நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
634 topics in this forum
-
ஐரோப்பிய ஒன்றியம் (பெல்யியம்) நோக்கி மாபெரும் பேரணி. தமிழரவலம் 62வது ஆண்டாகவும் தொடர்கிறது. ஆனால் உலகமோ மௌனமாக ஒத்தூதியவாறு இருக்கிறது. சிறிலங்காவினது சுதந்திரதினம் தமிழினத்தின் துக்க தினமாகும் என்பதை தரணிக்கு உரைத்திட அணிதிரள்வோம். http://www.sankathi.com/uploads/images/news/2010/01/04/280110%20004.jpg நன்றி - சங்கதி இணையம்
-
- 0 replies
- 772 views
-
-
சுவாமி விவேகானந்தரின்... இலங்கை விஜயத்தின், 125 ஆவது ஆண்டு நிறைவு விழா... கொழும்பில்! சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் முக்கிய அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 196 views
-
-
கிளிநொச்சியை தளமாகக் கொண்ட வானொலி அறிமுக விழா! கிளிநொச்சியை தளமாக கொண்டு இயங்கும் இணையத்தள வானொலியின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த இணைய வானொலி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், பாடசாலை மாணவியர்களின் நடன நிகழ…
-
- 0 replies
- 402 views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு சித்திரம் வரைய வாய்ப்பு 15 Views தொற்றுநோய் கருப்பொருளில் ஓவியங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை வைத்திய சங்கம் பாடசாலை மாணவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாலர் பாடசாலை முதல் 10ஆம் தரம் வரையான மாணவர்கள் இதில் பங்கேற்க முடியுமென்பதோடு, ஒரு தரத்தில் உள்ள மாணவர்கள், ஒரு வயது பிரிவினராக கருதப்படுவார்கள்எனவும், வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சித்திர முறையின் மூலமும் படைப்புகளை சமர்ப்பிக்கலாம் எனவும், ஒரு மாணவருக்கு அதிகபட்சம் இரண்டு சித்திரங்களை சமர்ப்பிக்க முடியுடிமெனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. தமது படைப்பின் புகைப்படத்தை 070-3091419என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அல்லது …
-
- 0 replies
- 3.5k views
-
-
மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – ஆய்வரங்கம் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு தமிழர் ஆய்வு மையம் அறிவுசார் தளத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் ஆளுமைகளிடம் புவிசார் ரீதியில் தமிழ்தேசிய கருத்துருவாக்க ஆய்வரங்கம் ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக “மாறிவரும் புவிசார் அரசலில் ஈழத்தமிழர்களின் எதிர்காலம்” என்பது தொடர்பான ஆய்வரங்கம் நார்வே முன்னாள் வெளியுத்துறை அமைச்சர் எரிக் சொல்ஹைம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன், இந்திய அரசியல் ஆய்வாளர் அய்யாநாதன் மற்றும் முனைவர் கிருக்ஷ்ணா முத்துகுமரப்பன் ஆகியோரின் கருத்துரைகளுடன் இடம்பெறவுள்ளது. நாள்: 26 செப்டம்பர் 2020 நேர…
-
- 0 replies
- 401 views
-
-
சபரிமலை கோவிலில் உதயாஸ்தமன பூஜைக்காக முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்தது - தேவஸ்தானம் தகவல் மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 15-ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினமும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுப்பப்பட்டு வருகிறார்கள். இதுபோக பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலையில் பூஜை வழிபாடு கட்டணம் தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:- …
-
- 0 replies
- 472 views
-
-
“கருத்துக்களால் களமாடுவோம் “ January 8, 2019 தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும். தமிழ் தலைமைகளின் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் “கருத்துக்களால் களமாடுவோம் ” எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் , தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராஜா , யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார் , யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்…
-
- 0 replies
- 629 views
-
-
நாளை டென்மார்க்கில் தியாகி முத்துக்குமார் ஞாபகார்த்த கரபந்தாட்டம் ஓகூஷ் எக்ஷ்பிரஷ் விளையாட்டுக்கழகம், வருகின்ற 19.11.2011 அன்று தியாகி முத்துக்குமார் அவர்கள் ஞாபகார்த்த கரபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தவுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவித்தல் வருமாறு
-
- 0 replies
- 993 views
-
-
உலக முட்டாள்கள் தினம் – எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா? சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். இந்த நாள் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா? கி.பி. 16-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்திலுள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ம் திகதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் நாட்காட்டியில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. 1582-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் திகதி புதிய காலண்டரை 13-ம் கிரிகோரி என்ற திருத்தந்…
-
- 0 replies
- 968 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக பிரித்தானிய பாராளுமன்றில் நீண்டகாலமாக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவரும், ஈழத்தமிழர்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாது கலந்துகொள்பவருமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. விரேந்திர சர்மா எம்.பி. அவர்களின் சகோதரனின் இழப்பை முன்னிட்டு அவரின் ஆத்ம சாந்தி வேண்டி நாளை (15-12-13) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள ஈலிங் அம்மன் ஆலத்தில் மதியம் 12:00 மணிக்கு சிறப்புப் பூஜை நடைபெறவுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழில் கலந்து கொண்டு இயற்கை எய்திய அமரர் திரு. சுரிந்தர் சர்மா அவர்களின் ஆத்மசாந்திக்கு பிரார்த்திக்கும் அதே வேளை ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பது மட…
-
- 0 replies
- 723 views
-
-
தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு 34 Views இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான ஒன்பதாவது சொற்பொழிவு எதிர்வரும் 27.03.2021 (நாளை) சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஒன்பதாவது சொற்பொழிவில், முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள், ‘அரசன்’ என்னும் தமிழ்ச் சொல், கீழை இந்தோ ஐரோப்பியச் சமற்கிருதத்தில் raja-raj என்றும் மேலை இந்தோ ஐரோப்பியத்தில் rej-roy-royal என்றும் திரிந்து பரவியிருப்பதை விளக்குகிறார். சொல்லாய்வில் பங்கேற்க மற்றும் கூடுதல் தகவலுக்கு கீழ் உள்ள சமூக ஊடக தளங்களில் இணையலாம். FaceBook: facebook.com/NostraticTamil Twitter: twitter.com/NostraticTamil …
-
- 0 replies
- 766 views
-
-
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் சிறப்பாய் நடந்த இயல் விருது விழா! டொராண்டோவில் 2017, ஜூன்18-ம் தேதி தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17-வது இயல் விருது விழா ஸ்காபரோ விருந்து மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த வருட தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, கவிஞர் சுகுமாரனுக்கு வழங்கப்பட்டது. கடந்த 40 ஆண்டுகளுக்குமேலாக கவிதை, புனைவு, கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் எனப் பல துறைகளில் தொடர்ந்து சேவை செய்வதுதான் இவரின் சாதனை. சுந்தர ராமசாமி நினைவாக நிறுவப்பட்ட `காலச்சுவடு அறக்கட்டளை கணிமை விருது’ த.சீனிவாசனுக்கு அளிக்கப்பட்டது. புனைவு இலக்கியப் பிரிவில் `ஆதிரை’ நாவலுக்காக சயந்தனுக்கும், புனைவு இலக்கியப் பிரிவில் `ஓநாயும் ஆட்டுக்…
-
- 0 replies
- 376 views
-
-
ட்ரம்ப் தீபாவளி வாழ்த்து – வெள்ளை மாளிகையிலும் தீபாவளிக் கொண்டாட்டம் தீபாவளி பண்டிகை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகெல்லாம் பரந்து வாழும் இந்துக்கள் மத்தியில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலகத்தலைவர் பலரும் தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தனது தீபாவளி வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது, நமது நாட்டின் மிக முக்கிய கொள்கையான மத சுதந்திரத்தை நினைவுபடுத்துவதாகும்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், ‘நமது அரசியல் சாசனத்தில் கூறி உள்ள உரிமைகளை எனது நிர்வாகம் பாதுகாக்கும். இதன்மூலம் எல்லா மத நம்பிக்க…
-
- 0 replies
- 668 views
-
-
நினைவெழுச்சி நாள் - கேணல் கிட்டு Oslo
-
- 0 replies
- 684 views
-
-
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018 அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 15.12.2018 சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு முன்னிலையில் இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ து.கு.ஜெதீஸ்வரக்குருக்கள் ,…
-
- 0 replies
- 650 views
-
-
-
- 0 replies
- 651 views
-
-
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா மன்னார் மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று (2) சனிக்கிழமை காலை இடம்பெற்றது. மடுத் திருத்தலத்தின் திருவிழா கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நவ நாள் ஆராதனைகளை தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் மற்றும் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு, பக்தர்களுக்கு திருச்சொரூப ஆசியும் வழங்கப்ப…
-
- 0 replies
- 183 views
-
-
சென்னையில் நடைபெறும் ‘மார்கழியில் மக்கள் இசை ‘ நிகழ்வில் ஒலித்த ஈழத் தமிழரின் உரிமைக்கான குரல் கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக இயக்குனர் பா.இரஞ்சித் அவர்களின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் கடந்த 24-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இந் நிகழ்வு பல அரங்குகளில் நடைபெற்று வருகின்றது. தொடர்ந்…
-
- 0 replies
- 581 views
-
-
-
- 0 replies
- 645 views
-
-
"கார்த்திகை தீபம்" இன்று கார்த்திகை தீபம், 2023. மிளிரன் ஒரு இளம் பொறியியலாளர். தன் பணியை முடித்துவிட்டு, தான் தங்கி இருக்கும் ஊழியர்கள் குடியிருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டு இருந்தான். அவனது எண்ணம் எல்லாம் தன் அம்மா, அப்பா, மூத்த அக்கா, அண்ணா மட்டுமே! "கார்த்திகை தீபம் எங்கும் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லட்டும்! காரிருள் ஆக்கிய எமது வாழ்வு விழிப்பு பெற்று தீபமாய் ஒளிரட்டும்!!" அன்று கார்த்திகை மாதம் 2008, மிளிரன் பத்து அகவை, தன் பெற்றோர் மற்றும் மூத்த சகோதரர்களுடன், குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் பதுங்கு குழிக்குள் பாதுகாப்பு…
-
- 0 replies
- 139 views
-
-
பெரிய வெள்ளி இன்று – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு! உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. கிறிஸ்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படும் இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருகின்ற இந்தவிழாவின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதற்கமைய, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavanne…
-
- 0 replies
- 209 views
-
-
ஜேர்மனி - அக்டோபர் 4ம் 5ம் திகதிகளில் 12வது உலகத்தமிழ் மகாநாடு
-
- 0 replies
- 555 views
-
-
யேர்மனியின் டோர்ட்முன்ட்நகரில் தமிழர் விளையாட்டு விழா - 2013, கடந்த 20.07.2013 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. காலை 08:15 மணியளவில் ஈகைத்தீபம் பரமேஸ்வரி அவர்களின் கணவரும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளருமாகிய திரு.கந்தராசா அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைக்க, தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மெய்வல்லுனர் போட்டிகள், சிறுவர்களுக்கான போட்டிகள், துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, போன்ற விறுவிறுப்பான விளையாட்டுக்களும், முட்டி உடைத்தல், சங்கீதக்கதிரை போன்ற சுவாரசிய விளையாட்டுக்களும் நடைபெ…
-
- 0 replies
- 723 views
-
-
நூல்களை ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் – நீங்களும் இணையலாம்! November 9, 202000 SHARE0 கிளிநொச்சி பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பின் கல்வி துறையினரால் மருவிப்போகும் வாசிப்பு திறனை மீள் செயற்படுத்தவும், ஆங்காங்கே காணப்படும் புத்தகங்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய பாசப்பறவைகள் இளைஞர் அமைப்பினரின் இவ் முயற்சியில் இணைந்து கொள்ள விரும்புவோர் ஆவணப்படுத்தப்பட தேவையான தங்களிடம் உள்ள கதைப் புத்தகங்கள், பாடவிதானப் புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், ஆவணப் புத்தகங்கள், வரலாற்று சான்றுப் புத்தகங்கள் மற்றும் ஆண்டு வெளியீடுகள் போன்ற சிறந்த படைப்புக்களை ஆவணப்படுத்தி அடுத்த தலைமுறைக்கு வழங்க முன்வருமாறு க…
-
- 0 replies
- 457 views
-
-
கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி 13–ந் தேதி நடக்கிறது. குருத்தோலை திருநாள் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பெருவிழா உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் 20–ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக 13–ந் தேதி குருத்தோலை திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு இறப்பதற்கு சிலநாட்களுக்கு முன் ஜெருசலேம் நகரின் வீதிகள் வழியாக அவரை ஒரு கழுதை குட்டியின் மேல் அமர்த்தி ஊர்வலமாக உற்சாகமாக அழைத்து சென்றனர். அப்போது வழிநெடுகிலும் நின்ற மக்கள் ஒலிவ மரக்கிளைகளை கைகளில் பிடித்தபடி, தாவீதின் மகனுக்கு ஓசன்னா, உன்னதத்தில் ஓசன்னா என்று பாடி ஆர்ப்பரித்தனர். பவனி இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் 13–ந் தேதி குருத்தோலை திருநாளாக கொண…
-
- 0 replies
- 649 views
-