விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள் பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் …
-
- 0 replies
- 469 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம…
-
- 1 reply
- 704 views
-
-
பெண்கள் பிக் பாஷ்: சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் வீராங்கனை 47 பந்தில் அதிரடி சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் அலிசா ஹீலி, எலிசே பெர்ரி ஆகியோர் த…
-
- 0 replies
- 385 views
-
-
Published By: VISHNU 22 APR, 2024 | 08:13 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லண்டன் மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 16 நிமிடங்கள், 16 செக்கன்களில் நிறைவு செய்த ஒலிம்பிக் சம்பியன் கென்ய வீராங்கனை பெரெஸ் ஜெப்ச்சேர்ச்சேர், பெண்கள் மட்டும் (London Marathon Women's only) உலக சாதனையை நிலைநாட்டினார். அப் போட்டியில் எதியோப்பியாவின் உலக சாதனையாளர் டிக்ஸ்ட் அசேஃபா முதல் தடவையாக லண்டன் மரதனில் வெற்றிபெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏழு வருடங்கள் நீடித்த பெண்கள் மட்டும் உலக சாதனையை பெரெஸ் செப்ச்சேர்ச்சேர் முறியடித்து பெரும் புகழ்பெற்றார். …
-
- 1 reply
- 499 views
- 1 follower
-
-
பெண்ணுக்கு உதவிய சோங்கா : பாராட்டும் இணைய உலகம் பந்து எடுத்து கொடுக்கும் இளம்பெண்ணுக்கு செய்த உதவியால் சமூக வலைதளங்களில் புகழ்ந்து பேசப்படும் வீரராக டென்னிஸ் வீரர் ஜோ-வில்பிரட் சோங்கா காணப்படுகின்றார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 9ஆம் இடத்தில் உள்ள பிரெஞ்சு வீரர் ஜோ-வில்பிரட் சோங்காவுக்கும் அவுஸ்திரேலியா வீரர் ஒமர் ஜெசிகாவுக்கும் இடையேயான போட்டி அவுஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்தது. இந்த போட்டியின் போது, ‘போல் கேர்ள்’ என்று அழைக்கப்படும் வீரர்களுக்கு பந்தை எடுத்துக் கொடுக்கும் பணியில் உள்ள இளம்பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்ட ஜோ, அவருக்கு ஆறுதல் கூறி மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்று பணியாளர்களிடம…
-
- 0 replies
- 422 views
-
-
பெனால்டி கோல் அடிப்பதில் நெய்மர் - கவானி இடையே ‘ஈகோ’ போர் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் முன்னணி வீரர்களான நெய்மர் மற்றும் கவானி இடையே பெனால்டி கோல் அடிப்பதில் ஈகோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நெய்மர். இவர் பார்சிலோனா அணியில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார். இதற்காக பார்சிலோனாவிற்கு 220 மில்லியன் யூரோவை டிரான்ஸ்பர் பீஸாக வழங்கியது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். அதிக தொகை கொடுத்து வாங்கியதால் பி.எஸ்.ஜி. அணியின் முன்னணி வீரராக நெய்மர் திகழ்கிறார். அதேவேளையில் அந்த அணிக்காக 2013-ல் இருந…
-
- 0 replies
- 494 views
-
-
பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை! தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ், 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந…
-
- 0 replies
- 488 views
-
-
பென் ஸ்டோக்ஸுக்கு அநீதி இழைத்ததை ஆஸி. வீரர்கள் ஒரு நாள் உணர்வர்: மெக்கல்லம் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ராய்ட்டர்ஸ். பென் ஸ்டோக்ஸின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தவறிழைத்து விட்டார் என்கிறார் பிரெண்டன் மெக்கல்லம். களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மீது நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அதிருப்தி தெரிவித்துள்ளார். டெய்லி மெயிலில் மெக்கல்லம் இது பற்றி எழுதிய பத்தியில், “ஸ்மித் முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கலாம், இதன் மூலம் அவரது தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் நல்லுணர்வுடன…
-
- 0 replies
- 328 views
-
-
பென் ஸ்டோக்ஸ் மீது நீதிமன்றில் கடும் குற்றச்சாட்டுகள் இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர். பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள் நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர…
-
- 1 reply
- 553 views
-
-
இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது. பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதும், பல போட்டிகளில் அவர் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளார் என்பதும் பலரும் அறிந்த ஒன்றுதான் . ஆனால், கடந்த காலங்களில் ஏராளமான காயங்களையும், தோல்வி பழிகளையும் சுமந்துள்ள பென் ஸ்டோக்ஸ்க்குதான் தெரியும் இந்த வெற்றி எத்தனை இனிமையானது என…
-
- 0 replies
- 366 views
-
-
Published By: VISHNU 01 APR, 2025 | 07:44 PM (நெவில் அன்தனி) கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் பொறளை வெஸ்லி கல்லூரிக்கும் இடையில் பி.சரவணமுத்து ஓவல் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற 5ஆவது வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ண இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி எவ்வித பரபரப்பையும் ஏற்படுத்தாமல் வெற்றி தோல்வியின்றி இன்று (01) முடிவடைந்தது. இதன் காரணமாக வணக்கத்துக்குரிய ஜேம்ஸ் காட்மன் கிண்ணம் இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனினும் முதல் இன்னிங்ஸில் முன்னிலையில் இருந்த புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு மேலும் ஒரு வருடத்திற்கு கிண்ணம் சொந்தமானது. இரண்டு அணிகளும் 3 இன்னிங்ஸ்களிலும் 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்ததுடன், வெஸ்லி கல்லூரி சார்பாக நால்வர…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
பெப்ரவரியில் ஏலம் ஐ.பி.எல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பெங்களூரில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் யுவராஜ் சிங், கெவின் பீற்றர்ஸன் மற்றும் தினேஸ் கார்த்திக் ஆகியோர் அதிக விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். எனினும் இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டிகளில் யுவராஜ் சிங்கை றோயல் சலஞ்சர்ஸ் அணியும் கெவின் பீட்டர்ஸன், தினேஸ் கார்த்திக், உள்ளிட்ட 14 வீரர்களை டெல்லி அணியும் நீக்கியுள்ளது. இந்நிலையில் பெப்ரவரியில் நடைபெறவுள்ள ஏலத்தில் எத்தனை வீரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. http://www.virakesari.lk/articles/2015/01/30/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8…
-
- 4 replies
- 761 views
-
-
பெயர் சொல்ல வைத்த சென்னைப் பசங்க! வாஷிங்டன் சுந்தர் - தினேஷ் கார்த்திக் கடின உழைப்பும் விடாமுயற்சியும் கொண்ட கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியிருக்கிறார். 18 வயதில் ஐபிஎல் அறிமுகத் தொடரில் விளையாடிக் கவனம் ஈர்த்திருக்கிறார் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர். தமிழகத்தைச் சேர்ந்த இந்த இரண்டு வீரர்களைப் பற்றித்தான் இப்போது பரபரப்பாகப் பேசுகிறார்கள்! தினேஷ் கார்த்திக் 2004-ம் ஆண்டில் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பு வரை சில ஆண்டுகள் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்தவர் தினேஷ் கார்த்திக். நேர்த்தியான ஷாட்கள் அட…
-
- 0 replies
- 764 views
-
-
பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்! Chennai: ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என…
-
- 0 replies
- 517 views
-
-
பெயில் தாக்கியதில் சிவந்து போன கண்ணுடன் தோனி! இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹராரேவில் நடந்த 3வது டி20 போட்டியின் போது, விக்கெட் கீப்பர் தோனியின் கண்களை பெயில்ஸ் பதம் பார்த்தது. ஜிம்பாப்வே வீரர் டொனால்ட் டிரிபானோவை அவுட்டாக்கும் முயற்சியின் போது தோனியின் வலது கண்ணை பெயில் தாக்கியது. அந்த வேதனையுடன்தான் தோனி தொடர்ந்து போட்டியில் பங்கேற்றிருந்தார். தற்போது தோனியின் கண் சிவந்து போய்விட்டது. மருத்துவ பரிசோதனையில் கண்களில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. தோனி தனது சிவந்து போன கண்ணை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.அத்துடன் தான் வலியுடன் மங்கிய பார்வையுடனே விக்கெட் கீப்பர் பணியை மேற்கொண்டதாகவும் தோனி த…
-
- 0 replies
- 465 views
-
-
பெயெர்ன் முனிச்சில் ( FC Bayern München) பயிற்சி பெற 11 வயது சிறுவன் தேர்வு சந்தன் நாயக் ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள சபர் சகி என்ற சேரி பகுதியைச் சேர்ந்தவன் சந்தன் நாயக். 11 வயதான இந்த சிறுவன் ஜெர்மனியில் உள்ள பெயெர்ன் முனிச்சில் கால்பந்து பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் பேயெர்ன் முனிச் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப். இந்த கிளப் ஆண்ட்ரூ முல்லெர், அர்ஜென் ராப்பன், பிராங்க் ஹென்றி, பியரே ரிபெரி மற்றும் ஜெரோம் அஜினிம் போடெங் ஆகிய கால்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. தற்போது இந்த கால்பந்து கிளப்பில் பயிற்சி பெறுவதற்கு சபர் சகியின் சந்தன் நாயக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடை…
-
- 0 replies
- 448 views
-
-
பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் மூவர் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி 2008 ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் பளுதூக்குதல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சீன வீராங்கனைகள் உட்பட 15 பேர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியுற்றுள்ளனர் என சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் நேற்று தெரிவித்துள்ளது. பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று 8 வருடங்களான நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென் ஸியேஸியா மகளிர் 48 கிலோகிராம் எடைக்குட்பட்டோருக்கான பிரிவில…
-
- 0 replies
- 248 views
-
-
பெரிய அணிகளுடன் விளையாடுவதற்காக கதறி வருகிறோம்: அயர்லாந்து கேப்டன் 2019 உலகக் கோப்பை போட்டிகளில் 10 அணிகள் மட்டுமே இடம்பெறுவதான ஐசிசி முடிவை கடுமையாக எதிர்த்து வரும் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட், முன்னிலை அணிகளுடன் தங்கள் அணி விளையாடுவதற்காக ‘கதறி’ வருவதாக தெரிவித்தார். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டியில் தங்களது நிலை பற்றி விளக்கினார்: ஆம். 10 அணிகள் கொண்ட உலகக் கோப்பை என்பது ஒரு தீங்கான முடிவுதான். 2007 உலகக் கோப்பை போட்டிகளில் நாங்கள் தகுதி பெறாமல் போயிருந்தால், அயர்லாந்தில் கிரிக்கெட் இப்போது இருக்கும் நிலையில் நிச்சயம் இருக்க முடியாது என்று நான் உறுதியாகக் கூறுவேன். அயர்லாந்தில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு …
-
- 2 replies
- 676 views
-
-
பெரும் எதிர்பார்ப்பு- எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்! பெரும் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகின்றன. இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா ஆரம்பமாக உள்ளது. இதனைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெறுகின்றன. இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள், சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்த கவலைகள் காரணமாக குளிர்கால ஒலிம்ப…
-
- 1 reply
- 393 views
-
-
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர்! இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடர், கிரிக்கெட் இரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. உள்ளூர் அணிகளுக்கு இடையிலான “சுப்பர் ப்ரொவின்சியல் கிரிக்கெட் தொடர்” என அழைக்கப்படும் இத்தொடர், எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இத்தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது இத்தொடரில் பங்கேற்கும் நான்கு அணிகளின் தலைவர்கள், அணிகளின் உரிமையாளர்கள், இத்தொடரின் இயக்குனர், உள்ளூர் கிரிக்கெட் தொடருக்கான உப தலைவர், மற்றும் இத்தொடரில் விளையாடும் …
-
- 1 reply
- 699 views
-
-
பெர்த் டெஸ்டில் வெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலிய அணிக்கு 413 ஓட்டங்கள் இலக்கு [19 - January - 2008] [Font Size - A - A - A] * 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் இந்திய அணியுடனான பெர்த் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 413 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அவுஸ்திரேலிய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்துள்ளது. இந்திய அணி தனது 2 ஆவது இனிங்ஸில் 294 ஓட்டங்களைப் பெற்றதுடன் முதல் இனிங்ஸில் கூடுதலாக 118 ஓட்டங்களையும் பெற்றிருந்தது. இந்திய - அவுஸ்திரேலிய அணிகளிடையே 3 ஆவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இனிங்ஸில் இந்தியா 330 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய அவுஸ்திரேலிய அணி முதல் இனிங்ஸில்…
-
- 6 replies
- 1.5k views
-
-
பெர்த் டெஸ்ட் மூலம் அவுஸ்திரேலியா பல்வேறு சிறப்புக்களையும் இழந்தது [21 - January - 2008] [Font Size - A - A - A] பெர்த் டெஸ்டின் 3 ஆவது நாளில் அவுஸ்திரேலியா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. 2 ஓவர்கள் வீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதையடுத்து அந்த அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அபராதம் விதித்துள்ளது. கப்டன் என்ற முறையில் பொண்டிங்குக்கு 20 சதவீதமும் மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் போட்டிக் கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது. பறிபோன சிறப்புகள் பெர்த் டெஸ்டில் தோல்வியடைந்ததன் மூலம் அவுஸ்திரேலியா நீண்ட காலம் தக்க வைத்திருந்த பல அரிய சிறப்புகளை இழந்திருக்கிறது. * பெர்த் மைதானத்தில் 10 ஆண்டுகளுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெர்த் மண்ணில் ஆஸ்திரேலியாவை புரட்டிப் போட்ட 21 வயது பவுலர்! டிவில்லியர்ஸ் இல்லை, ஸ்டெயினுக்கும் காயம், அணியின் நிலைமையோ மோசம். ஆனால் நாங்கள் மனம் தளர்ந்துவிட மாட்டோம் எனச் சொல்லி ஆஸ்திரேலியாவுடனான மேட்சை தலைகீழாக திருப்பிப்போட்டு ஜெயித்திருக்கிறது தென்னாப்பிரிக்கா. ஆஸ்திரேலியா நாட்டுக்கு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வந்திருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில், கடந்த வியாழன் அன்று புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. எகிறும் பவுன்சர்கள், ஏகோபித்த ஆதரவுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய வீரர்கள், ஆதரவுக்கு அற்புதமான பேட்ஸ்மேனும் இல்லை என்ற நிலையில் முதல் இன்னிங்ஸில் 32/4 என ஒடுங்கியது தென்னாபிரிக்கா. ம…
-
- 2 replies
- 553 views
-
-
பெர்த்தில் ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷிடம் கவுதம் கம்பீர் தீவிர பயிற்சி ஜெப் மார்ஷ், ஜஸ்டின் லாங்கர், கவுதம் கம்பீர். இந்திய அணியில் மீண்டும் நுழைய தீவிரமாக முயற்சி எடுத்துவரும் கவுதம் கம்பீர், இதற்காக, ஆஸ்திரேலியா சென்று ஜஸ்டின் லாங்கர், மற்றும் ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவில், “பெர்த்தில் ஜெஃப் மார்ஷ், மற்றும் லாங்கருடன். மிகச்சிறந்த மனிதர்கள், என்னை வரவேற்றனர். பயிற்சிக்காக நான் இங்கு இருக்கக் காரணமான இருவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் அவர் தனது பயிற்சி முறைகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கலப்பு போர்க்கலைகள…
-
- 0 replies
- 371 views
-
-
பெறுபேறுகள் தொடர்பாக மத்தியூஸ்: திரிமான்ன தொடர்பில் மௌனம் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை. இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான குசால் மென்டிஸ், 6 இனிங்ஸ்களில் 31.20 என்ற சராசரியில் 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது, இலங்கை சார்பாக இத்தொடரில் பெறப்பட்ட 3ஆவது அதிக ஓட்டங்களாகும். இத்தொடரில் இலங்கையின் நாயகனாகத் தெரிவான கௌஷால் சில்வா, 193 ஓட்டங்களைப் பெற்றதோடு, ட…
-
- 0 replies
- 323 views
-