விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
வடமாகான பாடசாலைகளுக்கு இடையிலான 19வயதின் கீழ் கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ் மத்திய கல்லூரி சம்பியனானது யாழ்இந்துக்கல்லூரியை இறுதி போட்டியில் சந்தித்த யாழ்மத்தி 51-60 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. முகநூல் யாழ் மத்திய கல்லூரி
-
- 0 replies
- 429 views
-
-
யாழ் மத்திய கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த கிறிக்கற் போட்டியில், ஒரு இன்னிங்ஸ் 4 விக்கற்றுகள் மற்றும் 130 மேலதிக ஓட்டங்களால் யாழ் மத்திய கல்லூரி வெற்றியீட்டியது.. நாணயச் சுழற்சியில் துடுப்பெடுத்தாடலை தெரிவு செய்த சென். பற்றிக்ஸ் அணியினர் 40 ஓவர்களில் சகல விக்கற்றுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றிருந்தனர். அணி சார்பாக விளையாடிய வீரர் அருள்ராஜ் அதிகப்படியாக 21 ஓட்டங்களை பெற்றிருந்தார். களத்தடுப்பில் இருந்த மத்திய கல்லூரி அணியின் சார்பில் விதுசனின் பந்து வீச்சில் 4 விக்கற்றுகளையும் இயலரசனிடம் 3 விக்கற்றுகளையும் நிதுசன் மற்றும் வியாஸ்காந்த்திடம் தலா ஒவொவொரு விக்கற்றுகளையும் இழந்திருந்தனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி …
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் மத்திய கல்லூரி வெற்றி யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கம் நடாத்திய 19 வயது பிரிவினருக்கான 20 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட துடுப்பாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில் யாழ் மத்திய கல்லூரியும் _ மானிப்பாய் இந்துக்கல்லுரியும் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் மோதிக்கொண்டது. இதில் * யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி * அணி வெற்றியை தனதாக்கிக்கொண்டது ...... MHC 138 JCC 139/8 நன்றி. யாழ் மத்திய கல்லூரி முகநூல்
-
- 0 replies
- 418 views
-
-
யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ் மாவட்ட கிரிக்கெட்டில் புதிய முயற்சி “ ஜெப்னா சுப்பர் லீக்” யாழ். மாவட்டத்தில் கழகமட்ட கிரிக்கெட் விளையாட்டினை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தும் நோக்குடன் T20 லீக் போட்டித் தொடர் ஒன்றினை யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினர் ஏற்பாடு செய்துவருகின்றனர். “Jaffna Super League” என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த போட்டித் தொடரிற்கு யாழ் மாவட்டத்தின் பிரதான நகரங்களை மையமாகக்கொண்ட 08 அணிகள் உருவாக்கப்படும். போட்டித் தொடரில் அணியின் உரிமையாளராக ஆர்வமுள்ளவர்கள் தமது கேள்வித் தொகையினை யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினரிடம் முன்வைக்க வேண்டும். கேள்வித் தொகையின் அடிப்படையில், அதிகூடிய தொகையினை முன்வைத்த முதல் 08 விண்ணப்பதாரிகளும் அணிகளின் உரிமையாளர்…
-
- 0 replies
- 514 views
-
-
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற…
-
- 0 replies
- 353 views
-
-
அதிபர் சபாலிங்கதிற்கு அருகில் இருப்பவர் யோகி ,அவர் நேர் பின்னே பெனியனுடன் நிற்பவர் பொன்னம்மான் .
-
- 2 replies
- 590 views
-
-
யாழ் வீராங்கனை எழிலேந்தினியின் கன்னிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி நான்கு அணிகள் பங்கு கொள்ளும் நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரில் இன்று இலங்கை அபிவிருத்தி அணியை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை தேசிய அணியினர் தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். அதேபோன்று, இன்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் சிங்கப்பூர் தேசிய அணி இங்கிலாந்தின் PSTAR கழக அணியினரை இலகுவாக வெற்றி கொண்டனர். சிங்கப்பூர் எதிர் PSTAR இன்றைய முதல் மோதலாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் அனுபவம் கொண்ட சிங்கப்பூர் வீராங்கனைகள் PSTAR அணியினருக்கு பெரும் அழுத்தமாகவே இருந்தனர். போட்டி ஆரம்பித்தது முதல் ஆதிக்கம்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…
-
- 0 replies
- 611 views
-
-
யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. முதலாவது போட்டியாக கரம் போட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ். இராணுவ நீதிமன்ற மைதானத்திலும், கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ். குருநகர் பாடுமீ ன் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென். அன்டனி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி நாயன்மார்க்கட்டு பாரதி வ…
-
- 0 replies
- 350 views
-
-
யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் ஓர் அம்சமான அரை மரதன் போட்டிகளின் வரிசையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முதலாம் சுற்றின் முதலாம் கட்ட அரை மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் வித்தியாலய மாணவன் சிவநாதன் கிந்துஷன் முதலாம் இடத்தைப் பெற்றார். பெண்கள் பிரிவில் முல்லைத்தீவு உடையார்கட்டு மகா வித்தியாலய மாணவி சுப்பிரமணியம் சுடர்மதி வெற்றிபெற்றார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கின் நுழைவாயிலுக்கு அருகில் நேற்றுமுன்தினம் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான 21.5 கிலோ மீற்றர் தூரம்கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டி யாழ். நகர் ஊடாக க…
-
- 0 replies
- 555 views
-
-
யாழ்ப்பாணம் இந்து மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையேயான "சிவகுருநாதன் கிண்ணத்துக்கான" இருநாள் மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆனந்தாக்கல்லூரி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நடைபெறுகிறது. யாழ் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும் ஆனந்தா கல்லூரியின் முன்னாள் ஆசிரியருமான வீ.ரீ.எஸ். சிவகுருநாதன் ஞாபகார்த்தமாக இப்போட்டிக்கு சிவகுருநாதன் கிண்ணப் போட்டி என பெயரிடப்பட்டுள்ளது. 3 ஆவது தடவையாக இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. இதற்கு முன் நடைபெற்ற இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு தடவைவென்றமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&am…
-
- 20 replies
- 1k views
-
-
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர். வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர். முதுநிலைப்பிரிவில் முதலாமிடத்தை எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன…
-
- 3 replies
- 607 views
-
-
யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடரில் 25 தொடக்கம் 30 வயது பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணம் சார்பாக யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போன்றவற்றில் தங்கப் பதக்கத்தையும் 4× வீராங்கனைகள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6284&cat=3
-
- 8 replies
- 1.2k views
-
-
யாழ். இந்துவிடம் வீழ்ந்தது கொக்குவில் இந்து யாழ். மாவட்ட பாடசாலைகளின் துடுப்பாட்டச் சங்கத்தால் 19வயதுக்குட்டபட்ட அணிகளுக்கிடையே நடத்தப்பட்டு வரும் ரி-20 தொடரில் கொக்குவில் இந்துக்கல்லூரியை 6 இலக்குகளால் வீழ்த்தியது யாழ். இந்துக்கல்லூரி. நேற்று முன்தினம் சனிக்கிழமை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் இந்துக் கல்லூரி 20 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. அதிக பட்சமாக தனுசன் 36 ஓட்டங்களையும், கீர்தனன் 19 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் யாழ். இந்துக் கல்லூரி அணி சார்பில் எஸ்.துவாரகன், சந்துரு இருவரும் தலா 2 இலக்குகளையும் எம்.துவாரகன், சிவலக்சன், பிரகலாதன் மூவரும் தல…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ். இளைஞர்களுக்கு கிடைத்த அதிஷ்டம்! இலங்கை கிரிக்கெட் அணியில் சேர்ப்பு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியினருக்கு எதிரான போட்டியில் விளையாடும், 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ். மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான தெரிவுகள் கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ் மத்திய கல்லூரி வீரர்களான மதுஷன் மற்றும் விஜாஸ்காந் ஆகியோரே 19 வயதுக்கு உட்பட்ட இலங்கை அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்துள்ளார்கள். குறித்த இரண்டு வீரர்களும் வடமாகாண அணி சார்பில் பிரகாசித்த நிலையில், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 852 views
-
-
இலங்கை வாழ்வியலுக்குள்ளே விளையாட்டையும் விதைத்து விளைவிக்கும் தேசம். இங்கு 'பார்க்கும் இடத்தில் எல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி' என்று பாரதி பாடியது போல எம்மவர்களுக்குப் பார்ப்பதெல்லாம் பந்தாகவே தெரிவதுண்டு. படிக்கும் புத்தகங்களும் பேப்பர்களும் கூட துடுப்பு மட்டையாகவும் பந்தாகவும் மாறிவிடும் மாயாஜாலங்கள் அடிக்கடி காணக்கிடைப்பதுண்டு. வடக்கின் கரையோரப்பகுதிகளில் சீரான தூரத்தில் இருக்கும் பனைகளை பழைய மீன்வலைகொண்டு இணைத்து உருவாக்கப்பட்ட கரப்பந்தாட்டக்கூடங்கள் ஏராளம் உள்ளன. இன்றளவில் இலங்கை முழுவதும் கிரிக்கெட் பேசப்படுகிறது. ஒரு யாழ் வீரனின் அறிமுகம் சர்வதேசத்தால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் தேசிய விளையாட்டு என்று மார்தட்டப்படும் கரப்பந்தாட்டத்திற்கு…
-
- 0 replies
- 546 views
-
-
Published By: Vishnu 05 Mar, 2025 | 10:56 PM (நெவில் அன்தனி) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான மிகவும் விறுவிறுப்பான 118ஆவது வடக்கின் சமர் மாபெரும் வருடாந்த 3 நாள் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை வியாழக்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி கடந்த வாரம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் திடீரென சீரற்ற காலநிலை நிலவியதால் பிற்போடப்பட்டிருந்தது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 19 வயதுக்குபட்ட ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இருவர் இந்த இரண்டு கல்லூரி அணிகளிலும் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும். சென். ஜோன்ஸ் அணியில் இடம்பெறும் வலதுகை வேகப்பந்துவீச்சாளர் குகதாஸ் மாத…
-
- 4 replies
- 480 views
- 1 follower
-
-
10 JUN, 2025 | 06:04 PM யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் 175வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் விளையாட்டு விழாவின் T-10 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 7, 8 ஆகிய திகதிகளில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாளை 11ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் இறுதிப்போட்டி நிறைவு பெறவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நடைபெற்றது. வட மாகாணத்தைச் சேர்ந்த 14 அணிகள் பங்குபற்றும் இந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வானது கல்லூரியின் அதிபர் அருட்திரு A.P. திருமகன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லுரியின் புகழ்பூத்த விளையாட்டு வீரர் யூவான் ரைற்றஸ் அவரது பாரியாருடன் …
-
- 1 reply
- 175 views
- 1 follower
-
-
யாழ். பல்கலை மூன்றாமிடம் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வலைபந்தாட்டத் தொடரில் யாழ். பல்கலைக் கழகத் துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரின் மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் யாழ்.பல்கலைக் கழக அணியை எதிர்த்து கொழும்புபல்கலைக்கழக அணி மோதிக் கொண்டது. இதில் யாழ். பல் கலைக்கழக அணி 45:41 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று மூன் றாம் இடத்தை தனதாக்கிக் கொண்டது. http://www.onlineuthayan.com/sports/?p=752 சம்பியனானது ஜெயவர்த்தனபுர பல்கலை September 08, 2015 அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டத் தொடரில் பெரதெனிய பல்கலைக்கழக அணியை …
-
- 0 replies
- 956 views
-
-
(புதியவன்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின்வெள்ளிவிழா உதைபந்தாட்டத்தில் யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரி சம்பியனானது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் இருபத்தைந்தாவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, பாடசாலைகளுக்கு இடையில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் போட்டியின் இறுதியாட்டம் கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதியாட்டத்தில் சென். பற்றிக்ஸ் கல்லூரியை எதிர்த்து சென்.ஹென்றீஸ் கல்லூரி மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் இரு அணிகளும் குறிப்பிட்ட நேரத்துக்குள் கோல் எதையும் போடாமையால் ஆட்டம் சம நிலையில் முடிந்தது. இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற…
-
- 0 replies
- 546 views
-
-
யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் …
-
- 0 replies
- 345 views
-
-
யாழ். மண்ணின் முன்னாள் வீராங்கனையும் வீரரும் தேசிய விளையாட்டு விழா தீபத்தை ஏற்றவுள்ளனர் 2016-09-26 12:10:41 (நெவில் அன்தனி) யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவுக்கான தீபத்தை ஏற்றும் சந்தர்ப்பம் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தேசிய விளையாட்டு வீராங்கனை ஒருவருக்கும் வீரர் ஒருவருக்கும் கிடைத்துள்ளது. இலங்கை வலைபந்தாட்டம் மற்றும் மகளிர் கூடைபந்தாட்ட அணிகளில் இடம்பெற்றவரும் வலைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவி மற்றும் ஆசியாவின் முன்னாள் அதி சிறந்த கோல்போடும் வீராங்கனையுமான ஜயன்தி சோமசேகரம் டி சில்வாவுக்கு விளையாட்டு விழா தீபத்தை ஏற்றும் அரிய சந்தர்ப்ப…
-
- 0 replies
- 373 views
-
-
ஆரம்பமானது வடக்கின் பெரும் சமர்! வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372617
-
- 8 replies
- 865 views
- 1 follower
-
-
யாழ். வீரன் அவுஸ்திரேலியாவில் சாதனை ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 22:02 1 COMMENTS (கு.சுரேன்) அவுஸ்திரேலியா, மெல்பேர்ன் நகர் அல்பேர்ட் பார்க்கில் நடைபெறும் விக்டோரியா விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வீரன் இரத்தினசிங்கம் செந்தூரன் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார். இந்த போட்டி, அவுஸ்திரேலிய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் 1.95 மீற்றர் உயரம் பாய்ந்து, செந்தூரன் இரண்டாமிடத்தை பெற்றார். இவர் தேசிய கனிஸ்ட பிரிவு உயரம் பாய்தலில் 1.92 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனை நிகழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் விகேடாரியா மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் பங்…
-
- 23 replies
- 1.9k views
-