விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பந்தை எறிகிறார் ஹர்பஜன்: அஜ்மலின் குற்றச்சாட்டும் பின்னணிகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா பந்தை எறிவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச கிரிக்கெட் சபையால் தடை விதிக்கப்பட்ட பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீட் அஜ்மல், பந்துவீச்சு முறையில் மாற்றங்களைக் கொண்டுவந்து, மீண்டும் அணியில் இடம்பிடிக்க முயற்சித்துவரும் நிலையில், திங்கட்கிழமை மாலை தெரிவித்த கருத்துக்கள், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பந்தை வீசியெறிவதாகவும், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட அஜ்மல், தான் இலக்கு வைக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். அத்தோடு, அனுமதிக்கப்பட்ட 15 பாகை அளவை விட அதிகமாக ஹர்பஜன் சிங் அவரது முழங்கை ‘…
-
- 0 replies
- 231 views
-
-
பி.வி.சிந்து: உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. ஜப்பானை சேர்ந்த நசோமி ஒகுஹாராவை 21-7, 21-7 என்ற கணக்கில் வீழ்த்தி உலக பேட்மிண…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
தலையால் முட்டி தந்தை பெயரை காப்பாற்றிய தனயன்! கடந்த 2006-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து இறுதி ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பெர்லின் நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில், பிரான்ஸ் அணியுடன் இத்தாலி மோதிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து, 90 நிமிட நேர ஆட்டத்தை சமனில் முடித்தன. கூடுதல் நேரத்தில் 110வது நிமிடத்தில் நடந்த அந்த அதிர்ச்சி சம்பவம் உலகையே அதிர வைத்தது. பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடேன் ஜிடேனுக்கும், இத்தாலி மிட்பீல்டர் மார்கோ மெட்ரசிக்கும் ( தற்போது சென்னையின் எப்.சி அணியின் பயிற்சியாளர் ) மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில், ஜிடேனின் குடும்பத்தார் குறித்து மெட்ரசி ஏதோ கூறியதாகத்…
-
- 0 replies
- 898 views
-
-
இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…
-
- 0 replies
- 570 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 413 views
-
-
இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து! By A.Pradhap - சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி, தொடரில் 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் இரு போட்டிகளிலும் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் இன்று நெல்சனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இறுதிக் கட்டத்தில் போட்டியை தம்சவப்…
-
- 0 replies
- 432 views
-
-
இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…
-
- 0 replies
- 468 views
-
-
0 ரன்னில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து உள்ளூர் அணி பிரதி இங்கிலாந்தில் 6 ஓவர் கொண்ட இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கிறிஸ்ட் சர்ச் யுனிவர்சிட்டி- பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையான ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். குறைந்த ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைத்தார்கள். ஆனால், ஒரு சிங்கில் ரன் கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் ரன்ஏதும் எடுக்காமல் 2…
-
- 2 replies
- 490 views
-
-
50 ஓவர் போட்டியில் 306 ஓட்டங்கள் குவித்த வீரர் 2016-02-22 21:33:25 இந்தியாவின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான பிரித்தம் பட்டில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 306 ஓட்டங்களைக் குவித்து சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரணவ் தன்வாடே கடந்த மாதம் ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைக் குவித்து ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகியிருந்தார். இப்போது அவரது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 300 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.…
-
- 0 replies
- 367 views
-
-
ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி By Mohamed Azarudeen - நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியான் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் செயற்படவுள்ளார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார். இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஐ…
-
- 0 replies
- 408 views
-
-
-
ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவின் வெற்றியைத் தீர்மானிக்கும் 5 விஷயங்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2025 இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 19) பெர்த் நகரில் தொடங்குகிறது. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் மறுபடியும் மோதுவதால் இத்தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவில் நடக்கும் தொடர்கள் சவால் நிறைந்தவையாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் பலமான வேகப்பந்துவீச்சு, அதிரடியான பேட்டர்கள், எப்போதும் இந்தியாவுக்கு பிரச்னையாக விளங்கும் டிராவிஸ் ஹெட் என இம்முறையும் இந்திய அணிக்கு பல …
-
-
- 15 replies
- 3k views
- 1 follower
-
-
புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன், சச்சினை ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஆக்க வேண்டியதுதானே...?என கடுப்புடன் கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட்,இரு தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கிரிக்கெட் விளையாட்டில் பல சாதனைகளை புரிந்த சச்சின் டெண்டுல்கருக்கு, ஆஸ்திரேலியாவின் மிக உயரிய 'ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதை வழங்குவதாக அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் மேத்யூ ஹைடன்,சச்சினை …
-
- 1 reply
- 791 views
-
-
போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ! “ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது. ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்! கால்பந்தைத் தவிர்த்து வேறு …
-
- 0 replies
- 391 views
-
-
புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதிமுறை நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க -–- அயர்லாந்து மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமுலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை, அபராதம் மற்றும் இடைநீக்கம் ஆகிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. …
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…
-
- 0 replies
- 904 views
-
-
சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…
-
- 0 replies
- 538 views
-
-
அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…
-
- 0 replies
- 340 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி தொடர்ந்து 9-வது வெற்றியை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முன்னணி கிளப் அணியான செல்சியா வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் அணியை எதிர்கொண்டது. இதில் 1-0 என செல்சியா வெற்றி பெற்றது. அந்த அணியின் டியகோ கோஸ்டா 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளு…
-
- 0 replies
- 325 views
-
-
2021 ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ. 2021 ஆம் ஆண்டுக்கான விவோ இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடிவுசெய்துள்ளதாக ஐ.பி.எல். நிர்வாக சபை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐ.பி.எல் களியாட்டம் அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த சீசன் 2021 ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இடையே முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகும். உலகின் மிப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் பிளேஆஃப்களையும் 2021 மே 30 ஆம் திகதி இறுதிப் போட்டியையும் நடத்த…
-
- 13 replies
- 979 views
-
-
மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…
-
- 0 replies
- 238 views
-
-
ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா. 43 வயதாகும் மிஸ்பா, 2011-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி பட்டியலில் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு முன்னேற காரணமாக இருந்தவர். இந்நிலையில், மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 292 views
-
-
2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக கடந்த ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட 2020 யூரோ கால்பந்தாட்டப் போட்டிகள் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. யூரோ என அழைக்கப்படும் 2020 ஆம் ஆண்டுக்கான யு.இ.எஃப்.ஏ ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜூன் 11 முதல் ஜூலை 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. அதன்படி 31 நாட்களில் 51 போட்டிகள் நடத்தப்படுகின்றன. 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் பிரிக்கப்பட்டுள்ளது. குழு ஏ: துருக்கி, இத்தாலி, வேல்ஸ், சுவிட்சர்லாந்து குழு பி: டென்மார்க், பெல்ஜியம், ரஷ்யா, பின்லாந்து குழு சி: நெதர்லாந்து, உக்ரைன், ஆஸ்திரியா, நார்த் மேசிடோனியா குழு டி: இ…
-
- 9 replies
- 1k views
-
-
இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொழுப்பு அதிகமாம் எமது நாட்டில் இனிவரும் காலங்களில் உடல் தகுதிகாண் பரிசோதனையில் சித்தியடையும் வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வயிற்றில் 12 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டிருக்கும் வீரர்கள் எவ்வளவு திறமையைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டி களில் விளையாடுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படமாட்டார்கள். இந்த விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அ…
-
- 0 replies
- 273 views
-
-
2014 உலக கோப்பை உதைபாந்தட்ட அணிகளின் பிரிவுகள் தெரிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஆறாம் திகதி ) பிரேசிலில் நடைபெறவுள்ளது . பார்த்து மகிழுங்கள் .
-
- 2 replies
- 620 views
-