Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மைக்பொம்பியோவை சந்திக்க பிரதமர் விரும்பவில்லை- விமல் Rajeevan Arasaratnam இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. நான் அறிந்தவரையில் பிரதமர் மைக்பொம்பியோவை சந்திப்பது குறித்து ஆர்வம் காட்டவில்லை என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை;கான தனது விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜனாதிபதியையும் வெளிவிவகார செயலாளரையும் சந்தித்த போதிலும் பிரதமரை சந்திக்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. https://thinakkural.lk/article/84359

    • 9 replies
    • 1.4k views
  2. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கையில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகின்ற பின்னணியில், பல்வேறு தரப்பினரும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கையில் முதலாவது கொரோனா அலை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கடற்படை மற்றும் கந்தகாடு மறுவாழ்வு நிலையத்திலுள்ளவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களே பாதிக்கப்பட்டிருந்தனர். எனினும், இந்த முறை ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தவர்கள் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில், பின்னரான காலத்தில் மீன் விற்பனையாளர்கள், போலீஸார், ஊடகவியலாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை காண முடிகின்றது. மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கோவிட் கொத்தணி, பின்…

  3. இந்தியத் தூதுவர் - சம்பந்தன் திடீர் சந்திப்பு: எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் வழங்க முடியாது.! - கெஹலிய.! இலங்கையில் தமிழர்கள் மட்டுமன்றி சிங்களவர்கள், முஸ்லிம்கள் என மூவின மக்களும் வாழ்கின்றார்கள். இந்தநிலையில், தமிழர் விவகாரம் தொடர்பில் எந்த நாடும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க முடியாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை திடீரென முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழர் தரப்பின் பல்வேறு விடயங்கள் குறித்து இருவரும் பேசினர். இது தொடர்பில் …

    • 2 replies
    • 1.3k views
  4. கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், வட.மாகாண சுகாதார சேவைகள் பணப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், வட.மாகாண உளநல சேவை பணிப்பாளர…

    • 0 replies
    • 503 views
  5. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டுபிடிக்கும் அதிகாரம் அமெரிக்காவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். http://cdn.virakesari.lk/uploads/medium/file/137249/IMG_20201026_134126.jpg இன்று வவுனியாவில் காணாமல் போனவர்களினால் மேற்கொள்ளப்படும் போராட்ட பந்தலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமெரிக்க வெளிவிவகார செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் வன்னியில் நடந்த இனப் போரின்போது, 25,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். நாங்கள் 1347 வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு …

  6. பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையம்: யாழில் இருந்து 20 தாதியர்களை அனுப்ப நடவடிக்கை பொலநறுவையில் உள்ள கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய 20 தாதியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். கொரோனோ பெருந்தொற்றின் மூன்றாம் அலை காரணமாக கொரோனோ சிகிச்சை நிலையங்களில் நோயாளர்கள் நிரம்பி உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை நிலையங்களில் தாதியர் பற்றாகுறை நிலவுகின்றன. அதனால் கூடுதல் தாதியர்களை கடமைக்கு அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 4 தமிழ் தாதியர்கள் உட்பட 20 தாதியர்கள் பொலநறுவை கொரோனோ சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என வைத்தியசாலை வட்டார தகவல்க…

    • 1 reply
    • 822 views
  7. கொவிட்-19 தகவல் திரட்டும் புதிய செயலி அறிமுகம் மருத்துவத் துறையிலும் கொவிட்-19 ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதிக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது. கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள், தொடர்புடையவர்கள், தனிமைப்படுத்தல், பி.சி.ஆர. பரிசோதனை சேவைகள், கண்காணிப்பு, தீர்மானங்களை மேற்கொள்தல், நோய்த்தொற்றாளர்களுக்கு கிட்டிய பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் இடம்பெறம் கொவிட்-19 ஒழிப்பு செயலணி நேற்று முற…

  8. 20 ஐ ஆதரித்த 9 எதிரணி உறுப்பினர் நீக்கம் – அரச தரப்பில் ஆசனம் ஒதுக்க கோரிக்கை 41 Views ஐக்கிய மக்கள் சக்தியின் 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதனால் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் டயானா கமகே உள்ளிட்ட 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்த 09 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். …

  9. விடுதலைப்புலிகளின் ஆயுதம் தேடிய பொலிசாருக்கு... கிடைத்த ஆயுதம் வவுனியா- பெருமெடுப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி நடத்தப்பட்ட அகழ்வில் அலவாங்கு ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர். மட்டக்களப்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் வவுனியா விளக்குவைத்தகுளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வுப்பணி மேற்கொண்டிருந்தனர். இதன்போது வவுனியா நீதிபதி மற்றும் ஓமந்தை பொலிஸாரும் குறித்த பகுதிக்கு பிரசன்னமாகியிருந்த நிலையில், தீயணைப்பு வாகனங்கள் தரித்து நிற்க கனரக வாகனங்களின் உதவியுடன் சுமார் 10அடிக்கும் ஆழமாக நிலம், அகழ்வு செய்யப்பட்ட போது அலவாங்கு ஒன்றும் மதுசார வெற்று ரின் என்பனவும் காணப்பட்டுள்ளன. இதனையடுத்து தோண்டப்…

  10. ‘பிரபாகரன் தமிழனே, அனைவரையும் கொல்வோம்’-மருத்துவர்களை மிரட்டிய பிரிகேடியர் 68 Views “பிரபாகரன், தமிழனே, நாங்கள் உங்கள் அனைவரையும் கொன்று விடுவோம்” என இலங்கை இராணுவ அதிகாரியான பிரிகேடியர் கே கே எஸ் பெராகும் பணியில் இருந்த மருத்துவர்களை மிரட்டியதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது. இலங்கை இயந்திர காலாட் படைப்பிரிவின் பிரிகேடியர் கே கே எஸ் பெராகும், மருத்துவ அதிகாரிகளை பார்த்து உங்களைக் கொன்ற விடுவேன் என்றும் இனவாத ரீதியிலும், “பற தெமிழா, பிரபாகரன், பயங்கரவாதிகள். உங்கள் எல்லாரையும் கொல்லுவேன். இது எனது ஏரியா” என்று தகாத வார்த்தைகளால் மிரட்டியதாகவும் இலங்கையின் மிக முக்கியமான மருத்துவ சங்கமான அரச மர…

    • 4 replies
    • 892 views
  11. கொரோனா பாதிப்பு – சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா …

    • 4 replies
    • 897 views
  12. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று Bharati October 21, 2020விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று2020-10-21T04:55:40+05:30 FacebookTwitterMore விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை வெளிவருகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த இருக்கின்றது. இந்த வழக்கானது திறந்த சாட்சியங்…

  13. நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் Bharati October 29, 2020நாடாளுமன்றப் பேரவை உறுப்பினராக அமைச்சர் டக்ளஸ் நியமனம்2020-10-29T21:52:46+05:30 FacebookTwitterMore நாடாளுமன்றப் பேரவையின் உறுப்பினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பு இன்று பிரதமர் அலுவலகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. சுயாதீன ஆணைக் குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் போன்ற …

  14. பாரதலக்ஷ்மன் பிரேமசந்திரன் படுகொலை வழக்கின் மரண தண்டனை கைதியான முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கோரும் அரச தரப்பு எம்பிகளின் மனுவில் மனோ கணேசன் எம்பி மற்றும் அவரது கூட்டணியான தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பிகள் கையெழுத்திட்டுள்ளனர். அரச தரப்பின் இந்த மனுவில அரச எம்பிகளான சுரேன் ராகவன், கெஹெலிய ரம்புக்வெல, வீரகுமார திஸாநாயக்க, மஹிந்த அமரவீர உள்ளிட்ட சிலர் கையெழுத்திடாத நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கையெழுத்திட்டுள்ளது. இது குறித்து மனோ கணேசன் ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய அறிக்கையில், “முன்னாள் கொழும்பு மாவட்ட எம்பி துமிந்த சில்வா கொலை குற்றச்சாட்டின் நிமித்தம் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் இருக்கின்றார். சம்பவம் நிகழும் போது அவ…

    • 9 replies
    • 1.4k views
  15. ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்! DicksithOctober 29, 2020 முன்னாள் எம்.பி ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது சிகிச்சைபெற்றுவரும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 5111 ஆக அதிகரித்துள்ளது. நேற்றையதினம் (28) 335 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 9205 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக இலங்கை மருத்துவமனை அமைப்பில் ஒதுக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை 5,000 ஆகும். தற்போது நோயாளர்களின் எண்ணிக்கை வரம்பை மீறியுள்ளதால் நோய் ரீதியில்…

  16. மிக மோசமான நிலையினை எதிர்கொள்ளும் கிழக்கு மாகாணம்! October 29, 2020 கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என 1776பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுல் நேற்று மாலை வரையில் 466பேர் பிசிஆர் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தையுடன் தொடர்புபட்டவர்கள் 52பேர் பீசிஆர் பரிசோதனையின்போது தொற்று அடையாளம்காணப்பட்டு அனைவரும் வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெ…

  17. பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் இன்றி தவிக்கும் மட்டக்களப்பு விவசாயிகள்-ந.குகன் வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியின் பொருளாதாரம் என்பது பலமடையாமல் இருக்க வேண்டும் என்பதில் காலத்திற்குக் காலம் வரும் அரசாங்கங்கள் கவனமாகவே இருந்து வருகின்றன. தமிழர்களின் வளம் அதிகரிக்கும்போது, அவர்களின் உரிமை சார்ந்த விடயங்களும் அதிகரித்துவிடும் என்ற நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் பொருளாதாரம் என்பது பெருமளவு விவசாயத்தில் தங்கியிருக்கின்றது. இன்று இலங்கையில் விவசாய நிலங்களை அதிகளவில் கொண்ட மாகாணங்களுள் ஒன்றாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், விவச…

  18. யாழ் இந்துக் கல்லூரியிலிருந்து 179 பேர் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு! யாழ்.இந்துக் கல்லூரியிலிருந்து 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. 31 மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கும், 21 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளதுடன் சகல துறைகளுக்குமாக மொத்தமாக 179 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர். புதிய பாடத்திட்டத்தின் கீழ் 107 பேரும் பழைய பாடத்திட்டத்தில் கீழ் 72 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்-இந்துக்-கல்லூரியிலி/

  19. ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து சிலர் நீக்கம்! by : Vithushagan http://athavannews.com/wp-content/uploads/2020/10/Parliament-of-Sri-Lanka-04-720x450.jpg 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த 09 பேரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் பக்கம் ஆசனங்களை ஒதுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு கடந்த 21 ஆம் திகதி நடத்தப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் 09 உறுப்பினர்கள் தங்களின் ஆதரவை வழங்கியிருந்தனர். ட…

    • 0 replies
    • 662 views
  20. ஒரே பார்வையில் இலங்கையில் கொரோனாவும் கட்டுப்பாடுகளும்… October 29, 2020 மேல் மாகாணத்திற்குள் வைபவங்களை நடத்துவதற்கும் தடை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதியில் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிப்பது அல்லது அங்கிருந்து வெளியேறுவது முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்று மாலை காவற்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காலப்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தி மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கவோ அல்லது வெளியேரவோ முடியாது என்றும் கூறினார். இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு மே…

  21. கூட்டமைப்பின் தலைவருக்கும், இலங்கைக்கான இந்திய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னதாக சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருந்த போதிலும் அந்த சந்திப்பு கொரோனா பரவல் காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்…

  22. கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை... அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் கொரோனா வைரஸ் தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமையை மீட்டுத் தர வேண்டும் என சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. குறித்த கடிதத்தில் அவர்கள் தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக பல நாடுகளும் ஸ்தம்பித்துப் போயுள்ள நிலைமையை நாம் அனைவரும் அவதானித்து வருகிறோம். நம் நாட்டில் கொரோனா பரவல் தற்போது தீவிரமடைந்துள்ளதுடன், மரண வீதமும் அதிகரித்து வருகின்றது. இந்தக் கடிதம் எழுதப்படும் வரை 19 பேர் வைரஸ் தொற…

  23. போர்க்குற்றம் சாட்டப்பட்ட இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க சட்டத்தின் பிரகாரமே சவேந்திரவுக்கு தடை விதிக்கப்பட்டது. சட்டரீதியாக அந்த தடை சரியானது என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/போர்க்குற்றம்-சாட்டப்பட/

  24. மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வழமை போன்று மத வழிபாடுகளை முன்னெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/மத-வழிபாடுகளில்-ஈடுபடுபவ/

  25. மைக் பொம்பியோ வருகை; போர்க்கொடி தூக்குகிறது சீனா- காட்டமான அறிக்கை.! இலங்கைக்கு தேவையற்ற பிரச்சனைகளைக் கொண்டு வர வேண்டாம் என அமெரிக்க இராஜாங்க செயலர் மைக் பொம்பியோவின் நாளைய விஜயத்தை முன்னிட்டு இலங்கைக்கான சீனத் தூதரகம் இன்று (27) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:- "அமெரிக்க முதன்மை பிரதி உதவி இராஜாங்க செயலர் டீன் தொம்ஸன் இராஜாங்க செயலாளரின் எதிர்வரும் விஜயம் தொடர்பாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் சீனா - இலங்கை உறவு தொடர்பாக பகிரங்கமாக வலியுறுத்தல் விடுத்ததுடன் தலையீடு செய்தமை மட்டுமன்றி வெளிநாட்டு உறவுகள் தொடர்பாக 'கடினமானதும் ஆனால் தேவையானதுமான தீர்மானங்களை' இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தமையானது இரா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.