ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
கவனயீர்ப்பு நிகழ்வுகள்: http://www.tamilnaatham.com/photos_feb_04.html
-
- 0 replies
- 611 views
-
-
14ஃ02ஃ2009இ 15:16 ஜ கொழும்பு நிருபர் மயூரன் ஸ இலங்கையில் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு இலங்கையில் குறிப்பாக வன்னி பகுதியில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை விசாரிக்க அமெரிக்காவின் வெளியுறவுத்துறைஇ செனட்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பிராந்திய ரீதியிலான துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் ஊடாக எதிர்வரும் 24ம் திகதி இலங்கை விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய கிழக்கு மற்றும் தெற்காசிய பிராந்திய வலயங்களுக்கு பொறுப்பான செனட்டர் ரொபர்ட் கெர்ஸி தெரிவித்துள்ளார். முதலில் இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உ…
-
- 0 replies
- 692 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய உறுப்பினரடங்கிய குழுவினர் இன்று வியாழக்கிழமை இரவு ஜெனிவா பயணமாகவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோரே இன்று ஜெனிவா புறப்படவுள்ளனர். ஜெனிவா பயணம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துக் கூறுகையில்... “இன்றைய சூழலில் தமிழ் மக்களின் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவே நாங்கள் ஜெனிவா பயணிக்கின்றோம். அங்கு உயர்மட்ட சந்திப்புகளையும் மேற்கொள்வதோடு எமது மக்களின் நிலைமையினையும் எடுத்துக்கூறவிருக்கிறோம்” என்றார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/59742-2013-02-28-08…
-
- 7 replies
- 877 views
-
-
இலங்கை விவகாரம் ஜெனிவாவில் சூடு கிளப்பியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு தொடர்பில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக் களுக்கு மறுத்தான் கொடுப்பதில், ஜெனிவா சென்றுள்ள இலங்கை அரச பிரதிநிதிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். கூடவே நவநீதம்பிள்ளை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றஞ்சாட்டியுள்ளது. இவற்றின் மத்தியில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவா மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ளது. இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் இலங்கை அரசின் முகத்தில் கரியைப் பூசி வருகிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை இலங்கைப் படைகள…
-
- 0 replies
- 399 views
-
-
உண்ணாவிரதம் அறிவித்தது ஏன்? கலைஞர் விளக்கம் இன்று காலையிலிருந்து, ஏன் நேற்று மாலை தொலைக்காட்சி செய்திகளுக்கு பிறகு மருத்துவமனைக்கு ஏராளமான தொலைபேசி தொடர்புகள்! என்னிடம் பேச வேண்டுமென்று வற்புறுத்தல்கள்! தவிர்க்க முடியாமல் சிலரிடம் படுக்கையிலே படுத்தபடியே பேசினால் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்தது குறித்து ஏராளமான கேள்விக்கணைகள் இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் உண்ணாவிரதம் இருக்கலாமா? அது உடல் நிலையை மேலும் பாதிக்காதா எதற்காக இப்படிப்பட்ட அறிவிப்பு காக்கிச் சட்டையினரும், கறுப்புச் சட்டையினரும் காது கொடுத்து உங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்களா? ஒரு சிலரின் தூண்டுதல் உண்டு என்ற போதிலும், அவர்கள் உண்மையை அறிந்து கொள்ளாமலா போய் விடுவார்கள் வழக்கறி…
-
- 29 replies
- 3.1k views
- 1 follower
-
-
பாரம்பரிய இடங்களில் மீன்பிடிக்கும் அப்பாவி இந்திய மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்தக்கூடாது என்று இலங்கை அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், காரைக்காலைச் சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஆகியோர் கடந்த 2-ம் தேதி விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடந்த 6-ம் தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந் தபோது, அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில், காரைக்காலைச் சேர்ந்த செண்பகம் என்ற மீனவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றி நாகப்பட்ட…
-
- 0 replies
- 520 views
-
-
கொரோனாவுக்காக அரசாங்கத்தினால் சேகரிக்கப்பட்ட நிதி தொடர்பில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த நிதிக்கு எவ்வளவு சேகரிக்கப்பட்டது என்பதை நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார். கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் “இட்டுகம” என்ற பெயரில் இந்த நிதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த நிதிக்கும், இதற்கு பின்னர் சேகரிக்கப்பட்ட நிதிகளுக்கும் என்ன நடந்தது என்பதை அரசாங்கம் நாடாளுமன்றத்துக்கு …
-
- 3 replies
- 546 views
-
-
No change in Sampur coal power project: Ministry Monday, 11 March 2013 01:16 The Ministry of Power and Energy yesterday denied reports that the National Thermal Power Corporation (NTPC) of India had pulled out of the Sampur Coal Power Plant Project in Trincomalee. The Ministry said the differences of opinion on technical issues and the cost of operations and maintenance were being ironed out at the moment. Ministry Secretary M.M.C. Ferdinando said discussions between NTPC and Sri Lanka were ongoing and they hoped that the outcome would be positive. “The technical issue about the …
-
- 0 replies
- 371 views
-
-
வீரகேசரி நாளேடு 3/5/2009 10:17:12 PM - புதுக்குடியிருப்பு சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தற்போது அங்கிருந்து 4 கிலோமீற்றர் கிழக்குப் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக கிழக்கு கடற்கரையினூடாக முன்னகர்வு முயற்சியினை மேறகொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அப்பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் பாரிய இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது சுமார் 45 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தினர் படையினரால் மூன்று திசைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர…
-
- 1 reply
- 1.3k views
-
-
மதுரையில் மாபெரும் பேரணி மாணவர்கள் கடலென திரண்டு போராட்டம்.மதுரை நகரமே ஸ்தம்பித்துப்போயுள்ளதாக ஈழதேசம் நிருபர் தெரிவித்துள்ளார். [/ சிங்கள இனவாத அரசிற்கு எதிராக தாய் தமிழகத்தில் மாணவர்கள் போர் கொடி தூக்கியுள்ளனர்.இது இந்திய அரசுக்குமே பேரிடியாக இறங்குயுள்ளது.அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டு தமிழர்களை தன் நாட்டு மக்களாகவே கருதாமல் எடுத்தெறிந்து நடந்துவந்த மத்திய அரசிற்கு இன்று தமிழகம் முக்கியமாக மாணவ இளம் சமூகம் தனது போர் கொடியை ஏந்திப்பிடித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் ஈழத்திற்கும் தாய் தமிழகத்திற்கும் விடிவு வெகுதூரம் இல்லை. ஈழதேசம் செய்தியாளர் விதுல் http://www.eeladhesam.com/index.php?option=com_content&vie…
-
- 4 replies
- 642 views
-
-
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பௌத்த இளைஞர் யுவதிகளை பல வழிகளில் மத மாற்றம் செய்து வருகின்றனர். அதாவது முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களில் பௌத்த இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புக்களை கொடுத்து அவர்களை பல வழிகளில் மத மாற்றம் செய்கின்றனர். இது தொடர்பாக எமக்கு பல தகவல்கள் கிடைத்துள்ளது. இன்னும் 50 வருடங்களில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் விசேட திட்டங்களே இவை. இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார். இன்று மாலை கண்டி நகரில் மத்திய சந்தை முன் இடம்பெற்ற பொதுபல சேனாவின் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய கிரம விமலஜோதி தேரர், முப்ப…
-
- 2 replies
- 707 views
-
-
புலமைப்பரிசில் பரீட்சையில் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதனை புரிந்த இருவர்! இலங்கையில் இன்று வெளியாகிய தரம் ஐந்து புலமைப்பரிசில் பெறுபேறுகளின்படி இரண்டு மாணவர்கள் 200க்கு 200 புள்ளிகள் பெற்று சாதித்துள்ளனர். காலி சங்கமித்த கல்லூரி மாணவி சியதி சந்துன்டி கருணாதிலக என்ற மாணவியும் பிறிதொரு பாடசாலையில் கல்விகற்கும் எம்.எப்.மொஹமட் அம்மார் ஆகிய மாணவனும் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இதேவேளை இதற்கு முன்னர் 2007ம் ஆண்டு இவ்வாறு மாணவர் ஒருவர் 200 புள்ளிகளை பெற்றுச் சாதித்திருந்தமை குறிப்ப்டத்தக்கது. https://samugammedia.com/scholarship-exam-result-two-students/
-
- 12 replies
- 1.9k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் சிறிலங்காவுக்கு பயணம் செய்வது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 687 views
-
-
முல்லைத்தீவில் 'நாடா' புயலின் தாக்கம் : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (கே .குமணன்) வங்கக்கடலில் உருவாகியுள்ள "நாடா" எனும் புயலின் தாக்கத்தினால் வடக்கில் கடும் காற்றுடன் கூடி மழை பெய்துவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் இருந்து 450 கிலோமீற்றர் தூரத்தில் நேற்று (30) இரவு நிலைகொண்டிருந்த நாடா புயல் முல்லைத்தீவு மற்றும் யாழ்குடா ஊடாக வடமேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்திருந்தது. முல்லைத்தீவு பகுதியில் கடும் காற்று வீசிவருவதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் …
-
- 0 replies
- 430 views
-
-
""இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார்'' கருணாநிதி என்று குற்றம்சாட்டினார் பாமக நிறுவனர் ராமதாஸ். திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ""இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது. அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன. வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சந்திரிகா, ரணில் முக்கிய பேச்சு! - அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு!! கூட்டணி அரசியல் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்லையில் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் திடீரென சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலியிலுள்ள பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் ஓரிரு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சந்திப்பில் முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து தீர்க்கமாகப் பேசப்பட்டதாக அறியமுடிகின்றது. ஏற்கெனவே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிப…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், அத்துடன் சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் ஈழத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என லண்டன் மாநாடு கோரியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 366 views
-
-
ஜனாதிபதி, பிரதமராக வரக்கூடியவர் பொறுப்புடன் சரியாக பேசவேண்டும் நாமல் எம்.பி.யை எச்சரித்தார் அமைச்சர் திகாம்பரம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) எதிர்காலத்தில் ஜனாதிபதி பிரதமராக வரக்கூடியவரான நாமல் ராஜபக் ஷ எம்.பி பொறுப்புடன் சரியாக பேசவேண்டுமென அமைச்சர் பழனி திகாம்பரம் சபையில் எச்சரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்தார். அவர் இதன்போது கூறியதாவது, 200வருடங்களாக லயன்களில…
-
- 0 replies
- 149 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் 1,390 நாட்களாக சுழற்சி முறையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று காலை கந்தசுவாமி ஆலயம் முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமையின் பிரதிபலிப்பு மரணங்கள், பாலியல் வன்முறைகள், நிலங்கள் மற்றும் உரிமைகள் பறிப்பு என இங்கு வாழும் தமிர்கள் கொன்று குவிக்கப்பட்ட இடம…
-
- 0 replies
- 324 views
-
-
சிறிலங்கா முஸ்லீம்களும் அவர்களின் ஆயுதக் குழுக்களும் - விக்கிலீக்ஸ் [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:44 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் சிறிலங்கா ஜம்தீ இஸ்லாம், தௌகிட் ஜமாத், தப்லீக் ஜமாத் மற்றும் ஜமதீ முஸ்லீம் ஆகிய நான்கு முஸ்லீம் குழுக்கள் செயற்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வோசிங்டனுக்கு அறிவித்ததாக விக்கலீக்ஸ் இரகசியச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி யூன் 09, 2004 அன்று 'நம்பகமானது' எனக் குறிப்பிடப்பட்டு சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதர் ஜெப்றி ஜே.லன்ஸ்ரெட்டால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டதாக விக்கிலீக்ஸ் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. "உள்ளக புலனாய்வின் முன்னாள் அதிகாரியான M.I. CADER என்பவ…
-
- 4 replies
- 566 views
-
-
நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் பிரிவு இந்த திட்டம் பற்றி அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஆர்வம் உள்ள அமைப்புக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமாற்று நீதிப் பொறிமுறைமை மற்றும் நல்லிணக்கத்தை மையமாகக் கொண்ட திட்டங்கள் தேசிய ரீதியில் அல்லது மாகாண ரீதியில் முன்னெடுக்கப்படுமானால் அதற்கான உதவிகளை வழங்கத் தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சொல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பொறிமுறைமைகளின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்…
-
- 0 replies
- 121 views
-
-
யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) 2ஆவது முறையாகவும் 3 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பாதீட்டுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மாநகர முதல்வர் ஆர்னோல்ட் தனது பதவியை இழந்துள்ளார். யாழ்.மாநகர சபை பாதீடு தோல்வி; மேயர் பதவியிழப்பு – Thinakkural யாழ். மாநகர சபையின் வரவு செலவு திட்டம் தோல்வி! யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டிக்கான வரவு - செலவுத் திட்டம் 03 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்றுவரைக்கும் நம் தமிழ் உறவுகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருப்பத
-
- 2 replies
- 1.3k views
-
-
இந்திய நாடாளுமன்றக் குழுவினர் - தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு இலங்கையின் வடக்கே அதிகரித்த எண்ணிக்கையிலான இராணுவப் பிரசன்னம், மீள்குடியேற்றம், மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைகள் ஆகியவையும் நீடித்திருக்கக் கூடிய அரசியல் தீர்வு குறித்தும், இலங்கை வந்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் பேசியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தின் 13 ஆவது சட்டத் திருத்தத்தின்படியும், அதற்கு மேலாகவும் சென்று அதிகாரப் பரவலாக்கத்தைஏற்படுத்துவோம் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியப் பிரதமரிடமும் மற்றவர்களிடமும் தெரிவித்ததை இந்தியக் குழுவினர் தம்மிடம் சுட்டிக்காட்டியதாக கூட்டமைப்பின் உறுப்பினர் சுமந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். அந்த சட்டத் திருத்தம் ஏன் அர்த்தம…
-
- 1 reply
- 805 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 390 views
-