Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் …

  2. சிறிலங்கா மீதான தீர்மானத்தின் பின்னணியில் புலம்பெயர் சமூகம் – அமைச்சர் பீரிஸ் குற்றச்சாட்டு 7 Views “புலம்பெயர் சமூகத்தின் வசமுள்ள அதிகபட்ச பலமும், ஒருங்கிணைப்பு மற்றும் பணபலம் ஆகியவற்றை பயன்படுத்தியே இலங்கைக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது நாட்டின் மக்கள், அரசாங்கத்திற்கு எந்த வகையிலும் இது பாதிக்காது” இவ்வாறு கூறியிருக்கின்றார் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் பீரிஸ் மேலும் தெரிவித்தவை வருமாறு: “வெளிவிவ…

  3. எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது- முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா எனக்கு புற்றுநோய் இருந்தது. அதனை முதல் கட்டத்திலேயே கண்டறிந்தமையினால் குணப்படுத்த முடிந்ததென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேலும் கூறியுள்ளதாவது, நான் அரசியலில் மாத்திரம் பிரவேசித்து இருக்காவிட்டால் பணக்கார பெண்மணியாக இருந்திருப்பேன். இதேவேளை நானொரு உண்மையயை கூற விரும்புகின்றேன். எனக்கு சில வருடங்களுக்க…

    • 5 replies
    • 524 views
  4. ராஜபக்ஷவுடன் மனம் கசந்து தனிவழி செல்கிறார் விமல் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவங்ச அதிரடியான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார். அவரது தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, அடுத்த மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவதற்கு தீர்மானத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் முன்னணியின் அரசியல் சபைக்குள் கலந்துரையாடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக நியமிக்கவேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்த கருத்து ராஜபக்ஷர்களுக்கு இடையிலும் அரசாங்கத்துக்குள்ளும் பொதுஜன பெரமுனவுக்குள்ளும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Tam…

    • 2 replies
    • 472 views
  5. பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லீம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் அனுமதி இல்லாமல் போதைப்பொருட்கள் எந்த வழிகளிலும் போக முடியாது எனவும் முஸ்லிம் பகுதிகளில் பள்ளிவாசல்களுக்கு அதிகாரங்களைக் கொடுத்து அவ்வாறு போதைபொருளை பாவிப்பவர்களை பகிரங்கமாக கொண்டு வந்து பத்து பிரம்படியாவது கொடுப்பதற்கு அரசாங்கம் அனுமதித்தால் மிக நன்றாக இருக்கும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். போதைப்பொருள் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் முகமாக அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள உலமா கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்க…

    • 3 replies
    • 416 views
  6. சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ் சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க அரசாங்கம் தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், குறித்த புதிய விதிமுறைகள் புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பிலும் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தங்கள் இராணுவத்தை பாதுகாக்க மற்ற நாடுகள் சட்டங்களை வகுத்துள்ளன என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். அதன்படி கொண்டுவரப்படும் புதிய சட்டதிட்டங்களின் படி இராணுவத்தினர் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது அவர்…

  7. யாழ்ப்பாணம் - நல்லூரில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கும் யாழ் மாநகர சபை உறுப்பினருக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நல்லூரில் யாழ் மாநகர சபைக்கு சொந்தமான காணியில் பொலிஸாரின் பாதுகாப்போடு அனுமதி பெறாது கொட்டகை அமைத்து நேற்று காலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளினாலும் ஏனைய தமிழ் ஆயுத குழுக்களாலும் கடத்தப்பட்டு,கொல்லப்பட்டோருக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ் சிவில் சமுக அமைப்பு எனும் குழுவினரால் குறித்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த இடத்தில் அனுமதி பெறப்ப…

  8. அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சந்தேக நபர்களை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அரச தவறிவிட்டால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேவ ஆராதணை ஒன்றை அடுத்து மக்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எந்த சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டாலும் நியாயம் கிடைக்கும் வரையில் மக்களுடன் இருப்பதாகவும் நியாயம் நிலை நாட்டப்படுவதை பார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அரசிற்கு கர்தினால் விடுத்துள்ள எச்சரிக்கை (adaderana.lk)

  9. புலன்விசாரணைகளை ஆரம்பிக்க அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க அடிப்படை சட்டத்தேவைப்பாடுகள் இல்லாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருக்க கூடாது என நாம் எமது வாதத்தை முன் வைத்தோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் நீதிமன்ற உத்தரவை மீறி முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்ற அவமதிப்பை மேற்கொண்டார்கள் என பருத்தித்துறை , நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்க கூடாது என கோரி மன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தொடர்பிலான விசாரணையில் இன்றைய தினம் திங்கட்கிழ…

  10. மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது! மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரை கட்சியை விட்டு நீக்குவதற்கும், அவர் வகிக்கும் பதவிகளை பறிப்பதற்கும் மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு மத்திய செயற்குழு மற்றும் தேசிய சபை ஆகியன ஒப்புதல் வழங்கிய பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இராதாகிருஷ்ணன் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். இதன்போது அவர் கூறியவை வருமாறு, ” தெரிந்து துரோகம் செய்தவர்களிடம் நியாயம்…

  11. ஐ.நா. விவகாரத்தில் இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை விடயத்தை இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பின திஸ்ஸ அத்தநாயக்க, அமர்வின் முடிவில் இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை இராணுவமயமாக்கல் போன்ற விடயங்களை எடுத்துக்காட்டுகிறது என குறிப்பிட்ட அவர் இலங்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த…

    • 0 replies
    • 362 views
  12. மாகாணசபை தேர்தல் குறித்து புதிய சட்டம் விரைவில் – தேர்தல் ஆணையாளர் நாயகம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவது குறித்து புதிய சட்டத்திற்குத் தேவையான பரிந்துரைகளை அடுத்த சில நாட்களில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக அமைந்தாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்ட சிக்கல்களுக்குத் தீர்வுகளைப் பெற்ற பின்னர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய் யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 305 views
  13. எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தல் எம்.சி.சி உடன்படிக்கை குறித்து முக்கிய அறிவித்தலைச் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். அதன்படி அமெரிக்காவுடனான எம்.சி.சி உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திடப் போவதில்லையென என இன்றைய தினம் சட்ட மா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். Thinakkural.lk

    • 0 replies
    • 339 views
  14. கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் மோசடி!மகஜர் கையளிப்பு! March 22, 2021 கிழக்கு மாகாண பாடசாலைகளில் வெற்றிடமாக உள்ள ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பரீட்சாத்திகள் விசனம் தெரிவித்தனர். கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை சேர்த்துக்கொள்ளும் நோக்கில், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இப்போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டது. அதில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 03 மாவட்டங்களில் இருந்து சுமார் 600க்கும் மேட்பட்ட பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் …

  15. சிங்கள மக்களை இந்தியா தொடர்ந்து காப்பாற்றும் – சிறீலங்கா நம்பிக்கை 71 Views மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை காப்பாற்றுவதாக இந்தியா தொடர்ந்து தெரிவித்துவருவதால் அது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணைக்குழுவில் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கும் என தாம் நம்புவதாக சிறீலங்காவின் வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். எனினும் கொரம்பகேயின் இந்த கருத்துக்கு ஆதரங்கள் இல்லை என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. செயலாளரின் இந்த கருத்து தொடர்பில் தான் எதனையும் கூற விரும்பவில்லை என சிறீலங்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் பேச்சாளர் எடோஸ் மத்தியூ புன்னூஸ் தெரிவித்துள்ளார். …

  16. சிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்! March 21, 2021 உலகின் பல நாடுகளிலுள்ள முன்னாள் நீதியரசர்கள், முன்னணி சட்ட வல்லுநர்கள், சட்டத்துறை பேராசிரியர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உறுப்பினர்களாக இருக்கும் பன்னாட்டு சட்டவாளர்கள் ஆணையம் (ஐ சி ஜே), இலங்கையின் தீவிரவாத சித்தாந்தங்களிலிருந்து விடுபடும் ஒழுங்கு விதிகளை கடுமையாக கண்டித்துள்ளனர். மிகவும் கொடூரமான இந்த ஒழுங்குவிதிகள் வகைதொகையின்றி நிர்வாக ரீதியாக வழக்கு விசாரணையின்றி மக்களைத் தடுத்து வைக்க வழி செய்கிறது. இந்த ஒழுங்குவிதிகள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரைச் சமமற்ற வகையில் இலக்கு வைக்கக் கூடும் என்று ஐ சி ஜே எச்ச…

  17. சுயநிர்ணய உரிமையை ஐ.நா. பெயரளவில் வைத்திருப்பதால் பயனில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஐ.நா.கட்டமைப்புக்கள் பெயரளவில் சுயநிர்ணய உரிமையை வைத்திருக்கும் வரையில் அடக்கப்படுகின்ற அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வியன்னா பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான திட்டமிடல் தொடர்பான பொது விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு மக்கள் கூட்டம் தமது வாழ்வின் பிரிக்க முடியாத உரிமையான சுயநிர்ணய உரிமையை பெற்றிட நியாயமான எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள உரித்துடையவர்கள் என விய…

  18. இலங்கையை ஐ.சி.சிக்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென்னாபிரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம்! 14 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த உதவுமாறு கோரி தென் ஆபிரிக்காவுக்கான மேன்முறையீட்டுக் கடிதம் ஒன்றை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரெழுச்சி இயக்கம் இன்று அனுப்பிவைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென் ஆபிரிக்காவானது உலகின் அதிகாரம்மிக்க நாடுகளில் ஒன்றாகவும், இனவொதுக்கலின் வலிக்கு உட்பட்டும், சர்வதேச விவகாரங்களில் ஈடுபாட்டைக் கொண்டும் உள்ளதுடன் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிறந்த புரந்துணர்வையும் கொண்டுள்ளதால், ஐக்கிய இராச்சி…

  19. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் வகையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது காணாமல் போனோரின் உறவினர்களுடைய ஒத்துழைப்பு கிடைக்குமாயின் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குழு ஒன்றை அமைத்து ஒரு மாதத்தில் தீர்வினை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் …

  20. உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் 2021 – இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி தீர்வுகளுக்கான இணையம் (UN Sustainable Development Solutions Network) வெளியிட்டுள்ளது. 149 நாடுகளில் இந்தக் கணிப்பீடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இலங்கை 129ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்து முடி சூடியுள்ளது. இதற்கடுத்து, டென்மார்க் (2), சுவிற்சர்லாந்து (3), ஐஸ்லாந்து (4), நெதர்லாந்து (5), நோர்வே (6), சுவீடன் (7), லக்சம்பேர்க் (8), நியூசிலாந்து (9) மற்றும் ஆஸ்திரியா (10) ஆகிய நாடுகள் முறைய இரண்டு முதல் 10 இடங்களில் உள்ளன. மே…

    • 1 reply
    • 404 views
  21. அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்த முக்கியமான ஒலிநாடா ஒன்றை பெற்றுக்கொள்ளவே தான் கடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் சுஜீவ கமகே தெரிவித்துள்ளார். சென்ற பத்தாம் திகதி கடத்தப்பட்டு சித்திரவதையின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குறித்த ஊடகவியலாளர் நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். இதன்போது தான் கடத்தப்பட்ட முறை தொடர்பாக சுஜீவ கமகே விளக்கமளித்தார். தான் பணியாற்றும் சியரட்ட என்ற செய்தி இணையத்தளத்திற்குத் தான் எழுதுவதற்காகச் சேர்த்து வைத்திருந்த அரசாங்கம் பற்றிய ஒலிநாடாவை அழிப்பதே கடத்தல்காரர்களின் நோக்கம் என்றும் அவர் கூறினார். கறுப்பு நிற வாகனம் ஒன்றில் தன்னைக் கடத்தி சுமார் இரண்டு மணிநேரம் விசாரணை செய்த…

  22. பசறை விபத்தில் பஸ் சாரதி உட்பட 9 ஆண்களும் 6 பெண்களும் பலி;இருவர் கவலைக்கிடம் பதுளை- செங்கலடி வீதி 13ஆவது மைல்கல் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பஸ் விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் பதுளை மாகாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பசறை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் வைத்திய அதிகாரி கே.எம். சமரபந்து தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர். பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்ப…

  23. ஜெனீவா தீர்மானத்தின் ஒரு சில விடயங்களுக்கு உள்ளக பொறிமுறையின் கீழ் தீர்வு - சரத் வீரசேகர (இராஜதுரை ஹஷான்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்களை சிறந்த முறையில் எதிர்கொள்வோம் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். 30 வருட கால சிவில் யுத்தம் இலங்கையின் சுதந்திரத்திற்காகவே முன்னெடுக்கப்பட்டது. விடுதலை புலிகளின் போராளிகள் குறித்து மாத்திரம் கவனம் கொள்ளும் மேற்குலகம் யுத்தத்தில் உயிரிழந்த 29 ஆயிரம் படைவீரர்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் விடுதலை புலிகளின் தாக்குதலினால் உயிரிழந்த அப்பாவி பொது மக்கள் குறித்து கவனம் கொள்ளாதது கவலைக்குரியது. …

  24. அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய த.தே.கூட்டமைப்பும் நல்லாட்சி அரசும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளது!- பிள்ளையான் By கிருசாயிதன் அதிகாரத்தைத் தருவோம் எனக் கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நல்லாட்சி அரசாங்கமும் மாகாண சபையை தற்போது இல்லாமல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றஞ்சாட்டினார். அதேவேளை, பெரும்பான்மையின மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இந்த அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கடந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். களுதாவள…

  25. யாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு யாழ்ப்பாண காவல்நிலையத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண காவல்நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற காவல்துறை வீரர்கள் தின நிகழ்வில், யாழ்ப்பாண சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் காவல்துறைக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு கடமையின் போது உயிரிழந்தகாவல்துறையினருக்கு 2 நிமிட அகவணக்கம் இடம்பெற்று உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் நினைவாக மலர் வளையங்கள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண பிரிவு க்குட்பட்ட காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்சகர்கள்.ஓய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.