ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142909 topics in this forum
-
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை எதிர்வரும் 18ம் திகதி வரையில் அவர்களின் படகுகளிலேயே தடுத்து வைத்து கண்காணிப்பதற்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 22 பேர் 03 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கொரோனா அபாயம் காரணமாக நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களை பொறுப்பேற்பதில் மிகுந்த சிரமத்தினை எதிர்கொண்டனர். இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜுட்சனின் வாசஸ்தலத்தில் திணைக்கள அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் குறித்த மனு கையளிக்கப்பட்டது. அதனை விசாரித்த ந…
-
- 7 replies
- 884 views
-
-
உயர் நீதிமன்ற, கட்டட வளாகத்தில் தீ விபத்து! கொழும்பில் உள்ள உயர் நீதிமன்ற கட்டட வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு வீரர்கள் மற்றும் 09 தீயணைப்பு வாகனங்களை அனுப்பியுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது. இருப்பினும் குறித்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. Update: உயர் நீதிமன்ற கட்டட வளாகத் தீ கட்டுப்பாட்டில்! கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கை முஸ்லிம்களை... தமது நாட்டிற்கு, வருமாறு மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அழைப்பு இலங்கை முஸ்லிம்களை தமது நாட்டிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டுமென அந்த நாட்டின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களுக்கான இறுதிக் கிரியைகளை இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக மாலைதீவில் நடத்துவது குறித்து ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷஹீட் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையிலேயே மாலைதீவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தன்யா மமூன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். …
-
- 0 replies
- 430 views
-
-
கொரோனா தொற்றாளர் அடையாளம் – கீரிமலை அந்தியேட்டி மண்டபம் தனிமைப்படுத்தப்பட்டது கீரிமலை அந்தியேட்டி மண்டபத்தில் சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குருக்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட சிலர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கீரிமலை அந்தியேட்டி மண்டபத்திற்கு சென்றிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 12ஆம் திகதி அந்தியேட்டி கடமை ஒன்றை நிறைவேற்றுவதற்காக கீரிமலைக்கு சென்றிருந்தமை தெரிய வந்துள்ளதையடுத்தே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த நபர் கீரிமலைக்கு சென்றிருந்த நேரத்தில் கீரிமலைப் பகுதியில் வாகன பாதுகாப்பு வீதியில் கடமையில் இருந்த ஒருவர் மற்றும் உட்செல…
-
- 0 replies
- 540 views
-
-
கொரோனா ஆபத்து நிலவும் சூழலில் மாகாண சபை தேர்தல் எதற்கு? – பௌத்த தேரர் கேள்வி 0:33 am GMT 0 Comments 1088 by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Thero.jpg கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் பெருந்துயரம் மற்றும் நெருக்கடிகளின் மத்தியில் வாழ்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள எல்லே குணவன்ச தேரர், இந்த தருணத்தில் தேர்தல்களை நடத்துவது அரச முதலீட்டை வீணடிக்கும் மற்றுமொரு செயலாக அமையும் என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து நிலவுகின்ற சூழலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இ…
-
- 1 reply
- 391 views
-
-
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (15) காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது (adaderana.lk)
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட நல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் (பாதீடு) இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரதேச சபைத் தவிசாளர் தனது பதவி இழந்துள்ளார். 20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில் 12 உறுப்பினர்கள் பாதீட்டை எதிர்த்து வாக்களித்த அதே வேளை 8 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்துள்ளனர். அதனடிப்படையில் நல்லூர் பிரதேச சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீடு 4 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் 4 பேர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
-
- 0 replies
- 721 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களை கடந்த வாரம் அச்சுறுத்திய 'புரவி' புயல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பெய்த கடும் மழையால் பெரும்போக பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட வயல் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றது. இதனால், விவசாயிகள் பெரும் அழிவை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். குறிப்பாக பிரதான வாய்க்கால்களில் தொடர்ச்சியாக நீர் வழிந்து செல்வதாலும் இடையிடையே மழை பெய்து கொண்டிருப்பதாலும் வயல்களில் தேங்கியிருக்கும் நீர் வெளியேற முடியாது தேங்கியுள்ள நிலையில் காணப்படுகின்றது. மேலும், வாய்க்கால்களும் மூடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வயல் நிலங்களில் காணப்படும் நீரை வெளியேற்றும் வகையில் வாய்க்கால் துப்பரவு செய்யப்பட்டு, இயந்திரங்கள் மூலம் நீரை இரைத்து வெளி…
-
- 0 replies
- 328 views
-
-
(க.பிரசன்னா) காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபனத்தை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சீமெந்து கூட்டுத்தாபனத்தை பார்வையிட சென்ற கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் இது தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140899/Kankesanthurai.JPG தேசிய வருமானத்திற்கு பங்களிக்கக்கூடிய, தற்போது மூடப்பட்டுள்ள உள்நாட்டு தொழிற்சாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான செழிப்பு, பார்வை கொள்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 750 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலொன்றினால் மூட…
-
- 0 replies
- 324 views
-
-
(இராஜதுரை ஹஷான்) 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குவதற்கு எதிரான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டப்பணம் சமகாலத்திற்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சித்திரவதைகள் மற்றும் ஏனைய அவமானங்களுடன் கூடிய கவனிப்புக்கள் அல்லாவிட்டால் தண்டனைகளுக்கு ஆளாக்குதல் அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது அரசியலமைப்பின் பிரகாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான செயல்களை மேற்கொள்பவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும், அதற்கு முடிந்தவரை தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். அதனால், அதுதொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள 1994 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க சித்திரவதைகள் மற்றும் ஏனை…
-
- 0 replies
- 249 views
-
-
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம்- ஐக்கிய மக்கள் சக்தி கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவிற்கு கொண்டு செல்வது சாத்தியமற்ற விடயம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார இதனை தெரிவித்துள்ளார். இது பெருமளவு அரசநிதியை அல்லது பொதுமக்களின் பணத்தினை செலவு செய்யவேண்டிய நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள அவர் நாட்டிற்குள்ளேயே உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பதன் இந்த செலவினை கட்டுப்படுத்தலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். விஞ்ஞானரீதியிலான தரவுகளை ஆராய்ந்து உடல்களை அடக்கம் செய்வதற்கான பொருத்தமான இடத்தினை அடையாள…
-
- 0 replies
- 202 views
-
-
சினமன் கிரேண்ட் குண்டுதாரி தொடர்பில் ரியாஜ் பதியூதின் வெளிப்படுத்திய தகவல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், சாட்சி வழங்க நேற்று (14) ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது தான் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் ஊடக செயலாளராகவும் ஒருங்கிணைப்பு செயலாளராகவும் கடமையாற்றியதாக ரியாஜ் பதியூதின் சாட்சி வழங்கலின் ஆரம்பத்திலேயே கூறினார். இதன் போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி அவரிடம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக சினமன் கிரேண்ட் ஹோட்டல் மீது தாக்குத…
-
- 0 replies
- 468 views
-
-
ஒட்டுமொத்த நாடும் கொரோனாவில் சிக்கியமைக்கு அரசாங்கத்தின் இயலாமையே காரணம்- ராஜித அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று ஒட்டுமொத்த நாடே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ராஜித சேனாரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. அமெரிக்காவிலுள்ள சுகாதார ஆய்வு மையமொன்று, இலங்கையை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று இந்த நிலைமையில் நாம் இருக்கிறோம். இதுதொடர்பாக நாம் நாடாளுமன்றிலும் உரையாற்றியுள்ளோம். அ…
-
- 0 replies
- 277 views
-
-
கந்தளாயில் வீழ்ந்து நொருங்கிய விமானம்; விமானி பலி! திருகோணமலை – சீனக்குடா விமானப் படைத் தளத்தில் இருந்து விமானியுடன் புறப்பட்ட விமானப்படையின் பி.ரி-6 பயிற்சி விமானம் ஒன்று இன்று (15) மதியம் தரைத் தொடர்பை இழந்த நிலையில் கந்தளாய் வயல் வெளியில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. கந்தளாய், சூரியபுரம் பகுதியில் குறித்த விமானம் வீழ்ந்துள்ளது. இதன்போது விமானி பலியாகியுள்ளார். https://newuthayan.com/கந்தளாயில்-வீழ்ந்து-நொரு/
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் டைனமட் தயாரிப்பதற்காக ரி.என்.ரி வெடிமருந்தை கிரைன்டரில அரைத்த நபர் உட்பட 8 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று முன் தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கட்டியாக இருந்த வெடி மருந்தை தூளாக்கும் நோக்கில் கிரைன்டரில் அரைத்த போது வெடித்து சிதறியுள்ளது. இதனால் 8 பேர் காயமடைந்த நிலையில் சிலின்டர் வெடித்து காயமடைந்ததாக தெரிவித்து வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். எனினும் பொலிஸாரால் இந்த விடயம் கண்டறியப்பட்டது. ரி.என்.ரி வெடிமருந்தை கிரைன்டரில் அரைத்த 8 பேர் காயம்! | NewUthayan
-
- 4 replies
- 915 views
-
-
(எம்.ஆர்.எம்.வஸீம்) தமிழ், முஸ்லிம் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் எதிர்காலத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது. அவர்கள் தேர்தலுக்குப் பின்னர் விரும்பினால் எம்முடன் இணைந்து செயல்படலாம் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/96666/luxman.jpg ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்து பாரிய காட்டிக்கொடுப்பை செய்துள்ளனர். அதனால் எதிர்காலத்தில் இந்த கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட இடமளிக்கக்கூடாது என்ற…
-
- 3 replies
- 940 views
-
-
வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வேறு மாகாணங்களில் உள்ள வாகனங்களின் உரிமையை மாற்றும்போது வாகன இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டியிருக்கும் என்பதனால் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனை கருத்திற்கொண்டு வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்க வேண்டுமென்ற போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே சமர்ப்பித்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
- 0 replies
- 456 views
-
-
இலங்கைக்கு வருகைதர 500 சுற்றுலா பயணிகளுக்கு மாத்திரம் அனுமதி இலங்கைக்கு நாளாந்தம் 500 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தர முடியுமென சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மீள திறக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக சிவில் விமான சேவைகள் அமைச்சு மேலும் கூறியுள்ளதாவது, ‘நாட்டுக்கு வருகைதரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தி, தனிமைப்படுத்தலுக்காக ஹோட்டல்களுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 58 ஹோட்டல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த ஹோட…
-
- 1 reply
- 406 views
-
-
“இலங்கையில் உள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெறாமல் போவதும், தவறான அர்த்தங்களுடன், எழுத்துப் பிழைகளுடன் இடம்பெறுவதும் ஆச்சரியமல்ல. ஆனால், சிங்கள மொழியே காணாமல் போனது தான் ஆச்சரியம்” “சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகின்ற அல்லது சீன நிறுவனங்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ள திட்டங்களில் மாண்டரின் மொழி அறிவிப்பு பலகைகள், பெயர்ப்பலகைகள் அதிகளவில் காணப்படுகின்றன” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது, நாட்டை சீனா அபகரித்துக் கொண்டு போவதை சிங்கள மக்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். சீனாவின் குடியேற்ற நாடாக ஆகிவிடக் கூடாது, என்றும், எங்களின் மீது கவனம் செலுத்துவதை விட்டு விட்…
-
- 2 replies
- 837 views
-
-
அரசியல் கைதிகள், தோட்டத்தொழிலாளர் பிரச்சினை எனும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும் என மனோ கணேசன் கூறியிருப்பது அரசியல், ஊடக களம் பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தலைவர் மௌலவி மஜித் மேலும் தெரிவித்ததாவது, தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என கடந்த ரணில், மைத்திரி, சஜித், மனோ அரசிடம் உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அது போன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் பேசியுள்ளனர். இவை பற்றி நிறையவே செய்திகள் ஊடகங்களில் வந்தும் மனோவுக்கு தெரியவில்லை என்பது ஆ…
-
- 1 reply
- 1.4k views
-
-
அரசாங்கத்துடன் இருக்கும் பிள்ளையான், கருணா, வியாழேந்திரன் போன்றோரிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? Sayanolipavan அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலடி மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அரசோடு சேர்ந்திருப்பவர்களிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். …
-
- 3 replies
- 549 views
-
-
(நா.தனுஜா) வலுகட்டாயமாகத் தகனம் செய்யப்பட்ட 20 நாட்களேயான குழந்தையை நினைவுகூரும் விதமாக பொரளை பொதுமயானத்தின் வெளிப்புறத்தடுப்பு வேலியில் கட்டப்பட்ட வெள்ளைத் துணிகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த 20 நாள் குழந்தை தகனம் செய்யப்பட்ட பொரளை பொதுமயானத்தின் வெளிப்புற தடுப்புவேலியில் (ஒருபுறம் மாத்திரம்) கடந்த சனிக்கிழமை சிறிய வெள்ளைத்துணிகளைக் கட்டி, அந்தக் குழந்தை நினைவுகூரப்பட்டதுடன் வலுகட்டாயமாகத் தகனம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டது. சிவில் சமூகக்குழுக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, அலி சாஹிர் மௌலானா போன்றோரும் சிவில் சமூக அ…
-
- 0 replies
- 561 views
-
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பரவலாக தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதால், தனியே ஒரு பிரதேசத்தை மாத்திரம் முடக்குவது பயனில்லை என்பதாலேயே உடுவில் பிரதேச முடக்கம் தளர்த்தப்பட்டதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு யாழ்.மாவட்டத்தில் தற்போது 1,144 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்தாக கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இன்று (14.12.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு 59 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்க…
-
- 0 replies
- 271 views
-
-
இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களை எரிப்பதால் முஸ்லீம் சமூகத்தினர் கடுமையான கவலைகள் வெளியிட்டு வந்ததை அடுத்து, இலங்கையிலிருந்து COVID-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய மாலத்தீவு அரசு முன்வந்துள்ளது என்று டெய்லி மிரர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. முஸ்லீம் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் தகனம் எமது மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. டெய்லி மிரர் செய்தியின் படி, மாலத்தீவு அரசு இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தனது வாய்ப்பை வழங்கியுள்ளது. பொது சுகாதார சேவைகளின் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹெராத் கூறுகையில், விரைவில் ஒர…
-
- 2 replies
- 442 views
-
-
’வேகுவதைப் பார்க்காது கருகுவதைப் பாருங்கள்’ வ. சக்தி 'எனது சட்டியில் என்ன வேகுது என்று பாராமல், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள்' என, தபால்துறை மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி, பின்தங்கிய கிராம அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகப் பயிர் செய்கை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். 'இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும். ஆனால், செயல் வடிவம் கொடுக்க முடியதென', மட்டக்களப்பில் சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல…
-
- 0 replies
- 359 views
-