ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
கண்ணதாசன் விடுதலை-வவுனியா மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற வழக்கிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, பலவந்தமாக ஆள்களைக் கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விரிவுரையாளர் கண்ணதாசனுக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு, 2017ஆம் ஆண்டு அவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இந்தத் தண்டனையை எதிர்த்து க.கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம…
-
- 12 replies
- 754 views
-
-
செல்வச்சந்நிதி திருவிழாவுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகள்; 100 பேருக்கு மாத்திரம் அனுமதி (சி.எல்.சிசில்) வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்திநிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் திருவிழாக்களில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதாரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பெருந்திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் புதன்கிழமை பிரதேச செயலகத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி தலைமையில் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர், பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி, பொலிஸார் உள்ளிட்டோரின் பங்களிப்பில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: இந்த ஆண்டு…
-
- 0 replies
- 269 views
-
-
யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்! July 30, 2021 யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (30.07.21) யாழ்ப்பானம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும் எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும், எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்…
-
- 3 replies
- 316 views
-
-
சிறுமி ஹிஷாலினியின்... சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் இன்று (வெள்ளிக்கிழமை) தோண்டி எடுக்கப்பட இருக்கின்றது. குறித்த சிறுமியின் சடலம், தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கு அமைவாக தோண்டி எடுக்கப்பட்டு, பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த நீதவான் லக்சிகா குமாரி ஜயரத்ன, விசேட வைத்திய குழுவின் முன்னிலையில் இன்று காலை 8.30 அளவில் சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் பொலிஸ் பாதுகாப்புடன் சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்ததன் பின்னர், பே…
-
- 1 reply
- 333 views
-
-
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் மனைவியின் மற்றுமொரு சகோதரரும் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சிறைச்சென்றுள்ளார். குற்றவாளியாக இனங்காணப்பட்ட அவர், 2007ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் தனக்கான தண்டனையை வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துள்ளார். தண்டனைக்காலம் நிறைவுற்றதன் பின்னர் விடுதலையாகியுள்ளார் என அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் ஏற்கெனவே வேலைச்செய்த சிறுமியை ரிஷாட்டின் மற்றுமொரு மைத்துனரான மொஹமட் ஹனீஸ…
-
- 3 replies
- 568 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவருக்கு இன்று (29) இரு கையிலும் கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. யாழ், மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று (29) முன்னெடுக்கப்பட்டது. இந்த செயற்றிட்டத்தில் யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா தடுப்பூசி வழங்கும் மையத்தில், கொழும்புத்துறை, J/61 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதே பிரிவைச் சேர்ந்த 66 வயது வயோதிப பெண்ணுக்கு இரு கையிலும் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பெண்ணின் ஒரு கையில் தாதி ஒருவர் ஊசி போட்டு விட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட இது தெரியாமல் இன்னொரு தாதி அங்கு வந்து மற்ற கையை காட்டுமாறு கூறி ஊசி போட்…
-
- 17 replies
- 969 views
- 1 follower
-
-
விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இ…
-
- 12 replies
- 1.4k views
-
-
சம்பந்தருடைய மரணத்திற்குப் பின்னர் தலைவராவதற்கான பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை – பிள்ளையான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் மரணத்திற்கு பின்னர் தலைவராவதற்கான பயணத்தினை நாங்கள் மேற்கொள்ளவில்லையென தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன தெரிவித்துள்ளார்.எங்களுடைய மக்களோடு உறுதியாக இருந்து பணி செய்து அவர்களுடைய தலைவர்கள் அவர்களுடைய கடந்தகால தலைவர்கள் விட்ட பிழைகளை சரி செய்து இந்த மண்ணிலே வாழக்கூடிய நம்பிக்கையை கட்டியெழுப்ப கூடிய மக்கள் கூட்டத்தை நாங்கள் உருவாக்குவதற்கு பாடுபடுகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும…
-
- 15 replies
- 1k views
-
-
கோட்டாபய கடற்படை முகாமுக்கெதிராக எதிா்ப்பு நடவடிக்கை July 29, 2021 முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் பொதுமக்களுக்கு சொந்தமான 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்குள்ள கோட்டாபய ராஜபக்ஸ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கெதிராக கோட்டாபய ராஜபக்ஸ கடற்படை முகாமுக்கெதிராக எதிா்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக அப்பகுதிக்கு நில அளவை திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ள நிலையில் அங்கு காணி உரிமையாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இணைந்து காணி அளவீடு செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து எதிர…
-
- 1 reply
- 332 views
-
-
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களுக்கு, மாத்திரமே... பேருந்தில் செல்ல அனுமதி? தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களை மாத்திரம் தனியார் பேருந்துகளில் ஏற்றிச் செல்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதியில் இருந்து மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதற்குப் பின்னர், இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எனவே, பயணத் தடை தளர்த்தப்படும் பட்சத்தில், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி …
-
- 2 replies
- 356 views
-
-
வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள, சிறுவர்கள் குறித்து அறிவிக்க... விஷேட இலக்கம் அறிமுகம்! வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் 0112 433 333 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1231164
-
- 0 replies
- 364 views
-
-
ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக... இராஜாங்க அமைச்சர்களின் ஜப்பான் விஜயம் குறித்து விசாரணை – அரசாங்கம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி. சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் பேசியபோதே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டியில் உத்தியோகப்பூர்வமாக பங்கேற்ற விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் சென்ற மூவர் தொடர்பாகவும் தொடக்க விழாவில் இலங்கை தேசியக் கொடியைக் காட்டத் தவறியமை தொடர்பாகவும் …
-
- 0 replies
- 242 views
-
-
செயற்திறன் குறைந்த சினோவக் தடுப்பூசியின் 13 மில்லியன் டோஸ்களை அரசாங்கம் கொள்வனவு செய்ய காரணம் என்ன? இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக ஒரு சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர் என விற்கப்படுகிறது, இது இலங்கை போன்ற நாட்டிற்கு மிகவும் அதிகளவிலான விலையாகும். அதேநேரம் அங்கிருந்து மற்ற தடுப்பூசிகள் குறைந்த விலையில் பெறப்பட்டுள்ளன. அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் தயாரிப்பான சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியை வழங்கியிருந்தாலும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக இந்த தடுப்ப…
-
- 0 replies
- 253 views
-
-
போதிய ஊதியமின்மையாலேயே பெருந்தோட்ட பெண்களும் சிறுவர்களும் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்: மனோ கவலை..! (நா.தனுஜா அண்மையில் இடம்பெற்ற ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்குப் பின்னால் அரசாங்கம் ஒழிந்துகொள்ள முயற்சிக்கின்றது. ஏற்கனவே வாக்குறுதியளிக்கப்பட்டவாறு தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை. போதியளவு ஊதியமின்மையினால் மலையகத்தில் அதிகரித்துவரும் வறுமையின் காரணமாகவே அங்குள்ள பெண்களும் சிறுவர்களும் வீட்டுவேலைகளுக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அரசாங்கம் உடனடியாகத் தோட்டக்கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி, 1000 ரூபாவைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன…
-
- 0 replies
- 264 views
-
-
காணியை... அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம் கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படையிரின் முகாமிற்கான காணி சுவீகரிப்புக்காக நாளை நில அளவைத் திணைக்களத்தினால் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது. மக்களுக்கு சொந்தமான காணியில் கடற்படையினர் தளம் அமைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் இவ்வாறான நடவடிக்கையை தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று அழைப்பு விடுத்திருந்…
-
- 0 replies
- 285 views
-
-
கௌதாரிமுனை காணி பகிர்ந்தளிப்பில் மக்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனின் போலி அரசியலை மக்கள் புரிந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அண்மையில் கௌதாரிமுனை கிராமத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வெளியிட்ட கருத்துக்களை பொருட்படுத்தாமல், நூற்றுக்கு மேற்பட்ட கௌதாரிமுனை மக்கள் இன்று(28-07-2021) ஆர்வத்துடன் வயல்காணிகளுக்கு விண்ணப்பம் செய்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை மண்ணித்தலை சிவன்கோவில் முன்னால் இறங்குதுறையடியில் மக்கள் சந்திப்பை நடத்தி, கடலட்டைப் பண்ணைகளையோ வயல்காணிகளையோ பெற்றுக்கொ…
-
- 22 replies
- 1.3k views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் ஜனநாயக ஆட்சிக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவளித்த போதே ரிஷாத் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி கூட்டணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கலில் ஒரு கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மீதான நெருக்கடிகள் அமைந்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மைகளைக் கண்டறியாது இவ்வாறான பழிவாங்கல்களிலேயே அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப…
-
- 0 replies
- 379 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒருபோதும் நீக்கக்கூடாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையில் எங்கும் பரிந்துரைக்கவில்லை. ஒருசில தமிழ் பத்திரிகைகளில் இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல் முற்றிலும் பொய்யாகும் என ஆணைக்குழு நேற்று சுட்டிக்காடியது. முன்னைய ஆணைக்குழுகள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்தல் தொடர்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நேற்று கலாநிதி ஜஹான் பெரேரா சாட்சியமளிக்கையில் இடையில் குறுக்கிட்ட ஆணைக்குழுவின் தலைவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக்கூடாது என இடைக்கால அறிக்கையில் ஆணைக்குழு பர…
-
- 3 replies
- 386 views
-
-
(எம்.மனோசித்ரா) கொவிட் பரவல் அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்கு சுற்றுலா பிரயாணம் செய்வதற்கு தடை விதித்துள்ள 21 நாடுகளிடம் அந்த தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த நாடுகளுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம் , கட்டார் , மலேசியா , சிங்கப்பூர் , இத்தாலி , பிலிப்பைன்ஸ் , ஜேர்மன் , நோர்வே , ஜப்பான் , அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடமே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணி…
-
- 0 replies
- 325 views
-
-
படுகொலையிலிருந்து தப்பித்த டக்ளஸ் கூட நினைவேந்தல் தடைக்கு துணை போகின்றார்! கடந்த காலங்களில் போராட்ட இயக்கமாக இருந்த ஜே.வி.பியினருக்குக் கூட அவர்களது தலைவர்களை அஞ்சலிப்பதற்கு அனுமதிக்கின்றார்கள். ஆனால் ஏன் தமிழ் மக்களுக்கு மாத்திரம் இவ்வாறான தடைகள். தமிழர்களின் மீது மாத்திரம் இந்த அரசாங்கம் முற்றுமுழுதான தங்கள் இனவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவது ஏன்? என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதித் தவிசாளருமாகிய இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் படுகொலை நினைவேந்தலை நடத்துவதற்கு பொலிசாரினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை தொடர்பி…
-
- 0 replies
- 273 views
-
-
பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற வேண்டும், இல்லையேல்... மாற்று நடவடிக்கை – மாவை சேனாதிராஜா அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன்பிரகாரம் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற்று தமிழர் ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க …
-
- 6 replies
- 595 views
-
-
1 பில்லியன் டொலர் கடன் தவணை செலுத்தப்பட்டுள்ளது – அரசாங்கம் வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன்களுக்கான ஒரு பில்லியன் டொலர் தவணைக் கட்டணத்தை அரசாங்கம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். உலக நாடுகள் பல கொரோனா தொற்றினால் பொருளாதார சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் பணப்பரிவர்த்தனை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறினார். அதன்படி எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நேற்று (26) செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை செலுத்தியுள்ளதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வெளிநாட்டு கடன்கள் தொடர்பாக விமர்சங்களை முன்வைத்தவர்களினால் அவற்றினை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து எந்தவொரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்று…
-
- 4 replies
- 505 views
-
-
வட்டுவாகலில் காணி அபகரிப்பை... தடுக்க, ஒன்றுகூடுமாறு சிவாஜிலிங்கம் அழைப்பு! வட்டுவாகலில் காணி அபகரிப்பைத் தடுக்க ஒன்றுகூடுமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசு காலத்திலும் காணி சுவீகரிப்பு இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வட்டுவாகலில் 617 ஏக்கர் காணிகள் சுவீகரிக்கப்பட்டன. வடக்கு, கிழக்கிற்கு வெளியிலும் கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறிடங்கள் சுவீகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பழைய கச்சேரி கட்டடத்தை விற்பனை செய்யும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. குருந்தூர்மலை, வெடுக்குநாறி மலை ஆகிய இடங…
-
- 0 replies
- 287 views
-
-
ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்ல…
-
- 5 replies
- 551 views
-
-
பூநகரி- கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் ஆரம்பம் பூநகரி, கௌதாரிமுனையில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் பணிகள் பிரதேச கடற்றொழிலாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுக்கு அமைய நக்டா நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட 16 இடங்களில் பண்ணைகளை அமைக்கும் பணிகள் முதற்கட்டமாக நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டன. இதற்கான பயனாளர்கள், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பண்ணைகளை அமைப்பதற்கு தேவையான வலைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு தொகுதி வலைகள் வழங்கி வைக்கப்பட்டன. பொருத்தமான இடங்கள் த…
-
- 0 replies
- 208 views
-