Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை 22 Views சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “மாவட்ட பொறியியலாளரை சந்திக்க பாலமடு பகுதியினைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் முயற்ச…

  2. சிறீலங்காவுடனான உறவில் மனித உரிமைகளை மையப்படுத்தவும் -அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜாங்கச் செயலருக்கு கடிதம் Deputy Secretary of State Antony Blinken testifies on Capitol Hill in Washington, Tuesday, Jan. 27, 2015, before the Senate Banking Committee hearing on Iran sanctions. A group of Senate Democrats told the White House on Tuesday that they won't support passage of an Iran sanctions bill until at least the end of March. (AP Photo/Susan Walsh) 26 Views சிறீலங்காவுடனான இராஜீக உறவில் மனித உரிமைகளை மையப்படுத்துமாறும் சிறீலங்காவுக்கான ஒரு பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஊக்குவிக்குமாறும் ஒன்பது அமெரிக…

  3. அனுராதபுரம் கொண்டு செல்லப்பட்ட வட மாகாண காணி ஆவணங்கள்மீண்டும் யாழ்ப்பாணம் வந்தன கடந்த 08ஆம் திகதி இரவு வட மாகான காணி ஆவணங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரகசியமாக அனுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைபெரும் சர்சையை ஏற்படுத்தியிருந்தது.இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்தஆவணங்களை யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இந் நிலையில் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, குறித்த ஆவணங்களை யாழ்ப…

  4. பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை – சிபோன் 21 Views ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கான எந்த பரிந்துரைகளும் இல்லை என இன்று (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தின் போது பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபொன் மக்டொனாக் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியான தீர்மானம் அது ஏமாற்றம் தருகின்றது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு சிறீலங்காவை பாரப்படுத்துவதற்கான…

  5. சிங்கராஜ வனம் தொடர்பில் கருத்து வௌியிட்ட யுவதியிடம் வாக்குமூலம் பதிவு சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்‌ஷபதி நிகழ்ச்சியில் தெரிவித்த மாணவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இரத்தினபுரி பிரதேச சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

    • 0 replies
    • 442 views
  6. பல்கலைக்கழக காலத்திலிருந்து போராட்டச் செயற்பாடுகளில் ஈடுபட்டு 1983இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து புகைப்படக் கலைஞராக, நிதர்சனம் தொலைக்காட்சி புலிகளின் குரல் வானொலி ஆகியவற்றின் ஆரம்பகர்த்தாவாக விளங்கிய பரதன் அவர்கள் மாரடைப்பால் லண்டனில் இன்று மார்ச் 18இல் காலமானார். மேலதிக விபரங்களுக்கு: https://www.ilakku.org/?p=44947&amp

  7. (எம்.மனோசித்ரா) இராணுவத்தில் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மத்ரசா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ரசா பாடசாலைகள் என்பது ஏனைய மதங்களில் காணப்படும் அ…

  8. (எம்.மனோசித்ரா) வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான புதிய சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்று நிரூபத்திற்கமைய கொவிட் தடுப்பூசி ஏற்றி பின்னர் நாட்டுக்கு வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகை தருபவர்கள் முதலாவது நாளிலும் ஏழாவது நாளிலும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். இவ்விரு பரிசோதனைகளிலும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அன்றைய தினமே அவர்கள் ஹோட்டலிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேற மு…

  9. உறவுகளைத் தேடி உண்ணாநோன்பிருக்கும் தாய்மாருக்கு ரெலோ ஆதரவு 28 Views காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ”போரின் இறுதியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரி…

  10. சுற்றுலாமையத்தின் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்- நகரசபையில் இறுக்கமான தீர்மானம் 15 Views வவுனியா குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும் என இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது. இதன்போது குறித்த சுற்றுலா மையத்திற்குள் சபையின் அனுமதியின்றி மேலதிக நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு சபை தீர்மானம் எடுக்கவேண்டும் என்…

  11. நூருள் ஹுதா உமர்- இன‌ங்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமையையும், புரிந்துண‌ர்வையும் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌திலாக‌ எப்போது பார்த்தாலும் முஸ்லிம்க‌ளை "கிண்டு"வ‌தில்த்தான் அந்த‌ ஆட்சி முய‌ன்ற‌து. முஸ்லிம்க‌ள் என்ன‌ சாப்பிடுகிறார்க‌ள், என்ன‌ உடுக்கிறார்க‌ள், கொத்துக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, ஜ‌ட்டிக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, அபாயா, முக‌ம் மூடுத‌ல், அர‌பு ம‌துர‌சா, ஹிஸ்புல்லாவின் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் என‌ இவ‌ற்றைத்தான் அர‌ச‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌னியார் ஊட‌க‌ங்க‌ளும் பேசின‌ என்று உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் க‌ட‌ந்த‌ 2015ல் நாட்டுக்கு ந‌ல்ல‌தொரு ஆட்சியை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் ப‌ல‌ த…

    • 0 replies
    • 443 views
  12. விடுதலை புலிகளின் உடமைகளை தேடி கிளிநொச்சியில் அகழ்வு பணி கிளிநொச்சியின் இரு வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வுப் பணிக்காக அனுமதி பெறப்பட்டு அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரு அகழ்வுப் பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் …

  13. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். …

  14. வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா? – சுதந்திர ஊடகவியலாளரிடம் காவல்துறை விசாரணை 23 Views மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் இன்று காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் ஊடவியலாளர் சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான புண்ணியமூர்த்தி சசிகரனே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை 10.00மணி தொடக்கம் 11.30மணி வரையில் மட்டக்களப்பு சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள குற்ற விசாரணைப்பிரிவில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஊடகவியலாளரின் வீ…

  15. - டி.விஜித்தா யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார். இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வரப்பட்டன. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் , இன்று (17) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந…

    • 4 replies
    • 653 views
  16. முஸ்லிம்களுடனான உறவுக்கு நீண்ட வரலாறு உள்ளதெனத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல, புர்காவை தடைசெய்வதற்கு அவசரப்படவில்லை, அத்துடன் திறந்தவெளி கலந்துரையாடலுக்குப் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்றார். அரசாங்கத் தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். “நீண்ட வரலாற்றை கொண்ட உறவு இருந்தாலும் கலாசார மாற்றம் ஏற்பட்டது. இங்குமட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் அந்த கலாசார மாற்றம் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிப்பதாய் அமைந்திருந்தது. இங்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின்னர் இவ்வாறான கலந்துரையாடல்கள் …

  17. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17.03.2021) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வருகை தந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதியூடாக மாவட்டச் செயலகத்திற்கு சென்று, மாவட்ட அரச அதிபர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கான கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டன. கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மரணமடைந்திருந்தார். மரணமடைந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய அருளம்பலம் துஸ்யந்தன் கிராமத்தின் நலன்களில் அக்கறையுள்ள, நற்பிரஜை எனவும், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் தெரிவிக்கும் பொதுமக்கள்…

  18. இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 201.75 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 201.75 ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk

    • 15 replies
    • 1.1k views
  19. (நா.தனுஜா) மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கை 'மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு…

  20. ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 42 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐர…

  21. ஆதாரங்களை பாதுகாக்கும் பொறிமுறை – திட்டவட்டாக நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம் 25 Views போர்க் குற்றங்கள் குறித்த எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவ்வாறான பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்காது. அனுமதியளிக்காது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாங்கள் வெளிப்படையாக இதனை நிராகரிக்கின்றோம். இது மனித உரிமை பேரவையின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சி;ன்…

  22. - நூருல் ஹுதா உமர் தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் மொழி அல்ல‌. த‌மிழ் தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் த‌மிழ் மொழியா? ஜேவிபி தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் சிங்கள‌ மொழியா? அர‌பு பேசுகின்ற‌ சவூதியும் ய‌ம‌னும் ச‌ண்டை பிடிக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் யார் தீவிர‌வாதி? பிரிட்ட‌னும் அய‌ர்லாந்தும் ஆங்கில‌ம் பேசும் நாடாக‌ இருந்தும் இர‌ண்டும் ஆயுத‌த்தால் ச‌ண்டை பிடித்த‌ன‌. ஆக‌வே தீவிர‌வாத‌த்துக்கும் மொழிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. ஒவ்வொரு ச‌மூக‌மும் அடுத்த‌ ச‌மூக‌த்த‌வ‌ர் விட‌ய‌ங்க‌ளில் மூக்கை நுழைக்காமல் ஒருவ‌ரை ஒருவ‌ர் ம‌தித்து வாழ்ந்தால் தீவிர‌வாத‌த்தை இல‌குவாக‌ ஒழிக்க‌லாம் என என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…

  23. அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு! கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். மேலும், உயிர…

  24. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்…

    • 2 replies
    • 709 views
  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல – இரா.சாணக்கியன் 11 Views அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது. அமைச்சர் சீதா அரம்பிபொல ஒரு நிகழ்ச்சியின் போது Vocational Training and Skills Development Ministry இனால் IT Incubation Centre (கணனிகளுடன் கூடிய) கொடுப்பதற்கான விடயம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. இந்தநிலையில் இதனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.