Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை பொலிஸ் அதிகாரியின் நெகிழ்ச்சியான செயல் : காலில் விழுந்த இளைஞன்!! காலில் விழுந்த இளைஞன்… தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் விழுந்து கிடந்த பேர்ஸினை தம்புள்ளை பொலிஸ் அதிகாரி ஒருவர் உரிய நபரிடம் வழங்கியுள்ளார். இதன் போது பேர்ஸின் உரிமையாளர் கண்களில் கண்ணீருடன் பொலிஸ் அதிகாரியின் காலில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்னால் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் சிறிய லொறி ஒன்றில் இருந்து இறங்கி சென்ற இளைஞனின் பேர்ஸ் கீழே விழுந்துள்ளது. அதனை வேறு ஒருவர் எடுக்க முயற்சித்த போது பொலிஸ் அதிகாரி அதனை பெற்றுக்…

    • 0 replies
    • 356 views
  2. பிள்ளையானை பிணையில் விடமுடியுமாயின் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? - சுமந்திரன் By Battinews தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை தேவாலயத்தில் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் நான்கு அரை வருடங்கள் சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தனை பிணையில் விடமுடியுமாயின் பல காலமாக சிறையில் வாடும் உண்மையான தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்று பாராளமன்றத்தில் கேள்வி எழுப்பினார் . இன்று மேலும் உரையாற்றுகையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 , 30 வருடங்கள் என சிறையில் இருக்கின்றனர் ஏன் அவர்களை விடுதலை செய்…

  3. உரிமை கோரப்படாத உடல்களை... உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை! கொரோனா தொற்றினால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத உடல்களை உடனடியாக தகனம்செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட் 19 நோயினால் மரணித்து உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சுமார் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அ…

  4. இலங்கையின் நீதித்துறையில் தமிழருக்கு நம்பிக்கையில்லை::சர்வதேச விசாரணை கோர அதுவே காரணம்.! "இலங்கையின் நீதிப் பொறிமுறையில் நம்பிக்கையிழந்த காரணத்தாலேயே, சர்வதேச விசாரணையைக் கேட்கின்றோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம். இலங்கையின்…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் வேறு கட்சியில் போட்டியிடுவோம் -சீ.வீ.கே.சிவஞானம் D 33 Views தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்தாலும் தாம் தமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வரவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா? அல்லது வரவில்லையா என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும்.…

  6. வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கு முன் பிணை வழங்கியது நீதிமன்று! http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.jpg வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோசுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்று முன் பிணை வழங்கியுள்ளது. வீதி பெயர் பலகை அகற்றியமை தொடர்பாக தன்னை பொலிஸார் கைது செய்ய முற்படுவதாகவும் பொலிஸார் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரும் எதிர்பார்க்கைப் பிணை விண்ணப்பத்தை கடந்த திங்கட்கிழமை தவிசாளர் தனது சட்டத்தரணிகள் ஊடாக தாக்கல் செய்திருந்தார். குறித்த விண்ணப்பத்தினை பரிசீலனைக்காக இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்த மல்லாகம் நீதிமன்றம், அச்சு…

  7. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் நாம் ஒருபோதும் தடையாக இருக்கப்போவதில்லை. ஆனால் யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கிற்காக ஒதுக்கிய நிதியை வைத்தே தெற்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது என்பதையும் மறந்துவிடக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/140447/dada.jpg பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, வரவு செலவு திட்ட விவாதத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய செல்வராஜா கஜேந்திரன் எம்.பி, வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களில…

  8. https://static2.tamilmirror.lk/assets/uploads/image_0a050bbde3.jpg சுப்ரமணியம் பாஸ்கரன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, முல்லைத்தீவு, திருமுறிகண்டி ஆள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிக் காணப்படுகின்றது. இதனால், திருமுறிகண்டி பிள்ளையாளர் கோவில் சூழலில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வர்த்தகர்கள் தொழில்களை இழந்துள்ளதாகவும் தமது அன்றாட உணவுக்கே பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ஏ-9 வீதியின் திருமுறிகண்டி கோவில் சூழலில் சுமார் 75க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பல்வேறு வகையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைவடைந்து போக்குவரத்துகளும் மட்டுப்படுத…

  9. மூன்று வேளை உணவே தமிழர்களுக்கு போதும்; சொல்கிறார் ராஜபக்ஷ அமைச்சர்.! மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலையையே வடக்கு தமிழ் மக்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஆகவே, இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட ரய…

    • 2 replies
    • 953 views
  10. அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட எமது பிரதேசங்களை தொடர்ந்து இவ்வாறு தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்?: கலையரன் எம்.பி. எமது பிரதேசங்கள் தொடர்ந்து முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த பிரதேசங்கள், முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்ட பிரதேசங்கள். அந்தப் பிரதேசங்களைத் தொடர்ச்சியாக இவ்வாறான நிலைமையில் தானா வைத்திருக்கப் போகின்றீர்கள்? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு, போக்குவரத்து, கூட்டுறவு அமைச்சுகளின் குழுநிலை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக…

    • 0 replies
    • 618 views
  11. யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! by : Benitlas யாழில் கடந்த வாரம் முதல் பெய்த கடும் மழை காரணமாக கிணற்று நீரினை பருகும் போது அவதானமாக இருக்குமாறும், முடிந்தளவு கொதிக்க வைத்து ஆறிய நீரினை பருகுமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மழை காரணமாக கிணறுகளின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. அத்துடன் கிணறுகளில் வெள்ள நீரும் கலந்து உள்ளன அவற்றை அவற்றை பருகுவதனால், வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் என்பன ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கொதித்து ஆறிய நீரினை பருகுமாறும், கிணறுகளுக்கு குளோரின் இடுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! …

    • 0 replies
    • 516 views
  12. நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது – ஆனந்த சங்கரி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/12/20201208_121303_mfnr-720x450.jpg நான் உயிரோடு இருக்கும் வரை தமிழரசுக் கட்சியுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி இணையாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “சம்பந்தரும் சேனாதிராஜாவும் வன்னியில் இறுதி யுத்தத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமானவ…

  13. யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு கோரியுள்ளோம் - வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ சேவையை இடைநிறுத்தி ஒரு வைத்திய நிபுணரை விடுவித்தல் வைத்திய சேவையை பாதிக்கும் , புதிய வைத்திய நிபுணரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று புதன்கிழமை நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் தினசரி சுமார் 800 வரையிலான நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவிலும் சுமார் 1100 நோயாளிகள் உள்ளக விடுதிகளிலும் சுமார் 2,600 நோயாளர்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சை பிரிவுக…

  14. இனங்களை அடிப்படையாகக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் கல்வி வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அறிக்கைகள் கிடைத்துள்ளதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறான கருத்திட்டங்களுக்கு அமைய கல்வி வலயங்கள் உருவாக்கப்படுவதற்கு கொள்கை ரீதியாக நாங்கள் இணங்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸாரப், வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் கல்வி அமைச்சரிடம், பொத்துவில் உப கல்வி வலயம், கல்வி வலயமாக தரமுயர்த்தப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், “உப கல்வி வலயங்களை உருவாக்குவதற்காக இலங்கை கல்விக் கொள்கை…

  15. கொழும்பு தேசிய வைத்தியசாலையின், சமையலறையில்... பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சமையலறையில் பணியாற்றிய 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த வளாகத்தை முழுமையாக தொற்று நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தொற்று உறுதியான பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பினை பேணியவர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம் சமயலறையின் நடவடிக்கையை முன்னெடுத்து செல்வதற்காக இன்று முதல் பிரிதொரு தரப்பினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/கொழும்பு-தேசிய-வைத்தியச-9/

  16. பிள்ளையான் மீதான வழக்கு ஒத்திவைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். ஐந்து பேரும் தொடர்ந்து விளக்கமறிலில் வைக்கப்…

    • 2 replies
    • 417 views
  17. ‘கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை யாராலும் பிளவுபடுத்தவோ தடை செய்யவோ முடியாது என அக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை தடைசெய்ய வேண்டும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அவரது குறித்த கருத்து தொடர்பாக தமிழ் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் பதிலளிக்கும் போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியாக செயற்பட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப…

  18. முல்லைத்தீவு துணுக்காய் கல்விளான் பகுதியில் விளாம்பழ வியாபாரத்தில் கல்விளான் மக்கள் ஈடுபட்டுள்ளார்கள். நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை காரணமாக தொழில் வாய்ப்பில்லாத நிலையில் பல குடும்பங்கள் பல வாழ்ந்து வருகின்றன . இந்த நிலையில் முல்லைத்தீவின் துணுக்காய் பிரதேசத்தில் கல்விளான் பகுதியில் அதிகளவான விளா மரங்கள் காணப்படுகின்றன. அதில் விழும் பழங்களை பொறுக்கி விற்பனை செய்யும் நடவடிக்கையில் அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். விளாம்பழம் விற்று வாழ்க்கை ஓட்டும் கல்விளான் மக்கள் | NewUthayan

  19. ஈஸ்டர் தாக்குதல் :காத்தான்குடியில் 6 பெண்கள் உட்பட 21 பேர் கைது by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/06/ARREST_sattamani.jpg ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரானின் அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்ற மற்றும் தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 6 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மையில் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 20 வயதுடைய இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள…

  20. கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு அரசு நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் – கி.மா.சபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம் (கனகராசா சரவணன்) உள்ளூராட்சி சபைகளில் உள்ள வளங்களை உள்ளூராட்சி சபைகள் பயன்படுத்துவதோடு, மத்திய அரசு நிதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பத்மநாபா மன்றம் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவருமாகிய இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை (08) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநகர சபை, நகர சபை, பிரதேச சபைகளில் குறிப்பாக, கோறளைப்பற்று வடக்கு (வாகரை), மண்முனைமேற்கு (வவ…

    • 0 replies
    • 313 views
  21. பயங்கரவாதி தீவிரவாதி குற்றச்செயலில் ஈடுபட்டவர் என தீர்ப்பளிக்கப்பட்ட எவரையும் சட்டத்தின்கீழ் பாதுகாக்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர வலியுறுத்தியுள்ளார். சமூகஊடகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒரு நாடு ஒருசட்டம் என்பதனை வெறும் வார்த்தைகளிற்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். மஹரசிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நாங்கள் வடபகுதியின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில…

    • 2 replies
    • 942 views
  22. December 4, 2020 அண்மையில் ச‌ஜித் க‌ட்சியின் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் காவிந்த‌ ஜ‌ய‌வ‌ர்த‌ன‌வை ச‌ந்தித்த‌ ம‌ல்க‌ம் ர‌ஞ்சித் கூறுகையில் முஸ்லீம்கள் ஷரியா சட்டத்தினை முக்கியமானதாக கருதலாம் ஆனால் அதற்காக அதனை இலங்கையின் சட்டமாக அதனை அர்த்தப்படுத்த முடியாது என்றும், ஷரியா சட்டத்தினை ஏனைய சமூகங்களின் மீது திணிக்கலாம் என்றோ அல்லது அதனை ஏனைய சமூகங்கள் மீது செல்வாக்கு செலுத்துவதற்கோ அச்சுறுத்துவதற்கோ பயன்படுத்தலாம் என்றோ முஸ்லீம‌ள் கருதக்கூடாது எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். க‌ர்தினால் ம‌ல்க‌ம் ர‌ஞ்சித் அவ‌ர்க‌ளின் இக்கூற்று ஷ‌ரீயா ச‌ட்ட‌ம் என்றால் என்ன‌ என்றே ச‌ரியாக‌ அவ‌ர் அ…

    • 4 replies
    • 734 views
  23. நீண்டகாலம் தண்டனை பெறும் கைதிகளுக்கு மன்னிப்பு – அமைச்சரவை பத்திரத்தை தயார் செய்யும் நீதி அமைச்சு கொரோனா தொற்று காரணமாக சிறைச்சாலையிலிருந்து கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கிய அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 20 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் தடுப்புக்காவில் உள்ள சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக நீதி அமைச்சு அமைச்சரவை பத்திரத்தை தயாரித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்தார். மேலும் நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவித்தல் என்ற அடிப்படையில் கைதிகளின் தண்டனை முடிவடைவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் விடுவிக்…

    • 1 reply
    • 588 views
  24. கொரோனா வைரஸ் தொற்றால் மரணிப்போரை உலகில் உள்ள 197 நாடுகள் அடக்கம் செய்யும்போதுஇ இலங்கையில் மாத்திரம் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படுவதில்லை எனக் கேள்வியெழுப்பிய இஷாக் ரஹ்மான் எம்.பி, முஸ்லிம்கள் ஈழத்தைக் கேட்கவில்லை. கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை (ஜனாஸாக்களை) அடக்கம் செய்ய வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமானப் பாதிப்புக்களும் ஏற்படாது என்றார். சுற்றாடல், வனஜீவராசிகள், வனப் பாதுகாப்பு அமைச்சின் குழு நிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், 'முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டைப் பிரித்துக் கேட்கவில்லை. நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது இல்லை. நாட்டின் அ…

    • 2 replies
    • 482 views
  25. (எம்.எப்.எம்.பஸீர்) ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதானியாக கருதப்படும் பயங்கரவாதி சஹ்ரான் ஹஷீமின், அடிப்படைவாத போதனைகளில் பங்கேற்று, தற்கொலை தாக்குதல்கள் உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்றதாக கூறப்படும் 6 பெண்களை பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பொலிஸ் குழுவினர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடை சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவித்தன. பெண்ணொருவரும் அவரது 3 மகள்மாரும், இரு மருமகள்மாரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது…

    • 0 replies
    • 559 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.