ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143308 topics in this forum
-
கொழும்பு நகரத்துக்கு வருகை தருவது குறித்து சவேந்திர சில்வா தெரிவித்தது என்ன? Daya Dharshini கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதை முடிந்த வரை குறைத்துக்கொள்ளுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தியாவசியத் தேவைகளைத் தவிர ஏனைய விடயங் களுக்காகக் கொழும்பு நகரத்துக்கு வருகை தருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்ட போதிலும் மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களைத் தொடர்ந்து தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடந்தால் கொரோனா தொற்றாளர்களை…
-
- 0 replies
- 374 views
-
-
மட்டக்களப்பில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – வாழைச்சேனையில் ஊரடங்கு நீடிப்பு by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpeg வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தியில் மீண்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா மைய காரியாலயத்தை மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) திறந்து…
-
- 0 replies
- 335 views
-
-
தனிமைப்படுத்தல் சட்டம் இன்றுமுதல் தனித்துவமாகின்றது! BATTINEWS MAINNovember 9, 2020 சீனாவில் தொடங்கிய கொரோனா என்ற நச்சுயிரி வைரஸானது முழு உலகத்தையும் ஆட்டிப் படைத்துகொண்டிருக்கின்றது. உலகில் 5கோடி மக்கள் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். தொற்றுக்களின் அடிப்படையில் அமெரிக்கா 1கோடி என்ற எண்ணிக்கையுடன் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின் என பட்டியல் நீளுகின்றது. சுமார் 12லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர். இலங்கையில் இதுவரை சுமார் 13ஆயிரம் பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 35பேர் மரணமாயுள்ளனர்.வெளிநாடுளில் 90இலங்கையர்கள் மரணமாயுள்ள செய்தியும் வெளிவந்துள்ளது. .குறிப்பாக சவுதிஅரேபியாவில் 31பேரும் குவைத்தில் 20பேரும் பலியாகி…
-
- 2 replies
- 775 views
-
-
தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் இந்தியா அக்கறையாகவுள்ளது; அவர்களுடன் பேசுவோம் – மாவை சேனாதிராஜா Bharati November 8, 2020தமிழ்த் தேசத்தின் பாதுகாப்பில் இந்தியா அக்கறையாகவுள்ளது; அவர்களுடன் பேசுவோம் – மாவை சேனாதிராஜா2020-11-08T06:25:19+05:30 FacebookTwitterMore தமிழினத்தின் விடுதலைக்கு, தமிழ்த் தேசத்தின் பாதுகாப்புக்கு இந்தியாவின் தலையீடு அவசியம் என்ற அடிப்படையில் அவர்கள் அக்கறையைச் செலுத்தியுள்ளதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவி…
-
- 5 replies
- 846 views
-
-
யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’ Bharati November 8, 2020யாழ், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்’2020-11-08T22:28:43+05:30 FacebookTwitterMore இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய, ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ், பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ‘கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்’ மற்றுமொரு கட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் யாழ். மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூ…
-
- 1 reply
- 578 views
-
-
புதிய அரசியலமைப்புக்கான முன்மொழிவை விரைவில் அனுப்புவோம் என்கிறார் டக்ளஸ் (ஆர்.ராம்) இனப் பிரச்சினைக்கான தீர்வாக 13 ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதிலிருந்து படிப்படியான முன்னோக்கி செல்லுதல் என்பதை மையப்படுத்திய முன்மொழிவொன்றை புதிய அரசியலமைப்புக்கான நிபுணர்கள் குழுவிடம் கையளிக்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கான ஈழமக்கள் ஜனநாயக்கட்சியின் முன்மொழிவு எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் வினவியபோது அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சதாகிய பின்னர் தேசிய ஜனநாயக நீரோட்டத்தில் ஈழம…
-
- 3 replies
- 1.5k views
-
-
வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது – நீதியரசர் விக்னேஸ்வரன் வடக்கு கிழக்கிற்கு அதிகாரப்பரவலைக் கையளிக்காது மத்தியின் கைப்பொம்மைகளாக கிராமமடட்ட நிறுவனங்களை மாற்றத்திட்டமிடப்பட்டுள்ளது நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கேள்வி பதிலில் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவருடைய கேள்வி பதிலில் பிவருமாறு அமைந்துள்ளது . கேள்வி :- இன்று நடந்த “கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கானதேசிய நிகழ்ச்சித்திட்டக்” கூட்டத்தில் நீங்கள சில முக்கியமான கருத்துக்களைஆங்கிலத்தில் எடுத்துரைத்தீர்கள். அவற்றைத…
-
- 1 reply
- 447 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன்- வியாழேந்திரன் தெரிவிப்பு SAVITHNovember 8, 2020 (கல்லடி , செங்கலடி நிருபர்) தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுத்தவனாகவே இருந்து வருகின்றேன், அவர்களது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நேற்றைய தினம் கடுக்காமுனையில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார்.அவர் மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இப்பொழுது சில தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சில வாதப்பிரதிவாதங்களை அரசியல் கைதிகளின் விடுத…
-
- 1 reply
- 485 views
-
-
தமிழ் மக்களுக்கு, இரா.சம்பந்தன் முக்கிய அறிவிப்பு கொரோனாவிலிருந்து விடுபட வீடுகளிலிருந்தே தீபாவளியை கொண்டாடுங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் இரா.சம்பந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது. தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா திடீர்ப் பரவல் காலப்பகுதியில் வரும் இந்தப் பண்டிகை நாளில், நாம் கூட்டுப்பொறுப்புடன் நடந்துகொள்வது எமது அனைவரது நல்வாழ்விற்கும் அவசியமாகும். எனவே, எமது வீடுகளில் உள்ள மூத்தோர், கர்ப்பிணிகள் மற்றும்…
-
- 17 replies
- 2.3k views
-
-
வடக்கை வளர்க்கும் இளம் தொழில்முனைவோர் ஜெகன் அருளையா ஜெகன் அருளையா ஜெகன் அருளையா இலங்கையில் பிறந்து, தனது இரண்டாவது வயதிலேயே பிரித்தானியாவுக்குத் குடும்பத்துடன் புலம் பெயர்ந்தவர். லண்டனில் வளர்ந்த அவர் 1986 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்றவர். இரண்டு தசாப்தங்களாக தகவற்தொழில்நுட்பத்திலும், அதில் பாதிக் காலம் பிரித்தானிய நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரிக்கும் பணியில், கொழும்பிலும், கூர்கவோன் (இந்தியா) விலும் தங்கியிருந்தார். 2015 இல் அவர் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்து அங்கு சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். லங்கா பிசினஸ் ஒன்லைன் இணையத்திற்கு ஆங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடு! கொரோனா தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி யாழ்.மாவட்டச்செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்.நகர் நாகவிகாரையில் சிறப்பு வழிபாடுஇடம்பெற்றது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆலயத்தில் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டியும் நாட்டு மக்களுக்கு அருளாசி வேண்டியும் யாழ் மாவட…
-
- 1 reply
- 1k views
-
-
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா November 6, 2020 நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் குறித்த குழுவின் தலைவரும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்ரன் பெனான்டோ தலைமையில் இன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றபோதே…
-
- 12 replies
- 1.2k views
-
-
முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும் சட்டத்தரணி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் பிரதமரின் இந்து விவகார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இன்று (29) பிரதமரிடம் இருந்து நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டனர்.https://newuthayan.com/முன்னாள்-பிரதம-நீதியரசர்/
-
- 4 replies
- 1.2k views
-
-
அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்துடன் பேச முடியாமைக்கான காரணத்தை தெரிவித்தார் டக்ளஸ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி கதைப்பதற்கு எனக்கு போதிய அளவு ஆணையினை தாருங்கள் என கேட்டிருந்தேன் அவர்கள் எனக்கு நான் கேட்ட அளவு ஆணையினை தரவில்லை ஆணையினை தந்திருந்தால் நான் அதனை செய்திருப்பேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை கூட்டுறவாளர்களுடனான சந்திப்பு ஒன்று இன்று (07.11.2020) கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்திச் சங்கத்தின் மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பனை தென்னை கூட்டுறவார்கள் பனை தென்னை கூட்டுறவாளர்களின் தேவைகள் கேட்டு அறியப்பட்டது. அதன்ப…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஈஸ்டர் தாக்குதலின், முக்கிய சூத்திரதாரி.. சஹ்ரானின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி மொஹமட் சஹ்ரான் ஹாசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள வெலிகந்த மருத்துவமனைக்கு அவர் இன்று பலத்த பாதுகாப்புற்கு மத்தியில் அழைத்து செல்லப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சஹ்ரான் ஹசீமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். கொழும்பு ரிமாண்ட் சிறை மற்றும் வெலிகடை சிறைச்சாலையில் இதுவரை 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் பெரும்பாலோர் பெண் கைதிகள் எனவும் தெரி…
-
- 1 reply
- 463 views
-
-
மக்களே எச்சரிக்கை ! இலங்கையில் கொரோனா பரவல் நிலை குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கை வெளியானது ! Published by T. Saranya on 2020-11-07 13:31:21 சமூகப் பவரவல் நான்கு நிலைகளில் பரவுகின்ற நிலையில், இலங்கையில் தற்போது 3 ஆவது நிலையில் கொவிட் 19 தொற்று பரவல் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்கள் கணித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. புதிய வகைப்பாட்டின் படி, நிலை 3 கடந்த 14 நாட்களில் உள்நாட்டில் பரவலாக பாதிக்கப்பட்ட தொற்றாளர்களை குறிக்கிறது. சூழ்நிலை மதிப்பீட்டின்படி, மேலும் நான்கு சூழ்நிலைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. சூழ்நிலை நிலை 3 என்பது சமூக பரவல் நிலைமை என வரையறுக்கப்படுகிறது. இதற்கு ப…
-
- 0 replies
- 322 views
-
-
பைடன் ஆட்சியில் இலங்கை மீது அழுத்தம் அதிகரிக்கும் – சட்டவல்லுநர் பிரதீப மஹாநாம November 7, 2020 அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவாகும் பட்சத்தில் இலங்கைக்கு இராஜதந்திர மட்டத்தில் மீண்டும் நெருக்கடிகள், அழுத்தங்கள் ஏற்படக்கூடும். இலங்கை விவகாரத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்வதற்குக் கூட முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், சட்டவல்லுநருமான பிரதீபமஹாநாம ஹோவா சுட்டிக்காட்டினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு; சி.ஐ.ஏ. , எப்.பி.ஐ. உட்பட அமெரிக்காவில் அரச இயந்திரமே பலம்பொருந்தி…
-
- 0 replies
- 869 views
-
-
கிழக்கில் கொரோனா பரவல் 100 ஆக அதிகரிப்பு – மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவிப்பு November 7, 2020 கனகராசா சரவணன் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவு 4 பேரும் மட்டக்களப்பில் 2 பேருக்கு இன்று சனிக்கிழமை (07) பி.சி,ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறிதிப்படுத்தப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தில் 100 பேர் தொற்றாளாராக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் அழகையா லதாகரன் இன்று சனிக்கிழமை (07) ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மட்டக்களப்பு செங்கலடியில் வர்த்தக நிலையத்தில் கடமையாற்றிவந்த மட்டக்களப்பை லொயிட்ஸ் அவனியூரைச் சேர்ந்த ஒர…
-
- 0 replies
- 520 views
-
-
யாழ்ப்பாணம் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று யாழ்ப்பாணம், கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் இரண்டு பெண்களும் சிறுவனும் உள்ளடங்குவதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.அவர்கள் மூவரும் ஒரு வாரத்துக்கு மேலாக சுயதனிமைப்படுத்தலில் கண்காணிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களிடம் நேற்றைய தினம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பரிசோதனை கூடத்தில் இன்று இடம்பெற்ற பி.சி.ஆர். பரிசோதனையில…
-
- 1 reply
- 459 views
-
-
‘மணி’ ஆதரவு உறுப்பினர்களின் பதவிகளைப் பறிக்கிறது முன்னணி – தெரிவத்தாட்சி அதிகாரிக்கு கடிதம் November 6, 2020 உள்ளூராட்சி சபைகளின் நான்கு உறுப்பினர்களை பதவியில் இருந்து நீக்குமாறு, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சி யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவித்துள்ளது. யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்களான தர்ஷிபா, டென்சி ஆகியோரும், சாவகச்சேரி பிரதேச சபைஉறுப்பினர்களான நிதர்சன், சிவகுமார் கஜன் ஆகிய நால்வருமே, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்களை சபைகளின் உறுப்பினர் பதவிகளில் இருந்து நீக்குமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினால் யாழ். மாவட்ட உதவி தெரிவத்தாட்சி அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkur…
-
- 3 replies
- 626 views
-
-
மாவீரர் நாளை அனுஸ்டிக்க அனுமதி வழங்கினால் ஆதரவளிக்க தயார்!- செல்வம் அரசியல் கைதிகள் தொடர்பாக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கும் சுரேன் ராகவன், மாவீரர் நாளை அனுஸ்டிக்கவும் அனுமதியை பெற்றுத்தந்தால், அவரின் செயற்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவளிக்க தயாராக உள்ளேன் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுரேன் ராகவன் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முன்னாள் வட.மாகாண ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன், கருத்தொன்றை விட்டுள்ள நிலையில் அரசியல் கைதிகள் என்பது எல்லோருக்கும் சாதாரண விடயம…
-
- 3 replies
- 924 views
-
-
அபிவிருத்திக் குழுவினை கூட்டுவதன் மூலமே பிரச்சினைகளை தீர்க்கமுடியும்- இரா.துரைரெட்னம் 38 Views மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக்குழுவினை கூட்டுவதன் மூலமே தீர்க்கமுடியும் என இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்-இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம், “கொரேனா அச்சுறுத்தல் காரணமாக தொழில்நிலை பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் நிவாரணம் வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுப்பதற்கு சுகாதார திணைக்…
-
- 5 replies
- 581 views
-
-
வடக்கில் 9 ஆயிரம் தமிழ் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க திட்டம்..! ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையிலான கூட்டத்தில் பேச்சு.. வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் இளைஞர், யுவதிகளை இராணுவத்தில் இணைக்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. குறித்த விடயம் இன்று வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலமையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம் -4500, வன்னி - 4500 என்ற அடிப்படையில் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்தும் சுமார் 9 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளனர். இவ்வாறு இராணுவத்தில் இணைக்கப்படுவோர் வடக்கில் வேலை செய்ய இடமளிக்கப்படுவதுடன், 60 ஆயிரத்திற்கும் அதிகமான மாத சம்பளம் வழங்கப்படும் எ…
-
- 33 replies
- 3.8k views
-
-
மக்கள் ஒத்துளைப்பின்றி மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது- அரசாங்க அதிபர் கருணாகரன் தெரிவிப்பு BATTINEWS MAINNovember 6, 2020 அரச தரப்பினால் எவ்வளவுதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்கள் ஒத்துளைப்பின்றி கொரோனா வைரஸ் பரவலை மட்டக்களப்பில் கட்டுப்படுத்த முடியாது என மாவட் செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் 4வது விசேட கூட்டம் இன்று(06) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்து வெளியிடுகையில்,கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாகும். அரச தரப்பினால் எ…
-
- 0 replies
- 808 views
-
-
மன்னாரில் ஒரு கிலோ மஞ்சள் தூள் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை.! மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் மறைத்து வைத்து நாளுக்கு நாள் அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், விலை தொடர்பாக உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது மன்னார் நகரில் உள்ள சில பல்பொருள் விற்பனை நிலையங்களில் மஞ்சள் தூள் 100 கிராம் 400 ரூபாய் குதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதற்கு அமைவாக 1 கிலோ மஞ்சள் தூள் 4 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் கு…
-
- 0 replies
- 577 views
-