Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. இது கதையா? அல்லது கடிதமா என்பதற்கு அப்பால், பேசப்படும் பொருள், தற்போதைய ஈழத்து நிகழ்வுகள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தும் உணர்வோட்டாங்கள் என்பவற்றை திறம்பட எழுத்தில் வடித்திருப்பதாக நான் கருதுகிறேன். ஈழத்தில் ஏற்படும் போரியல் மாற்றங்கள் ஏன் ஒருவரை மனதளவில் துவண்டுவிடச்செய்கிறன, ஏன் அதீத மகிழ்ச்சியில் திழைக்கச்செய்கிறன என்பதை தமிழ்நதி சொல்லியிருக்கிறார். அன்பு நித்திலா, நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன். “இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகி…

    • 6 replies
    • 1.7k views
  2. முதலே சொல்லிடுறன்.இது கதைக்குள்ள வருமா தெரியேல்ல.வேற ஒரு பகுதியும் சரியாப்படேல்ல அதான் கதை என்ற பகுதில போடுறன். ஆம்பரலங்காயும் அணிஞ்சில் பழமும் மலைநாடான் பாலைப்பழத்தைப் பற்றி எழுதினாரா நான் அதைப்போய் வாசிச்சனா இப்ப எனக்கும் நான் ரசிச்சு ருசிச்சு சண்டைபிடிச்சு பிச்சுப் பிடுங்கி சாப்பிட்ட பழம் காய் பற்றியெல்லாம் எழுதவேணும் போல இருந்திச்சா அதான் எழுதினா என்ன குறைஞ்சிடுவன் என்று எழுத வெளிக்கிட்டிட்டன். பாலர் வகுப்புப் படிச்ச காலத்தில இருந்தே பள்ளிக்கூடம் போற வழியில ரியூசன் போற வழியில இப்பிடி எப்பெல்லாம் நண்பர்களோட சேர்ந்து வீட்டை விட்டுப் போறனோ அப்பெல்லாம் ஆற்றயும் வீட்டுக்காணியிலோ அல்லது தோட்டத்துக்காணியிலோ கைவைக்காமல் வீடு திரும்பினதா ஞாபகம் இல்லை. என…

    • 8 replies
    • 2.3k views
  3. நட்புத் தேவதையே... "நித்யா... நீங்க கண்டிப்பாய் போய்தான் ஆகமணுமா...?" "ஆமா சந்துரு...வேற வழி இல்லை. என்னோட சூழ்நிலை அந்தமாதிரி" நிதானமாய் ஏறெடுத்து நோக்கினான் சந்துரு. "சந்துரு...அப்பாவுக்கு நிறைய கடன் சுமை. தம்பி, தங்கையோட படிப்புச் செலவு. இப்படி நிறைய...அதனால நான் போய்தான் ஆகணும்." நித்யா...என்னோடு வேலை செய்யும் அன்புத் தோழி. அறிவு, அழகு, திறமை, தைரியம் அனைத்திற்க்கும் சொந்தக்காரி. எல்லாம் இருந்தும் அடக்கத்தை மட்டும் ஆட்சி செய்யும் இளவரசி. என்னை போன்ற ஒருவனுக்கு கிடைத்த அபூர்வ தோழி. உண்மைதான். நித்யாவைப் பற்றி எதைச் சொல்வது!! என் கவிதை எழுத்துக்களை அதிகம் நேசிப்பதை சொல்வதா..? இல்லை என் மன வருத்தத்திற்கு நம்பிக்கை வார்த்தைகளை மருந்தாய் கொ…

  4. ஓசியில் வளர்த்த ஒழுங்கற்ற உடம்போடை சைக்கிள் விட்டு இறங்க மனம் இல்லாமால் சீற்றில் இருந்தபடியே மற்ற காலை நிலத்தில் ஊன்றின படி பக்கத்து வீட்டு மணியத்தாரோடை தனகு பட்டு கொண்டிருந்தார். மணியத்தாரும் கூனி குறுகி ஏதோ சொல்லி கொண்டிருக்க.. அதையும் மீறி அதட்டும் குரல் மாதிரி ஒலிக்க.. அக்கம் பக்கம் வீடுகளிலிருந்து சனங்கள் வேலிக்கு மேலாலும் வேலி இடுக்குக்காலும் அரை குறை உருவங்களோடு எட்டிப்பார்த்து கொண்டிருந்தன. இந்த போகம் முடிய உன்ரை கணக்கை முடிக்கிறன் என்று தவணை தவணையாய் சொல்லி http://sinnakuddy.blogspot.com/2007/01/blog-post_15.html

    • 2 replies
    • 1.4k views
  5. Started by Rasikai,

    வணக்கம் எல்லோரும்க்கும்

  6. தமிழமுதத்தில் முதன் முதலாக என் கதை... கண்விழித்து பார்க்கிறேன். அப்பாச்சி மெதுவா கதைக்கிற சத்தம். கொஞ்ச நாளா இப்படித்தான். கொஞ்சம் தள்ளி நாய் குலைக்கும். அப்பாச்சி எல்லாரையும் சத்தம் போடாம படுக்கச் சொல்லுவா. அம்மா எண்ட வாயை தன் கையால மூடிட்டு சொல்லுவா, “ரதி சத்தம் போடக் கூடாது.” இப்படிச் சொன்னாலே தெரியும் ‘ஆமிக்காரன்’ வாறான் என்று. அம்மா சொன்னதும் பயமா இருக்கும். பக்கத்து வீட்டு ஆச்சி அடிக்கடி சொல்லுவா “கோதாரி பிடிச்சவங்களோட பெடி பெட்டையளை வச்சிட்டு இருக்க முடியுதே?” அந்த ஐந்து வயதில் நான் பார்த்தவை, அனுபவித்தவை மனதை கீறியபடி இன்றும். ஊரில் எங்கள் வீடு இருக்கும் காணியில்தான் அம்மாவின் மூன்று சகோதரிகளின் வீடும், இரண்டு சகோதரர்களின் வீடும். அம்மாவி…

  7. மூன்றாவது பாகத்தை எழுத முதல், என்னை எழுத ஊக்குவிப்பவர்களுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. புலத்தில் தமிழ் கற்ற எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை தூக்கி எறிய வைத்து, தொடர்ந்து "நீங்க எழுதுங்க பபா" என சொல்லும் உறவுகளுக்கு என் அன்பு எப்பொழுதும் உண்டு. முதல் இரண்டு தொடரும் எழுதும் போது, நினைவுகள் பல மனதில் வர கண்ணீருடன் தான் எழுதினேன். இந்த பாகத்தில் எமை காக்க களத்தில் நிற்கும் போராளிகளை பற்றியதாக இருக்கும். அவர்களுடான என் உறவு, அவர்களை பற்றி என் மனதில் இருப்பவை. ஊரில் எங்கட வீட்டுக்கு முன்னால போராளிகளின் வீடு. எங்கள் வீடு அவர்கள் வீடு என பிரிப்பது பாவம் என்பேன். காலையில் கண் முழித்ததில் இருந்து இரவு படுக்க போகும் வரை "அண்ணாக்கள்" என்று அவர்கள் பின்னாலே…

    • 16 replies
    • 2.7k views
  8. எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…

    • 16 replies
    • 2.4k views
  9. Started by லக்கிலுக்,

    தோழர் விஜய் ஒரு மிகச்சிறந்த கம்யூனிஸ்ட். பார்க்கும் பிகர்களை எல்லாம் தன்னுடைய பிகராக நினைக்கும் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி. நண்பர்களின் பிகர்களை மட்டும் சிஸ்டராக நினைக்கும் நற்குணமும் அவருக்குண்டு. முந்தையப் பதிவொன்றில் நான் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்னுடன் பணியாற்றிய சகப்பணியாளர். வாயைத் திறந்தாலே பச்சை நிறத்தில் Aய்த்தனமாக பேசக்கூடிய அசுரப் பேச்சாளர். அவருக்கு அப்போது 35 வயதிருக்கலாம். காதல் திருமணம் செய்து அதன் விளைவாக அழகான ஒரு மகளை ஈன்றெடுத்திருந்தார். என்னைப் போன்ற இளைஞர்கள் எப்போதும் "சாட், சாட்" என்று உயிரை விட்டுக் கொண்டிருந்ததை கண்ட நண்பருக்கும் இயல்பாகவே சாட்டிங் மீது பிடிப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அவருக்கு சாட்டிங்கில் மாட்டியவர்கள் நிறையப் பேர் அமெர…

  10. Started by லக்கிலுக்,

    நான் ஒரு அட்வர்டைஸிங் ஏஜென்ஸியில் ஜுனியர் லெவலில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த நேரம். எங்கள் CEOக்கு கம்ப்யூட்டர் என்றாலே அலர்ஜி. அவரது பர்சனல் மெயில்களையும் நான் தான் அப்போது Handle செய்துக் கொண்டிருந்தேன். அவர் தண்ணி அடிக்கும் கிளப், அலுமினி கிளப் மற்றும் அவரது மச்சான், மாமன் அனுப்பும் மெயில்களை எல்லாம் செக் செய்து அவருக்கு பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுப்பதே அலுவலகத்தில் எனது முதல் வேலையாக இருந்தது. ஒரு நாள் அவரிடம் வேலை கேட்டு ஒரு மெயில் வந்திருந்தது. அட்டாச்மெண்ட் ஓபன் செய்துப் பார்த்தால் ஒரு பெண், வயது 20. விஸ்காம் முடித்திருந்தாள். நான் இருந்த போஸ்டிங்குக்கே அவளும் அப்ளை செய்திருந்தாள். இதென்னடா வம்பாப் போச்சி என்று மெயிலை பாஸுக்கு மறைத்து நானே அவளுடைய யாஹூ மெயி…

  11. அண்மையில் எம்மை சோகத்தில் ஆழ்த்தி சென்ற பாலா மாமாவிற்காக "நானும் என் ஈழமும்" தொடரை அர்ப்பணம் செய்கிறேன்.... ------------------------------------------------------------------------------------ உங்களில் எத்தனை பேர், கோயிலை கடக்கும் நேரங்களில் எல்லாம் கையெடுத்து கும்பிடுவீர்கள்?அல்லது நெஞ்சில் கைவைத்து "இறைவா" என சொல்வீர்கள்? எங்கள் குடும்பத்திலும் இந்த பழக்கம் உண்டு. அதனால் எனக்கு ஏற்பட்ட ஒரு பழக்கம்..இன்று வரை தொடர்வது.. அதை பற்றி பார்க்கலாம்... ஊருக்கு செல்லும் நேரங்களில் எல்லாம் அப்பப்பாவீட்டில் அதிக நேரத்தை செலவழிப்பேன். காரணம் அங்கு இருக்கும் புத்தகங்கள், பழைய படங்கள், அப்பபாவின் இசை கருவிகள்...அதில் வீணை மீட்டுகிறேன் என்று கம்பிக்களை அறுத்த வீரத்திருமக…

  12. என் வலைப்பூவை பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். அதில் நான் எழுதி வரும் ஒரு சிறு அனுபவப்பதிவு..என்னை எழுத தூண்டிய யாழில் பதியும் ஆசையுடன்.. தமிழ்மணத்தில் இணைந்த பின்னர் உங்களில் பலரின் வலைப்பூக்களை பார்த்தேன். அதில் பெரும்பாலனவை அனுபவப்பதிவுகளாகவே இருக்கின்றது. பெரும்பாலும் நான் எழுதுவதும் எனது அனுபவங்களையோ, அல்லது என்னை சுற்றி நடப்பவையாகவே இருக்கும். ஈழத்தில் வருடக்கணக்கில் வாழாவிடினும், எனக்கும் பங்கருக்குள் தொடர்ந்து பல நாட்கள் வசித்த அனுபவம் உண்டு. சாவையும், இரத்தத்தையும் நானும் பார்த்திருக்கின்றேன். காயம்பட்டவர்களுடன் ஒரே வாகனத்தில் பயணித்திருக்கின்றேன். வெளிநாட்டு மண்ணிலேயெ இருந்த எனக்கு, ஊர் செல்லும் காலம் வந்தால் இருக்கும் மனநிலையை எழுத்தில் …

  13. Started by Luckylook,

    நான் +2 படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டுக்கும், பள்ளிக்கும் சுமார் 5 கி.மீ தூரம் இருக்கும். லஞ்ச் அவரில் வீட்டுக்கு வந்தே சுடச்சுட சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தது. 1 to 2 லஞ்ச் அவர் என்பதால் கால்மணிநேரத்தில் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வந்து கால் மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு திரும்ப முடிந்தது. இந்த மாதிரியான லஞ்ச் அவர் ட்ராவலில் எனக்கு அறிமுகமானவர்கள் தான் மூர்த்தியும், சண்முகமும். இருவரும் என் வகுப்புத் தோழர்கள் என்றாலும் அவர்கள் வேறு "தாதா" குரூப், நான் வேறு "மாபியா" குரூப். அவ்வளவாக டச்சப் ஆரம்பத்தில் இல்லை. எனினும் மூவரும் ஒரே வழியில் தான் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பேச்சுத்துணை நண்பர்கள…

  14. "வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி! வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள…

  15. "ஒரு பேஷண்ட் நர்ஸை லவ் பண்ணுறாரு. அவரு நர்ஸ் கிட்டே எப்படி ப்ரபோஸ் பண்ணுவாரு?" "சிஸ்டர் ஐ லவ் யூ" - இது எஸ்.எம்.எஸ்.களிலும், மேடை நாடகங்களிலும் பரிமாறிக் கொள்ளப்படும் ஒரு ஜோக். கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு துரதிருஷ்டவசமான நிலை நான் பத்தாம் வகுப்பு படித்தபோது எனக்கு ஏற்பட்டது. பானு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பார்த்தாலே போதும், பசங்களின் உள்ளங்கள் பற்றிக் கொள்ளும். கயல் விழியாள். கொடி இடையாள். தாவணித் தென்றல். என் வகுப்பில் இருந்த 48 பேரில் குறைந்தபட்சம் 48 பேராவது அவளைக் காதலித்திருப்பார்கள். செம காம்பெடிஷன். வேறு பிகரை டாவடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட ஒரு கவுரவத்துக்கு இவளை காதலித்தார்கள். என் நண்பன் செந்திலும் (இவனால் தான் நான் குட்டிச்சுவரானேன்) நான…

    • 18 replies
    • 5.3k views
  16. இல்வாழ்வு தந்த இயலாமை கனமான அந்த அல்பத்தை தூக்க முடியாமல் சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு, அங்காலயும் இங்காலயும் சாய்ந்து சாய்ந்து மகள் ஜனனி ஓவர் ஆக்சன் வேற போட்டுக்கொண்டு, "அம்மா அம்மா பிடியுங்கோ" என்று சத்தம் போட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும் மேனகாவுக்குச் சிரிப்புத்தான் வந்தது. "இப்ப என்னத்துக்கு ஜனனி இதைத் தூக்கிக் கொண்டு வாறீங்கள்? அம்மாட்டா கேட்டா எடுத்துத் தந்திருப்பன்தானே?" "அம்மா நான் உங்கட கல்யாண வீட்டுப் படம் பார்த்துக் கனநாள்தானே.. வாங்கோ பார்ப்பம். நான்; அதில நிக்கிற ஆக்களெல்லாம் யார் யாரெண்டு சொல்லுவனாம் நீங்கள் நான் சொல்றதெல்லாம் சரியோ என்று பார்ப்பீங்களாம். சரியோ?" "ம்... மகாராணி சொன்னா அதுக்கு மறுபேச்சு இருக்கா? சரி சொல்லுங்கோ மகாராணி..."…

    • 8 replies
    • 1.9k views
  17. Started by snegi,

    My Love story வசந்தகாலப்பறவை. அந்திமாலை சிவக்கும் நேரம். காரிருள் மெல்லத்தன்போர்வையை சூரின்பால் போர்க்கின்றான்.. பனித்துளிகள் அங்கும் இங்குமாக பரவி விழுகின்றன. இதமான உடல்ச்சூடு இன்னும் உடம்பைவிட்டு அகலவில்லை. மனமோ, அங்குமிங்குமாக இடம்விட்டு இடம் தாவுகின்றது. ஆதலால்தான் மனம் ஒரு குரங்கு என்று முன்னோர்கள் கூறியுள்ளனரோ என்று எனக்கு எண்ணத்தோன்றியது. அத்தனையும் தாண்டி கண்கள் கடிகாரத்தை பார்க்கின்றன. ஆமாம்.. இன்னும் ஐந்தே நிமிடங்கள் தான் புகையிரதம் வந்து சேர்வதற்கு. திடீரென.. அலைபாயும் மனததோ, ஓர்நிலைப்படுகிறது. ஆமாம்.... அது ஒரு சிலையா,? இல்லை ஓர் சி;த்திரமா? திடிரென வசந்தகாலத்தில் மட்டும் தோன்றும் பறவையாக கண்முன்னே தோன்றுகிறாள்... என்னவென்றுதான் சொல…

  18. Started by Manivasahan,

    எதிரி ஓய்வு நிலையிலிருந்த உலகம் மெல்ல மெல்லச் சோம்பல் முறித்துச் செயற்பட ஆரம்பிக்கும் காலை நேரம். சூரியனும் தன் பொற் கிரணங்களை அள்ளி வீசத் தொடங்கி விட்டான். அவசர உலகத்தின் வேகத்திலே மனிதனை விஞ்சிவிட வேண்டுமே என்ற ஆவேசத்துடன் பறவைகள் தம் உறக்கம் கலைத்து இரை தேடக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. வெள்ளைச் சிறகு கட்டிய பள்ளிக் குழந்தைகள், தம் தோட்டத்தைப் பார்க்கச் செல்லும் கமக்காரர்கள், சந்தை வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள்... என வீதிகள் சுறுசுறுப்படையத் தொடங்கி விட்டன. வழமையாக வசுமதி வீட்டில் பொழுது புலர்வதில் சற்றுச் சுணக்கந்தான். அவர்களுக்கென்ன? கடைகளைக் கவனிக்கக் கணக்கப்பிள்ளைமார், பொருட்களை வாங்குவதற்கும் வீட்டு அலுவல்களைக் கவனிப்பதற்கும் ஏகப்பட்ட வேலையாட்கள், சமையல்…

    • 11 replies
    • 3.6k views
  19. அனிதாவின் டயரி - நாள் : 20-11-2006, இரவு 10.30 மணி "ஏண்டா டல்லா இருக்கேன்னு கேட்டேன். ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டான். மத்தியானம் போன் பண்ணலைன்னு கோவமான்னு கேட்டேன். அதெல்லாம் இல்லேன்னு விரக்தியா சொன்னான். "வண்டியில வர்றப்ப கூட எப்பவும் அவன் தோள் மேல கைய போட்டுக்கிட்டு வருவேன். தோள்ல கைய போடலைன்னா வண்டியை நிறுத்திட்டு, என்னை கட்டிப் புடிச்சிக்கிட்டா தான் வண்டிய ஸ்டார்ட் பண்ணுவேன்னு அடம் புடிப்பான். இன்னைக்கு என்னவோ 'தேமே'ன்னு இருந்தான். நான் தோள்ல கையைப் போடலைங்கிறதையே ஒரு பொருட்டா அவன் நெனைக்கலை. "வர.. வர... அவன் போக்கே புரிய மாட்டேங்குது. கல்யாணம் ஆனப்ப இருந்தமாதிரி அவன் இப்ப இல்லை. ப்ரெண்ட்ஸ் கூட வெளியே சுத்தக்கூடாதுன்னு நான் கண்டிஷன் போடறதால அவன் என் மேல க…

  20. சின்னச் சின்ன கதைகள் "எப்பா, இன்னும் ரெண்டு நாள்ல, புது யூனிப்பார்ம் போட்டு வரலைனா, டீச்சர் ஸ்கூலுக்கு வரவேணாம்டாங்க. சீக்கிரம் யூனிப்பார்ம் எடுங்கப்பா." தேவி சும்மாயிருக்க மாட்டே. நானே எலக்ஷன் டென்ஷன்ல இருக்கேன். இன்னும் வேலையே முடியலே. தொகுதிப் பூரா போஸ்டர் ஒட்டணும். கொடி, பேனர் கட்டணும். வட்டச் செயலாளர், பொறுப்பை எங்கிட்ட விட்டிருக்காரு. அதப் பார்ப்பேனா, இல்லை இதச் செய்வோன" கடுப்பானான் மாரி. "ஆமா, அடுப்பெரிக்க விறகில்ல, கொடி கட்டப் போறாறாம் கொடி. முதல்ல குழந்தைக்கு டிரஸ் எடுக்க வழிய பாரு, இல்லைனா, வீட்டு வாசப்படி மிதிக்காத" பொருமினாள் அஞ்சலை. வாசலில் நிழலாடியது. அஞ்சலை பார்த்தாள் சோமு நின்றிருந்தான். 'எக்கா, கட்சி கொடி, பேனர், போஸ்ட…

    • 15 replies
    • 6.2k views
  21. ஒரு காதல் கதை! அவனும் அவளும் பார்த்தவுடனேயே காதலிக்கத் தொடங்கி விட்டார்கள். அவன் அவளுக்காக காத்திருப்பான். காத்திருப்பது சுகம் என்று கவிதை சொல்வான். அவள் அவனுடைய கவிதை கேட்பதற்காகவே நேரம் பிந்தி வருவாள். அவனும் அவளும் யாரும் இல்லாத நேரத்தில், யாரும் இல்லாத இடத்தில் சந்தித்துக் கொள்வார்கள். அதிகமாகப் பேசி கொஞ்சமாக தொட்டுக் கொள்வார்கள். அவனும் அவளும் வீதியில் காணுகின்ற பொழுது கண்காளால் மட்டும் பேசிக் கொள்வார்கள். காணாத போது மனதால் பேசிக் கொள்வார்கள். அவனும் அவளும் பேசிக் கொள்வதைப் பற்றி ஊரும் பேசத் தொடங்கியது. அரசல்புரசலாக தொடங்கியது ஒரு நேரத்தில் அதுவே எங்கு பார்த்தாலும் பேச்சு என்று ஆகிப் போனது. வழமை போன்று ஊருக்கெல்லாம் தெரிந்த பிறகுதான் அவனுடைய வீட்டிலும் அவள…

    • 13 replies
    • 3.3k views
  22. கடைசி பேட்டி 1 ராஜேஷ். வயது 28. 5 அடி 11 அங்குலம். மாநிறம். வழக்கமாக உடற்பயற்சி செய்யும் தேகம். மிடுக்கான நடை. ஆங்கிலம் ஹிந்தி தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று பல மொழிகளில் சரளமாக பேசும் திறமை. உடை அணிவதில் தற்போதை நாகரீகம் எது என்று இவனை கேட்டுத்தான் தெரிந்துக் கொள்ள வேண்டும். நான்கு சக்கர வாகனம் உண்டு. ஆனாலும் சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு ஹீரோ ஹோன்டா ஸ்பெலன்டர். இவன் தான் கதையின் நாயகன். இவனும் ஒரு ஸ்பெலன்டர் தான். உலக ஞானம். அனைத்து நாட்டு அரசியலும் விரல் நுனியில். இந்திய நடப்பை கரைத்து குடித்தவன். யார் மந்திரி யார் சட்டமன்ற உறுப்பினர் அவர் ஜாதகம் என்ன என்று அனைத்தும் அறிவான். வேலை. மிகப்பெரிய தனியார் தொலைக்காட்சியில் நிருபர். தனியே…

    • 4 replies
    • 2.2k views
  23. ஞானி – 1. மனிதன் கால் சட்டையும் மேல் அங்கியும் நவநாகரீக தோற்றத்துடன் ஒருவன் ‘ஞானி நான்’ என்றான். “என்ன ‘ஞானியா’? உன்னிடம் தாடி இல்லையே? அழுக்கு வேட்டி கிழிந்த சட்டை இப்படி எதுவுமே இல்லையே? நீ ஞானி இல்லை” - என்றேன் நான். “மாயை” - என்றான். “என்ன?”. “மாயை”. “உன் பெயர் என்ன?” “பெயரா?”;. மெல்ல சிரித்தான். “முகவரிக்கு முன்னே எழுத கேட்கிறாயா? ‘எனக்கு முகவரியே இல்லை. அறிமுகம் தேவையா? அறிமுகம் இல்லாத பலரில் நானும் ஒருவன். ஏன் கேட்கிறாய் பெயரை?” - என்றான் “கூப்பிடத்தான்”. “யாரை?” “உன்னைத்தான்”. மீண்டும் சிரித்தான். “ஏன் சிரிக்கிறாய்?”. “பெயரைக் கேட்டாய். கூப்பிட என்று. இன்னும் சில நொடிகளில் உன்னை நான் பார்க்க மாட்டேன்…

    • 1 reply
    • 2.5k views
  24. பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான். சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் திரும்ப பேசும். "மச்சி இன்னைக்கு பவுர்ணமி. மகாபலிபுரம் போகணும். அப் அண்டு டவுன் 100 கி.மீ. பத்திரமா போயிட்டு வந்துரலாமா" என்று கேட்டால் "பட்டையக் கிளப்பிடலாம் மாமு" என்று பதில் சொல்லும். அஃறிணைகளோடு பேசும் பழக்கம் எனக்கு எப்போது வந்தது என்று நினைவில்லை. தினமும் வீட்டுக்குள் நுழையும்போது கழட்டி விடும் என் செருப்புக்கோ அல்லது ஷூவுக்கோ மனதுக…

  25. அலுவலக வேலையெல்லாம் ஒருவழியாக முடித்துவிட்டு மிகவும் களைப்புடன் வீடு திரும்பிய தனா என விளிக்கப்படும்..தனசேகரனுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம். அவனால் நம்பவே முடியவில்லை..இன்முகங்கொண்டு வாசலிலே காத்திருப்பது வேறு யாருமல்ல..அவனுடைய அழகு மனைவி அருந்ததியேதான். "ஏன்பா இவ்வளவு நேரம்.." கேட்டுக்கொண்டே அவன் கையிலிருந்த சூட்கேசை வாங்கிக்கொண்டு..உரசி உரசி நடக்க தனாக்கு சோர்வெல்லாம் பஞ்சுபஞ்சாய் பறந்து போனது. வீட்டினுள் வந்து.. இராமயணம் படித்துக்கொண்டிருந்த தாயி;டம் குசலம் விசாரித்து..அவரின் காலைத் தொட்டு வணங்கிவிட்டு மாடிப்படி ஏறினான். அருந்ததி அவனுக்கு முன்னால் படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள்.இவ்வளவு அழகானவள்... அவன் மாமா மகள் என்பதால்தான் திருமண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.