Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார். குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர…

    • 0 replies
    • 480 views
  2. யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு நேற்று பலாலி வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்த இந்தியத் தூதுவரும், தூதரக உயர் அதிகாரிகளின் குழுவும் அங்கு முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக குடாநாட்டு மக்களின் உணர்களை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தூதுவர் அலோக் பிரசாத்துடன் பிரதித் தூதுவர், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் உட்பட தூதரக முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தப் பயணத்தில் இணைந்திருக்கின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை பலாலி வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் பின்னர் அங்கிருந்து யாழ். நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ். புறப்படுவதற்கு முன்னர் குடாநாட்…

    • 0 replies
    • 467 views
  3. யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினரிடம் யாழ். மாவட்டத்தில் இன்னமும் 5250 ஏக்கர் தனியார் காணிகள் சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக, யாழ். மாவட்டச் செயலர் அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கில் சிறிலங்கா படையினர் வசமிருந்த 28.8 ஏக்கர் காணிகள் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட பின்னரே அவர் இதனைத் தெரிவித்தார். காங்கேசன்துறை, மயிலிட்டிப் பகுதிகளில் உள்ள 28.8 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்காக, யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சி, யாழ். மாவட்ட செயலரிடம் கடந்த வெள்ளிக்கிழமை கையளித்தார். 1990ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா படையினரின…

    • 0 replies
    • 231 views
  4. வாள்கள், பொல்லுகளுடன் வந்த இனம்தெரியாத நபர்கள் இளம் பெண் ஒருவரை கடத்திச்சென்றுள்ளதாக குறித்த பெண்ணின் தாயாரால் முறைப்பாடு ஒன்று மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மானிப்பாய் பொன்னாலை வீதி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாள்கள், கத்தியுடன் வந்த 8 பேர் அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு சென்று கலவரம் செய்துள்ளனர். அப்போது அந்த வீட்டில் இருந்த 20 வயதுடைய இளம் பெண் வீட்டை விட்டு வெளியே ஓடிச்சென்றுள்ளார். அவரை துரத்திச் சென்ற இனம் தெரியாத நபர்கள் அப் பெண்ணை பலவந்தமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். இந்நிலையில் தனது மகளை மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் தாயாரால் முறைப்பாட…

    • 7 replies
    • 624 views
  5. நம்பிக்கை பொறுப்பின் ஊடாக கொரோனா நிவாரணப் பணி: முடிந்தளவு நிதி உதவி செய்யுமாறு நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை தொடரும் பயணத் தடை மற்றும் முடக்கம் காரணமாக பசியில் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முடிந்தளவு நிதி உதவியினை செய்யுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் உள்ளூர் மற்றும் புலம்பெயர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். “நம்பிக்கைப் பொறுப்பு” என்ற நன்கொடை அமைப்பின் வங்கிக் கணக்குக்கு விரும்பியவர்கள் முடிந்தளவு நிதியை அனுப்புமாறும் கிடைக்கும் நிதி மற்றும் செலவழிக்கும் பணம் ஆகியவற்றுக்கான கணக்கு அறிக்கை ஊடகங்களில் வெளியிடப்படும் என்…

    • 2 replies
    • 306 views
  6. யாழ்ப்பாணம் தீவுப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் கரையொதுங்கிய இரண்டு இளைஞர்களின் உடலங்கள் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டு யாழ். மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு இளைஞர்களின் உடலங்களிலும் அடி காயங்கள் காணப்படுவதால் யாழ். மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை உருவாகியிருக்கின்றது. முதலாவது உடலம் புங்குடுதீவு கரையில் ஒதுங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் தகவலையடுத்து ஊர்காவற்றுறை காவல்துறையினர் இந்த உடலத்தைப் பொறுப்பேற்று யாழ். மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இரண்டாவது உடலம் நேற்று திங்கட்கிழமை எழுவைதீவுக் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டது. இதனையும் ஊர்காவற்றுறை காவல்துறையினரே பொறுப்பேற்…

    • 0 replies
    • 462 views
  7. இராணுவத்திடம் என் தென்னைகள் நான் தண்ணீரிலேயே கறி சமைக்கின்றேன் - தன் அவல நிலையை எடுத்து விளக்குகிறார் கேப்பாபிலவு மூதாட்டி எனது தோட்டத்தில் தேங்காய் குவியலாகக் கிடப்பதாக நேற்று முன்தினம் கிராமத் துக்குள் சென்று வந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இங்கு தண்ணீரில் கறி வைத்தே நானும் கணவரும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறோம் எனக் கேப்பாபிலவில் இராணுவத்திடம் தனது 3 ஏக்கர் தென்னம் காணியைப் பறி கொடுத்த 72 வயதுடைய கணபதிப்பிள்ளை மனோன்மணி கவலையுடன் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது, போர்க் காலத்தில் எனது மூன்று பிள்ளைகளையும் இழந்து இன்று நானும் கணவரும் தனியாக வாழ்ந்து வருகின்றோம். 20 பேர்ச் காணியில் ஒன்றுமே செய்ய முடியாது. தினமும் செ…

  8. வன்னியில் நடைபெற்ற இறுதிப் போரின்போது, பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகள் சபையில் மறைத்து அரசின் செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த, அப்போதைய ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தரத் தூதுவர் தயான் ஜயதிலகவுக்கு ஆதரவளிக்க ஈ.பி.டி.பி. தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா முன்வந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 303 views
  9. கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை. 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடந்த கபொத சாதாரணதரத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளின் அடிப்படையில், நாடெங்கும் உள்ள 98 கல்வி வலயங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வீதத்தை அடிப்படையாகக் கொண்டு முதல் 25 இடங்களில் உள்ள கல்வி வலயங்களின் பட்டியலை கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. …

    • 1 reply
    • 423 views
  10. மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு! அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக இருந்த நிலையில், குறித்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226066

  11. அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பாரிய மோதல்கள் காரணமாக வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களை காரணமாக வைத்து அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கம் பொதுமக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த முயற்சிக்கிறது. முகாம் மக்களை வெளியேற்றாமல் தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதற்காகவே அம்மக்கள் அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் நிலவரங்கள் பற்றி கரு…

    • 0 replies
    • 508 views
  12. முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் ஒப்பாரிப் போராட்டம். vanee 12 mins ago தமிழீழம் 1 Views முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் இன்றைய மே தினத்தை துக்க நாளாக அனுஸ்டித்துள்னர். குறித்த மக்கள் இன்று நண்பகல் ஒப்பாரிப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். “நாங்கள் எட்டுவருடங்களாக எமது சொந்த நிலங்களில் தொழில் செய்ய முடியாது இருக்கின்றோம். இவ்வாறான சூழலை மாற்றி எமது சொந்த நிலங்களில் மீள்குடியேற வேண்டும், பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தோம், தற்பொழுதும் தொடர்கின்றோம் ஆனால் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை” என்று போராட்டக்கார்கள் தெரிவித்துள்ளனர். கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு இ…

    • 0 replies
    • 705 views
  13. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயலாளர் நாயகம் திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களின் கைது தொடர்பில் அனைத்துலக மனிதாபிமான அணுகுமுறையும், பக்கசார்பற்ற விசாரணைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என தொடர்புடையோரை வேண்டிக்கொள்ளும் அதேவேளையில், அவரது பாதுகாப்பிற்கான முழுப்பொறுப்பையும் உத்தரவாதத்தையும் கவனத்தில் கொள்ளுமாறு அனைத்துலக சமூகத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 600 views
  14. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமது இலங்கை விஜயத்தின் போது, பக்கச்சார்பற்ற அறிக்கை ஒன்றை சமர்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கண்டியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, நவநீதம்பிள்ளையிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்பிதழ்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அவருக்கு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தற்சமயமே சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், இலங்கை வரவுள்ள அவர், மேம்பாட்டு நடவடிக்கைகளை நேரில் அவதானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, இதனையடுத்து …

  15. நினைவு நிகழ்வு தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரத்தினத்தின் 31ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு, யாழ்ப்பாணம் - கோண்டாவில் அண்னங்கை வீதியில் அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று நடைபெற்றது. (எஸ்.நிதர்ஷன்) - See more at: http://www.tamilmirror.lk/196146/-ந-ன-வ-ந-கழ-வ-#sthash.6MNP6bb3.dpuf

  16. மைத்திரியை எதிர்க்க யாருக்கும் அருகதை இல்லை?-சரவணபவன் கேள்வி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நெருங்கி வருகிறது. கூடவே அது தொடர்பான சர்ச்சைகளும் கிளம்புகின்றன. அன்றைய தினத்தில் முல்லைத்தீவுக்கு மைத்திரி வருகை தருவதற்கு இருக்கிறார் என்ற செய்தி வெளியானதும் தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புக்கள் எழுந்திருந்தது. இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உடனடியாக வருகையை கைவிடவேண்டும் என அறிக்கை விட்டார் அதற்கு பதிலளிக்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கையை கடுமையாக சாடியுள்ளதோடு அது தொடர்பாக ஜெனாதிபதியை எதிர்ப்பதற்கு இவர்களுக்…

    • 0 replies
    • 330 views
  17. பழம் பெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழாவின் சப்பரத் திருவிழா நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது. யாழ்ப்பாணம் உட்பட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் என பலரும் இத்திருவிழாவில் கலந்து கொண்டிருந்தனர். காவடி ஆட்டம், குதிரையாட்டம், தீப்பந்தம் விளையாட்டு போன்றனவற்றுடன் பாடசாலை மாணவர்களுடைய பயணையுடனும் சப்பரம் மாலை 6 மணியளவில் ஆலய வெளிவீதியுலா வந்தது இரவு 7 மணியளவில் இருப்பிடத்தினை அடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 7.30 மணிக்கு தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான அடியார்கள் வருகைதருவது வழக்கம். இந்நிலையில் தேர்த்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்…

  18. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இலங்கைக்கு ஜி.எஸ். பிளஸ் வரிச்சலுகை : ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்படும் ஜி.எஸ். பிளஸ் வரிச்சலுகை, எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்விடயம் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த அரசாங்க காலத்தில் ஜி.எஸ். பிளஸ் வரி விலக்களிப்பு நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/20046

  19. இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார். கொழும்பு மாநகர எல்லைக்குள் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களில், 75 சதவீதம் பேருக்கு டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். டாக்டர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் தளத்திலேயே இந்த பதிவை வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜுலை முதல் வாரத்தில் 19.3 சதவீதமாக இருந்த டெல்டா திரிபு, இறுதி வாரத்தில் 75 வீதம் வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வர…

    • 2 replies
    • 323 views
  20. நாம் தமிழர் அமைப்பில் உள்ள இளைஞர்கள் சீருடை அணியாத ராணுவத்தினர் என தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குநர் சீமான் தெரிவித்தார். தூத்துக்குடியில் நாம் தமிழர் அமைப்பின் சார்பில் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாலவிநாயகர் சாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு இயக்குநர் சீமான் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரபு வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய இயக்குநர் சீமான், என்னை யாரும் தலைவர் என்று அழைக்க வேண்டாம். அப்படி அழைத்தால் திரும்பவும் படம் எடுக்கச் சென்றுவிடுவேன். நம்முடைய நோக்கத்திற்காக நாம் தமிழர் ஆக ஒன்றிணைந்து போராடுவோம். அரசியல் சாக்கடைகளைப் பற்றி நாம் ப…

  21. சனல் 4" தொலைக் காட்சியில் இலங்கை இராணுவச் சிப்பாய்கள் தமிழர்களை சுட்டுக் கொல்வதாகக் காண் பிக்கப்பட்ட வீடியோப் படம், செயற்கையாக உருவாக்கப்பட்ட காட்சி என்று முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை நேற்றுச் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையும் குறிப்பிட்ட வீடியோ காட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டது; பொய்யானது என்று கூறியுள்ளது என்று கூறியுள்ள பாதுகாப்பு செயலாளர் இது குறித்து மேலும் " ஐலண்ட்" பத்திரிகைக்குத் தெரிவித்த தாவது: குறிப்பிட்ட வீடியோக் காட்சியில் இலங்கை அரசாங்கத்துக்கு மாசு உண்டாக்குவதற்காக செயற்கையாக உர…

  22. நிவாரணப் பொருட்களுடன் இலங்கை விரையும் இந்திய கப்பல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்க அண்டை நாடுகளின் உதவியை இலங்கை கோரியிருந்த நிலையில், உடனடியாக எதிர்வினையாற்றிய இந்திய அரசு நிவாரணப் பொருட்களுடன் கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய உயர் ஆணையர் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். மேலும், நிவாரணப் பொருட்களுடன் மற்றொரு கப்பல் ஞாயிறன்று இலங்கைக்கு வந்து சேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் சீரற்ற கால நிலை தொடரும் நிலையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்…

  23. 'TNAயின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் - தர்மலிங்கம் சித்தார்த்தன். 18 செப்டம்பர் 2013 எதிர்காலம் பற்றிய எண்ணங்;கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, 'வீடு' சின்னத்தின் கீழ், '15' குறியீட்டு இலக்கத்தில் போட்டியிடுகின்றார்.) தமிழ்த…

  24. தமிழ்மாறன், கொழும்பு 18/09/2009, 11:41 தடுப்பு முகாங்களிலிருந்து விடுவிக்கப்பட்டோர் மீண்டும் தடுத்து வைப்பு - மாவை சிறீலங்கா அரசாங்கத்தினால் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்: வவுனியாத் தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏதிலிகள் விடுதலை செய்யப்பட்ட போதும் அவர்கள் மாற்றப்பட்ட இடங்களில் உள்ள ஏதிலிகள் முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண ஏதிலிகள் முகா…

  25. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக மகிந்த நாளைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளார். 68வது பொதுச்சபை மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ள அவர், அதில் உரையாற்றவிருப்பதாக ஊடக இணைப்பாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை மாநாடு எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது. மஹிந்தவின் இந்த விஜயத்தின் போது, வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் உடன் செல்கிறார். http://www.pathivu.com/news/27049/57//d,article_full.aspx

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.