கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
அஞ்சாமால் தனி வழியே ............ காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடி விட்டது .பிரபாலினி தன் ஆறு பையனுடன் பேரூந்துக்காக காத்திருந்தாள் ...நினைவலைகள் தாயகம் நோக்கி .........அந்த நாள் ஞாபகம் .ராணுவ கேடு பிடிகள் காரணமாக மோகன் அண்ணா ஒழுங்கு செய்த ஜேர்மனிய பயணம் .கட்டு நாயக்காவில் தொடங்கியது . முதலாவது சோதனை க்காலம் ,கெடு பிடியான் கேள்விகளுக்கு பின் boarding பாஸ் (நுழைவு அனுமதி ) பெற்று விமானம் ஏறினாள் பிரபா . முதலாவதாக சிங்க பூர் எனும் தரிப்பு . இவளை போலவே அங்கும் ஏழு பேர் வரை இருந்தார்கள் . முதலில் ஒரு பகுதி அண்ணாவும் அண்ணியும் மைத்துனியும் என்ற நாடகத்தில் , மலசியா போய் திரும்பி வந்தனர் . அடுத்தது இவளது முறை . இவளை மனைவி என்ற புத்தகத்தில் கூடி சென்றான் கணவன் (ஏஜன்ச…
-
- 7 replies
- 2.1k views
-
-
குளிர்வாடை சிறுகதை ஒலிவடிவில்.பழைய பறணிலிருந்து மீண்டும் பதிவாகிறது.நீங்களும் கேட்டுப்பாக்கலாம்.
-
- 3 replies
- 1.1k views
-
-
சொல்லியழுதிட்டன். - சாந்தி ரமேஸ் வவுனியன் - சிலநேரம் செத்துப்போக வேணுமெண்டு கூட நினைக்கிறனான்...ஆனால் பிள்ளையளையும் வீட்டுக்காறரையும் நினைச்சுப்போட்டு விட்டிடுவன்...அடிச்சாக்கூடப் பறவாயில்ல அவனென்னை அடிச்சதைவிட வாயாலை காயப்படுத்தின காயங்கள்தான் அதிகம்....சற்று மூச்சை உள்ளிழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள். ஏனப்ப அவனோடை இருக்கிறியள் ? பிடிக்காட்டி விட வேண்டியதுதானே ? இது நான். அதுவும் ஏலாமலிருக்கு....என்னை வெளிநாட்டுக்கு கூப்பிட்டுவிட்டவன் என்ரை குடும்பத்துக்கு காசனுப்ப விட்டவன் இப்பிடி சிலதுகள் அவனை விட்டிட்டுப்போகவோ இல்லாட்டி போடாவெண்டு தூக்கியெறியவோ முடியேல்ல... சொல்லிக் கொண்டு அழுதாள்;. ஊரிலை நானும் அவனும் ஓரே ஊர். …
-
- 28 replies
- 4.3k views
-
-
'இஞ்சரப்பா இவ போன்வீட்டக்கா குரல் போல கிடக்கு. என்னென்டு ஒருக்கா போய் பாருங்கோவன்' பக்கத்தில் நித்திரையிலிருந்த கணவனை எழுப்பினார் லதா. லதாவிற்கு பக்கத்து வீட்டு அக்காவின் மேல் எப்போதுமே தனி அன்பு. லதாவிற்கு தென்மராட்சியில் பிறந்த வீடு, வாழ வந்ததோ வடமராட்சியில். வந்த புதிதில் தங்கை போல அனைத்து கொண்டவர் தான் இந்த போன் வீட்டு அக்கா. வசதியில் எந்தவொரு குறையும் இல்லாத குடும்பம். ஊரிலேயே முதன் முதலில் தொலைபேசி வைத்திருந்தவர்கள் என்பதால் 'போன்வீட்டுக்காரர்' ஆகிப்போன குடும்பம். 'இவன் ராஜாவையும் எழுப்பணை. ராத்திரில வந்து கூப்பிடுறா என்ன பிரச்சனையோ' என மகனையும் எழுப்ப சொன்னபடி படி படுக்கையில் இருந்து எழும்பி வாசலுக்கு வந்தார் லதாவின் கணவர் திருநாவுக்கரசு. 'என்னக்கா …
-
- 7 replies
- 2k views
-
-
நேற்றைய தினம் தமிழ்ச்செல்வன் மாமாவை நாம் இழந்த நாள். எதற்கெல்லாமோ பதிவு எழுதுகின்றோம், அவரை நினைத்து ஒரு பதிவு போடாமல் இருக்கலாமா? என கடந்த சில வாரங்களாகவே நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் நடந்ததோ வேறாகிற்று! நேற்று பதிவும் எழுதவில்லை. கணணியை தொடவும் இல்லை. நவம்பர் 1, நான் பேசுவதும் நடப்பதுமே சாதாரண காரியமாக இருப்பதில்லை. அதற்கு காரணம் என்று ஒன்று இருக்கத்தான் செய்கின்றது. இது நடந்து இன்றிலிருந்து 13 வருடங்கள் இருக்கும். அன்றைய வருடமும், வழமை போல் வருடத்தின் இறுதியில் அப்பாவும், நானும் தாயகத்தை நோக்கி செல்கின்றோம். இந்த முறை பயணத்திற்கான காரணம் என் அப்பாச்சிக்கு நடக்கவிருந்த சத்திரசிகிச்சை. கண்ணில் சிறு கோளாறு, எம்மிடத்தில் தான் மருத்துவத்திற்கு தேவையானவை இருப்பதில்லை…
-
- 7 replies
- 1.7k views
-
-
கடந்த சில நாட்களாக வசந்தனின் மனம் அமைதியின்றி தவித்தது. எப்படியாவது தனது மனதில் தோன்றிய எண்ணங்களை யமுனாவுடன் பகிர்ந்துவிட வேண்டும் என அவன் மனம் அடிக்கடி சொல்லியது. இருந்தாலும் அவனது சிறு ஈகோ அதை தடுக்கவும் செய்தது. ஆனாலும், இதை இப்படியே மனதில் பூட்டி வைத்திருக்க முடியாது என உணர்ந்து கொண்ட அவன், எப்படியாவது அவளுடனும், அவனது நண்பர்களிடமும் இது பற்றிக் கதைப்பது என்று முடிவு செய்தான். சரி, அவனது பிரச்சினை தான் என்ன? ********* உயர்தரம் படிக்கும்போதே வசந்தனுக்கும், யமுனாவுக்கும் ஒருவரை ஒருவர் தெரிந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு முன்னணிப் பாடசாலையில் தான் இருவரும் படித்தனர். அவன் கணித பிரிவு. வசந்தன் கெட்டிக்காரன். மிக அமைதியானவன். ஆனாலும் இயல்பாகவே உதவி செய்யும…
-
- 19 replies
- 3k views
-
-
- --- ----------- XXXXX --------------- - --- ----------- XXXXX ---------------
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்த அப்பன் மவனே சிங்கன்டா என்ற பதிவு தொடங்கி இரண்டு வருடங்கள் நிறைவாகி விட்டது என்பதை பதிவுலக நண்பர்களுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்..அத்துடன் இன்னொரு மகிழ்ச்சி இப்ப இந்த பதிவு ஒரு லட்சம் ஹிட்டுகளை தாண்டி விட்டது என்பது இந்த ஹிட்டை வைத்து என்ன செய்யலாம் என்கிறீங்க? ஒன்னுமே செய்ய இயாலாது தானே ...எனது சக பதிவனா ஊர் உளவாரத்தில் இருக்கும் பதிவுகளை குரல் பதிவாக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ...ஆனால் காலம் நேரம் வரவில்லை.. இப்ப அந்த ஊர் உளவரா பதிவில் ஒன்றான அந்த மழை நாள் என்ற பதிவை குரல் பதிவாக்கி சிறப்பு பதிவாக தந்திருக்கிறேன் ....கேட்டு பாருங்களேன்.... http://sinnakuddy1.blogspot.com/2008/10/blog-post_28.html
-
- 14 replies
- 2.2k views
-
-
ஒன்றே ஒன்று ........தாங்கோவன் அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். .வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் . என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது . ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளந…
-
- 8 replies
- 1.8k views
-
-
உனைத்தேடி நான் வருவேன்.... சிறு கதை..... பல வருடங்களின் பின் அவன் தாய் நாட்டிற்கு போயிருந்த படியால் அவன் லண்டன் வந்த பின்னர் ஆவணி மாதம் 2003 இல் யுத்த நிறுத்தக் காலத்தில் லண்டனிலிருந்து இலங்கை சென்று பின்னர் யாழ்ப்பாணம், பின்னர் நல்லூர் என்று சென்றடைந்தான் சந்திரன். நல்லூர் திருவிழா எல்லாம் அவனின் குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் கழித்துவிட்டு மீண்டும் திரும்புவதற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் தான் சிறுவயதில் பார்த்த வல்லிபுரக் கோவிலை பார்க்க ஆசைப்பட அவனின் அக்காவின் மச்சானும்( அக்காவின் புருசன்) வான் ஒன்றை ஒழுங்கு செய்து ஒரு சனிக்கிழமை எல்லோரும் புறப்படத் தயாராயினர். சிறுவயதில் தந்தையை இழந்த சந்திரன் தன்னுடன் சேர்த்து பொறுப்பில்லாத மூத்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்னும் அலறல் சத்தம் ஓய்ந்த பாடில்லை .அலறுவது ஆணா ..பெண்ணா என்று ஊகிக்க முடியாத வாறு தான் அந்த ஒலி முறிந்து ஒடுங்கி தான் அவன் காது களில் வந்து அடைந்து கொண்டிருந்தது . ...இந்த சுவரை தாண்டி பக்கத்து அறையில் வருவது போல் இருந்தாலும்.. காதில் பஞ்சு அடைத்து விட்ட மாதிரி இருப்பதால் தெளிவில்லாமல் இருந்தது ..அவனையும் வேறு நேற்றிலிருந்து இந்த. அறையில் தான் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ..ஒரு கேள்விக்கு ஒரு பதில் சொல்லாமலே ,தெரியாமால் இருக்கும் போது கேள்விக்கு மேல் பல கேள்விகள் அடுக்கி கொண்டு பல பேர் முன்னால் இருந்து கொண்டு. ஒருவன் முடிக்க முன் மற்றவன் தொடங்கி என்று ஏதோ எதுவெதொவோ நேற்று இரவு முழுவதும் கேட்டு கொண்டிருந்தார்கள். தெரியாது என்ற வார்த்தையை அவன் திரும்ப த…
-
- 14 replies
- 2.1k views
-
-
அன்று: மச்சி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக்கின் இப்போதைய மதிப்பு தெரியுமா? ங்... ஒன்று ஆயிரம் ரூபாய்... வாவ்... எப்படிடா உட்கார்ந்த இடத்தில் இருந்தே இப்படி சம்பாதித்தே? இன்று: மச்சி என்ன சோகமா இருக்கெ? ம்... ஆயிரம் ரூபாய்க்கு வாங்கின ஸ்டாகின் விலை இப்போ என்ன தெறியுமா? என்னடா.... வெறும் ஒரு ரூபாய்! எல்லாம் இந்த "லேமேன் பிரதர்ஸ்" உடைந்ததால் வந்த வினை. ங்... ஓக்கே, எப்படி நூறு ரூபாய்க்கு வாங்கின ஸ்டாக் ஆயிரம் ரூபாவாகி, ஒரே இரவில் ஒரு ரூபாய்க்கு வந்தது? யார் அவ்வளவு கோடான கோடி ரூபாய்களால் லாபம் அடைந்தது? உங்களுக்கும் இதுபோன்ற கேள்விகள் எழுந்திருந்தால், தெளிவுபெற இந்த "குரங்கு வியபாரி" கதையைப் படிக்கவும். * * * ஒரு …
-
- 0 replies
- 756 views
-
-
படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ............... என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது . நம் பயணம் . . கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் . சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால…
-
- 15 replies
- 3.1k views
-
-
பருவத்தே செய்யும் பயிர் .............. அன்று ஞாயிறுமாலை ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவ அடகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை இ எல்லாம் பணமாகி ,அவன் லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை கொஞ்சம் தணித்து .மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் . சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்…
-
- 8 replies
- 1.8k views
-
-
யாரோ புண்ணியவான் ஆரம்பித்து வைத்த இந்த சினிமாவை பற்றிய தொடர் விளையாட்டு பதிவுக்கு கானபிரபா என்னையும் போடும் படி அழைத்திருந்தார். இதனால் இந்த கேள்விகள எல்லாத்துக்கும் பதில் அளிப்பதால் நம்மளுக்கும் இதனால் ஒரு விஜபி அந்தஸ்து கிடைத்த சந்தோசம் .மற்றும் படி நம்மளை யாரு தான் பேட்டி காணப்போறாங்கள் ? நாம யாருக்கு தான் பதில் சொல்லப்போறோம்? அதை விடுங்க .....இப்ப..இவையளுடைய கேள்வியளுக்கு வருவம் அவற்றுக்கு பதிலையும் கொடுக்க முனைவம் 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள் முதலில் சினிமா பார்க்க தொடங்கினது எட்டு வயதுக்குள்ளை தான் அதுவும பெற்றோருடன் போனது.. http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-p…
-
- 19 replies
- 2.7k views
-
-
ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை) "என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல" ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது. ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள். இத்…
-
- 2 replies
- 1.2k views
-
-
எனக்கு வேண்டும் விடுதலை............... சிறுகதை..... ''இதுக்கு தான் சொன்னனான் இங்கே நான் வரமாட்டேன் என்று இங்கே வந்து இவ்வளவு கஸ்ரப்பட்டும், பயந்து கொண்டும் இருக்கிறத்துக்கு நாங்கள் அங்கேயே இருந்திருக்கலாம்......! இங்க இருந்து ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைக்கிறத்துக்கு அங்க இருந்து ஒரு நாளில செத்துப்போனாலும் பரவாயில்ல.....'' என்ற படி தாய் தகப்பனைக் கோவித்தபடி உள்ளே இருந்து வெளியே கோபத்துடன் வந்தான் சுரேஸ். '' தம்பி கொஞ்சம் நில்லு... ஏன் கோவிக்கிறாய்..உயிருக்குப் பயந்து தானே இங்கே வந்தனாங்கள் அதுவும் உன்னை அங்க வச்சிருந்தா நீ ஏதும் தப்பா முடிவெடுத்திடுவியோ....! எண்டு பயந்துதானே அப்பா இங்க வர முடிவெடுத்தவர். உனக்குத் தெரியும் உன்ர தங்கச்சியும் போன…
-
- 4 replies
- 1.4k views
-
-
திருந்தி விட்டான் ஓர் தமிழன்...... சிறு கதை.... கிருபாவும், ஜீவனுமாக அவசர அவசரமாக வெளிக்கிட்டுக் கொண்டிருக்க தொலைக்காட்ச்சியில் 6 மணி செய்தி தொடங்கும் சத்தம் கேட்க கிருபா... '' ஜீவன் நேரமாச்சு பொம்பிள்ளைபோல வெளிக்கிடாம கெதியென்று வெளிக்கிடடா..'' என்று கிருபா அவனை அவசரப்படுத்தினான். '' மச்சான் தெரியும் தானே... நீ ஏன் அவசரப் படுகிறாய் எண்டு...அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுப் போடு பெட்டையளோடையும் சேட்டைவிட்டுட்டு... வந்து பிரண்டு கிடக்கிறத்துக்குத் தானே..'' என்றான் ஜீவன் சிரித்தபடி. '' தெரிஞ்சாய் சரி..அனுபவிக்கத்தானே போறது வேற என்னத்துக்கு மச்சான் போறது சரி..சரி இறங்கு மச்சான்...'' என்று சொல்லியவண்ணம் கிருபா காரை நோக்கி நடக்க ஜீவனும் அவனைத் தொடர்…
-
- 6 replies
- 1.9k views
-
-
தேவதை..தேவன்....பிசாசு நிழலாடும் நினைவுகள். சாத்திரி ஒரு பேப்பர் நீங்கள் யாராவது தேவதையைப் பார்த்திருக்கிறீர்களா?? நான் பார்த்திருக்கிறேன்.பழகியிரு
-
- 13 replies
- 2.6k views
-
-
அழகான மாடி கட்டிடம் அதை சூழ மாமரங்கள்,தென்னை மரங்கள் என்று ஒரே சோலை வனம் தான்.ரோஜா மலர்,அலரி மலர்கள் செவ்வரத்தம் மலர்கள் பல வித வண்ணங்களிள் பூத்து குலுங்கும் இதற்கு சொந்தகாரர் ஒரு வெள்ளைகார சாமியார் அவருடன் ஆங்கிலம் தெரிந்த ஜயரும் வசித்து வந்தார்கள். சுரேஷின் தந்தை அந்த ஊரில் வேலை மாற்றலாகி வந்தவுடன் அந்த மாடி வீட்டிற்கு அருகாமையில் வீடு வாடகைக்கு எடுத்து கொண்டார்.சுரேஷ் சிறு பையன் அப்பொழுது.வீட்டிற்கு குடிபெயர்ந்த அடுத்த நாள் மாடிவீட்டில் ஒரே மக்கள் கூட்டம் அலை மோதுவதை கண்டவனுக்கு அங்கு செல்ல வேண்டும் போல தோன்றவே பெற்றோருடன் அனுமதி பெற்று கூட்டத்துடன் கூட்டமா சென்றான்.வெளியே மதிய உணவிற்காக ஏழைகள் காத்து கொண்டிருந்தார்கள் உள்ளே உயர் குடி மக்கள் உணவருந்தி கொண்டிருந்தா…
-
- 14 replies
- 2.8k views
-
-
யாழ் இணைய நண்பர்களையும் உங்க்ளுக்கு பிடித்த ஆறு ப்ற்றி கூறி.. இந்த விளையாட்டை இங்கையும் தொடரும் படி இந்த சின்னக்குட்டி அன்புடன் கேட்டு கொள்ளுகி்றான் http://sinnakuddy.blogspot.com/2008/10/blog-post.html
-
- 16 replies
- 2.1k views
-
-
வசந்த கால கோலங்கள் ............. அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . ,காலை பொழுதினிலே ,பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறை வழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் .அதிபர் விடைபெறுவார் .உயர்வகுப்பில் தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும் ,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது . மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அ…
-
- 3 replies
- 1.9k views
-
-
இரண்டு "மணி" கெலிகள் வானில் உயர இருந்து தாழப் பறக்க இறங்குவதைக் கண்டிட்டு கண்ணன் கத்தினான். கெலி வருகுது... வாங்கோ போய் பார்ப்பம். வழமையா கெலி என்றாலே கிலி தான். அமெரிக்க தாயாரிப்பில வந்த "பெல்" கெலிகளில சிங்களப் படை வந்து இரவு பகல் என்றில்லாம வட்டமடிச்சு வட்டமடிச்சு சுடுவது தான் எங்களுக்குப் பரீட்சயம். அது பொறுக்கிப் போடும் வெற்று ஐம்பது கலிபர் கோதுகளை பொறுக்க, அது எங்க கொட்டுண்ணுது என்று பார்க்க வாயைப் பிளந்து கொண்டு அண்ணாந்து திரியிறது தான் அப்ப திரில். ஆனால் இப்ப கொஞ்சக் காலமாக யாழ்ப்பாண வான் வெளியில் புகையடிச்சுக் கொண்டு பறக்கும் அன்ரனோக்களும், தாழப் பறந்து திரியும் எம் ஐ 8 கெலிகளும், கிலுக்கிக் கொண்டு வரும் இந்திய ஜவான்களின் "மணி" கெலிகளும்.. எங்களுக்கு கொ…
-
- 12 replies
- 2.2k views
-
-
என்றும் உன் அன்புக்காய்.... சிறு கதை.... படுக்கையில் இருந்து விழித்த பார்வதிக்கு இன்றும் பொழுது வழமைபோல் விடிந்தது. ஜன்னல் திரையை திறக்க வெளியே ஒரே பனிமூட்டமாய் தெரிய அந்தப் பனிப்புகாரில் தெரு விளக்குகள் மங்கலாகத்தெரிந்து கொண்டிருந்தது. ஆனால் அவளின் அறையோ யாழ்ப்பாண வெய்யில் போல் தக தகவென கொதித்துக்கொண்டிருந்தது. யாழ்ப்பாண ஞாபகம் வரவே, இரண்டாம் கட்ட ஈழப்போரில் சிக்கி கணவரை இழந்த பின் தனது மூத்த மகள் மாலதியையும் கடைக்குட்டி கணேசையும் தூக்கிக்கொண்டு விமானக் குண்டுவீச்சுக்கும் செல் அடிக்குமாக பயந்து இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து குண்டுவீச்சில் தானும் தன் மகனுமாய் காயமும் பட்டதை நினைத்துக்கொண்டாள். தன் காயத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் மகன் கணேஸ் காயம் பட்டு…
-
- 9 replies
- 2k views
-