விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
ரெனிஸ் விளையாட்டின் மூத்த அரங்கம் இங்கிலாந்தின் விம்பில்டன் போட்டிகள். 1877இல் முதல் களம் கண்ட போட்டி அரங்கம், இவ்வருடம் 133ஆவது போட்டிகளின் முடிவை எட்டியிருக்கிறது. இம்முறை இறுதிப் போட்டிகள் மேலும் புதிய சாதனைகளுக்கு வழிவகுக்குமா? என்பதிற்கான பதிலை சனி, ஞாயிறு பெண்கள் மற்றும் ஆண்கள் இறுதிப் போட்டிகள் வழங்கும். சனி காலை நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில், 10ஆவது தரவரிசையில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 7ஆவது தரவரிசையில் உள்ள ரூமேனியாவின் சிமோனா கெலப்புடன் மோதுகிறார். அவுஸ்திரேலியன் ஓப்பின், பிரென்ஜ் ஓப்பன், விம்புல்டன், அமெரிக்கன் ஓப்பின் எனப்படும் ரெனிசின் முதல தரப் போட்டிகளான கிராண்ட சிலாம்களில், இது செரீனாவின் 32ஆவது தடவையாக போட்டியிடும் இறுதிப்போட்டி.…
-
- 2 replies
- 805 views
-
-
துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை! நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துலிப் சமரவீரவுக்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் 20 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 52 வயதான சமரவீர, கிரிக்கெட் விக்டோரியா ஊழியராக இருந்த காலத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் நடத்தை விதிகளை கடுமையாக மீறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த விசாரணைகளை முன்னெடுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவருக்கு 20 ஆண்டுகள் தடை உத்தரவை வழங்கியது. 1993 மற்றும் 1995 க்கு இடையில் இலங்கைக்காக ஏழு டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியா பெண்கள…
-
- 0 replies
- 268 views
-
-
முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம் : லசித் மலிங்க இருபதுக்கு 20 உலகக் கிண் ணத்திற்கு நாம் தயாராகிக்கொண்டிருக்கிறோம். எந்தெந்த பயிற்சிகள் தேவையோ அத்தனையை யும் பெற்று முழு பலத்துடன் களமிறங்கவுள்ளோம். நடப்பு சம்பியன் என்ற சூழலில் களமிறங்குவதால் அழுத்தம் இருக்கி றதா என்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. வெற்றி என்பது ஒரு திருப்புமுனைதான். தொடர் வெற்றியே எமது இலக்கு என இலங்கை இருபதுக்கு 20 அணித் தலைவர் லசித் மலிங்க தெரிவித்தார். இலங்கையின் இருபதுக்கு 20 ஆண்கள் கிரிக்கெட் அணிக்கும் பெண்கள் கிரிக்கெட் …
-
- 0 replies
- 520 views
-
-
'சுழல் தமிழன்' அஸ்வினின் ஐம்பெரும் சாதனைகள்! அஸ்வின் | படம்: ஏ.எஃப்.பி. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற 3வது டெஸ்டில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என தன்வசமாக்கியது. வெளிநாட்டு தொடர்களை கடந்த 9 ஆண்டுகளாக இழக்காமல் இருந்த வந்த தென் ஆப்பிரிக்க அணியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆட்ட நாயகனாக 12 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் தேர்வானார். 2006-க்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ச்சியாக 15 தொடர்களை வென்றது. தற்போது முதன்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு அஸ்வினின் பந்துவீச்சு முதன்மைக் காரணம். இத்துடன்…
-
- 0 replies
- 699 views
-
-
சிக்ஸர் சிங்கம்! ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்... உலகம் முழுக்க கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர், பௌண்டரிகளால் அதிர்வேட்டுகள் நிகழ்த்தும் அதிரடி நாயகன். ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து உலகம் முழுக்க ரசிகர்கள், கிரிக்கெட் விமர்சகர்கள் என எல்லோரது லைக்ஸையும் அள்ளியிருக்கிறார் டி வில்லியர்ஸ். 16 பந்து களில் 50 ரன், 31 பந்துகளில் சதம், 64 பந்துகளில் 150 ரன் என அனைத்து வேகமான சாதனைச் சதங்களும் இவர் வசம். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 21 வயது இளைஞனாக தென்ஆப்பிரிக்க அணிக்குள் நுழைந்தார் ஏ.பி.டி வில்லியர்ஸ். எல்லா சாதனை மன்னர்களையும்போல இவரும் தோல்வியுடன் தொடங…
-
- 1 reply
- 858 views
-
-
சர்வதேச தடகள சம்மேளனத்தின் மூன்று உயரதிகாரிகளுக்கு வாழ்நாள் தடை சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைமை அலுவலகம் ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் ஊக்கமருந்து மோசடிகளை மூடிமறைக்க முயன்ற குற்றச்சாட்டில் தடகள விளையாட்டு உலகின் மூன்று மூத்த அதிகாரிகளுக்கு ஆயுள்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விளையாட்டுத் துறைக்கு எதிர்பார்த்திராத பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் ஒழுக்கநெறி ஆணையம் கூறியுள்ளது. ரஷ்ய தடகள சங்கத்தின் தலைவர், உலக தடகள சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான Lamine Diack-இன் மகன் ஆகியோரும் தடைவிதிக்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர். ரஷ்ய மராத்தன் ஓட்ட வீராங்கனை ஒருவர் ஊக்கமருந்தை பயன்படுத்தியதை மறைப்பதற்கு இவர்கள் லஞ்சம் கோரியதாக ஒழ…
-
- 0 replies
- 335 views
-
-
ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இந்தியாவின் இந்த 5 அஸ்திரங்கள்? இந்திய கிரிக்கெட் அணி, போன வருடம் ஜிம்பாப்வே தொடர் தவிர வேறெந்த ஒருநாள் போட்டித் தொடரையும் கைபற்றவில்லை. உலகக் கோப்பையில் அரையிறுதி, வங்கதேச மற்றும் தென்னாப்பிரிக்க தொடரை இழந்தது என தோனி அண்ட் கோ சறுக்கிக் கொண்டேதான் இருந்தது. இப்போது ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்துக்கு, சில புதுமுகங்கள் மற்றும் அனுபவசாலிகள் என முழு பலத்தோடு சென்றிருக்கிறது இந்திய அணி. இது பலம் என்றாலும், சொந்த மண்ணில் ஆஸியை வீழ்த்துவது கடினம் என்பதையும் மறக்கக் கூடாது. ஆனாலும், ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் வீழ்த்த இந்தியாவுக்கு 5 விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. தெறி பேட்டிங் பேட்டிங்கை பொறுத்தமட்டில் இந்தியா எப்போதுமே கில்…
-
- 0 replies
- 475 views
-
-
3 தமிழ் வீரர்களுடன் மலேஷியா பயணமாகியது இலங்கை அணி ( படங்கள் இணைப்பு ) வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது. இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழ் வீரர்களுக்கு எமது ஆதரவினையும் உந்துசக்தியையும் வழங்கி அவர்களை தேசிய அணியில் இடம்பெறச் செய்வேண்டும். இந்நிலையில் ஏனைய வீரர்களும் குறிப்பாக தமிழ் வீரர்களும் பல சாதனைகள் புரிந்து எமது தாய்நாட்டை உய…
-
- 0 replies
- 651 views
-
-
உலகப் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் தனது மகளுடன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சி தான் இது... கோப் பிரயண்ட் என்ற அந்த இளம் வீரர் விளையாடும் போட்டிகளைக் கண்ட ரசிகர்களும் இதேபோன்ற ஒரு உணர்வு ஏற்பட்டிருக்கும் என்றால் அது மிகையல்ல... அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் பிறந்த கோப் பிரயண்ட் மிகக் சிறிய வயதிலேயே கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். அவரது தந்தை ஜோ பிரயண்ட் பிரபலமான என்.பி.ஏ. கூடைப்பந்துப் போட்டி வீரர் என்பதால் மகனை ஊக்கப்படுத்தினார். குடும்பத்துடன் இத்தாலியில் குடிபெயர்ந்த ஜோ பிரய…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடைசி ஓவரில் நான்கு சிக்சர்களை விளாசிய கார்லோஸ் பிராத்வெய்ட் யார்? சாமுவேல்ஸ், பிராத்வெய்ட். | படம்: பிடிஐ. உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராத விதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர். இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்குப் பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற மு…
-
- 0 replies
- 561 views
-
-
இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத்தீவுகள்: டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது 2020 ஜூலை 07 , பி.ப. 10:40 இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, செளதாம்டனில் இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கிறது. அந்தவகையில் கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர் இப்போட்டியுடன் கிரிக்கெட் மீளத் திரும்புகின்ற நிலையில், போட்டி முடிவுக்கப்பால் போட்டி எவ்வாறு நடைபெறுகின்றது என்பது உற்று நோக்க…
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களினால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய சென்றுள்ள இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அடிலெய்ட் ஓவலில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை முகங்கொடுக்க முடியாமல் 46.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 170 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக…
-
- 0 replies
- 611 views
-
-
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்தார் மாரியப்பன் தங்கவேலு ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்துக்கு…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து ஏற்கனவே இருந்த சாதனை புதுப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சேர்.ஜோன் டாபட் சிரேஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இப் போட்டியிலேயே குறித்த சாதனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/11357
-
- 5 replies
- 2.9k views
-
-
பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது பங்களாதேஷ் பிரீமியர் லீக் – முதல் நாள் மழையால் கழுவப்பட்டது. இந்தாண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டித் தொடரின் முதல் நாள் போட்டிகள் மழையால் கழுவப்பட்டது. இன்று ஆரம்பமான இந்தப் போட்டிகளில் இலங்கையின் சங்ககார, மஹேல உள்ளிட்ட 11 பேர்பங்கெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://vilaiyattu_com.apache5.cloudsector.net/en/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%8…
-
- 0 replies
- 305 views
-
-
இலங்கை அணிக்கு புதிய முகாமையாளர் நியமனம் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளராக முன்னாள் இலங்கை வீரர் ரஞ்சித் பெர்னாண்டோ தெரிவுசெய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கெதிராக இடம்பெறவுள்ள தொடர்களுக்கு இவர் இலங்கை அணியின் முகாமையாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/14255
-
- 0 replies
- 278 views
-
-
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இவர்…
-
- 0 replies
- 358 views
-
-
“உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு) யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்…
-
- 0 replies
- 395 views
-
-
நெய்மரின் இடத்தை நிரப்பி, மெஸ்ஸியுடன் கைகோக்கும் அந்த வீரர் யார்? ஓர் அலசல்! பிரேசில் டாப் ஸ்டார் நெய்மர் பார்சிலோனா அணியிலிருந்து பி.எஸ்.ஜி (P.S.G) அணிக்குச் சென்றது வரலாறாகி விட்டது. டாப் ரேட்டட் பிளேயர்கள் அதிக தொகைக்கு ஏலம் போவது விவாதிக்க வேண்டிய விஷயமே என்றாலும், கால்பந்து உலகின் டிரான்ஸ்ஃபர் வரலாற்றில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வீரர் அதிக தொகைக்கு வாங்கப்படுவது வாடிக்கைதான் எனும்போது, நெய்மர் 1,677 கோடி ரூபாய்க்கு (அதாவது 222 மில்லியன் யூரோக்கள்) பி.எஸ்.ஜி அணிக்கு மாறியது சரியா, தவறா என விவாதிப்பது வீண் வேலை. நெய்மரின் இடத்தை நிரப்புவதற்காக, அடுத்த வீரரைத் தேடும் பணியில் இறங்கிவிட்டது பார்சிலோனோ. நெய்மரின் இடத்தை நிரப்பப்போவது யார் எ…
-
- 0 replies
- 602 views
-
-
அபத்தப் பெருமித வர்ணனையும் தோனி ஆட்டமிழப்பும் தோனி, ஸாம்ப்பா பந்தில் ஸ்டம்ப்டு ஆகும் காட்சி. | - படம். | ரிதுராஜ் கொன்வர் குவஹாத்தியில் நடைபெறும் 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் வார்னரால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணியின் பேட்டிங் சரிவு கண்டது. தோனியும், கேதர் ஜாதவ்வும் அணியை தூக்கி நிறுத்த முயற்சி செய்து வந்தார்கள். அப்போது ஆட்டத்தின் 10-வது ஓவரை ஆடம் ஸாம்ப்பா வீசினார். முதல் பந்தை ஜாதவ் சிங்கிள் எடுக்க தோனி ஸ்ட்ரைக்குக்கு வந்தார். ஸாம்பா வீச மேலேறி வந்தார் தோனி, பந்தின் லெந்தை சற்றே குறைத்தார் ஸாம்ப்பா, மிட் ஆஃபில் தட்டி விட்டார் தோனி ரன் இ…
-
- 0 replies
- 582 views
-
-
கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட…
-
- 0 replies
- 273 views
- 1 follower
-
-
அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா மெஸ்ஸியை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். முன்னாள் கால்பந்து வீரர் கேரி மற்றும் ஆங்கில தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆகியோர் அர்ஜென்டினா அணியின்போட்டி திறமை பிரேசில் அணியுடன் எப்படி இருக்கிறது என்பது பற்றி விவாதித்தனர். அந்த நிகழ்ச்சியில் முன்னாள் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் மரடோனா கலந்து கொண்டு பேசினார். மரடோனா கணித்தது போல் மெஸ்ஸி உலகக்கிண்ணத்தை வெல்வாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இது பற்றி அவர் கூறியதாவது என் கையில் அதிர்ஷ்டத்தின் அடையாளமாய் சே குவேராவை பொறித்துள்ளேன் என்று சிரித்துக் கொண்டே கூறினார். பின்னர் நாங்கள் மிக உயரமாக கட்டப்பட்ட மூன்று மேடைகள் வைத்துள்ளோம். ஒன்று ஆல்ஃபிரடோ டி ஸ்டெபனோ …
-
- 0 replies
- 839 views
-
-
சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள டோனி இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம் மகேந்திர சிங் டோனி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககராவின் சாதனையை முறியடித்துள்ளார். இந்தியா – தென்ஆபிரிக்கா அணிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் நேற்றைய முதல் போட்டியில் இந்தியா 28 ஓட்டவித்தியாசத்தில் வெற்றியீட்டியிருந்தது. இந்தப் போட்டியின் போது புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை ஹென்றிக்ஸ் அடித்தபோது மேல்நோக்கி சென்ற பந்தினை டோனி பிடித்திருந்தார். இதன்மூலம் இருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்து சங்ககராவின் சாதனையை முறியடித்தார்.சங்ககரா 254 போட்டிகளில் 134 பிடிகளை பிடித்துள்ளார். டோனி 275 …
-
- 0 replies
- 235 views
-
-
தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை: தோனி ஒப்புதல் 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்த பிறகு தோனி கூறும்போது, ‘தரமான கிரிக்கெட்டை ஆடவில்லை’ என்று கூறியுள்ளார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய இந்திய கேப்டன் தோனி, இஷாந்த் சர்மா 4வது டெஸ்ட் போட்டிக்குள் காயத்திலிருந்து மீள்வது கடினம் என்று கூறியுள்ளார். அதாவது அடுத்த போட்டியிலும் இஷாந்த் சர்மா இல்லை என்பதை அவர் அறிவித்துள்ளார். தோல்வி குறித்து தோனி கூறும்போது, “தரமான கிரிக்கெட்டை நாங்கள் ஆடவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களை நன்றாக ஆடினோம். மொயீன் அலி நன்றாகவே வீசினார். ஆனாலும் அவரை நன்றாக வீச அனுமதித்தோம். ஸ்பின்னருக்கு எதிராக பாசிடிவ் அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டும். அவர் நல்ல திசையில் வீசி…
-
- 1 reply
- 385 views
-
-
ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்த நாராயண் காரத்திகேயன் ஸ்பெய்னின் ஹிஸ்பானியா ஃபோர்மூலா வன் மோட்டார் கார் அணியில் இணைந்துள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த நாராயண் காரத்திகேயன் அறிவித்தார். போர்மூலா வன் போட்டிகளில் பங்கெடுத்த முதல் இந்திய சாரதி என்ற பெருமையைக் கொண்டுள்ள அவர், 2005 ஆம் ஆண்டு, ஜோர்தான் போர்மூலா வன் அணியில் இணைந்து போட்டிகளில் பங்குபற்றினார். பின்னர், அவர் வேறு போட்டிகளில் பங்குபற்றினார். இந்த நிலையில், தற்போது போர்மூலா வன் அணியொன்றில் மீண்டும் இணைந்துள்ளார். போர்மூலா வன் போட்டிகளில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வேகத்தையும், உடல் உறுதியையும் தான் கொண்டுள்ளதாக கார்த்திகேயன் நம்பி;க்கை வெளியிட்டார். அடுத்த மாதம் வெ…
-
- 8 replies
- 1.8k views
-