விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
2021 - டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்கள் கலந்துகொள்வார்கள் - சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் 2021 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பார்வையாளர்களால் கலந்து கொள்ள முடியும் என்ற மிகுந்த நம்பிக்கை இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகத்தின் தலைவர் தோமஸ் பாக் தெரிவித்துள்ளார். போட்டிகளை காண ரசிகர்கள் வருவதற்கு முன்பு தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்வதில் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் பெரும் முயற்சிகளை முன்னெடுக்கும் என்றும் தோமஸ் பாக் கூறினார். அடுத்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிளை எவ்வாறு நடத்த முடியும் என்பது குறித்து விவாதிக்க அவர் தற்போது ஜப்பானில் உள்ளார். 2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ விளையாட்டுக்கள் முதலில் கடந்த ஜூலை மாதம் தொடங்கவிருந்தன, ஆனால…
-
- 0 replies
- 570 views
-
-
கிரிக்கெட் உலகில் யாருமே அணியாத ஜேர்சியுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. சுதேசிய ஜேர்சி தொடர்பான முழு விபரம் ! விளையாட்டு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி புதியதொரு மேலங்கியுடன் (ஜேர்சி) களமிறங்குகிறது. அதாவது அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய ஜேர்சியுடன் களமிறங்குகிறது. சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய குறித்த ஜேர்சியானது புகழ்பெற்ற 1868 பழங்குடி கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது தேசிய மகளிர் அணியினை முன்னிலைப்படுத்தி…
-
- 2 replies
- 763 views
-
-
எப்படி அவரால் முடிந்தது? தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரல் விளையாட்டு நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி வெற்றிபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இந்த தொடர் முழுக்க நடராஜன் மிகவும் ச…
-
- 2 replies
- 993 views
-
-
விளையாட்டாய் சில கதைகள்: செஸ் பாதி பாக்ஸிங் பாதி செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த 2 விளை யாட்டுகளையும் ஒன்றிணைத்து விளையாடும் செஸ் பாக்ஸிங் போட்டியைப் பற்றி இன்றைய தினம் தெரிந்து கொள்வோம். வீரர்களின் அறிவுத் திறன் மற்றும் உடல் உறுதியை சோதிக்கும் வகையில் செஸ் போட்டியையும், குத்துச்சண்டை போட்டியையும் ஒருங்கிணைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த லேப் ரூபின் என்பவர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் செஸ் பாக்ஸிங் போட்டியைக் கண்டுபிடித்தார். இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் செஸ் மற்றும் குத்துச்சண்டை ஆகிய 2 பிரிவுகளிலும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். இப்போட்டியின் விதிப்படி இதில் பங்கேற்கும் …
-
- 0 replies
- 548 views
-
-
yorker ல் கலக்கி கொண்டிருக்கும் நடராஜனுடன் அஸ்வின் காணும் செவ்வி
-
- 4 replies
- 1.4k views
-
-
ஐபிஎல் 2020: தொடங்குகிறது திருவிழா - முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம், ROBERT CIANFLONE/GETTY IMAGES கொரோனா பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் நடக்கவேண்டிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர், தாமதங்கள் மற்றும் இடர்பாடுகளையும் தாண்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர் என்பதாலும், கொரோனா பொது முடக்கத்துக்கு பிறகு இந்திய அணி வீரர்கள் களமிறங்கும் முதல் தொடர் என்பதாலும், நடப்பு ஐபிஎல் தொடர…
-
- 84 replies
- 9.5k views
-
-
இந்திய அணியில் ரோகித் சர்மாவை சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது - ஷேவாக் வேதனை http://www.thinaboomi.com/sites/default/files/storage/field/image/2020/11/05/thumb-890-395/Shevak-2020_11_05.jpg?itok=1vkPey3C ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது காலில் காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் கேப்டனும், இந்திய அணியின் துணை கேப்டனுமான ரோகித் சர்மா அவசரம் காட்டாமல் நன்றாக குணம் அடைந்த பிறகு களம் திரும்ப வேண்டும் என்று இந…
-
- 0 replies
- 705 views
-
-
-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க ரஷ்ய ஹேக்கர்கள் முயற்சி: அமெரிக்கா- பிரித்தானியா குற்றச்சாட்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்ய ஹேக்கர்கள் செயற்பட்டுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக ரஷ்யாவின் ஜி.ஆர்.யு இராணுவ உளவுத்துறை, இணைய உளவு நடத்தியதாக வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஒலிம்பிக், எதிர்வரும் 2021ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்னர் இந்த தாக்குதல்கள் நடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சைபர் தாக்குதல்களின் தன்மை அல்லது அளவை அதிகாரிகள் விரிவாக குறிப்பிடவில்லை. அதே நேரத்தில், அமெரிக்க நீதித்துற…
-
- 0 replies
- 447 views
-
-
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பக் கலை கடந்த சில ஆண்டுகளாக மலேசிய தமிழர்களிடம் பிரபலமடைந்து வருகிறது. இவர்கள் சிலம்பக் கலையை கற்பது ஏன்? என்ன சொல்கிறார்கள்?
-
- 0 replies
- 701 views
-
-
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிகப்பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவர். ரொனால்டோ ஒரு பல்துறை திறன் கொண்ட தாக்குதல் வீரர், அவரது அதி வேகம், அத்துடன் பலமாக பந்தை உதைக்கும் ஆற்றல் மற்றும் ஆழமான அடிச்சுவடுகள் ஆகியவற்றிற்காக மற்றைய வீரர்களில் இருந்து தனித்து நிற்கிறார். ரொனால்டோ பல நாடுகளில் லீக் பட்டங்களை வென்றுள்ளார். ரொனால்டோ பங்குபற்றிய 292 விளையாட்டுகளில் 311 கோல்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=135112
-
- 1 reply
- 671 views
-
-
ஜோகோவிச்சை வீழ்த்தி சம்பியனானார் நடால் பிரான்ஸ் ஓபன் (பகிரங்க) டென்னிஸ் தொடரின் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் ஜோகோவிச்சை தோற்கடித்து நடால் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஸ்பெயினின் நடால் மோதினர். இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 6-0, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஜோகோவிசை வீழத்தி கிரண்ட்ஸலாம் பட்டம் வென்றார். இது நடால் வெற்றி கொள்ளும் 20 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பதுடன் 13 ஆவது பிரான்ஸ் ஒபன் பட்டமும் ஆகும். https://www.virakesari.lk/article/91869
-
- 3 replies
- 671 views
-
-
ஏனோ சாமானியர்களின் வெற்றி நம்மை அதிகம் மகிழ்விக்கிறது - T Natarajan தான் யார் என்பதை இந்த காணொளியில் கூறுகிறார்!
-
- 1 reply
- 722 views
-
-
தினேஷ் சந்திமால், திசார பெரேரா இராணுவ அதிகாரிகளாக நியமனம்.! இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவ அதிகாரிகளாக இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டனர். இலங்கை கிரிக்கட் அணியின் முன்னணி வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசார பெரேரா ஆகியோர் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவினால் இன்றைய தினம் இவ்வாறு நியமிக்கப்பட்டனர். மேலும் குறித்த இருவரும் தன்னார்வ இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், நியமனத்தில் பின்னர் குறித்த இரு வீரர்களும் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனெரல் சவேந்திர சில்வாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, இ…
-
- 0 replies
- 708 views
-
-
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59 ஆகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் ஒருவராக பணியாற்றும் ஜோன்ஸ் உயிரிழந்த தருணம் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். டீன் ஜோன்ஸ் ஒரு தீவிர கிரிக்கெட் ஆய்வாளராகவும் வார்ணனையாளராகவும் இருந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டித் தொடரின் வர்ணனைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபராக அறியப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 864 views
-
-
இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…
-
- 0 replies
- 894 views
-
-
யாழ் மத்திய கல்லூரியின் அடையாளம் திரு.போல் பிரகலாதன்
-
- 1 reply
- 1.2k views
-
-
முதல் ஒருநாள் போட்டியில் பில்லிங்ஸ் சதம் வீணானது - இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த ஆஸ்திரேலியா அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணியின் ஸ்டோய்னிஸ் 43 ரன்னில் அவுட்டானார். மிட்செல் மார்ஷ் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 73 ரன்னில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 59 …
-
- 1 reply
- 1.2k views
-
-
தர உயர்வு பெற்ற 66 நடுவர்கள் என். ஜெயரட்ணம் இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தால் நடத்தப்பட்ட, கரப்பந்தாட்ட நடுவர்களின் தரப்படுத்தலுக்கான தகுதி காண் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, தர உயர்வு பெற்ற 66 நடுவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம், கடந்த ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, தேசிய விளையாட்டு நிறுவனத்தில், இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன் அடிப்படையில், "சீ" தரத்தில் இருந்து "பீ" தரத்துக்கு சித்தியடைந்த நடுவர்கள் 32 பேருக்கும் "பீ" தரத்தில் இருந்து …
-
- 0 replies
- 738 views
-
-
வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்தை சுவீகரித்தது ஐயனார் விளையாட்டுக்கழகம்.! வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயத்துக்கான மாபெரும் கடினப்பந்து போட்டி இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் ஐயனார் விளையாட்டுக்கழகம் கிண்ணத்தை சுவீகரித்ததுக் கொண்டது. வன்னி பெருநிலப்பரப்பின் சுழற் கேடயம் கிண்ணத்திற்கான கடினப்பந்து துடுப்பாட்ட போட்டியானது, ஐயனார் விளையாட்டுக் கழகத்திற்கும் ஜங்ஸ்ரார் விளையாட்டுக்கழகத்திற்கும் இடையில் தொடர்ச்சியாக நான்காவது வருடமான இடம்பெற்று வருகின்றது. ஐயனார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்று வரும் இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற ஐயனார் விளையாட்டுக்கழக அணியின் தலைவர் அனுசன் களத்தடுப்பை தெரிவு செய…
-
- 0 replies
- 769 views
-
-
`பார்சிலோனா`அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு! August 26, 2020 பிரபல காற்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி (Lionel Messi) தனது ஆஸ்தான அணியான பார்சிலோனாவிலிருந்து (Barcelona) விலக விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய காற்பந்தாட்தத் தொடரில் மெஸ்ஸி தலைமையில் களமிறங்கிய பார்சிலோனா அணி காலிறுதிப் போட்டியில் பேயர்ன் முனிச்சிடம் 8க்கு 2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்நிலையில், இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள கொரோனா பரிசோதனைக்கு தான் வரப்போவதில்லை எனவும், அணியிலிருந்து உடனடியாக விலக விரும்புவதாகவும் பார்சிலோனா அணியின் நிர்வாகத்திடம், மெஸ்ஸி தெரிவித்துள்ளார். இது குறித்து ஆலோசித்து முடிவ…
-
- 1 reply
- 841 views
-
-
-
- 0 replies
- 698 views
- 1 follower
-
-
தோல்வியின் விரக்தி: தலைநகர் பரிஸில் வாகனங்கள் பி.எஸ்.ஜி. இரசிகர்களால் எரிப்பு! சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பிரான்ஸின் பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, தோல்வியடைந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத இரசிகர்கள், தலைநகர் பரிஸில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். டா லூஸ் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மகுடத்திற்கான இறுதிப் போட்டியில், முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணி, ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நகர்ந்த இப்போட்டியில், ஜேர்மனியின் பேயர்ன் முனிச் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்த நிலையில், தலைநகரில் இப்போட்டியைக் காணுவதற்கு ஒன…
-
- 2 replies
- 540 views
-
-
ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’, ‘அர்ஜூனா’, ஆகிய விருதுகளும், சிறந்த வீரர்களை உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு ‘துரோணாச்சார்யா’ விருதும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘தயான் சந்த்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது தமிழக வீரர் மாரியப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016- ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கம் வென்றார். அதேபோல், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்க…
-
- 0 replies
- 533 views
-
-
தேசிய விளையாட்டு சபையின் தலைவராக மஹேல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் மேலும் 13 பேர் குறித்த சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் வைத்து அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ரா…
-
- 0 replies
- 554 views
-