விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
ஏலியன் டிவில்லியர்ஸை ஏன் நமக்கு பிடிக்கிறது ? ரசிகர்களால் செல்லமாக, கிரிக்கெட் உலகக் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் விளையாடும் அத்தனை நாட்டிலும் ரசிகர் பட்டாளம் உண்டு. சச்சின் டெண்டுகருக்கு பிறகு தற்போது உலகமே உச்சரித்துக்கொண்டிருக்கும் கிரிக்கெட்வீரர் பெயர் ஏ.பி. டிவில்லியர்ஸ் மட்டுமே. இதற்கு சிறந்த உதாரணம் கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவின் இந்திய சுற்றுப்பயணம்தான். சச்சின், ஷேவாக், தோனியின் பெயர்களை மட்டுமே அரங்கம் அதிர கேட்டுவந்த ஸ்டேடியங்கள், முதல் முறையாக 'ஏ.பி.டி ... ஏ.பி.டி...' என ஒவ்வொரு முறை டிவில்லியர்ஸ் களமிறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கூக்குரலிட்டதை கேட்டன. இந்தியாவில் அயல்நாட்டு வீரர் ஒருவருக்கு எக்கச்சக்க வர…
-
- 0 replies
- 545 views
-
-
தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…
-
- 0 replies
- 612 views
-
-
பிறீமியர் லீக்கில் 'பெரிய 4 அணிகளின் ஆதிக்கம் முடிந்தது' இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரில் வழக்கமாக ஆதிக்கம் செலுத்தும் பெரிய அணிகளெனக் கருதப்படும் நான்கு அணிகளின் ஆதிக்கம், முடிவுக்கு வந்துவிடும் என, ஆர்சனல் அணியின் பயிற்றுநர் ஆர்சீன் வெங்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து பிறீமியர் லீக் தொடரின் சம்பியன்களாக லெய்செஸ்டர் சிற்றி அணி தெரிவாகியுள்ளதோடு, ஏனைய அணிகள், வழக்கமான திறமையை வெளிப்படுத்தத் தடுமாறியிருந்தன. பிறீமியர் லீக்கின் பெரிய நான்கு அணிகளென, மன்செஸ்டர் யுனைட்டெட், லிவர்பூல், செல்சி, ஆர்சனல் ஆகியன கருதப்படுகின்றன. இவ்வணிகள், 2000களில் அதிக ஆதிக்கத்தை வெளிப்படுத்திய அணிகளான உள்ளன. இந்நிலையிலேயே கருத்துத…
-
- 0 replies
- 498 views
-
-
ஆண்டின் சிறந்த வீரராக சாமுவேல்ஸ் அன்டிகுவாவில் செவ்வாய்க்கிழமை (19) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவின்போது, ஆண்டின் சிறந்த ஒருநாள் சர்வதேசப் போட்டி வீரராகவும், ஆண்டின் சிறந்த வீரராகவும் மார்லன் சாமுவேல்ஸ் பெயரிடப்பட்டார். 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 22 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாமுவேல்ஸ், மூன்று சதங்கள் உள்ளடங்கலாக 859 ஓட்டங்களைப் பெற்றதோடு, இந்தியாவில் இடம்பெற்ற உலக இருபதுக்கு-20 பட்டத்தை மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றுவதற்கும் முக்கியமானவராக அமைந்திருந்தார். குறித்த இறுதிப் போட்டியில், மேற்கிந்தியத் தீவுகள் அணி 156 ஓட்டங்களை துரத்தியிருந்தபோது, இறுதி வரை …
-
- 0 replies
- 399 views
-
-
பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் பிரிட்டன் நாட்டின் சார்பில் மொ பராக் (மொகமது பராக்) கலந்து கொண்டார். இவர் பந்தய தூரத்தை எளிதாக கடந்து கொண்டு வந்தார். 10 ஆயிரம் மீட்டரை நெருங்கும்போது திடீரென கால் தடுமாறி கிழே விழுந்தார். மற்ற வீரர்கள் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர். கிழே விழுந்ததால் வெற்றி பறிபோகி விடுமோ? என்று அஞ்சமால் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடினார். இறுதியில் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். கீழே விழுந்த பிறகு தனது முயற்சியால் வெற்றி பெற்ற மொ பராக் பிரட்டன் நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்…
-
- 2 replies
- 598 views
-
-
பராலிம்பிக் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டம் இறுதிச் சுற்றில் இலங்கையின் அமரா இந்துமதி 2016-09-14 10:59:33 பிரேஸிலின் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் ரியோ 2016 பராலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் அமரா இந்துமதி இறுதிச் சுற்றில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார். எஞ்சென்ஹாஓ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ரி 45/46/47 பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறன் கொண்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றதன் மூலம் இறுதிப் போட்டியில் பங்குபற்றும் தகுதியை அமரா இந்துமதி பெற்றார். போட்டியை அவர் 1 நிமிடம் 02.07 செக்கன்களி…
-
- 0 replies
- 306 views
-
-
பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தய வீரர் மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது-BBC செய்தி. பிரபல கார்ப்பந்தைய வீரர் 47 வயதான மைக்கல் ஸுமார்க்கரால் நடக்க முடியாது என்று அவரது சட்டத்தரணி ஜெர்மனிய சஞ்சிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. 7 முறை போர்முலா 1 கார்பந்தய போட்டிகளில் சாம்பியன் பட்டம் வெற்றிகொண்ட மைக்கல் ஸுமார்க்கர், 2013 ம் ஆண்டு டிசம்பர் மாதம் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விபத்தை சந்தித்தார். அவருடைய தலைப்பகுதியில் ஏற்பட்ட பலமான அடிக்குப் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் மைக்கல் ஸுமார்க்கர் ஆறு மாதங்…
-
- 1 reply
- 448 views
-
-
மெஸ்சியை மிஞ்சும் ரொனால்டோ! #Ballond'or ரஜினிக்கு வயசாயிடுச்சு. முடி கொட்டிப் போச்சு. ஆனாலும் ஸ்க்ரீன்ல அவர் என்ன பண்ணாலும் ரசிக்கிறோம் இல்லையா? அதே மாதிரிதான் ஃபுட்பால்ல கிறிஸ்டியானோ ரொனால்டோ. வயசு ஏற ஏற ரொனால்டோ ஆட்டமும் மெருகேறுது. கிரவுண்ட்ல அவர் என்ன பண்ணாலும் அது வசீகரமா இருக்கு. இது ரொனால்டோ குறித்து, சந்தோஷ் டிராபியில் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக இருந்த ராபின் சார்லஸ் ராஜா சொன்னது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் உலகின் சிறந்த கால்பந்து வீரர் (ballon d'or) விருதை, நான்காவது முறையாக வென்றிருக்கிறார் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஃபிரான்ஸில் நடந்த 2016 யூரோ கோ…
-
- 0 replies
- 356 views
-
-
தென்னாபிரிக்காவில் மூத்தவர்கள் சோடைபோக சம்பியனானது இளம் படை தென்னாபிரிக்காவில் இலங்கை அணி தட்டுத் தடுமாறி விளையாடிவரும் நிலையில், தென்னாபிரிக்க மண்ணில் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை இளம் அணி வெற்றிகொண்டு முக்கோணத் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியும், இலங்கை 19 வயதிற்குட்பட்ட இளம் கிரிக்கெட் அணியும் தென்னாபிரிக்காவில் முகாமிட்டுள்ளன. இதில் 19 வயதிற்குட்பட்டோருக்கான மூன்று நாடுகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் இலங்கை, சிம்பாப்வே மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதின. இந்தத் தொடரின் இறுத…
-
- 0 replies
- 404 views
-
-
அர்ஜுன் டெண்டுல்கரின் கால்பெயர்க்கும் யார்க்கர்: காய அச்சுறுத்தலால் ஜானி பேர்ஸ்டோ ஒரே பந்தில் வெளியேறினார் 2013-ல் அர்ஜுன் டெண்டுல்கர், அருகில் தந்தை சச்சின். | படம்.| கே.ஆர்.தீபக். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அதற்கு முந்தைய வலைப்பயிற்சியில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவுக்கு வீசிய யார்க்கர் அவருக்கு காய அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. 17 வயதான, இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் வலைப்பயிற்சியில் ஜானி பேர்ஸ்டோ எதிர்கொண்ட முதல் பந்தையே காலைப் பதம் பார்க்கும் துல்லிய யார்க்கராக வீச வலியாலும் காய அச்சுறுத்தல் காரணமாக…
-
- 0 replies
- 787 views
-
-
சி.எஸ்.கே ஜெர்ஸியுடன் சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல தோனி! தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக தோனி சி.எஸ்.கே ஜெர்ஸியில் களமிறங்கினார். அவரது ஜெர்ஸியில் 'தல' என்று எழுதப்பட்டிருந்ததது. தோனி களமிறங்கியதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. நடப்புத் தொடரில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நட…
-
- 2 replies
- 656 views
-
-
ஆஸ்திரேலிய ஓபனிலிருந்து விலகும் நட்சத்திர வீராங்கனை..! ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 17 முதல் தொடங்கி ஜனவரி 30 வரை நடைபெற உள்ளது. இந்த டென்னிஸ் தொடரில் மகளிர் டென்னிஸ் போட்டி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் தொடங்கவுள்ள இந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவர் டென்னிஸ் பிரிவில் உலக அளவில் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள நோவக் ஜோகோவிக் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ஜோகோவிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை இதுவரை அவர் தெரிவிக்கவே இல்லை. அடுத்த மாதம…
-
- 0 replies
- 283 views
-
-
ஐ.பி.எல்.: புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை வெளியிட்டது அணி நிர்வாகம்! நடப்பு ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ அணியின் பெயரை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, லக்னோ அணிக்கு ‘லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 2016ஆம் மற்றும் 2017ஆம் ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றபோது புனே அணியை வாங்கியிருந்த சஞ்சீவ் கோயங்கா அதற்கு ரைஸிங் புனே சுப்பர் ஜெயன்ட் எனப் பெயர் சூட்டியிருந்தார். இந்நிலையில், தற்போது லக்னோ அணியை வாங்கியுள்ள கோயங்கா, இதற்கும் சுப்பர் ஜெயன்ட் என்றே பெயர் சூட்டியுள்ளார். லக்னோ அணியின் பயிற்சியாளராக ஆன்டி பிளவர் மற்றும் ஆலோசகராக கௌதம் கம்பீர் ஆகியோர்…
-
- 0 replies
- 295 views
-
-
வங்கதேசத்தில் டெஸ்ட் , ஒருநாள் மற்றும் 20 / 20 ஆட்டங்களுக்காக வந்திருக்கும் இலங்கையணிக்குக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்த நாடு எடுத்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னதாக பாக்கிஸ்த்தானில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றையடுத்து வங்கதேசத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. http://www.islandcricket.lk/videos/sri-lanka/cricket/sri-lanka-national-team-arrives-in-dhaka
-
- 0 replies
- 393 views
-
-
ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்: ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கார் விபத்தில் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சனிக்கிழமை இரவு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லே பகுதியில் சைமண்ட்ஸ் பயணித்த கார் விபத்துக்குள்ளானது. ஐசிசி வெளியிட்ட தகவலின்படி, சைமண்ட்ஸ் காரில் தனியாக பயணித்திருக்கிறார். அப்போது, கார் கட்டுப்பாட்டை இழந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் , அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து தடயவியல் விபத்து பிரிவ…
-
- 4 replies
- 581 views
- 1 follower
-
-
லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட்டை 2-1 வீழ்த்தி அதிர்ச்சியளித்தது ஜிரோனா லா லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-18 சீசன் ‘லா லிகா’ லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட், கேட்டலோனியாவில் அமைந்துள்ள ஜிரோனா அணியை எதிர்கொண்டது. அரசியல் நெருக்கடிக்கிடையே ஜிரோனா அணி களம் இறங்கியது. ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் நோக்கி அடித்த பந்தை ஜி…
-
- 0 replies
- 426 views
-
-
பவுலிங்கில் கலக்கிய அர்ஜுன் டெண்டுல்கர்... எதிரணியை திணற அடித்தது எப்படி! மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அண்டர்-19 போட்டி ஒன்றில் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து எதிரணியை திணற அடித்து இருக்கிறார். ஒரே போட்டியில் இவர் எடுத்த 5 விக்கெட்டுக்கள் காரணமாக எதிரணி மிக சொற்ப ரன்களில் சுருண்டு இருக்கிறது. மும்பையில் அண்டர்-19 பிளேயர்கள் விளையாடும் 'பேஹர் கோப்பை' கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடும் பலர் ரஞ்சி போட்டிகளுக்கும், இந்திய அண்டர்-19 அணிக்கும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்திய கிரிக்கெட் உலகில் இந்த தொடர் அதிகம் கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் …
-
- 0 replies
- 392 views
-
-
லூயிஸ் சுவாரெஸ் 75 மில்லியன் பவுண்டுக்கு பார்சிலோனா அணிக்கு கைமாறினார் பார்சிலோனா, ஜூலை 11- லிவர்பூல் கிளப் அணியில் விளையாடி வந்த லூயிஸ் சுவாரெஸ் பார்சிலோனா அணிக்கு 5 ஆண்டுகள் விளையாடுவதற்காக 75 மில்லியம் பவுண்டுக்கு கைமாறியுள்ளார். பிரேசிலில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மறக்க முடியாத போட்டி ஒன்று எதுவென்றால், அது இத்தாலி-உருகுவே அணிகள் மோதிய போட்டிதான். இப்போட்டியில் உருகுவே வீரர் சுராஸ் இத்தாலி வீரரின் தோள்பட்டையில் கடித்தார். இதனால் இவர் 10 போட்டிகளில் விளையாட முடியாமல் போனது. இது விஷயம் இல்லை. லிவர்பூல் அணிக்காக விளையாடி வந்த இவரை பார்சிலோனா கிளப் அணி 75 மில்லியன் பவுண்டு கொடுத்து இப்போது வாங்கியுள்ளது. இந்த பணம் இந்திய மதிப்…
-
- 1 reply
- 550 views
-
-
சச்சின் ரகசியம்: தீபிகா ஆர்வம் புதுடில்லி: ""கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் சச்சின். இதன் ரகசியம் பற்றி அறிய ஆர்வமாக இருக்கிறேன்,`` என, வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் சிறந்த வில்வித்தை நட்சத்திரம் தீபிகா குமாரி. சமீபத்திய காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அடுத்து, சீனாவின் குவாங்சு நகரில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டிலும்(நவ. 12-27) தங்கப்பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், இந்திய அணியின் சாதனை நாயகன் சச்சின் குறித்து வியப்பு தெரிவிக்கிறார். மிக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருவதன் ரகசியம் பற்றி, அவருடன் பேச விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். …
-
- 2 replies
- 1.6k views
-
-
இது சிக்ஸர்களின் காலம் இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள். முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள்…
-
- 19 replies
- 4.3k views
-
-
http://www.youtube.com/watch?v=a_ncggtRcYg&feature=player_embedded#at=529 http://www.youtube.com/watch?v=rxRYycPrx2U&feature=player_embedded#at=14 http://www.youtube.com/watch?v=5nTlOJgc7mY&feature=player_embedded http://www.youtube.com/watch?v=KhoDKFwPAsw&feature=player_embedded#at=88 http://www.youtube.com/watch?v=IQ8UlmRG4rE&feature=player_embedded#at=52 http://www.youtube.com/watch?v=2j3WYb8RvwM&feature=player_embedded#at=416
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக 7,000 ரன்கள்: டிவிலியர்ஸ் புதிய சாதனை ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் தெ.ஆ. கேப்டன் ஏ.பி. டிவிலியர்ஸ். பெர்த்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் 7,000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். 166 இன்னிங்ஸ்களில் அவர் 7,000 ரன்களைக் கடந்து உலக சாதனை புரிந்துள்ளார். இதற்கு முன்னர் இந்த சாதனையை வைத்திருந்தவர் சவுரவ் கங்குலி. இவர் 174 இன்னிங்ஸ்களில் 7,000 ரன்களைக் கடந்தார். ஆனாலும் டிவிலியர்ஸ் சாதனை குறுகிய காலமே நீடி…
-
- 0 replies
- 346 views
-
-
இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் இரு சாதனைகளை படைத்த சங்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் குமார் சங்கக்காரா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 242 ஓட்டஙகளைபெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 236 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுகளால் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றிபெற்றது. இப் போட்டியில் சங்கக்கார 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார 13 ஓட்டங்களை எடுத்திருந்த போது ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 4 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 ஒருநாள் போட்டி…
-
- 5 replies
- 1.9k views
-
-
கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! வெலிங்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் 12,000 ரன்களை குறைந்த இன்னிங்ஸ்களில் எடுத்து இலங்கையின் சங்ககரா சாதனை புரிந்துள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் சாதனையை அவர் முறியடித்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் கேப்டனான சங்ககரா உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். 37-வயதான அவர் கடந்த மாதம் ஒருநாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்னை கடந்து 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்கள் கடந்து சங்ககரா சாதனை! இந்த நிலையில் சங்ககரா இன்று டெஸ்ட் போட்டியில் 12 ஆயிரம் ரன்னை தொட்டு சாதனை புரிந்தார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய 2-வது டெஸ்ட…
-
- 3 replies
- 577 views
-
-
மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கத் தயாராகும் டில்ஷான் இலங்கை அணி தற்போது சந்தித்துள்ள பின்னடைவை பார்க்கும் போது மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆவலுடன் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னை நாட்டுக்கும், அணிக்கும் தேவை என்று நினைத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்தால் இலங்கை அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்…
-
- 0 replies
- 407 views
-