ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143483 topics in this forum
-
வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண சபையினர் இரணைதீவில்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி, இரணைதீவுக்குப் பயணித்துள்ளனர். அங்கு தங்கியிருக்கும் மக்களின் குடிதண்ணீர் விநியோகத்துக்காக ஓர் இரு சக்கர உழவு இயந்திரத்தையும் மக்களுக்காக அவர்கய் வழங்கி வைக்கவுள்ளனர் . இரணை தீவுப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்விட…
-
- 2 replies
- 461 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், உள்ளுராட்சிமன்ற தேர்தல் “உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரி…
-
- 2 replies
- 588 views
-
-
அன்ரன் பாலசிங்கம் எரிக் சொல்ஹெய்ம் லண்டனில் சந்திப்பு. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகரும், தத்துவாசிரியருமான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களை, நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தித்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். லண்டனில் உள்ள மதியுரைஞரின் வாசத்தலத்திற்கு, நேற்று நேரில் சென்ற நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹைம் அவர்கள், மதியுரைஞரின் உடல் நிலை குறித்து கேட்டறிந்து கொண்டார். இதன்போது மதியுரைஞரின் துணைவியார் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும், பிரசன்னமாகியிருந்தார். தற்போது தமிழீழ தாயகத்தில் நிலவும் நெருக்கடியான மனிதநேயப் பிரச்சினைகள் தொடர்பாகவும், சமாதான முயற்சிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் குறி…
-
- 0 replies
- 1k views
-
-
வியாழக்கிழமை, 17, பிப்ரவரி 2011 (13:33 IST) இலங்கை தேசிய கொடியை எரித்தவர்கள் கைது: மதுரையில் பரபரப்பு மதுரையில் இலங்கை அரசின் தேசிய கொடியை எரித்த 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாகையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 106 மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ள இலங்கை கடற்படை, இன்று மீண்டும் புதுச்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 24 மீனவர்களையும் சிறைபிடித்துள்ளது. மேலும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும் இலங்கை கடற்படை தாக்கியுள்ளது. இதில் அவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை கண்டித்து, மதுரையில் இந்த…
-
- 0 replies
- 807 views
-
-
சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்சில் காயமடைந்த சிறுமியின் கருத்து https://www.facebook.com/video/video.php?v=720438168026762 https://www.facebook.com/video.php?v=720438168026762
-
- 0 replies
- 403 views
-
-
பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்த ஆன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான "போர் - அமைதி' (ரஹழ் ஹய்க் டங்ஹஸ்ரீங்) என்ற அத்தியாயத்தில் பாலசிங்கம் அமைதியின் ஃபேஸ"க இருந்திருக்கிறார். போர் முனை யுக்திகளைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் அதைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பாலசிங்கம் மரணம் அடைந்ததும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வாய்ஸ் ஆஃப் தி நேஷன்' என்று பாலசிங்கத்தை வர்ணித்துள்ளார் பிரபாகரன். இதில் "நேஷன்' என்று அவர் சொல்வது தனி ஈழத்தைக் குறிக்கும்! வெளி உலகத்திற்கு விடுதலைப்புலிகளின் "வாய்ஸ2க'வும், விடுதலைப் புலிகளுக்கு வெளி உல…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கான படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள சின்னத்தம்பி கிருஷ்ணராஜாவை (வயது - 57) உடன் விடுதலை செய்யுமாறு கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸில் தலையீடு செய்து சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி, சிவபுரம், இராஞ்சி பகுதியைச் சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி கிருஷ்ணராஜா ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவிற்கு சாட்சியமளிக்கும் படிவங்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். குறித்த கைது தொடர்பில் தம…
-
- 0 replies
- 259 views
-
-
வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கடல்தொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் வெளிமாவட்ட மீனவர்கள் அத்துமீறி வாடிகளை அமைத்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்துவருகின்றனர். அதற்கு உள்ளூர் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருவதுடன் , நிபந்தனையற்று , உடனடியாக வெளிமாவட்ட மீனவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.அந்நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை முதல் யாழ். பண்ணைப்பகுதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்…
-
- 12 replies
- 1.4k views
-
-
கொசோவா பிராந்தியத்தை சேர்பியாவை விட பலம்வாய்ந்த நாடாக உருவாக்கப் போகிறேன் என்று கூறிய கொசோவா ஜனாதிபதி இப்ரஹிம் ரகோவா இந்த வருடம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு இவர் புற்றுநோய் வாய்ப்பட்டு இருப்பதுபற்றி அவருடைய ஆதரவாளர்களாகிய பிரிவினைவாதிகள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இப்ரஹிம் ரகோவா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் கொசோவாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஆகும். இவ்வாறு இவர் கொசோவாவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியிலேயே ஆகும். ஆயினும், இந்த வருட ஆரம்பத்தில் அவர் புற்று நோயால் இறந்து விட்டார். கொசோவாவை சேர்பியாவை விட பலமான நாடாக ஆக்கப் போவதாக கூறிய அவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
ஆதாரமற்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் இலங்கை மீது இந்தியா காட்டம் [Friday, 2011-03-11 03:51:15] தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் செயல்படுவதாக வெளியான தகவல் தவறானது. ஆதாரமற்ற இது போன்ற தகவல்களை தெரிவிப்பதை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் என, இந்திய வெளியுறவு அமைச்சு பேச்சாளர் ஸ்ரீ விஷ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறியதாவது: தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மூன்று இடங்களில் செயல்பட்டு வருவதாக, இலங்கை பிரதமர் கூறியுள்ளார். ஆனால், இலங்கை அரசு தெரிவித்துள்ளது போல், தமிழகத்தில் பயிற்சி முகாம்கள் எதுவும் செயல்படவில்லை. இலங்கை அரசு தெரிவித்துள்ள தகவலை உறுதியாக மறுக்க…
-
- 2 replies
- 963 views
-
-
-எஸ்.கார்த்திகேசு அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்திலுள்ள இந்து ஆலயங்களில் 30ஆம் திகதி வியாழக்கிழமை(30) இரவு உண்டியல்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயம் மற்றும் திருக்கோவில் மண்டானை பிள்ளையார் ஆலய என்பவற்றில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இதனையடுத்து திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயன தென்னக்கோன் சம்பவம் இடம்பெற்ற ஆலயங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/131554-2014-10-31-11-41-58.html
-
- 0 replies
- 420 views
-
-
அமெரிக்க CIA யின் World Factbookல் விடுதலைப் புலிகள் அமைப்பும் இணைப்பு… June 16, 2018 1 Min Read Jun 15, 2018 @ 22:02 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் ஆயுத இயக்கம் என்ற வகைக்குள் அமெரிக்காவின் புலனாய்வு முகவர் நிறுவனமான CIA தனது 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான ‘வேர்ல்ட் ஃபக்ட் புக்’ (World Factbook) என்ற தலைப்பிலான தமது தகவல் வெளியிட்டு ஊடகங்களில் தரவேற்றம் செய்துள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்துடன், வெளிநாடுகளைத் தளமாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளில் இந்திய துணைக் கண்டத்துக்கான அல்கொய்தா. ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம், ஹர்ஹத் உல் ஜிஹாதி இஸ்லாம்- வங்கதேசம், ஜெய்சியே முகமது, லஸ்கர் இ தொய்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
"சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. தேரவாத பௌத்தத்தை பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்கவும் அதனை சர்வதேச மட்டத்தில் வியாபிக்கவும் அவசியமான அனைத்து அரச அனுசரணையையும் வழங்குவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். "சிங்கள தம்மசதகனீப்பகரண" நூல் வெளியீட்டு விழா நேற்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். புத்தசாசன அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள திரிபீடகச் சுருக்கத் தொகுப்புப் பேரவையின் 28ஆவது நூலாக ‘சிங்கள தம்ம…
-
- 6 replies
- 687 views
-
-
இதுவரை வெளிவந்த 97 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் முழுமையான விபரம் 162 உள்ளுராட்சி சபைகளில் 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இதுவரை வெளியான 162 உள்ளுராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின்படி 141 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 7 உள்ளுராட்சி சபைகளை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. அந்த கட்சி கம்பளை நகர சபை, பண்டாரவளை மாநகர சபை, குளியாப்பிட்டி நகர சபை, சீதவாக்கபுர நகர சபை மற்றும் களுத்துறை நகர சபை…
-
- 0 replies
- 821 views
-
-
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகைக்காக காத்திருக்கும் மகிந்த. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவுக்காக காத்திருப்பதாகவும் அவர்களின் வரவால் நாடாளுமன்றத்தில் அரசின் பலம் 118 ஆக உயர்வடையும் என்றும் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனது அமைச்சர்களிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வரவு குறித்த ஏதேனும் தகவல்கள் உண்டா என மகிந்த கேட்டபோது, அப்படி எதுவும் தெரியாது எனவும் ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்வாங்குவதற்கு தங்கள் ஆதரவு உண்டு எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் அரசின் பக்கம் சார…
-
- 0 replies
- 759 views
-
-
தமிழ் மக்கள் மீது சிறிலங்கா படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்தார்கள்- வெளிவந்தது மற்றொரு ஆதாரம் விடுதலைப் புலிகளுடனான சண்டைகளின் போது சிறிலங்காப் படைகள் இரசாயன ஆயுதங்களைப் பாவித்து வருகின்றது என்கின்ற உண்மையை தமிழ் ஊடகங்கள் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக இந்த விடயங்களை ஐ.பீ.சி. தமிழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருந்தது. சிறிலங்காவின் ஆட்சியாளர்களின் உத்தரவின் பேரில் சிறிலங்கா அரச படையினர் யுத்தக் களத்தில் இரசாயண ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பில் பிரகீத் எக்னலிகொட என்கின்ற சிங்கள ஊடகவியலாளர் பல தளங்களில் செய்தி வெளியிட்டதுடன், அவ்வாறு அவர் செய்தி வெளியிட்ட காரணத்தினால் அவர் கடத்தப்பட்டு…
-
- 0 replies
- 453 views
-
-
யாழில் வெள்ளை வான் கும்பலினால் குடும்பஸ்தர் கடத்தல். யாழ்ப்பாணம் காங்கேசன் துறைவீதியில் சுண்ணாகம் பகுதில் வெள்ளை வானில் வந்த சிறிலங்கா படையினரின் துணை இராணுவக்குழுவினரால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இவர் கடந்தகால போர் நடவடிக்கையினால் காலொன்றை இழந்து அங்கவீனமுற்றவருமானவர். கடத்தப்பட்டவர் ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியைச் சேர்ந்தவரான டனியல் சாந்தரூபன் (30) என்பவராவார். இவர் தனது சொந்த விடயம் காரணமாக 11.00 மணியளவில் சுண்ணாகம் றெட்டிஆலையடியூடாக ஈருளியில் பயணித்துக்கொண்டிருக்கையில் அவ் வீதியால் சென்ற மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். இவரது செயற்கைக் காலும் ஈருளியும் அநாதரவாக வீதியோரத்தில் கிடப்பதை அவரத…
-
- 0 replies
- 703 views
-
-
-
சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனை – அவசர சட்டவரைவு தயாராகிறது சிறிலங்காவில் மீண்டும் மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா, தகவல் வெளியிடுகையில், ”போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்காக ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், சிறைக்குள் இருந்து கொண்டே, பெருமளவில் போதைப் பொருள் கடத்தல்களில் ஈடுபடுகிறார்கள். அண்மைய காலங்களாக, பெருந்தொகையான போதைப் பொருட்கள் சிக்கியுள்ளன. போதைப் பொருள் குற்றங்களால், கொலைகள் இடம்பெற்று வருகின்றன. …
-
- 0 replies
- 186 views
-
-
வசந்த முதலிகேவுடன் சந்திப்பு- யாழ். பல்கலை மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த மனோ கணேசன் March 14, 2023 பயங்கரவாத தடை சட்டம் என்பதே தமிழருக்கு எதிராக 1979ல் உருவாகியது. ஏறக்குறைய 44 வருடங்களாக தமிழர், தமிழ் கட்சிகள், தமிழ் மாணவர்கள், தமிழ், இளைஞர்கள், தமிழ் தாய்மார்கள் போராடும் போது, வாளாவிருந்து விட்டு, இப்போது திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்கு போய், “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ். பல்கலையும் இணைய வேண்டும்” என, அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே முதலானோர் கோரியமை நகைப்புக்கு இடமானது. மறுபுறம், இத்தகையை கோரிக்கைக்கு “இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்கள்” என யாழ் பல்க…
-
- 0 replies
- 466 views
-
-
இன்று வவுனியாவில் சூசைப்பிள்ளையார் குலம் பகுதியில் காலை 10 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் மேற்கொண்ட கைக்குண்டு தாக்குதலில் இருகாவல்துறையினர் மற்றும் பொதுநபர் ஒருவரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த பொதுமகன் தனபால எனவும் வவுனியா செயலகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் எனவும் காயமடைந்த காவல்துறையினரை வவுனியா வைத்;தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவம் அறியமுடிகிறது THANKS:WW.PATHIVU.COM
-
- 0 replies
- 924 views
-
-
அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும் சற்று சிந்தியுங்கள்... எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்... சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன... ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன... ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை... எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை.... எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம…
-
- 5 replies
- 2.2k views
-
-
யாழில் கோலாகலமாக நடைபெற்ற பட்டம் விடும் போட்டி யாழ்ப்பாணத்தில் வருடாந்தம் இடம்பெறும் பட்டம் விடும் போட்டி, இம்முறையும் கண்கவர் நிற பட்டங்களுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. யாழ்.அரியாலை சரஸ்வதி விளையாட்டு கழகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த பட்டம் விடும் போட்டி நடைபெற்றது. சரஸ்வதி சனசமூக விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அரியாலை திறந்த வெளி விளையாட்டரங்கில் இப்போட்டி இடம்பெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பலர், பல வடிவங்களில் கட்டப்பட்ட பட்டங்களுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். http://athavannews.com/?p=704362-யாழில்-கோலாகலமாக-நடைபெற்ற-பட்டம்-விடும்-போட்டி
-
- 1 reply
- 852 views
-
-
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி உயிரிழப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவர் வவுனியாவில் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி 500 நாட்களையும் தாண்டி சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் தனது சகோதரனை காணவில்லை எனத் தெரிவித்து போராட்ட களத்தில் சுழற்சி முறையில் போராடி வந்த இராசநாயகம் நிலா (வயது 24) என்ற யுவதி உயிரிழந்துள்ளார். உடல் நலக் குறைவு காரணமாக குறித்த யுவதி மரணமடைந்துள்ள போதும், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலக்குறைவு என்பவற்றால் பாதிப்படைந்திருந்தார். இந்ந…
-
- 0 replies
- 475 views
-
-
புதுக்கோட்டை அருகே இலங்கையிலிருந்து வந்த இலங்கைத் தமிழர்களில் ஐந்து வாலிபர்கள் திடீரென்று மாயமான சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் அழியாநிலை முகாமில் இருந்து பொலிஸார் மீட்டனர். இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உயிருக்குப் பயந்து ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுபோன்று இலங்கை யாழ்ப்பாணம் பஜார் பகுதியில் வசித்துவந்த சிவலிங்கம் மனைவி சுப்புத்தாய் (62) இவரது மகன் ஐங்கர ரூபன் (31) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசா…
-
- 0 replies
- 1.1k views
-