விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
டில்ஸ்கூப் அடித்து அசத்திய சங்கக்காரா February 22, 2016 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஜெமினி அரபியன்ஸ் அணிக்காக விளையாடிய சங்கக்காரா ஒரு போட்டியில் “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் சிக்சர் விளாசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த ஷாட்டுக்கு பெயர் போனவர் சக இலங்கை வீரரான டில்ஷான் தான், தவிர, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோரும் அதிகம் இது போன்ற ஷாட்டுகளை அதிகம் ஆடுவர். இந்த தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெம…
-
- 0 replies
- 564 views
-
-
டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) டில்ஸ்கூப் மன்னன் டில்ஷானின் ஓய்வு அறிவித்தல் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவா? (ஆழமான அலசல்) இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி நாயகனும், ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டுக்கு விடைகொடுப்பதாக இன்று அறிவித்துள்ளார். 1999 இல் சர்வதேச கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்ட டில்ஷானின் 17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வு இந்த திடீர் ஓய்வு அறைவிப்பு மூலமாக முடிவுக்கு வருகிறது. கிரிக்கெட்டில் சாதிக்க தெரிந்த சாதனையாளர்கள் பலருக்கு தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே, சர்சைகளில் சிக்காமல் ஓய்வு அறிவித்தலை வெளியிட்டிருக்க முடிவதில்லை …
-
- 0 replies
- 609 views
-
-
டிவில்லியர்ஸின் சொந்த ஊரு எந்த "கிரகம்"னே தெரியலையே... ! சென்னை: நிச்சயம் ஆப்ரகாம் டிவில்லியர்ஸின் சொந்த ஊர் இந்த பூமி கிடையாது. வேறு ஏதோ கிரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் இந்த மனிதர் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸின் சாதனை முகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்கள். காரணம் டிவில்லியர்ஸின் பன்முக திறமைகள்தான். கிரிக்கெட்டில் மட்டுமே அவர் சாதனையாளராக இருக்கவில்லை... தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று அடிக்கடி ஜெயா டிவியில் வரும் பாட்டு போல, இவர் தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ளார். இவரது திறமைகள், சாதனைகள், வெற்றிகளைப் பார்க்கும் யாருக்குமே மனுஷனாய்யா நீ என்று ஆச்சரியம்தான் வரும். அப்படித்தான் இருக்கிறது ட…
-
- 3 replies
- 760 views
-
-
டிவில்லியர்ஸ் ஆடும் சில ஷாட்களை என்னால் கனவிலும் ஆட முடியாது: ராகுல் திராவிட் தென் ஆப்பிரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் ஏ.பி.டிவில்லியர்ஸின் நூதனமான அதிரடி பேட்டிங் பற்றி ராகுல் திராவிட் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் விளையாடும் சில நூதன ஷாட்கள் பற்றி ராகுல் திராவிட் கூறும் போது, “அவர் விளையாடுவதைப் பார்க்கும் போது, என்னால் அவர் விளையாடுவது போன்ற ஷாட்களை எனது கனவிலும் நான் ஆட முடியாது, அப்படிப் பட்ட ஷாட்களை ஆடுவது போல கனவு கூட கண்டது கிடையாது என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன், அப்படிப்பட்ட ஷாட்களை ஆடும் தைரியம் என்னிடம் இல்லை” என்றார். இளம் வீரர்கள், டிவில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது பேட்டிங்கைப் பார்த்து பழகுவது சரியாக இருக்குமா என்ற கேள்விக்கு பதில் …
-
- 0 replies
- 493 views
-
-
டிவில்லியர்ஸ் சாதனையை குறிவைக்கும் வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக் புதன்கிழமை இந்தியா-வங்கதேசம் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஃபாதுல்லாவில் தொடங்குவதை அடுத்து வங்கதேச பேட்ஸ்மென் மொமினுல் ஹக், டிவில்லியர்ஸ் சாதனை ஒன்றை குறிவைத்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து டிவில்லியர்ஸ் அரைசதம் அடித்து ஒரு சாதனை புரிந்துள்ளார். டிவில்லியர்ஸ் இதனை நவம்பர் 2012 முதல் பிப்ரவரி 2014 வரை நடைபெற்ற 12 தொடர் டெஸ்ட் போட்டிகளில் அரைசதங்கள் எடுத்துள்ளார். வங்கதேசத்தின் மொமினுல் ஹக் இன்னும் ஒரு அரைசதம் எடுத்தால் டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்வார். வங்கதேச அணியின் இடது கை பேட்ஸ்மென் மொமினுல் ஹக் (வயது 23) அந்த சாதனையை சமன் செய்வாரா என்ற ஆவல் வங்கதேச அணியினரிடத்தில் ஏற்பட்டுள்ளத…
-
- 0 replies
- 385 views
-
-
டிவில்லியர்ஸ் விரைவில் ஆட்டமிழக்க வேண்டிக்கொள்வதுதான் ஒரே வழி: வங்கதேச பயிற்சியாளர் ஏ.பி. டிவில்லியர்ஸை கண்டு நடுங்கும் வங்கதேச அணி. | கோப்புப் படம். வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பலம் குறித்து வங்கதேச கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுரசிங்கே அச்சம் கலந்த குரலில் பேசியுள்ளார். வங்கதேச அணியின் மிகப்பெரிய பலமே அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள்தான், தன் நாட்டு பேட்ஸ்மென்கள் ஒரு ரன் எடுத்தால் காட்டுக்கூச்சல் போடுவதும், எதிரணி வீரர் புரட்டி எடுத்தால் கூட வாயைத் திறக்காமல் மைதானமே மவுனத்திலும் நிச்சலனத்திலும் மூழ்கிவிடுவதை அனைவரும் பார்த்திருக்கலாம். இந்நிலையில், அந்த உற்சாகமான ரசிகர்களின் வாயை தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் அ…
-
- 0 replies
- 298 views
-
-
டிவில்லியர்ஸ், அம்லா அதிரடி, 9 விக்கெட்களால் இங்கிலாந்தை வென்றது தென் ஆபிரிக்கா இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்களால் வென்றது. தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 171 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஏ.பி. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார். ஹஷிம் அ…
-
- 0 replies
- 307 views
-
-
டீன் எல்கர் பொறுப்பான துடுப்பாட்டம்: இந்தியாவை வீழ்த்தி தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்டில் வெற்றி! இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது. ஜோகனஸ்பர்க்கில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் இன்னிங்ஸிற்காக 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல். ராகுல் 50 ஓட்டங்களையும் அஸ்வின் 46 ஓ…
-
- 0 replies
- 215 views
-
-
டீம்ல நாலு ஃபாஸ்ட் பெளலர் இருந்தாபோதும்... எந்த டீமுக்கும் தண்ணி காட்டலாம் ! "ஆம், அந்தப் பந்தை இன்னும் 20, 30 முறை எதிர்கொண்டாலும் நான் அவுட்தான் ஆவேன். பெளலரைப் பாராட்டிவிட்டு, இந்த விஷயத்தை விட்டு நகருங்கள்..." - ஜேம்ஸ் வின்ஸ் வார்த்தைகளில் குற்றவுணர்வு. அவரால் கம்பீரமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அந்த பந்தைப் பற்றி அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தது ரொம்பவுமே எரிச்சலூட்டியது. ஏனெனில், அவர் அவுட்டான விதம் அப்படி. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில், மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த மாயப்பந்தில், ஆஃப் ஸ்டம்ப் சரிந்து விழ, பெய்ல்கள் மின்னிக்கொண்டே பறக்க, ஆட்டமிழந்தார் வின்ஸ். கேட்ச், எல்.பி.டபிள்யூ, ரன் அவுட் என வேறு எப்படி அவுட் ஆகியிருந்த…
-
- 0 replies
- 495 views
-
-
டுபாயில் பெண்ணுடன் முறையற்ற வகையில் உரையாடியாடியது யார் ? இலங்கை கிரிக்கெட் விளக்கம் இலங்கை கிரிக்கெட்டைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவருடன் முறையற்ற வகையில் உரையாடியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நிராகித்துள்ளது. டுபாயைச் சேர்ந்த முனாஷா ஜிலானி என்ற பெண் ஊடகவியலாளர் ஒருவர் மேற்கண்டவாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி இல்லையெனவும் அவர் தனியார் ஊடகம் ஒன்றின் ஊடகவியலாளர் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 364 views
-
-
டுமினியின் திடீர் முடிவு! தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஜீன் போல் டுமினி டெஸ்ட் போட்டிகள் மற்றும் முதல்தரப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் மட்டுமே இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார். அதன்பின் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் இ-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 33 வயதாகும் டுமினி இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 2,103 ஓட்டங்களைப் பெற்றிருக்கும் அவர், பந்துவீச்சில் 42 விக்கட…
-
- 0 replies
- 321 views
-
-
டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையாக வெளியிட்ட ஐ.சி.சி. டுவிட்டரின் 280 எழுத்துக்கள் நீட்டிப்பால் இலங்கை வீரர்களின் பெயரை முழுமையான வெளியிட்ட ஐ.சி.சி., அந்நிறுவனத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்காக சமூக இணையத் தளமான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை அதிக அளவில பயன்படுத்தி வருகின்றனர். இதில் பேஸ்புக்கில் எவ்வளவு எழுத்துக்களையும் பதிவு செய்யலாம். டுவிட்டரில் 140 எழுத்துக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். இதனால் நா…
-
- 0 replies
- 243 views
-
-
டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி அப்ரிதி புதிய சாதனை l டெல்லி: பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிதி டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான் கண்டெடுத்த அபாரமான கிரிக்கெட் வீரர்களில் அப்திரிக்கு முக்கியத்துவம் உண்டு. எதிரணியினரும் மதிக்கக் கூடிய திறமையாளர் அப்ரிதி. தற்போது தனது 86வது டுவென்டி 20 போட்டியில் அவர் ஒரு புதிய சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் டுவன்டி 20 போட்டிகளில் 86 விக்கெட்களைச் சாய்த்து டுவென்டி 20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியுள்ள வீரராக உருவெடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டி துபாயில் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டுவென்டி 20 போட்டியில்தான் இந்த …
-
- 0 replies
- 672 views
-
-
நியுசிலாந்திற்கு எதிராக மெல்பேர்னில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடுவரின் தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலியஅணியின் முன்னாள் தலைவர்ஸ்டீவ்ஸமித் வாக்குவாதத்தில் ஈடுபட்டமை சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முதல் டெஸ்டின் 26 வது ஓவரில் நெய்ல் வாக்னரின் சோர்ட் பிச் பந்தினை விளையாட முயலாத ஸ்மித் ஆனால் லெக்பையினை பெறுவதற்காக ஓட முயன்றார். எனினும் அந்த பந்தை டெட்போல் என அறிவித்த நடுவர் நைஜல் லோங் ஸ்மித்தினை அங்கேயே நிற்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் மதியநேர இடைவேளைக்காக அணியினர் ஓய்வறைகளிற்கு திரும்பிக்கொண்டிந்தவேளை ஸ்மித் நடுவருடன் கடும்வாக்குவாதத்தில்ஈடுபட்டார். ஸ்டீவ் ஸமித்தின் இந்த நடவடிக்கை சமூக ஊடகங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்த…
-
- 0 replies
- 507 views
-
-
இந்த தசாப்தத்தின் சீறந்த வீரர் யார் என்றதுமே பலரது நினைவில் வருபவர் சச்சின் தெந்துல்கார் தான். அதற்குக் காரணம் இன்றைக்கு கிறிக்கெற் உலகில் தனது பணபலத்தாலும் ஊடக பலத்தாலும் கட்டுக்குள் வைத்திருக்கின்ற இந்திய கிறிக்கெற் அதிகார மையம் தான் என்பது இந்தப் பதிவை முழுமையாகப் படிக்கின்ற போது உங்களுக்குப் புரியும். சச்சின் தெந்துல்கர் தன்னுடைய துடுப்பாட்டத்தால் இந்திய துடுப்பாட்டத்தை கிட்டத்தட்ட இருபத்தைந்தாண்டுகளாகத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவில் ஏற்றுக் கொண்டாலும் அவரே உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் உண்மையிருப்பதாகத் தெரியவில்லை. புள்ளிவிபரங்களின் துணைகொண்டு இது குறித்து ஆராய்வதற்கு முன்பதாக பொதுவான சில விடயங்கள் குறித்தும் கருத்தில் எடுக்க வேண்டிய…
-
- 10 replies
- 1k views
-
-
டெனிஸ் போட்டிகளை மறந்துவிட்டு காதலில் சிக்கித் தவிக்கிறார் ஷரபோவா [13 - February - 2009] டெனிஸை மறந்துவிட்டு ரஜ்ய வீராங்கனை ஷரபோவா காதல் மோகத்தில் தவிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் நம்பர்வன் வீராங்கனையாகத் திகழ்ந்த இவர், சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை. இதனால், தரவரிசையில் 16 ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டார். டெனிஸ் வீராங்கனைகளில் ஷரபோவா மிகவும் அழகானவர். கவர்ச்சி ஆடை அணிந்து ஆடும் அவரின் அழகை இரசிப்பதற்கென்றே ஏராளமான இரசிகர்கள் திரள்வதுண்டு. தற்போது ஷரபோவா சரியாக ஆடாதது இரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் ஏன் சரியாக ஆடவில்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ஷரபோவா ஒருவரைக் காதலித்து வருகிறார். அவருடனேயே எப்போதும் …
-
- 0 replies
- 1.4k views
-
-
டென்னிஸ் ஆடையிலிருந்து சொக்லேற் ஆடைக்கு..... பிரான்ஸை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான டாட்யானா கொலோவின், சொக்லேற்றுகள் கலந்து தயாரிக்கப்பட்ட ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் அண்மையில் நடைபெற்ற “சொக்லேற் ஆடை” கண்காட்சியில் டாட்யானாவும் கலந்து கொண்டார். 27 வயதான டாட்யானா, 1988 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் மொஸ்கோ நகரில் பிறந்தவர். ஆனால், 8 மாத குழந்தையாக டாட்யான இருந்தபோது அவரின் பெற்றோர் பிரான்ஸுக்கு இடம்பெயர்ந்தனர். பின்னர் பிரான் ஸின் சார்பில் அவர் போட்டி களில் பங்குபற்ற ஆரம்பி த்தார். 2014 பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பிரெஞ்சு வீரர் ரிச்சர்ட் கஸ்கட்டுடன் இணைந்து டாட்யானா சம்பியன…
-
- 1 reply
- 248 views
-
-
டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…
-
- 1 reply
- 494 views
-
-
நாக்பூர்: 14 வயதுக்குட்டவர்களுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்க சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் வருண் வைகோ. மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அரசியலில் கலக்கினால் பேரன் 'வருண் வைகோ' டென்னிஸில் கலக்குகிறார். தேசிய மற்றும் மாநில அளவில் நடந்த பல்வேறு டென்னிஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகிறார் வருண் வைகோ. கடந்த ஞாயிறு அன்று நாக்பூரிலுள்ள சி.பி.டென்னிஸ் சென்டரில் நடந்த போட்டியில் அவர் தனது போட்டியாளரான மல்ஹர் பேகேவை 6-2, 6-1 என்ற செட் கணக்கில் மண்ணைக் கவ்வச் செய்து 14 வயதுக்குட்பட்டோர் போட்டியின் ஆண்கள் பிரிவில் கோப்பையை கைப்பற்றினார். வைகோ அவர்களின் பேரனான வருண் வைகோ தற்போது டென்னிஸ் தர வரிசையில் 6ஆவது இடத்தில…
-
- 3 replies
- 714 views
-
-
டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…
-
- 0 replies
- 408 views
-
-
டென்னிஸ் மோசடிகள்:சுயாதீன மறுஆய்வுக் குழு அமைப்பு டென்னிஸ் விளையாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான தமது செயல்பாடுகள் எப்படியுள்ளன என்பது குறித்து சுயாதீன மறுஆய்வு செய்யவுள்ளதாக உலக டென்னிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சுயாதீன மறுஆய்வு குறித்த அறிவிப்பு மெல்பர்ணில் வெளியானது போட்டிகளில் பந்தய நிர்ணய மோசடிகள் நடைபெற்றன என்பதற்கான சான்றுகள் முன்வைக்கப்பட்ட பிறகும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சுயாதீன மறுஆய்வுக்கான இந்த முன்னெடுப்பு செய்யப்பட்டுள்ளது. மெல்பர்ண் நகரில் நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளின்போதே இந்த அறிவிப்பு வெளியானது. விரர்கள் கண்காணிப்பு வட்டத்தில் இரு…
-
- 0 replies
- 358 views
-
-
டென்னிஸ் ராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த தாங்க முடியாத துயரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஜனவரி 2023 2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றிலேயே நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்- நடப்பு சாம்பியனும் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். இடுப்பு வலியால் அவதிப்பட்ட நடால் இந்த ஆட்டத்தில் மெக்கன்ஸியை எதிர்த்து ஆடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். வி…
-
- 0 replies
- 436 views
- 1 follower
-
-
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …
-
- 0 replies
- 352 views
-
-
டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியீடு! டென்னிஸ் இரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த, டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளின் தரநிலையை ஒவ்வொரு தொடரின் பின்னரும் மதிப்பிட்டு, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு தற்போது மாற்றம் கலந்த டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீராங்கனைகளின் விபரத்தை தற்போது பார்க்கலாம், இந்த தரவரிசைப் பட்டியலில், யாரும் எதிர்பாராத விதமாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லி பார்டி, முதலிடத்திற்கு முதல்முறையாக முன்னேறியுள்ளார். …
-
- 0 replies
- 752 views
-
-
டென்மார்க்கின் மிகப்பெரிய உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 ல் பங்குபெறுவதற்காக டென்மார்க் வாழ் தமிழர்களால் முதல் முறையாக உருவாக்கப்பட்ட தமிழீழ அணிகள் களமிறங்கவுள்ளன. இரு அணிகளாக 15 வயதிற்குட்பட்டோர் மற்றும் 13 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளில் போட்டியிடவுள்ளன. இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிற்கான ஆரம்பவிழா 01.08.2013 மதியம் 1 மணிக்கு vildbjerg நகரில் Park Alle எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. இவ் விழாவில் தமிழீழ தேசியக்கொடி அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. ஆகையால் டென்மார்க் வாழ் தமிழீழ மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு டென்மார்க் விளையாட்டுத்துறை அழைப்பு விடுக்கிறது. மேலதிக தொடர்புகளுக்கு : 004560471159 Facebo…
-
- 16 replies
- 1.2k views
-