reply
- 351 views
-
-
வி.ரி.சகாதேவராஜா “நாம் சஹ்ரான் அணியைச் சேர்ந்தவர்கள். இன்னும் மூன்று மாதங்களுக்குள் நீ கொலை செய்யப்படுவாய். வாகனத்தில் குண்டுவைத்து, வெடிக்கவைக்கப்படுவாய்” என்றெல்லாம் கொலை அச்சுறுத்தல் விடுத்து, தனது பேஸ்புக்கின் ஊடாக குரல்பதிவை அனுப்புகின்றனர் என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்பாதுகாப்புக் கருதி, குறித்த குரல்பதிவு உள்ளிட்ட சகலஆதாரங்களுடன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தில் நான் முறையிட்டுள்ளேன். இரகசியப் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். “எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிடுமானால், அதற்கான முழுப்பொறுப்பையும் எமது சபையில் உள்ள மூவர் பொறுப்பே…
-
- 0 replies
- 268 views
-
-
அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கம் எமக்கில்லை ; மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவே போராடுகின்றோம் - சாணக்கியன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்பதோ நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதோ எமது நோக்கம் அல்ல. எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பிரதான நோக்கமே எமக்கு உள்ளது எனவும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்திற்கு நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த சபை ஒத்த…
-
- 0 replies
- 151 views
-
-
4 பகுதிகளில் இருந்து... கொழும்பிற்குள், பிரவேசிக்கவுள்ள வாகனப் பேரணிகள்! நாட்டின் 4 பகுதிகளில் இருந்து வாகனப் பேரணிகள் இன்று (புதன்கிழமை) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரி இந்த வாகனப் பேரணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி, நீர்கொழும்பு வீதியின் வெலிசரை, கண்டி வீதியின் கடவத்தை அதிவேக வீதி நுழைவாயில், ஹைலெவல் வீதியின் கொட்டாவை, காலி வீதியின் மொரட்டுவை ஆகிய பகுதிகளில் இருந்து இந்த வாகன பேரணிகள் ஆரம்பமாகவுள்ளன. இன்று முற்பகல் குறித்த பகுதிகளில் இருந்து வாகன பேரணிகள் புறப்பட்டு, பிற்பகல் கொழும்பு ஜனாதிபதி செயலகத்தை வந்தடையவுள்ளதாக இலங்…
-
- 1 reply
- 282 views
-
-
இருக்கைகளின் எண்ணிக்கைக்கு, அமையவே... பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை! பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த நடைமுறையை அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது. பேருந்துகளில் இருக்கைகளுக்கு மேலதிகமாக பயணிகள் ஏற்றப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும்…
-
- 1 reply
- 213 views
-
-
11 இளைஞர்கள் கடத்தல்: முன்னாள் கடற்படை தளபதி, கரன்னாகொடவிற்கு எதிராக குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – சட்டமா அதிபர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகையை இரத்து செய்யக்கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ரிட் மனு தாக்…
-
- 0 replies
- 402 views
-
-
எதிர்கட்சியினரின் அமளிக்கு மத்தியில், மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றம்! கடும் அமளிக்கு மத்தியில் அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் சட்டமூலம் உள்ளிட்ட 3 சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் கூடிய நிலையில், எதிர்கட்சிகள் பெகாசஸ் உளவு விவகாரத்தை கூறி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்காரணமாக அவை நடவடிக்கைகள் அவ்வவ்போது ஒத்திவைக்கப்படுகிறது. இதற்கிடையில் மூன்று சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் உள்ள 41 ஆயுத தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பாதுகாப்பு சட்ட…
-
- 0 replies
- 212 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா குறிப்பிட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒட்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால், குறித்த சிலிண்டர் பாவனை 180க்கும் மேல் அதிகரித்துள்ளது. …
-
- 0 replies
- 218 views
-
-
கொத்தலாவல சட்டத்தில் நான்கு திருத்தங்கள் – சுதந்திர கட்சியின் யோசனை ஜனாதிபதியிடம் ! கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை சுட்டிக்காட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது. சுதந்திரக் கட்சியினால் குறித்த சட்ட வரைபை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் பிரிந்துரைகளே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குள் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் உள்வாங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் குறித்த கடிதத்தின் பிரதிகள் சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன, சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கும் அ…
-
- 0 replies
- 167 views
-
-
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக இதுவரையில் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தற்போது வழங்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீக்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு முறையான மற்றும் ஒழுங்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/12323…
-
- 0 replies
- 327 views
-
-
கொரோனாவால் உயிரிழந்தவர்களில், பலருக்கு... இரண்டிற்கும் மேற்பட்ட நோய் தாக்கம் – அரசாங்கம் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களின் தாக்கமே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரண இதனை குறிப்பிட்டார். கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலானவர்களுக்கு கொமொர்பிடிட்டி எனப்படும் பிற சிக்கல்களும் இருந்ததாக கூறினார். மேலும் இறந்தவர்களில் சிலர் தடுப்பூசி போடப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் ரமேஷ் பத்திரண கூறினார். இதேவேளை நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஒரு…
-
- 0 replies
- 136 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டில் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பின்னர் உருவான மூன்றாவது கொவிட் பரவல் அலையில் மாத்திரம் 2 இலட்சத்து 14 426 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு , 3962 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளன. 2020 மார்ச் மாதம் ஆரம்பமான முதலாவது அலையில் 13 மரணங்கள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 3394 ஆகவே காணப்பட்டது. அதனையடுத்து 2020 ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாவது அலையில் 596 மரணங்கள் பதிவாகியுள்ளதோடு , 95 948 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இவற்றுடன் ஒப்பிடும் போது மூன்றாவது அலையில் காணப்படும் தரவுகளானது டெல்டா திரிபு பரவலுடன் உருவாகியுள்ள அபாய நிலைமையை தெளிவுபடுத்துவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்த…
-
- 0 replies
- 260 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து மீளவேண்டும் என்றால் சிங்களவர்கள் தமிழர்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். சிங்கள புத்திசாலி மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம், ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர் முஸ்லிம்களை நம்பவில்லை. அதுவே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்துள்ளது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/94770/thumb_large_cv_viki.jpg பாராளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற…
-
- 0 replies
- 305 views
-
-
மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில், முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்கா…
-
- 99 replies
- 8.1k views
- 1 follower
-
-
“தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வாழ் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” August 3, 2021 அந்தமான் தீவுகளுக்கு அருகே ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையோரம் வசிக்கும் இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2021/164174
-
- 0 replies
- 293 views
-
-
சிறுவர்களை... வீட்டில் பணிக்கமர்த்தியுள்ளவர்களுக்கு, எச்சரிக்கை! வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வகையில் இவர்களை மீள அனுப்பாதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டியல் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “எதிர்காலத்தில் சகல கிராம அதிகாரிகள் பிரிவுகள் தோரும் ஒரு சமூக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுடன் இ…
-
- 1 reply
- 428 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில்... கொடிச் சீலைக்கான, காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் இடம்பெற்று, பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி, மாட்டுவண்டியின் ஊடாக நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கலாசார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகை மற்றும் காளாஞ்சி கையளிக்கப்பட்டன. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவு…
-
- 0 replies
- 424 views
-
-
முல்லைத்தீவில்... பெரும்பான்மையினரின், ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசாங்கம் முயற்சி- ரவிகரன் முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது, “வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன. மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர். இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியி…
-
- 0 replies
- 271 views
-
-
ஆசிரியர் மற்றும் அதிபர்களின்... சம்பளத்தை அதிகரிக்க முடியாது – காமினி லொக்குகே நாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஏகமனதாக முடிவுசெய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்களின் சம்பளக் கோரிக்கைகளை நிறைவேற்ற 56 பில்லியன் ரூபாய் தேவை என கூறியுள்ளார். இருப்பினும் நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் தற்சமயம் 56 பில்லியன் ரூபாய் நிதியை செலவழிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த அரசாங்கத்தினால் ஏற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் பிரச்சினை குறித்து எதிர்வரும் வரவு ச…
-
- 0 replies
- 198 views
-
-
கொத்தலாவல, பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து... இன்று எம்.பி.க்கள் கலந்துரையாடல் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. அதன்படி குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபின் இரண்டாவது வாசிப்பு மீதான நாடாளுமன்ற விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. https://athavannews.com/2021/1232078
-
- 0 replies
- 191 views
-