Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மக்களின் எதிர்ப்புகளுக்கு அஞ்சி.. பொது நிகழ்வுகளை, தவிர்த்துக்கொள்ளும் அமைச்சர்கள்... ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்? அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது நிகழ்வை தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மின்வெட்டு, சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் கடும் கொதிப்பில் உள்ள நிலையிலேயே அவர்கள் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. அரசுமீதான அதிருப்தியை மக்கள் தம்மீது காட்டக்கூடும் என்பதாலும், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுமே அவர்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரியவருகின்றது. ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாரம…

  2. இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு இலங் கைக்கு ஆதரவான நாடுகள் உட்பட பன்னாட்டு சமூகம் ஒரு வரைய றைக்கு அப்பால் இலங்கைக்கு ஆதரவு வழங்கப் போவதில்லை என வும் இந்தியா, சீனா உட்பட இலங்கைக்கு நெருக்கமான நாடுகளும் மேற்குலகைப் பகைக்காமல் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் சாத்தியக் கூறுகளே காணப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிபுணர்கள் குழு ஒன்றை நியமிப்பதற்கு முடிபெடுத்திருப்பது தொடர்பில் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அணிசேரா நா…

  3. அலரிமாளிகையினை... முற்றுகையிட்டு, போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275688

  4. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் அரசாங்கம் விளையாட்டு வீரர்களையும் நடிகர்களையும் களம் இறக்கி மக்களுக்கு வேடிக்கை காட்டுகிறது. யுத்த போதையை மக்களுக்கு ஊட்டி அரசியல் நடத்திய ஆட்சியாளர் இன்று கேளிக்கை நிகழ்வை மேடையேற்றுகின்றனர் என இடது சாரி விடுதலை முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். நேற்று காக்கைத் தீவு பகுதியில் பெருமாள் பூமிநாதன் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே விக்கிரமபாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், "நாவலப்பிட்டியில் நடைபெற்ற எமது கூட்டத்தை பொலிஸார் தடுத்தனர். "எதற்காக இங்ஙனம் செயற்படுகிறீர்கள்?" எனக் கேட்ட போது, "இவ்வாறு செயற்படாவிட்டால் எமது பதவி பறிபோய் விடும்" என்று அவர்கள் கூறுகின…

    • 0 replies
    • 596 views
  5. வடக்கு மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்... // பசில் ராஜபக்ஸ http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-6

  6. ரம்புக்கனை ஆர்ப்பாட்டம்: கேகாலை நீதிமன்றில் முன்னிலையாகின்றது சட்டத்தரணிகள் சங்கம்! ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை கருத்திற்கொண்டு பொலஸார் மற்றும் படையினர் கட்டுப்பாட்டுடன் செயற்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேலும் நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் தொடர்ந்தும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வார்கள் என அச்சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பத…

  7. டெங்கு நோய்த் தாக்கம்: யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி பலி டெங்கு நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு பாடசாலை மாணவி ஒருவர் இன்று யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்துள்ளார். யாழ் புனித ஜோன் போஸ்கோ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய மாணவி கே. சரா உயிரிழந்துள்ளார். கடந்த 11,12,13 ஆம் திகதிகளில் காய்ச்சல் காரணமாக சோர்வடைந்து காணப்பட்டதுடன் தனியார் வைத்திய சாலையில் மாத்திரை பெற்று வந்துள்ளார். நேற்று 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்து காணப்பட்டதால், தனியார் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்கு அன்றைய தினமே உடனடியாக யாழ் போதனாவைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். பின்னர் சி…

  8. அவசர நிதி உதவிக்காக... IMF இடம் உத்தியோகபூர்வமாக, கோரிக்கை விடுக்கப்பட்டது! அவசர நிதி உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தலைமையிலான இலங்கைக்குழு வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை குறித்து இங்கு முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நடுத்தர கால, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எரிபொருள், எரிவாயு மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விநியோகத்தை வழமை…

  9. . நாடாளுமன்ற வளவில் வெள்ளம் : படகுச் சேவை ஏற்பாடு அடை மழை காரணமாக நாடாளுமன்ற நுழைவாயிலில் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டிருப்பதால், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் படகுச் சேவை மூலம் வெளியில் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற அமர்வில் இன்று பிரசன்னமாகியிருந்த அனைவரையும் 6 படகுச்சேவைகள் மூலம் அங்கிருந்து வெளியே அழைத்து வர பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி - .

  10. அத்துமீறும் இந்திய மீனவர்கள் மீது இனிக் கடும் நடவடிக்கையாம்! – இலங்கை அரசு அறிவிப்பு. [sunday, 2014-03-16 18:13:12] இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசிக்கின்ற இந்திய மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மீன் பிடிப்பதற்காக வருகின்ற மீனவர்களை விட, அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளின் உரிமையாளர்களே இந்த அத்துமீறலுக்கு முக்கிய பொறுப்பு என்றும், அதனால், கைதுசெய்யப்படுகின்ற மீனவர்கள் சிறைகளில் தடுத்து வைத்து பின்னர் குறிப்பிட்ட காலத்தில் விடுதலை செய்கின்ற வேளையில், அவர்கள் பயன்படுத்துகின்ற படகுகளைப் பறிமுதல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது. இருநாட்டு மீனவர்க…

  11. ஆதரவாளர்களால் நஸீரின் இல்லம் முற்றுகை அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரின் இல்லத்தை இன்று (23) காலை முற்றுகையிட்டனர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமால் வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்றப் பிரதிநிதியைத் தராமல் தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வது, அட்டாளைச்சேனை பிரதேச மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றும் செயல் எனத் தெரிவித்தே, அவர்கள் இவ்வாறு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துரைத்த ஏ.எல்.முஹம்மட் நஸீர், “தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பிரதிந…

  12. அமைதியின்மையை... ஏற்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு... எதிராக சட்ட நடவடிக்கை! நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள்…

  13. "லக்ஸபான'' காரணம் காட்டி ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து உதவி திகதி: 28.05.2010 // தமிழீழம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு "லக்ஸபான'' மின்விநியோகத்தை வழங்கும் செயற்றிட்டம் நேற்று கிளிநொச்சியில் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் இருந்து 132 வலுவுள்ள மின்சாரத்தை கிளிநொச்சி, சுன்னாகம் மின்நிலையங்களுக்கு வழங்கி, அவற்றின் ஊடாக ஏனைய பகுதிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் இருவருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என்று சிறீலங்கா மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இருந்து கிளிநொச்சியில் வரை சுமார் 73 கிலோ மீற்றர் தூரத்திற்கு மின் இணைப்புப்பணியை மேற்கொள்வதற்காக ஜப்பான் ஜெய்சிக்கா நிறுவனம் 3,200 மில்லி…

    • 0 replies
    • 474 views
  14. இந்திய அமைதிப்படைக்கு எதிராக கிழக்கிலும் முறைப்பாடுகள்! [saturday, 2014-03-22 08:29:51] காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு, இந்திய அமைதி காக்கும் படையினருக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யு குணதாச இதனைத் தெரிவித்துள்ளார். ஆணைக்குழு நசெங்கலடியில் விசாரணை நடத்திய போது, 250 புதிய முறைபாடுகள் கிடைக்கப் பெற்றன. அதில் 3 முறைபாடுகள் இந்திய அமைதிக்காக்கும் படையினருக்கு எதிரானவை. எனினும் இந்த ஆணைக்குழு 1990ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குறிய விசாரணைகளையே மேற்கொள்ளும் நிலையில், இந்திய அமைதிக்காக்கும் படையினருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் ஏதும் செய்ய முடியாது என்று அவர…

  15. தற்போதைய ஆட்சியில்... ஐக்கிய மக்கள் சக்தி, எந்தப் பதவியையும்... ஏற்காது – சஜித் பிரேமதாச ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப எடுக்க வேண்டிய முதல் நடவடிக்கை இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். ருவிட்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் எந்தப் பதவியையும் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், ஸ்திரத்தன்மைக்காக அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்…

  16. ஈழத்தமிழர் விவகாரம் : இலங்கை கண்டிப்பாக தீர்க்க வேண்டும் : கனிமொழி ------------------------------------------------------------------------------------------------------------------------------------ http://ibnlive.in.com/videos/123500/sri-lanka-must-solve-the-tamil-issue-kanimozhi.html?from=rhs

    • 0 replies
    • 1k views
  17. ஈழத்தீவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதே ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படை நோக்கம் என்பதும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணத்துடன் இத்தீர்மானம் கொண்டு வரப்படவில்லை என்பதையும் தனது அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றில் மிகவும் பூடகமான முறையில் அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. இறுதிப் போரில் நிகழ்ந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகத்திற்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் இன்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டதையிட்டு அறிக்கை ஒன்றை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி வெளியிட்டுள்ளார். அதில் நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளுக்கான மதிப…

  18. எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... நீண்ட வரிசையில், யாழ் மக்கள் ! யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பரீட்சை கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டே காணப்ப…

  19. போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் ஒரு பகுதியாக, அத்தகைய சம்பவங்கள் இடம்பெற்ற சூழல் தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணை ஆரம்பமாகியுள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து, சிறிலங்காப் படையினரிடம் சரணடந்தனர். முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அவர்கள் சரணடைந்ததை பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரடியாகக் கண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது, எங்கே வைக்கப்பட்டிரு…

    • 4 replies
    • 814 views
  20. மாட்டுவண்டியில் பயணித்த மகிந்த அணியினர் நாட்டில் தற்போது நிலவிவரும் எரிபொருள் தட்டுப்பாடு நிலையில் வடமேல் மாகாண சபையின் இன்றைய அமர்வுக்கு மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் சென்றுள்ளனர். எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியும், நல்லாட்சி அரசை கடுமையாக விமர்சிக்கும் வகையிலாக எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் மகிந்த அணியினர் மாட்டுவண்டியில் பயணம் செய்தனர். http://newuthayan.com/story/44435.html

  21. சென்னை: முதல்வர் கருணாநிதி யும் ஒரு போர்க்குற்றவாளிதான். அவர்தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போரை நடத்த முக்கிய காரணம். எனவே ஐ.நா விசாரணைக் குழு இலங்கைக்கு செல்லும்போது அதிமுக குழு ஒன்று அங்கு சென்று கருணாநிதியும் போர்க்குற்றவாளிதான் என்று புகார் கொடுக்கும் எனக் கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதுதொடர்பாக இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கை: இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய்வதற்காக, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கி மூன் நியமித்து இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளி வந்துள்ளது வரவேற்கத்தக்க…

  22. கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ள…

  23. ஐ.நா. குழுவை எதிர்க்க சீனாவுடன் கூட்டு சேருகிறது இந்தியா: தா.பாண்டியன் திகதி: 11.07.2010 // தமிழீழம் ஐ.நா. குழுவை முறியடிக்க, தமிழர்களுக்கு எதிரான நிலையை மேற்கொண்டுள்ள இந்திய அரசு, இதற்காக சீனாவின் உதவியை நாடியுள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கையில் நாலரை லட்சத்திக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிய செயல் என ஐ.நா. விசாரணை குழு அமைத்துள்ளது. இலங்கை அரசுடன் இந்திய அரசும் சேர்ந்து ஐ.நா.குழுவை எதிர்ப்பதற்கு சீன ஆதரவை கோரியுள்ளது. முதல்வர் கருணாநிதி அதிகாரத்தில் இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என சபதம் எ…

    • 3 replies
    • 848 views
  24. இலங்கை மனித உரிமை விவகாரம் காரணமாக பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவி ரத்து 15 ஏப்ரல் 2014 இலங்கை மனித உரிம விவகாரத்தை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.