ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி!மகஜர் கையளிப்பு! March 22, 2021 கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகள் விசனம் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நோக்கில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இப்போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேட்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் …
-
- 0 replies
- 273 views
-
-
சிங்கள மக்களை இந்தியா தொடர்ந்து காப்பாற்றும் – சிறீலங்கா நம்பிக்கை 71 Views மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்துவருவதால் அது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் நம்புவதாக சிறீலங்காவின் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எனினும் கொரம்பகேயின் இந்த கருத்துக்கு ஆதரங்கள் இல்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செயலாளரின் இந்த கருத்து தொடர்பில் தான் எதனையும் கூற விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் எடோஸ் மத்தியூ புன்னூஸ் தெரிவித்துள்ளார். …
-
- 3 replies
- 535 views
-
-
சிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்! March 21, 2021 உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பன்னாட்டு சட்டவாளர்கள் ஆணையம் (ஐ சி ஜே), இலங்கையின் தீவிரவாத சித்தாந்தங்களிலிருந்து விடுபடும் ஒழுங்கு விதிகளை கடுமையாக கண்டித்துள்ளனர். மிகவும் கொடூரமான இந்த ஒழுங்குவிதிகள் வகைதொகையின்றி நிர்வாக ரீதியாக வழக்கு விசாரணையின்றி மக்களைத் தடுத்து வைக்க வழி செய்கிறது. இந்த ஒழுங்குவிதிகள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைச் சமமற்ற வகையில் இலக்கு வைக்கக் கூடும் என்று ஐ சி ஜே எச்ச…
-
- 0 replies
- 305 views
-
-
சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என விய…
-
- 4 replies
- 642 views
-
-
இலங்கையை ஐ.சி.சிக்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென்னாபிரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம்! 14 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென் ஆபிரிக்காவுக்கான மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென் ஆபிரிக்காவானது உலகின் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவும், இனவொதுக்கலின் வலிக்கு உட்பட்டும், சர்வதேச விவகாரங்களில் ஈடுபாட்டைக் கொண்டும் உள்ளதுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரந்துணர்வையும் கொண்டுள்ளதால், ஐக்கிய இராச்சி…
-
- 0 replies
- 406 views
-
-
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் …
-
- 8 replies
- 849 views
-
-
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது. இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலாந்து (9) மற்றும் ஆஸ்திரியா (10) ஆகிய நாடுகள் முறைய இரண்டு முதல் 10 இடங்களில் உள்ளன. மே…
-
- 1 reply
- 401 views
-
-
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார். கறுப்பு நிற வாகனம் ஒன்றில் தன்னைக் கடத்தி சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை செய்த…
-
- 0 replies
- 528 views
-
-
பசறை விபத்தில் பஸ் சாரதி உட்பட 9 ஆண்களும் 6 பெண்களும் பலி;இருவர் கவலைக்கிடம் பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்ப…
-
- 2 replies
- 375 views
-
-
ஜெனீவா தீர்மானத்தின் ஒரு சில விடயங்களுக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் தீர்வு - சரத் வீரசேகர (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில் யுத்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டது. விடுதலை புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலை புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலைக்குரியது. …
-
- 0 replies
- 274 views
-
-
அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய த.தே.கூட்டமைப்பும் நல்லாட்சி அரசும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளது!- பிள்ளையான் By கிருசாயிதன் அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார். அதேவேளை, பெரும்பான்மையின மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். களுதாவள…
-
- 0 replies
- 280 views
-
-
யாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு யாழ்ப்பாண காவல்நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற காவல்துறை வீரர்கள் தின நிகழ்வில், யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் காவல்துறைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்தகாவல்துறையினருக்கு 2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நினைவாக மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்சகர்கள்.ஓய…
-
- 0 replies
- 473 views
-
-
சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மாவடிஓடை அணைக்கட் சேவிஸ் வீதி மற்றும் வாவிச்சேனை அணுகு வீதி – கொடுவாமடு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, இருவரும் நேற்றைய தினம் குறித்த பகுதிகளுக்கு சென்றிருந்தனர். இதன்போது குறித்த இருவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலரின் செயற்பாடு அமைந்திருந்தது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 4 replies
- 521 views
-
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் - ராமாயண தொடர்பு 19 மார்ச் 2021 இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலுக்கான புனிதமாகக் கருதப்படும் கல்லொன்று இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இலங்கையின் நுவரெலியா நகரை அண்மித்து அமைந்துள்ள சீதா-எலிய கோயிலிருந்தே இந்த கல் கொண்டு செல்லப்படுகிறது. சீதா-எலிய கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட கல், இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் கோபால் பாக்லே மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோரிடம் இந்த கல் நேற்றைய தினம் அலுவல்பூர்வமாக கையளிக்கப்பட்டது. கொழும்பு மயூரா பிளே…
-
- 9 replies
- 812 views
-
-
“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு! March 20, 2021 இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அடுத்த வாரம் கொண்டுவரப்படவுள்ள ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தாம் நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். HRC இன் தீர்மானத்திற்கு இந்தியா வாக்களிப்பதா அல்லது விலகுவதா என்பது “அவர்கள் தீர்மானிக்கும் ஒரு விடயம்”, ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள், தீர்மானத்தை இந்தியா “தெளிவாக” ஆதரிக்க வேண்டும், வாக்களிக்க வேண்டும் என, வரவிருக்கும் HRC இ…
-
- 6 replies
- 584 views
-
-
38 வருடங்களாக வாழ்ந்த வீடு... பிக்குகளால் அழிப்பு! கண்ணீர் மல்க வாக்குமூலம்! சிறிலங்காவில் பெளத்த இனவாத அரச ஆதரவுடன்... பிக்குகளால் நிர்மூலமாக்கப்பட்ட குடியிருப்பு உரிமையாளரின் வாக்குமூலம்... சிறிலங்காவில் அரச ஆதரவுடன் இடம்பெறும்... சிங்கள பெளத்த பயங்கரவாதம்! பிக்குகளால் நிர்மூலமாக்கப்படும் தமிழரின் குடியிருப்பு!
-
- 0 replies
- 389 views
-
-
(நா.தனுஜா) இலங்கையில் முன்கூட்டிய தடுப்பு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படாவிட்டால், முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைக்கும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்றும் அதன் விளைவாக நிலைபேறான சமாதானத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகள் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலக்கு வைக்கப்படும் இலங்கையின் முஸ்லிம் சமூகமும் அதிகரித்துவரும் ஓரங்கட்டப்படலும் என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச்சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்திருப்ப…
-
- 1 reply
- 311 views
-
-
முல்லைத்தீவு நாயாறு பிரதேசத்தில் தென்னிலங்கை மீனவர்களின் தொழில் காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (20.03.2021) மாலை இடம்பெற்றது. அந்தவகையில், நாயாறு பிரதேசத்தில் தொழிலில் ஈடுபட்டுவரும் சிலாபம் கறுக்குப்பனை மீனவர்களுக்குச் சொந்தமான சுமார் 150 படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், முல்லைத்தீவு மாவட்ட மீனவர் பிரதிநிதிகளும் கருக்குப்பனை மீனவர் பிரதிநிதிகளும் இணைந்த குழு ஒன்றினை அமைத்து, அனுமதிக்கப்படாத படகுகள் மற்றும் சட்ட விரோத தொழில் முறைகளை கட்டுப்படுத்துவது எனவும் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நாயா…
-
- 0 replies
- 254 views
-
-
தமிழர்களின் நில ஆக்கிரமிப்பை ஆராயும் சர்வதேச மாநாடு - அனைவரையும் பங்குபற்ற அழைப்பு தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு - கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தமிழர் தாயகத்தை இழத்தல் : தமிழர் நிலத்தை பாதுகாப்பதற்கான உபாயங்களை வகுத்தலும் பிரச்சினைகளை இனம் காணுதலும்” என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டுக்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் பிரித்தானிய நேரப்படி பிற்பகல் 12.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை (இலங்கை நேரம் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை) சூம் (Zoom) தொழிநுட்பம் மூலம் இந்த மாநாடு நடைபெறும். Zoom Video Webin…
-
- 1 reply
- 479 views
-
-
பதுளை மாவட்டத்தில் பேருந்து விபத்து – இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு 40 Views இலங்கையில் இன்று காலை ஏற்பட்ட பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்து, 35க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று அதிகாலை 7 மணியளவில் நடந்ததாக காவல்துறையினரின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. லுணுகல பகுதியிலிருந்து தலைநகர் கொழும்பை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தபோது பேருந்தில் சுமார் 50 பேருக்கும் அதிகமானோர் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலைய…
-
- 0 replies
- 488 views
-
-
பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான தீர்ப்பு ரத்து லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினருக்க…
-
- 0 replies
- 547 views
-
-
மலையக மக்கள் முன்னணியில் இருந்து அரவிந்தகுமார் எம்.பி நீக்கம் டி.ஷங்கீதன் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணி, மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றில் இருந்தும் வகித்த பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார் என்றும் முன்னணியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முன்னியின் மத்தியக் குழுக் கூட்டம், நேற்று மாலை ந…
-
- 0 replies
- 351 views
-
-
ஜஹ்ரானிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் – ஜேவிபி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழ ங்கியமை குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஜேவிபியின் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையை தேசியப்பட்டியலிற்கு நியமித்தமை குறித்து உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு ஜேவிபியிடமிருந்து எந்த வாக்குமூலத்தையும் பெறவில்லை என தெரிவித்துள்ள அவர் தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிம் உட்பட 21 பேருக்கு சம்பளம் வழங்கியமைக்காக மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும் என அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார். உயிர்த்த …
-
- 0 replies
- 407 views
-
-
உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? Twitter உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது. இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலா…
-
- 0 replies
- 370 views
-
-
ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் – கூட்டமைப்பு நம்பிக்கை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் வகையில் அடுத்த வாரம் கொண்டுவரப்படும் ஐ.நா. தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தி ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்த சுமந்திரன், வாக்களிப்பதா அல்லது விலகுவதா என தீர்மானிப்பது இந்தியாவின் விடயம் ஆனால் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தமது நிலைப்பாடு என கூறினார். 2020 …
-
- 0 replies
- 303 views
-