விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
Olga Fikotova: காதலால் தேசங்களைக் கடந்த ஒலிம்பிக் வீராங்கனை - கெளரவித்து அழகு பார்த்த அமெரிக்கா 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1956. உலகம் அமெரிக்கா மற்றும் ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யா என இரு பெரும் நாடுகளுக்குப் பின் வரிசை கட்டி நின்று கொண்டிருந்த கால கட்டமது. இன்று செக் குடியரசாக இருக்கும் நாடு, அன்று செக்கோஸ்லோவாக்கியாவாக இருந்தது. அந்நாட்டைச் சேர்ந்த சுமார் ஆறு அடி உயரம், அஜானுபாகுவான தோற்றம் கொண்ட ஒரு பெண் மருத்துவ கல்லூரி மாணவிக்கு விளையாட்டின் மீது அதீத காதல் இருந்தது. அவர் பெயர் ஓல்கா ஃபிகொடோவா (Olga Fikotova). கல்லூரியில் படித்த கொண்டிருந்த போது வட்டு எறித…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
வனிந்து பந்து வீச்சில் மிரட்ட இந்தியாவை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை இந்திய அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2-1 என தொடரைக் கைப்பற்றியது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் பங்கேற்று விளையாடுகின்றது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-1 என சமநிலை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி …
-
- 6 replies
- 981 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக்: மேரி கோமின் தோல்விக்காக இந்தியா ஏன் வருந்துகிறது? இது இவரது கடைசி ஒலிம்பிக்கா? வந்தனா பிபிசி இந்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஒன்பது ஆண்டுகளாக மேரி கோமுக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே இருந்தது. இரண்டு முறை குத்துச்சண்டையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையைப் பெற வேண்டும். 2012, லண்டன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு டோக்யோவிலும் வெல்ல அவர் கடுமையாக உழைத்து வந்தார். ஆனால் இன்று அவர் கொலம்பியாவைச் சேர்ந்த போட்டியாளரிடம் தோற்று ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார். இந்த ஒலிம்பிக் தோல்வி அ…
-
- 0 replies
- 261 views
- 1 follower
-
-
சிமோன் பைல்ஸ்: 6 ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை இறுதி போட்டியில் இருந்து விலகியது ஏன்? 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAURENCE GRIFFITHS/GETTYIMAGES படக்குறிப்பு, மனத் தடை நீங்கி, மன நலம் காத்து... அமெரிக்க ஜிம்னாஸ்ட்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ் தனது மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்ததற்காக பாராட்டப்படுகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் அணி இறுதிப் போட்டியில் இருந்து பைல்ஸ் வெளியேறிவிட்டார். அமெரிக்க ஒலிம்பிக் அணித் தலைவர், பல ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் பிற விளையாட்டு வீரர்களும் பைல்ஸின் இந்த முடிவை மனம்திறந்து ஆதரித்துள்ளனர். தனது மன ஆரோக்கிய…
-
- 0 replies
- 493 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக் 2020: இரண்டே வீரர்களை அனுப்பி தங்கப் பதக்கத்தை வென்ற குட்டி நாடு 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ளோரா டஃப்பி வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. அந்த நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். 33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன்னதாக 2008-ஆண்டு பெய்ஜிங், 2012-ஆம் ஆண்டு லண்டன், 2016-ஆம் ஆண்டு ரியோ என மூன…
-
- 1 reply
- 356 views
- 1 follower
-
-
டோக்யோ ஒலிம்பிக்கில் பிகினி அணிய மறுத்த ஜெர்மனி ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள்: காரணம் என்ன? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஜெர்மனி பாவ்லின் உடலை வளைத்து ஆடும் ஜிம்னாஸ்டிக் போட்டிகள் பெண்களின் உடலை பாலியல் ரீதியில் காட்டும் கண்காட்சியாக மாறிவிட்டது என்று கலகக் குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள். ஜிம்னாஸ்டிக் போட்டிகள் தங்களது திறனைக் காட்டுவதற்காகத்தானே தவிர தங்களது உடல் வனப்பைக் காட்டுவதற்கு அல்ல என்று தீர்க்கமாக முடிவெடுத்த அவர்கள் முதல் கட்டமாக தங்களது உடை மூலமாக எதிர்ப…
-
- 2 replies
- 632 views
- 1 follower
-
-
ஒலிம்பிக்கில் தடம் பதிக்கும் ஏதிலிகள் : ‘ஏதிலிகள் ஒலிம்பிக் அணி‘யும் அதன் வரலாறும் ஜப்பானில் தொடங்கியிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏதிலிகள் அணி சார்பாக 29 தடகள் வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் உலகமெங்கும் இடம்பெயர்ந்துள்ள 82 மில்லியன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். போர், பயங்கரவாதம், வறுமை, வன்முறை என பல காரணங்களுக்காக தங்கள் தாய்நாட்டை பிரிந்து வேறு ஒரு நாட்டுக்கு அடைக்கலம் நாடி செல்பவர்களே ஏதிலிகள். எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை சுமூகமாக கடத்தி செல்லும் நோக்கத்திற்காகவே ஏதிலிகள் புகலிடம் தேடி செல்வது உண்டு. இந்த நிலையில் ஏதிலிகளும் ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாட செய்யும் நோக்கில் உருவாக்கப…
-
- 0 replies
- 441 views
-
-
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற 13 வயதுடய ஜப்பானிய வீராங்கனை திங்கட்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஒலிம்பிக் ஸ்கேட்போர்ட் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த மோமிஜி நிஷியா வெற்றி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் மூலம் அறிமுகமான "ஸ்கேட்போர்ட்டிங்" விளையாட்டின் முதலாவது தங்கப்பதக்கத்தை ஜப்பான் நாட்டின் இளம் வீரர் யூட்டோ ஹொரிகோம் வென்ற ஒரு நாள் கழித்து, ஒசாக்காவைச் சேர்ந்த 13 வயதுடைய நிஷியா ஜப்பானுக்கு மீண்டும் தங்க பதக்கம் பெற்றுக் கொடுத்துள்ளார். நிஷியா 15.26 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு ஜப்பானிய வீராங்கனையான 16 வயதுடைய ஃபூனா நகயாமா 14.49 மதிப் பெண்களுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேநேரம் பிரேசில் நாட்டைச் சேர்ந்த 13 வயதான ரெய்…
-
- 4 replies
- 724 views
-
-
ஒலிம்பிக் 2020 பதக்கங்களின் எண்ணிக்கை Countries Athletes …
-
- 50 replies
- 3.1k views
- 1 follower
-
-
1950 களில் நடந்த ஓலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியவர் யாழ் இளவாலையை சேர்ந்த எதிர்வீரசிங்கம் அவர்கள் 50களில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் பங்கு பற்றி இருந்தார் 1958 ஆண்டு டோக்கியோவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலுக்கான தங்க பதக்கத்தை பெற்றிருந்தார் இது தான் இலங்கை வாங்கிய முதல் கோல்ட் மெடல் என்று சொல்லபடுகிறது இவர் யாழ் மத்திய கல்லூரியின் பழைய மாணவனுமாவார் இவர் போட்டிகளில் பங்குபற்றிய நேரத்தில் இருந்த தோற்றம் புகைபடத்தில்
-
- 0 replies
- 714 views
-
-
ஆரவாரமற்ற டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா : இன்றுமுதல் பதக்க வேட்டை ; நம்மவர்களும் களத்தில் டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத் கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது. உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்க…
-
- 0 replies
- 417 views
-
-
டெரிக் ரெட்மண்ட்: பதக்கம் வெல்லவில்லை, 65,000 இதயங்களை வென்றார் - தந்தையோடு ஒலிம்பிக் டிராக்கில் ஓடிய தருணம் கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விளையாட்டு வீரர்களின் கனவுகளை ஒன்றன் மீது ஒன்றாக பட்டியலிட்டால் உச்சியில் ஒரு கனவு நிச்சயம் உண்டு. அக்கனவின் பெயர் ஐவண்ண வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக்ஸ். அக்கனவுக்கு அவர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 'தவம்' என குறிப்பிட்டால் அது மிகையல்ல. ஆண்டுக் கணக்கில் மேற்கொள்ளப்படும் தவங்களுக்கு, பல நேரம் பதக்கங்கள் என்கிற வரம் கிடைப்பதில்லை. அப்படி பதக்கங்களை வெல்லாமல், இதயங்களை வென்ற டெர…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
கொவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் டோக்கியோ ஒலிம்பிக் (ஜெ.அனோஜன்) நவீன வரலாற்றில் மிகவும் சிக்கலான 2020 ஒலிம்பிக் போட்டிகள் இறுதியாக வெள்ளிக்கிழமை டோக்கியோவில் தொடக்க நிகழ்வுகளுடன் ஆரம்பமாகவுள்ளது. ஒலிம்பிக்கின் கோலாகல தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் இன்று மாலை ஆரம்பமாகும். தொடக்க விழா 3 மணி நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டத்திற்கு துளியும் பஞ்சம் இருக்காது. ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். …
-
- 0 replies
- 470 views
-
-
ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் பதவி நீக்கம் 'ஹோலோகாஸ்ட்' குறித்த கடந்தகால சர்ச்சைக்குரிய கருத்துக்களினால் ஒலிம்பிக் தொடக்க விழாவின் பணிப்பாளர் கென்டாரோ கோபயாஷி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்புக் குழு வியாழக்கிழமை தெரிவித்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நாளை ஆரம்பமாவுள்ள நிலையில் இந்த பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. ஹோலோகாஸ்ட் தொடர்பில் கென்டாரோ கோபயாஷி 1990 களில் கூறிய காட்சிகள் அண்மையில் வெளியாகின. அதில் அவர் ஹோலோகாஸ்ட் பற்றி நகைச்சுவையாக பேசுவது தெரியவந்துள்ளது. கோபயாஷியின் இக் கருத்துக்கள் சைமன் வைசெந்தால் மையம் உட்பட பல்வேறு தரப்பின் விமர்சனங்களை எழுப்பயதுடன், இது நகைச்சுவை நடிகரான கோபயாஷியின் யூத எதிர்…
-
- 0 replies
- 341 views
-
-
2032ம் ஆண்டுக்கான... "ஒலிம்பிக்" அவுஸ்ரேலியாவின், பிரிஸ்பேன் நகரில் நடைபெறும். 2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பாராலிம்பிக் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1956 இல் மெல்போர்ன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிட்னி என அவுஸ்ரேலியா ஏற்கனவே இரண்டு முறை ஒலிம்பிக் தொடரை நடத்தியுள்ளது. https://athavannews.com/2021/1229901
-
- 3 replies
- 368 views
-
-
போட்டிகள் இரத்து செய்யப்படுமா? - கேள்வியை நிராகரிக்காத டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் விளையாட்டுகள் இறுதி நிமிடத்தில் இரத்து செய்யப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவித் தலைவர், அதனை நிராகரிக்காது பதிலளித்துள்ளார். வெள்ளிக்கிழமை (ஜூலை 23) ஆரம்பமாகவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழவிற்கு முன்னதாக விளையாட்டுகளுடன் தொடர்புடைய 70 க்கும் மேற்பட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். இந் நிலையில் திட்டமிடப்பட்ட போட்டிகள் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்படுமா என டோக்கியே ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தோஷிரோ முட்டோவிடம் செவ்வாய்க்கிழமை கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அந்…
-
- 0 replies
- 256 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்: மூன்று இந்திய மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக்கை எட்டிப்பிடித்த கதை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP டோக்கியோவிலிருந்து பதக்கங்களைக் கொண்டு வரக்கூடிய இந்திய மல்யுத்த வீரர்களின் சொந்த வாழ்க்கை, யுத்த களத்தின் போராட்டத்துக்கு சளைத்தது அல்ல. பல தசாப்தங்களாக ஹாக்கி தவிர மற்ற விளையாட்டுகளில் ஒலிம்பிக் பதக்கத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் இந்தியாவின் நிலை கடந்த சில ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. இந்த முறை இந்தியாவின் பல வீரர்கள் ஒலிம்பிக் பதக்கங்களை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர்களில், ஹரியானாவைச் சேர்ந்த மூன்று மல்யுத்த வீரர்களின் கதை மிகவும் சுவாரஸ்யமானது…
-
- 2 replies
- 501 views
- 1 follower
-
-
விம்பிள்டன் 2021 ; பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச் 2021 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், மேட்டியோ பெரெட்டினியை வீழ்த்தி 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் ஆம் நிலை வீரருமான இத்தாலியின் மேட்டியோ பெரெட்டினியும் மோதினர். 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், 34 வயதான ஜோகோவிச் 6-7,6-4,6-4 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வ…
-
- 0 replies
- 423 views
-
-
-
- 0 replies
- 746 views
-
-
2021விம்பிள்டன்: கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஆஷ்லீ பார்டி 2021 விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ஆஷ்லீ பார்டி, கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் மோதினர். ஒரு மணி நேரம், 56 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்டி 6-3 6-7 (4-7) 6-3 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றார…
-
- 0 replies
- 521 views
-
-
விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ்: ஜோகோவிச்- பெரெட்டினி ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்! விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும். ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதன்படி தற்போது ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம், 1.ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பிய…
-
- 0 replies
- 447 views
-
-
ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் வியாழக்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வாரியம் இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவு முறையான வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவில்லை, ஆனால் குழுவில் உள்ள எந்தவொரு பணிப்பாளரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில், ஐ.சி.சி வாரியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் தலைமைக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் கடமைகளை பெறுப்பேற்பார் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது. சக ஊழியர்களுட…
-
- 0 replies
- 386 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கும் தடை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைப்பாளர்கள் தடை செய்துள்ளனர். அரசியல் அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, வியாழக்கிழமை தலைநகருக்கு நான்காவது அவசரகால நிலையை அறிவித்த பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, டோக்கியோ ஒலிம்பிக்கை பார்வையிடுவதற்கான ரசிகர்களின் இறுதி நம்பிக்கையை இல்லாது செய்தது. ஜப்பானிய சுகாதார அமைச்சர் நோரிஹிசா தமுரா, விளையாட்டு வீரர்களுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்ததுடன், எனினும் இந்த முடிவு சரியானது என்றும் கூறி…
-
- 0 replies
- 573 views
-
-
மிதாலி ராஜ்னா எனக்கு எப்போதுமே பிடிக்கும். ஆண்களுக்கு மட்டுமே என்னமோ உரியது ஒன்றாகி.. என்னமோ அவர்கள்தான் கிரிக்கெட்டில் சாதிக்க பிறந்தவர்கள்போல் தென்னாசியாவில் உருவான ஒரு பிம்பத்தை உடைத்தவ/உதைத்தவ... மித்தாலி.’ இது 58 அரை சதம் மிதாலிக்கு ஆண்களே ஹீரோவாக புகழபடும் கிரிக்கெட் உலகத்தில், மிதாலி ஒரு பொம்பள விராத்கோலி. இங்கிலாந்து உடனான தொடரில் ஆறுதல் வெற்றியாவது இந்தியா பெற்றிருந்தாலும், அந்த தொடர் முழுவதும் பொம்பள சிங்கமா முடிந்த அளவிற்கு பங்களிப்பு வழங்கினா மிதாலி... ஆறுதல் வெற்றிக்கு அவங்களே பெரிய பங்களிப்பு வழங்கினா... அரசியல், எல்லைகள், பொம்பள, ஆம்பள வேறு பாடுகளுக்கப்பால் இந்த மாபெரும் திறமைசாலிய , எனக்கு மிகவும் பிடிக்கும்.
-
- 4 replies
- 1.1k views
-
-
இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=146588
-
- 0 replies
- 813 views
-