ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
வடகிழக்கு தமிழர் தாயத்தில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் அடுத்த வாரம் முக்கிய கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இம்மாநாட்டில் முன்னாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளிட்ட பலரும் பங்கெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பாளர் அனுராதா மிட்டலுடனான காணொளி கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர், இச்சந்திப்பிற்கென அனைத்து மட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனிடையே அமெரிக்க ஒக்லண்ட் பல்கலைக்கழக முகாமைத்துவ பணிப்பா…
-
- 0 replies
- 248 views
-
-
சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை என்கிறார் சாணக்கியன்.! இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்ப…
-
- 5 replies
- 662 views
-
-
நழுவிச் சென்றார் மைத்திரி முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன, நீண்ட நாட்களுக்குப் பின்னர், ஊடகங்களிடம் சிக்கிக்கொண்டார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் பங்கேற்றிருந்தார். நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்கள் அவரை சுற்றிக்கொண்டனர். கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார். “குற்றச்சாட்டுகள் எவ்வளவு முன்வைக்கப்பட்டாலும் அதனை நான், கவனத்தில் எடுக்கமாட்டேன்” என்றார். கேள்வி: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்…
-
- 0 replies
- 668 views
-
-
தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறிமுறையினை ஐ.நா.வில் சிபாரிசு செய்யவேண்டும்- சுரேஸ் தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்யவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகள், தங்கள் நாடுகளின் நலனை மாத்திரம் முன்னிறுத்தி செயற்படாமல் இலங்கையிலுள்ள தமிழ் மக்களினை பாதுகாக்கும் வகையிலான பொறிமுறையொன்றினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் சிபாரிசு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற பல்வேறு அநீதிகளுக்கு எதிராக, சர்வதேசத்தின் நீதியை கோரி மட்டக்களப்பு- …
-
- 0 replies
- 219 views
-
-
ஆயுதப் படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் வலியுறுத்து 36 Views சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை வேண்டுகிறோம் என ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது. சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையில், உள்நாட்டு சட்டங்களில் உள்ள இறைமையின் அடிப்படையிலான விதிவிக்கு சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்து வழக்குத் தொடர அனுமதிக்க வேண்டும் என அனைத…
-
- 1 reply
- 520 views
-
-
நாட்டிலிருந்து தமிழ் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை உலமா கட்சி பாராட்டுவதுடன் இவ்விரு வாதத்துக்கும் காரணமான பௌத்த தீவிரவாதத்தையும் நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட முன்வருவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இன்று பலரும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தும் நிலையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் அச்சொல்லை பாவிக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் ஜனாதிபதி அவர்களின் சரியான புரிதலை காட்டுகிறது. …
-
- 9 replies
- 780 views
-
-
வலிகாமத்தில் 3,300 ஏக்கர் காணி இன்னும் இராணுவக் கட்டுப்பாட்டில் – ஒக்லாண்ட் ஆய்வு அறிக்கை 112 Views “யுத்தம் முடியுவடைந்து 12 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும், வலிகாமம் வடக்கில் இன்னமும் 3,300 ஏக்கர் தனியார் காணிகளை இராணுவம் தன்வசம் வைத்துள்ளது” என அமெரிக்காவின் ஓக்லாண்ட் நிறுவனம் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டியில் பல நூறு வருடங்களை பழைமையான வரசித்தி விநாயகர் ஆலயம் மற்றும் சென் மேரி தேவாலயம் ஆகியவை முற்றாக தரைமட்டம் ஆக்கப்பட்டு இராணுவ மாளிகை ஒன்று அவற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயமும் தேவாலயமும் அங்கே இருந்தனவா என்ற அடையாளமே தெரியாத அளவுக்கு அவை தரைமட்டம் ஆக்கப்பட்…
-
- 0 replies
- 267 views
-
-
புலனாய்வு தகவல் கிடைத்தும் பென்டகன் தாக்குதலை அமெரிக்காவால் தடுக்க முடியவில்லை – சிறிசேன அமெரிக்க புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்தபோதும் அவர்களினால் பென்டகன் தாக்குதலை தடுக்க முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துருகிரிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், முழு உலகமும் அடிப்படைவாதம் , தீவிரவாதம், இஸ்லாம் தீவிரவாதம் என்பவற்றுக்கு முகம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்டார். பாரிய வளமும் தொழில்நுட்பத்தில் பலம் பொருந்திய நாடுமான அமெரிக்காவிற்கு கூட செப்டெம்பர் 11 தாக்குதல்களை தவிர்க்க முடியாமல் போனது என மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். பென்டகனிலுள்ள பாதுகாப்பு தலைமையத்தின் மீது மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 225 views
-
-
யாழ்.நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான போக்குவரத்து இடைநிறுத்தம்! யாழ்ப்பாணம் கோயில் வீதியில், நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி உடனான போக்குவரத்து, இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக இன்றையதினம் முதல் ஒரு மாத காலத்துக்கு இந்தப் போக்குவரத்துக்கான தற்காலிக தடை நடைமுறையில் இருக்கும். இதற்கு மாற்றுப் பாதையாக நல்லூர் ஆலயத்திலிருந்து கோயில் வீதியூடாகச் செல்லும் சிறிய வாகனங்கள், செட்டித்தெரு வீதி- செட்டித்தெரு ஒழுங்கை ( சின்னமயா மிஷன் வீதி) ஊடாகவும் நாவலர் வீதியிலிருந்து நல்லூர் ஆலயத்துக்கு கோயில் வீதியில் பயணிக்க…
-
- 0 replies
- 304 views
-
-
‘தவறி விழுந்தேன்’- இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்பட்ட இளைஞன் வாக்கு மூலம் சுன்னாகத்தில் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், தவறி விழுந்ததாக சுன்னாக பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு, மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினரால் தாக்கப்பட்டதாக கூறி, உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞன், சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்குடன் சுன்னாக பொலிஸார் வைத்தியசாலைக்கு சென்று, இளைஞரிடம் விசாரணைகள…
-
- 0 replies
- 267 views
-
-
மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 31 கொரோனா சடலங்கள் அடக்கம்! http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/Death-body.jpg மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் கொரோனா சடலங்களை புதைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணியில் இன்றையதினம் (திங்கட்கிழமை) மேலும் 7 பேரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இதுவரையில் அங்கு 31 கொரோனா சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு – ஓட்டமாவடியில் இதுவரை 31 கொரோனா சடலங்கள் அடக்கம்…
-
- 1 reply
- 309 views
-
-
யாழில் மாபெரும் தீப்பந்த போராட்டம் 56 Views சிறீலங்கா அரசால் தமிழ் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி வேண்டி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாபெரும் தீப்பந்த போராட்டம் நல்லூரில் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நல்லூர் பின் வீதியில் உள்ள போராட்ட களத்தில் இடம்பெற்றது. சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் ஆசியுரையோடு ஆரம்பித்த தீப்பந்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உரைகளும் இடம்பெற்றது. சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தக்கோர…
-
- 0 replies
- 454 views
-
-
முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து போராட்டம் 51 Views உலக மகளீர் நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுப்பு உடையணிந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது நான்கு ஆண்டுகளை கடந்து இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களுடைய தொடர் போராட்டத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில் “இன்று உலக மகளீர் நாளில் நாம் வீதிகளில் தொடர்ச்சியாக போராடி வருகிறோம்…
-
- 0 replies
- 211 views
-
-
ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 46ம் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் எம். ஏ. சுமந்திரனின் கருத்து: "இந்த பிரேரணை தோற்கடிக்கப்படுமாக இருந்தால் இன்றைக்கும் வெற்றிக் களிப்பிலே; வெற்றி மமதையிலே 'தமிழர்களை நாங்கள் தோற்கடித்தோம், தமிழர்களுடைய போராட்டத்தை நாங்கள் அடக்கிவிட்டோம். இனிமேல் அவர்கள் தலைத்தூக்க முடியாது, அதை அடக்கின எங்களுடைய போர்வீரர்களை எவரும் விசாரிக்க கூடாது; விசாரிக்க விடமாட்டோம்' என்று சொல்லிக்கொண்டிருக்கிற அரசாங்கத்திற்கு ஒரு வெற்றியை வாங்கிக்கொடுக்கிற செயலாகத்தான் இந்த பிரேரணை தோற்கடிக்கப்படுவதிருக்கும். ஆகையினாலே நான் அனைவருக்கும் பொதுவாக கேட்டுக்கொள்ளுகிற ஒரு விடயம்: இந்த குழப்ப நிலையை தொடரவிடவேண்டாம…
-
- 0 replies
- 250 views
-
-
இந்திய கடற்படையால் சிறீலங்காவைச் சேர்ந்த படகுகள் பறிமுதல் 28 Views அங்கீரகிக்கப்படாத தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் போதைப் பொருட்களுடன் மூன்று சிறீலங்கா படகுகள் இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள விஜின்ஜாம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது. அகர்ஷா துவ, சது ராணி 03 மற்றும் சாது ராணி 08 ஆகிய படகுகளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 19 நபர்களுடன் மார்ச் 5 திகதி மினிக்காய் தீவிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில் இந்திய கடற்பரப்பில் பயணித்த இந்த மூன்று படகுகளும் ‘ வராஹா ‘ என்ற இந்திய கடற்படையினருக்கு சொந்தமான கப்பல் தடுத்து நிறுத்த…
-
- 2 replies
- 508 views
-
-
ஸ்ரீலங்காவை ஐ.சி.சி. முன் நிறுத்துக :: ஐ.நா.விடம் தமிழக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஐவர் கோரிக்கை.! ஸ்ரீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர் உறுப்பு நாடுகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு 5 அவசர கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியாவின் தமிழ்நாடு சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஐந்து பேர் கையொப்பமிட்டு கோரிக்கை மனு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். நீதிபதி K.P சிவசுப்பிரமணியம், நீதிபதி A.K ராஜன், நீதிபதி அரிபரந்தாமன், நீதிபதி…
-
- 1 reply
- 425 views
-
-
ஐ.நா தீர்மானம் – கண்காணிக்கப்படும் இணைக்குழு நாட்டு தூதுவர்கள் 54 Views சிறீலங்கா அரசினால் தானது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக சந்தேகம் தோன்றியுள்ளதாக சிறீலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மகினொன் தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: எனது தனிப்பட்ட கலந்துரையாடல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நான் அந்த கலந்துரையாடல்களுக்கு ஊடகவியலாளர்களை அழைக்கவில்லை. கொழும்பு 07 இல் உள்ள கனடா கவுஸ் எனப்படும் எனது வதிவிடத்திற்கு வந்த விருந்தினர்களுடன் இடம்பெற்ற உரையாடல்கள் இரண்டு ஊடகங்களில் வெளிவந்துள்ளன. சிறீலங்காவுக்கான பங்களாதேஸ் தூதுவர் ரறக் அரிபுல் மற்றும் கனேடியத் …
-
- 0 replies
- 339 views
-
-
யாழ். செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து படையினர் குவிப்பு! யாழ்ப்பாணம் – செம்மணி இந்து மயானத்தில் ஆபத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானத்தில் பை ஒன்றில் பொதி செய்யப்பட்ட நிலையில் ஆபத்தான வெடிமருந்து காணப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் அடிப்படையில், இன்று (திங்கட்கிழமை) அதிகாலை குறித்த பகுதி சிறப்பு அதிரடிப்படையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. இதனையடுத்து, குறித்த பையை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும் சம்பவம் தொ…
-
- 1 reply
- 379 views
-
-
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயமுன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப்போராட்டத்தை நாளை காலைக்குள் கைவிடவேண்டும் என பொலிஸார் மிரட்டல் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை நாளை காலைக்குள் முடிவுக்கு கொண்டுவருவமாறு மட்டக்களப்பு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச ரீதியில் நீதிவேண்டி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணர்வு தவிர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்…
-
- 0 replies
- 218 views
-
-
என்னை முதல்வர் பதவியிலிருந்து அகற்றவேண்டும் என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள்..! பல லட்சம் பணத்தையும் அதற்காக செலவிடுகிறார்கள்.. யாழ்.மாநகர முதல்வர் பதவியிலிருந்து என்னை அகற்றவேண்டும். என ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் துடிக்கிறார்கள். என குற்றஞ்சாட்டியிருக்கும் யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பல லட்சம் பணத்தை அதற்காக செலவிட்டுள்ளதாகவும் கூறினார். சமகால நிலமைகள் தொடர்பாக இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணியுங்கள் என கூறிய ராஜபக்ஸக்களின் விசுவாசிகள் சிலர் என்னை தற்போது யாழ்.மாநகர முதல்வர் பதவியில் இருந்து அகற்றவேண்டும்.…
-
- 0 replies
- 346 views
-
-
கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் முன்னணி இணைந்து செயல்படாது – கஜேந்திரகுமார் 3 Views தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இனிவரும் காலங்களில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் எந்த விடயத்திலும் இணைந்து செயல்படாது என்று அந்தக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவரின் கட்சித் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். அத்துடன், “நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் சென்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது கடந்த தேர்தலின்போது சிறிய ஆட்டம் கண்டிருந்த நிலையிலும்கூட தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு இலங்கைக்க…
-
- 0 replies
- 256 views
-
-
நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காதவரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் -அருட்தந்தை மா.சத்திவேல் 20 Views நாம் ஒரு பலமான சக்தியாக இயங்காத வரைக்கும் அரசியல் கைதிகள் அகதிகள் தான் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் கைதிகளின் தற்போதைய நிலவரம் தொடர்பாக ‘இலக்கு’ மின்னிதழுக்கு கருத்து தெரிவித்த அவர், “அரசியல் கைதிகள் இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கான காரணம் ஒட்டுமொத்த அரசியல் தமிழ்த் தலைமைகளுமே. சிவில் சமூகங்கள் பொறுப்பேற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். அதாவது அரசி…
-
- 0 replies
- 689 views
-
-
முஸ்லிம் மக்களின் மத நூல்களுக்கு சிறீலங்காவில் தடை An ancient hand scripted Quran 38 Views அனைத்துலக சமூகத்தின் கடுமையான அழுத்தங்கள் காரணமாக கொரோனா நோயினால் மரணிக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பது என சிறீலங்கா அரசு எடுத்த முடிவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட போதும், தற்போது முஸ்லிம் மக்களின் மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு சிறீலங்கா அரசு தடைகளை விதிக்கவுள்ளதாக சிறீலங்காவில் ஜனநாயகத்தினை ஏற்படுத்துவதற்கான ஊடகவியலாளர் அமைப்பு தனது ருவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த தடை உத்தரவை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், ஐக்கிய நாடுகள் சபையினால் போர்க் குற்றவாளி என இனங்காணப்பட்டவருமான மேஜர் ஜெனரல் கமால் குணர…
-
- 0 replies
- 480 views
-
-
இன்று மாலைக்குள் தீர்வு இல்லையேல், இனி உணவுத்தவிர்ப்பு போராட்டம்தான் : சுகாதாரத் தொண்டர்கள் அறிவிப்பு! 5 Views இன்று மாலைக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர் இன்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துற்கு முன்னால் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்குமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் கடந்த ஏழு நாட்களாக ஈடுபட்டு வருகிறார்கள். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தை…
-
- 0 replies
- 223 views
-
-
கடும்போக்கு சிங்களவரைத் திருப்திப்படுத்தவே ஜனாஸா விவகாரத்தைப் பயன்படுத்தியது அரசு - இரணைதீவில் சுமந்திரன்! "முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திப்படுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சினை இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். இரணைதீவில் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும், பங்குத்தந்தையர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூற…
-
- 0 replies
- 413 views
-