Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Jamuna,

    தேவையானபொருட்கள் சிக்கன் - 1/2கிலோ வத்தல் தூள் - 4தேக்கரண்டி மல்லித்தூள் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி கரம் மசாலா - 1/4தேக்கரண்டி எலுமிச்சைசாறு - 5தேக்கரண்டி தயிர் - 2தேக்கரண்டி இஞ்சிபூண்டுவிழுது - 1தேக்கரண்டி ஆரஞ்சு கலர் 1/4 தேக்கரண்டி உப்பு - 1தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் கொத்தமல்லிதழை - 4 கொத்து செய்முறை சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்..............ஒரு பாத்திரத்தில் வத்தல் தூள்,மல்லி தூள்,உப்பு,கரம்மசாலா,கலர்பவு

    • 6 replies
    • 3.1k views
  2. வணக்கம் உறவுகளே, சுவையருவியில் உங்கள் செய்முறைகளையும் சேர்க்க விரும்பினால், செய்முறைகளை இங்கே விட்டு செல்லுங்கள்.. நன்றி

    • 48 replies
    • 8.9k views
  3. தேவையானப் பொருட்கள் கறி - 1 கிலோ பாஸ்மதி அரிசி - 1 கிலோ ( 7 கப் ) தண்ணீர் - 7 கப் நெய் - 100 கிராம் எண்ணெய் - 200 கிராம் பட்டை - 2 ஏலக்காய் - 4 கிராம்பு - 3 ரம்பயிலை - 1 இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப் மிளகாய்தூள் - 2 ஸ்பூன் பல்லாரி - 1/2 கிலோ தக்காளி - 1/4கிலோ கொ.மல்லி - 1 பெரிய கட்டு புதினா - 1 கட்டு உப்பு - தேவைக்கு கேசரி கலர் - கொஞ்சம் எலுமிச்சை - 1 செய்முறை பல்லாரி, தக்காளி கொ.மல்லி, புதினாவை நறுக்கி வைக்கவும். கறியுடன் மிளகாய்த்தூள், உப்பு, தயிர் போட்து விரவி வைக்கவும். தாளிக்க: குக்கரில் நெய், எண்ணெய், ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, ஏலம், கிராம்பு, ரம்பயிலை, போடவும். 2 நிமிடம…

    • 69 replies
    • 11.9k views
  4. Started by Jamuna,

    தேவையான பொருட்கள் அரிசி - 200 கிராம் பால் - 1 லிட்டர் சர்க்கரை - 250 கிராம் பாதாம், முந்திரி - 15 ஏலக்காய் - 5 (பொடி செய்தது) திராட்சை - 15 நெய் - 50 கிராம் செய்முறை 1. பெரிய பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். கொதித்த பின் பாதி பாலை தனியே எடுத்து வைத்து விடவும். 2. மீதியுள்ள பாதி கொதித்த பாலில் கழுவிய அரிசியைச் சேர்த்து (ஊற விட வேண்டாம்) 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இடையிடையே கிளறி விடவும். 3. பிறகு தனியே எடுத்து வைத்த பாலை சிறிது சிறிதாக அவ்வப்போது சேர்த்து சீராக கலந்து விடவும். 4. அரிசி குழைய வெந்தவுடன் லேசாக மசித்து சர்க்கரை சேர்த்து, கரையும் வரை கலந்து விடவும். 5. முந்திரி திராட்சையை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும். …

    • 12 replies
    • 4.2k views
  5. மாமிச கூழ் தேவையான பொருட்கள்: ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய் செய்முறை: முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் …

  6. தேவையானப் பொருட்கள் வௌவால் மீன் - 2 புளி எண்ணெய் - 150 மி.லி. கடுகு - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - அரை கப் இஞ்சி - 2 மேசைக்கரண்டி (நறுக்கியது) பூண்டு - 3 மேசைக்கரண்டி (நறுக்கியது) மஞ்சள் - அரைத் தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 மல்லித்தூள் - ஒரு தேக்கரண்டி சோம்புத்தூள் - ஒரு தேக்கரண்டி கிராம்பு - 2 ஏலப்பொடி - அரைத்தேக்கரண்டி தேங்காய் - ஒன்று வினிகர் - 2 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். நடுத்தரமான சைஸில் சுமார் 12 துண்டுகள் வருமாறு வெட்டிக் கொள்ளவும். புளியை அரை கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மீன் த…

  7. அப்பம் எண்டா கூட எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் பால் அப்பம் எண்டா ருசியே தனி. ஊரில அப்பத்துக்கு போட போறம் எண்டா காலேலயே போய் ஒரு டம்ளரில உடன் கள்ளு வாங்கி வந்து மணக்க மணக்க விட்டு குழைச்சு செய்வம். இங்க எங்க பனைமரமா நிக்குது. இல்லை கடையில எங்காச்சும் வாங்க முடியுமா என்ன...அதுக்காக ஒரு வழி சமீபத்தில அறிஞ்சன். (ஆமா இது எப்பவோ எனக்கு தெரியும் எண்டு தெரிஞ்சவை பேசாதைங்கோ) இது தெரியாதவைக்கு மட்டும். செய்முறை: ஒரு டம்ளரில இளஞ் சூடான தண்ணியை தேவையான அளவு விடவும். அப்புறம் ஈஸ்ட் , சீனி தண்ணி அளவுக்கேற்ப போட்டு...கொஞ்ச நேரம் கலக்கி ஊற விடவும். கொஞ்ச நேரத்தால மெல்லிய கள்ளு வாசம் வீசும். அப்புறம் எடுத்து அப்பத்துக்கு பயன்படுத்தலாம். கூட எல்லாருக்கும் அளவுகள் கொ…

    • 147 replies
    • 25.7k views
  8. தேவையான பொருட்கள்: வெற்றிலை பாக்குத்தூள் கற்கண்டு தூள் பீடா கலவை அல்லது சர்பத் கலவை கராம்பு செய்முறை: பீடா கலவையை (கடையில் வாங்கலாம்) முதலில் அடுப்பில் வைத்து சிறிதளவு கொதிக்க வைக்க வேண்டும். (அம்மாவிடம் எவ்வளவு நேரம் என்று கேட்டபோது சட்டி கொதிக்க மூன்று நிமிசம் பிடிக்கும் என்றபடியால் ஒரு ஐந்து நிமிடம் என்று எழுதச்சொன்னா) பின் இந்த கலவையுடன் பாக்குத்தூள், கற்கண்டு தூள் ஐ கலந்து குழைக்க வேண்டும். இந்த கலவையை வெற்றிலையினுள் வைத்து படத்தில் காட்டியுள்ளபடி மடித்து, கராம்பு குச்சியினால் மடிப்பு கழறாதபடி குற்றிவிட வேண்டும். பீடா கலவை கிடாக்காவிட்டால் சர்பத் கலவையையும், பக்கற்றில் வரும் தேங்காய்ப்பூ தூளையும் பயன்படுத்த முடியும். மேலே உள்ள பீடா எனது வ…

  9. Started by putthan,

    தேவையான பொருட்கள்- காஸ் அடுப்பு இல்லாவிடில் விறகு அடுப்பு,பப்படம் ஒரு பைக்கற்,எண்ணேய் தேவையான அளவு,தாச்சி,கண் கரண்டி. செய்முறை-தாச்சியை முதலில் நன்கு கழுவி அடுப்பில் வைக்கவும் பின் அடுப்பை பற்ற வைக்கவும் சிறிது நேரத்தின் பின் எண்ணேய் போத்தல் மூடியை களற்றி எண்ணேயை கவிட்டு தாச்சிக்குள் ஊற்றவும்.ஊற்றிய பிறகு எண்ணேய் போத்தலை நன்றாக மூடி இருந்த இடத்தில் வைக்கவும்.எண்ணேய் நன்றாக கொதித்தவுடன் பப்பட பையை வாயால் பிக்காமல் கத்தியால் வெட்டி ஒவ்வொரு பப்படமாக தாச்சியுள் போடவும்.நன்றாக பொங்கி வந்தவுடன் பப்படத்தை கண் கரண்டியால் எடுத்து ஒரு பழைய பேப்பரில் போடவும்.பத்திரிகையில் எண்ணேய் ஊறியவுடன் மரக்கறி சோற்றோடு சேர்த்து உண்ணவும்........

    • 24 replies
    • 6.4k views
  10. தேவையானவை வாழைப்பூ 1 பெரிய வெங்காயம் 1 பச்சை மிளகாய் 2 கடுகு , சீரகம் விரும்பினால் தேங்காய்ப்பூ சிரிதளவு(உடலில் கொழுப்பு கூடினவர்கள் பாவிக்காமல் இருப்பதே நன்று) :P சிறிதளவு எண்ணை உப்பு இறால் மிளகாய்த் தூள் செய்முறை முதலில் வாழைப்பூவை சிறிது சிறிதாக அரிதல் வேண்டும். அதை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு 1 மணித்தியாலத்திக்கு மேலாக ஊர விட வேண்டும் அப்பத்தான் அதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும், பின்னர் தண்ணீரை அகற்றி வாழைப்பூவை மட்டும் எடுத்து வைத்தல் வேண்டும் இறாலையும் தோல் நீக்கி வைக்க வேண்டும் பின்னர் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அடுப்பை போட வேண்டும் பின் சிறிதி எண்ணை விட்டு சூடானதும் அதில் கடுகு சீரகத்தை போட வேண்டும் பின் சிறிதாக அர…

    • 8 replies
    • 4.7k views
  11. Started by Jamuna,

    தேவையான பொருள்கள்: மில்க்மெய்ட் - 3/4 டின் பால் - 1/2 லிட்டர் பால் க்ரீம் - 1 1/2 கப் வெனிலா எசன்ஸ் செய்முறை: பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்துக் கொள்ளவும். க்ரீமை லேசாக மிக்ஸியில் அடித்துக் கலந்து கொள்ளவும். க்ரீமுடன் மில்க்மெயிட், பால் மற்றும் சில சொட்டுகள் எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான அலுமினியம் டப்பா அல்லது வேறு உறைய வைக்கும் கண்டெய்னரில் கலவையை ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும். கலவை டப்பாவில் முக்கால் அளவு மட்டும் இருக்குமாறு கண்டெயினர் பெரிதாக இருக்கட்டும். பாதி உறைந்ததை எடுத்து மீண்டும் மிக்ஸியில் மிக மிக மென்மையாக ஆகும்வரை அடித்துக் கலக்கவும். மீண்டும் அதே கண்டெயினரில் ஊற்றி ப்ரீசரில் நன்கு உறைய வைத்து (4 மணி நேர…

    • 3 replies
    • 3.1k views
  12. மலாய் பேடா ---------------- வாழைப்பூ - 1 சின்ன வெங்காயம் -5 காய்ந்த மிளகாய் - 5 பூண்டு - 5 புளி - சிறிதளவு மஞ்சள் தூள், சீரகம், கரம் மசாலா, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: ------------- முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். பிறகு சிறிய பாத்திரத்தில் தனியாக புளியை போட்டு அதில் 1 டம்ளர் தண்ணீரில் கெட்டியாக கரைத்து வைக்கவும். மிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் புளி கரைத்த தண்ணீரில் வாழைப்பூ, நசுக்கிய வெங்காயம், அரைத்த விழுது, உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். இத…

    • 10 replies
    • 4.6k views
  13. Started by Jamuna,

    தேவையான பொருட்கள்:- பாதாம் பருப்பு - 250 கிராம் நெய் - 800 மி.லி. பால் - 200 மி.லி. சர்க்கரை - 500 கிராம் ஏலக்காய் - 4 செய்முறை:- பாதாம் பருப்பை நன்றாக ஊறவைக்கவும். அதை தோல் நீக்கி அரைக்கவும், அரைத்த விழுதை பாலில் கரைக்கவும். வாணலியில் திட்டமாக நீர்விட்டு, சர்க்கரைப் பாகு தயாரிக்கவும். அதனுடன் பாதாம் பருப்பு கலவையைக் கலந்து கை படாமல் கிளறவும். கிளறும் போதே நெய், கேசரிப் பௌடர், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்ளவும். அல்வா பதமாக வரும்போது இறக்கி விடவும். --------------------------------------------------------------------------------

    • 58 replies
    • 8.4k views
  14. Started by இனியவள்,

    கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் செய்முறை: கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைத்தபின் எலும்பில்லாத கோழிக்கறியை அடித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்…

    • 38 replies
    • 6.7k views
  15. தேவையான பொருட்கள்: ------------------------------- பச்சரிசி -1 கப் பால் -2 கப் மில்க்மெய்ட் - கால் கப் சர்க்கரை - கால் கப் தேங்காய் பால் பொடி -3 ஸ்பூன் முந்திரி பருப்பு - 5 உலர்ந்த திராட்சை - 5 ஏலக்காய் பொடி உப்பு நெய் செய்முறை: -------------- வாணலியில் நெய் போட்டு நறுக்கிய முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சையைப் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பச்சரிசியை தண்ணீர் விட்டு சிறிது ஊற விடவும். ஊற வைத்த பச்சரிசியை பாலில் போட்டு முக்கால் பதம் வேக விடவும். பின்னர் அத்துடன் சர்க்கரை, மில்க்மெய்ட், சிறிதளவு உப்பு, தேங்காய் பால் பொடி ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க விடவும். பின்னர் சிறிதளவு ஏலக்காய் பொடியை சேர்க்கவும்…

    • 3 replies
    • 2.1k views
  16. மலாய் பேடா ----------------- காளான் - 2 கப் தேங்காய் துருவல் - 1 கப் வெங்காயம் - 2 மிளகாய் - 5 மிளகு, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், மஞ்சள் தூள்,பூண்டு,கொத்துமல்லி - தேவையான அளவு. செய்முறை --------------- முதலில் காளானை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, வெந்நீரில் போட்டு நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது எண்ணெயில் இலவங்கம், பட்டை, தனியா, மிளகு, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும். தேங்காய் துருவலை தனியாக வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மசாலாக்களை நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும். இத்துடன் வேக வைத்த காளானை நன்றாக க…

    • 2 replies
    • 2.1k views
  17. தேவையான பொருட்கள் ------------------------------ முட்டை - 6 பெரிய கேரட் - 1 பொட்டுகடலைமாவு - அரை கப் தேங்காய் - 1 முடி பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 3 மிளகாய் - 6 இஞ்சி - சிறிதளவு சோம்பு - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கசகசா - 2 ஸ்பூன் பூண்டு - 8 சீரகம் - 2 ஸ்பூன் கொத்தமல்லி, கருவேப்பிலை செய்முறை: ---------------- முதலில் கேரட்டை நன்றாக துருவிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, தனியா, கசகசா, சோம்பு ஆகியவற்றை நன்றாக வதக்கி மை போல அரைத்துக் கொள்ளவும். பிறகு தேங்காய், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்து எடுத்து கொள்ளவும். பின்னர் முட்டையை நன்றாக கடைந்து அத்துடன் உப்பு, கேரட் துருவல், பொட்டு கடலை மாவு எடுத்து அத்துடன் அரைத்த மிளகாய…

    • 4 replies
    • 2.9k views
  18. தேவையான பொருட்கள்: ------------------------------- கோழி 1 கி பெரிய வெங்காயம் 6 மிளகாய் வற்றல் 7 தக்காளி 5 இஞ்சி, பூண்டு சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி கரம் மசாலா டால்டா அல்லது நெய் வினிகர் எலுமிச்சை சாறு வெள்ளரிக்காய் செய்முறை: ------------- முதலில் கோழியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகாய் வற்றல், இஞ்சி, பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்து கொள்ளவும். பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் இந்த விழுதை சேர்க்கவேண்டும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள் எலுமி்ச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும். இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேக வைக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறு…

    • 14 replies
    • 4.2k views
  19. INGREDIENTS * 1 1/2 pounds meaty frog legs * 1 cup milk * 1 eggs, lightly beaten, divded * 1 teaspoon garlic powder * 1/2 teaspoon onion powder * * 1 cup all-purpose flour * 1/4 cup fine dry bread crumbs * 2 tablespoons yellow cornmeal * 1/2 teaspoon baking powder * 2 teaspoons salt * 1 teaspoon fresh ground black pepper * 1 teaspoon cayenne pepper * 1 teaspoon paprika * 1/2 teaspoon dried oregano * 1/2 teaspoon ground thyme * 1/4 teaspoon cumin * 1 teaspoon dried parsley * * 1/2 cup olive oil * 3 tablespoons butter * * 1 small onion, diced * 5 large mushrooms, diced * 2 tablespoons all-purpose flour * 1 cup milk …

    • 3 replies
    • 2k views
  20. தேவையானப் பொருட்கள்: பச்சரிசி - ஒரு கப் பாசிப் பருப்பு - கால் கப் நெய் - 2 மேசைக்கரண்டி முந்திரிப்பருப்பு - 15 தூளாக்கிய வெல்லம் - ஒரு கப் ஏலக்காய் - 5 தேங்காய்ப்பால் - 1 கப் செய்முறை: வெறும் வாணலியில் பாசிப்பருப்பினை லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் - 5 கப் தண்­ர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்­ர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும். பருப்பு முக்கால் பதம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும். அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் தூள் செய்த வெல்லத்தினைப் போடவும். தீயை சற்று குறைத்து, வெல்லம் கரைந்து நன்கு சேரும் வரை கிளறி, பாதி நெய்யினை ஊற்றி மீண்டு…

    • 11 replies
    • 3.4k views
  21. தேவையானவை:- முழுக்கோதுமை மாவு - 1 கப். வேகவைத்த பச்சைப் பட்டாணி - 1 கப், நறுக்கிய பச்சை மிளகாய் - 1 தயிர் (கொழுப்பு நீக்கிய பாலில் தயாரித்த) - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:- வேகவைத்த பச்சைப் பட்டாணியை மிக்ஸ்யில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவில், அரைத்த பட்டாணி விழுது, உப்பு, தயிர், ஓமம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சிறிது தண்­ர் சேர்த்துப் பிசையவும். 5 உருண்டைகள் செய்து அவற்றை ரொட்டியாக இட்டு நான் - ஸ்டிக் தோசைக்கல்லில் மிதமான தீயில் இருபுறமும் வேகவிட்டு எடுத்து எண்ணெயைத் தடவவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு.

    • 10 replies
    • 3.2k views
  22. Started by Jamuna,

    பிரட் கட்லட் தேவையான பொருள்கள்:- சால்ட் பிரட் பெரிய சைஸ் - 6 உருளை கிழங்கு வேகவைத்து உதிர்த்தது - 3 கப் கேரட், பீட்ரூட் துருவியது - 2 கப் மஞ்சள் பொடி, காரட் பொடி, கரம் மசாலா, உப்பு - தேவையான அளவு தயிர் (புளிப்பில்லாதது) - 3 கப் சர்க்கரை - 2 டீஸ்பூன் கொத்துமல்லி பொடியாக நறுக்கியது - 1/2 கப் žரகப்பொடி - 1ஸ்பூன் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் செய்முறை:- முதலில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, žரகம் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பட்டாணி, கேரட், பீட்ரூட் துருவல் சேர்த்து மிதமான தீயில் வதக்கி சிறிது நேரம் மூடிவைக்கவும். பின்பு கரம் மசாலா, காரப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு இவைகளை சேர்த்து நன்றாக வதக…

    • 16 replies
    • 6.2k views
  23. Started by Jamuna,

    ஈழத்தில் மிக பிரபல்யமான காலை உணவு என்று இதை சொல்லலாமா? பெயர் கூட ஊருக்கு ஊர் மாறி இருக்கலாம்.. ஆரம்பத்தில் நான் இந்த பதார்த்தத்தை அப்பப்பா வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன். ஒரு தடவை வரணி சென்ற போது, பனாட்டுடன் சாப்பிடுவதை கண்டேன். சிலர் சுட்ட கருவாடுடனும் சாப்பிடுவார்களாம். அடுத்து ஊறுகாய், வற்றல் மிளகாயுடனும் சாப்பிடுவதுண்டு. இதை சமைப்பது மிக மிக இலகு. சோறு/சாதம் சமைக்க தெரிந்தவர்களுக்கு, இது ஒரு பெரிய விடயமே அல்ல. தேவையான பொருட்கள்: சிவப்புபச்சை அரிசி - 1 பேணி நீர் - 2 பேணி தேங்காய் பால் - 1 பேணி உப்பு - தேவையான அளவு செய்முறை: 1. அரிசியை கழுவி 2 பேணி நீரில் அவியவிடவும். 2. அரிசி அரைவாசி அவிந்ததும் பாலையும் உப்பையும் சேர்த்து நன்றாக காய…

    • 12 replies
    • 4.3k views
  24. முட்டை பொரியல் செய்வது எப்படி ? முட்டை - 2 அல்லது 1 சிறிய வெங்காயம் - 50 கிராம் நைசாக நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நைசாக நறுக்கியது சாம்பார் மசாலா - 1 டீஷ்பூன் உப்பு - தேவையான அளவு மேற்கண்டவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிண்டவும். வானலியில் எண்ணை சேர்த்து இந்த கலவையும் சேர்த்து கிளரிகொண்டே இருக்கவும். ஒரு அருமயான வாசம் வரும் அப்போது இறக்கி விடவும். எண்ணை கொஞ்சம் கூட சேர்த்தால் சுவையோ சுவைதான். :P

    • 11 replies
    • 5.3k views
  25. மரக்கறி ஜாம் தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 காரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி செய்முறை காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும். தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும். எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சீனி, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிட்டத்தட்ட அரை மணித்தியாலம் கிளறவும். குறிப்பு: இதை காற்று புகாத போத்தலிள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.