விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7859 topics in this forum
-
மகளிர் பிரீமியர் லீக்: ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன இந்த மதுரை வீராங்கனை யார்? 16 வயதில் எப்படி சாதித்தார்? பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு, கமலினி கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே மகளிருக்கு நடத்தப்படும் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) போட்டிக்கான ஏலத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான ஆல் ரவுண்டரான கமலினியை 1.60 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. கமலினி மதுரை அருகே பொருளாதார ரீதியில் பின்தங்கிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுத்திருப்பதால் இந்திய…
-
-
- 3 replies
- 524 views
- 1 follower
-
-
19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம் : மலேசியாவை வீழ்த்திய இலங்கை, பங்ளாதேஷிடம் தோற்றது 16 DEC, 2024 | 05:23 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூர், பெயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை பெரும்பாலும் அரை இறுதி வாய்ப்பை அண்மித்துள்ளது. இப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. மலேசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற தனது ஆரம்பப் போட்டியில் மிக இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பங…
-
- 3 replies
- 419 views
- 1 follower
-
-
குறைந்த டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள்: அஸ்வின் உலக சாதனை! இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்று அஸ்வின் இலங்கை அணியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். இது, அந்த அணியின் 2-வது இன்னிங்ஸில் அவர் வீழ்த்தும் 4-வது விக்கெட்டாகும் இதையடுத்து டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை எட்டியுள்ளார் அஸ்வின். 31 வயது அஸ்வின், 54-வது டெஸ்டில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு டென்னிஸ் லில்லீ, 56 டெஸ்டுகளில் 300 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதை அஸ்வி…
-
- 3 replies
- 501 views
-
-
ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு 4 படத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார். மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம். படத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES கடந்த ஆண்டு ரோ…
-
- 3 replies
- 920 views
-
-
சிஎஸ்கே வீரர்கள் சென்னை வருகை: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு! (படங்கள்) ஐபிஎல் கிரிக்கெட் 2018 இறுதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சென்னை மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை அணியின் வாட்சன் அதிரடியாக ஆடி 117 ரன்கள் குவித்தார். முன்னதாக ஹைதராபாத் அணி 178/6 ரன்களை எடுத்திருந்தது. நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தத…
-
- 3 replies
- 1.5k views
-
-
நார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை பதம் பார்த்த ஆனந்த் அபார வெற்றி கார்ல்சனை வீழ்த்தினார் ஆனந்த். | படம்: ராய்ட்டர்ஸ். 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், நடப்பு உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 4-வது சுற்றில் வீழ்த்தி நார்வே செஸ் போட்டித் தொடரில் 3-வது இடம் பிடித்தார். இந்தத் தோல்வியினால் கார்ல்சன் கடைசி இடத்துக்குச் சென்றார். முதல் 3 போட்டிகளில் டிரா செய்த ஆனந்த், இந்த முறை வெற்றிக்காக முனைப்பு காட்டி ஆடினார். வெள்ளைக்காய்களில் தனது நகர்த்தலிலும் தடுப்பாட்டத்திலும் சாதுரியம் காட்டிய ஆனந்த் வெற்றியைச் சாதித்தார். வெள்ளைக்காய்களுடன் ஆடிய ஆனந்த் தொடக்கத்தில் பழைய கால தடுப்பு உத்தியை மேற்கொண்டர். அதாவது தொடக்கத்தில் ராஜாவுக்கு நேராக உள்ள சிப்பாயை 2 கட்டங்கள் நக…
-
- 3 replies
- 443 views
-
-
ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகள்... 13 வயது சிறுவன் சாதனை! இங்கிலாந்தைச் சேர்ந்த சிறுவன் ஒரே ஓவரில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லூக்கா ராபின்சன். இவர் அங்கு 13 உட்பட்டோருக்கான கிளப் கிரிக்கெட்டில், பிலடெல்பியா கிரிக்கெட் கிளப் என்ற அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், அங்கு மற்றொரு கிளப் அணிக்கு எதிரானப் போட்டி ஒன்றில், ஒரு ஓவரில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் ராபின்சன். குறிப்பாக, ஆறு விக்கெட்டுகளுமே க்ளீன் போல்ட். ராபின்சனின் அதிரடி பந்து வீச்சால் அவரது அணி போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது. ராபின்சனின் இந்த சாதனையை அவரது குடும்பத்தினர் அனைவரும் நேரில் பார்த்துள்ளது க…
-
- 3 replies
- 490 views
-
-
-
வங்கதேசத்தில் இந்திய அணி: ஒருநாள் தொடர் நாளை ஆரம்பம் ஜூன் 13, 2014. கோல்கட்டா: மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க, ரெய்னா தலைமையிலான இளம் இந்திய அணி நேற்று வங்கதேசம் சென்றது. இம்மாத இறுதியில் இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, 5 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணி, வங்கதேசத்தில் மூன்று போட்டிகள் (ஜூன் 15, 17, 19) கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. தோனி, கோஹ்லி, அஷ்வின், ரோகித் சர்மா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்திய அணி விளையாடுகிறது. முதல் போட்டி மிர்புரில் நாளை நடக்கிறது. இதற்காக ரெய்னா தலைமையிலான இந்திய அணியினர் கோல்கட்டா…
-
- 3 replies
- 628 views
-
-
மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத…
-
- 3 replies
- 639 views
-
-
செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட நிறைவு விழாவில் பதக்கங்களுடன் குதூகலித்த இளம் வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். …
-
- 3 replies
- 446 views
- 1 follower
-
-
3வது ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 302 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம் செயிண்ட் கிட்சில் நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 302 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது வங்காளதேசம் அணி. #WIvBAN செயிண்ட் கிட்ஸ்: வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒ…
-
- 3 replies
- 567 views
-
-
சென்றல்- சென்.ஜோன்ஸ் ஒருநாள் ஆட்டம் நாளை யாழ்.பரியோவான் கல்லூரிக்கும், யாழ்.மத்திய கல்லூரிக்கும் இடையிலான 13ஆவது தடவையாக இடம்பெறும் 50 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டி நாளை காலை 9 மணிக்கு யாழ்.பரியோவான் கல்லூரி மைத்தானத்தில் இடம்பெறவுள்ளது. இதுவரை நடைபெற்ற 12 போட்டிகளில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி 6 தடவைகளும், மத்திய கல்லாரி 5 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. இம்முறை இடம்பெற்ற 109ஆவது வடக்கின் மாபெரும் போர் துடுப்பாட்டத்தில் யாழ்.பரியோவான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. எனவே நாளை இடம்பெறவுள்ள போட்டியில் மீண்டும் யாழ்.பரியோவான் கல்லூரி வெற்றியை தனதாக்குமா? அல்லது மத்திய கல்லூரி வெற்றி பெறுமா? என்பது நாளை தெரியும். http://yarlsports.com/?p=…
-
- 3 replies
- 518 views
-
-
ஜெர்மனி கால்பந்து அணியில் கலகம்... இனவெறியால் மெசூட் ஒசில் விலகல்! நான் ஒரு கால்பந்து வீரன். அரசியல்வாதி கிடையாது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணி முதல் சுற்றிலேயே தோல்வியைச் சந்தித்தது. `நடப்புச் சாம்பியன்' முதல்சுற்றுடன் நடையைக்கட்ட அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தோல்வி தந்த வலியிலிருந்து விடுபடுவற்குள் அணிக்குள் கலகம் வெடித்துள்ளது. இனவெறி புகார் காரணமாக அந்த அணியின் மிட்ஃபீல்டர் மெசூட் ஒசில் `ஜெர்மனி அணிக்காக இனிமேல் விளையாடப் போவதில்லை' என்று அறிவித்துள்ளார் உலகக் கால்பந்து ரசிகர்களிடையே இந்த அறிவிப்பு அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெசூட் ஒசில் துருக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன? கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 என எல்லா ஃபார்மெட்டிலும் கேப்டனாக இருந்த மனிதர், தற்போது இந்தியாவின் டெஸ்ட் அணிக்கு மட்டுமே தலைவராகத் தொடர்கிறார். அவர் கீழ் விளையாடிய ரோஹித் ஷர்மா தற்போது இந்திய கிரிக…
-
- 3 replies
- 404 views
- 1 follower
-
-
சாதனைகளின் புதிய பெயர் சங்கா நடைபெற்றுவரும் உலகக்கிண்ணம், 'சங்கா கிண்ணம்' என்று புதுப் பெயரால் அழைக்கப்படும் அளவுக்கு இலங்கையின் குமார் சங்கக்காரவின் ஆதிக்கம். கிறிஸ் கெயில் பெற்ற இரட்டைச்சதம், டீ வில்லியர்சின் அபார சதம் என்று ஆரம்பத்தில் கலக்கியவர்களைத் தொடர்ந்து, கடந்த வாரம் சங்கக்காரவின் கலக்கல் என்று முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன். இந்தவாரம் இன்னொரு புதியவரா என்று கேட்ட வினாவுக்கு சங்கக்காரவின் பதிலாக தொடர்ந்து அவர் குவித்துவரும் சதங்களும் சாதனைகளும் அமைந்திருக்கின்றன. 4ஆவது தொடர்ச்சியான சதத்தை நேற்று ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக பெற்ற குமார் சங்கக்கார, உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டுமன்றி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலேயே யாரும் நிகழ்த்தாத ஒரு …
-
- 3 replies
- 763 views
-
-
டிவில்லியர்ஸின் சொந்த ஊரு எந்த "கிரகம்"னே தெரியலையே... ! சென்னை: நிச்சயம் ஆப்ரகாம் டிவில்லியர்ஸின் சொந்த ஊர் இந்த பூமி கிடையாது. வேறு ஏதோ கிரகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் இந்த மனிதர் என்று செல்லமாக அலுத்துக் கொள்கிறார்கள் தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸின் சாதனை முகத்தைப் புகழ்ந்து பேசுகிறவர்கள். காரணம் டிவில்லியர்ஸின் பன்முக திறமைகள்தான். கிரிக்கெட்டில் மட்டுமே அவர் சாதனையாளராக இருக்கவில்லை... தொட்ட இடம் துலங்க வரும் தாய்க்குலமே வருக என்று அடிக்கடி ஜெயா டிவியில் வரும் பாட்டு போல, இவர் தொட்ட இடமெல்லாம் தூள் கிளப்பியுள்ளார். இவரது திறமைகள், சாதனைகள், வெற்றிகளைப் பார்க்கும் யாருக்குமே மனுஷனாய்யா நீ என்று ஆச்சரியம்தான் வரும். அப்படித்தான் இருக்கிறது ட…
-
- 3 replies
- 757 views
-
-
மிரண்டது இந்தியா! வரலாறு படைத்தது அவுஸ்திரேலியா! by G. PragasJanuary 14, 20200713 SHARE1 சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று (14) மும்பையில் இடம்பெற்றது. இந்தப் போட்டியில் அவுஸ்ரேலிய அணி, இந்திய அணியின் வெற்றி இலக்கான 256 ஓட்டங்கள் என்ற இலக்கை வெறும் 37.4 ஓவர்களில் விரட்டியடித்து எந்தவிதமான விக்கெட் இழப்புமின்றி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 255 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பில் சிகார்த் தவான் 74 ஓட்டங்களையும் லோகேஷ் ராகுல் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்ராக் 3…
-
- 3 replies
- 2k views
- 1 follower
-
-
தோனி, அஸ்வினை ஏலத்தில் வசப்படுத்தியது புனே; ராஜ்கோட் அணியில் ரெய்னா, ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மகேந்திர சிங் தோனியும், ரவிச்சந்திரன் அஸ்வினும் வரும் ஐபில் தொடரில் புனே அணிக்காக களமிறங்கவுள்ளனர். சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா இருவரும் ராஜ்கோட் அணிக்காக விளையாடவுள்ளனர். ஐபிஎல் டி 20 தொடரில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரு ஆண்டுகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கு பதிலாக புனே, ராஜ்கோட் அணிகள் தேர்வாகின. புனே அணியின் உரிமையை நியூ ரைஸிங் நிறுவனமும், ராஜ்கோட் அணியின் உரிமையை இண்டெக்ஸ் செல்போன் நிறுவனமும் பெற்றுள்ளன. …
-
- 3 replies
- 755 views
-
-
மிரண்டது இங்கிலாந்து : வொன்டர் கிட் உலகம் முழுக்க சூப்பர் ஹிட்...! இந்தியவை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் ஒரே இன்னிங்சில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் அனைத்து செய்தி தாள்களிலும், விளையாட்டு பக்கங்களை பிரணவ் செய்தி ஆக்கிரமித்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆடி வரும் பிற நாடுகளிலும் அனைத்து பத்திரிகைகளும் பிரணவின் சாதனை குறித்து செய்தி வெளியிட்டு, அவரது திறமையை மெச்சியுள்ளன. இங்கிலாந்தை சேர்ந்த மெயில் ஆன்லைன் பதிப்பில், '' 1009 நாட் அவுட்... பிரிட்டன் வீரரின் 116 ஆண்டு கால சாதனை முறியடிக்கப்பட்டது" என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை அங்கீகரிக்கப்ட்ட போட்டிகளில் பிரிட்டனை சேர்ந்த ஏ.ஈ.ஜே. கோலின்ஸ் அடித்திருந்த 628 ரன்கள்தான…
-
- 3 replies
- 780 views
-
-
ப்றீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வென்றெடுக்க செல்சி கழகத்திற்கு 3 புள்ளிகள் மாத்திரம் தேவை இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பார்க்லேஸ் ப்றீமியர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் சம்பியனாவதற்கு செல்சி கழகத்திற்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி அல்லது மூன்று புள்ளிகள் தேவைப்படுகின்றது. 20 கழகங்கள் பங்குபற்றும் இவ் வருட ப்றீமியர் லீக் போட்டிகளில் இதுவரை 34 போட்டிகளில் விளையாடியுள்ள செல்சி கழகம் 24 வெற்றிகள், 8 வெற்றி தோல்வியற்ற முடிவுகளுடன் 80 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. மென்செஸ்டர் சிட்டி 34 போட்டிகளில் 67 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்திலிருக்கின்றபோதிலும் எஞ்சியுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெ…
-
- 3 replies
- 394 views
-
-
அவுஸ்திரேலிய அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்திரேலிய கிரிக்டெ் அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு இம் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இருபதுக்கு -20 அணிக்கு உப்புல் தரங்க அணித்தலைவராக செயற்படுகின்றார். அதேவேளை, கடந்த ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை அணிய…
-
- 3 replies
- 836 views
-
-
எழிலனின் கனவு நனவானது .. தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினரும் தமது கணவருமான எழிலனின் கனவை தமது பிள்ளைகள் நனவாக்கியுள்ளதாக அனந்தி சசிதரன் நெகிச்சியுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 2007/2008 என்கணவரின் விருப்பத்திற்கு அமைய எங்கள் பிள்ளைகளிற்கு கிளிநொச்சியில் இருந்த தமிழீழ விளையாட்டு கழகத்தினரல் நடாத்தப்பட்ட கராத்தே பயிற்சியை வழங்கியிருந்தேன். போரிற்கு பிற்பட்ட காலத்தில் பல தடைகள் ஏற்பட்டது. ஆயினும் இன்று நல்விழி,எழில்விழி, கல்கி மூன்றுபேரும் கறுப்பு பட்டியை பெற்றுள்ளனர். எங்கள் பலநாள் விருப்பம் நிறைவேறியிருக்கு. நல்ல குருவாக ரேமன் சேர் அமைந்தது ஒரு வரப்பிரசாதம். மிக பொறுமையாகவும் கண்ணி…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்! பல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின் இன்டோர் கேமாகவும் விளங்கியது. தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன யுகதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான். அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....? பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இ…
-
- 3 replies
- 2.6k views
-
-
குக்கை நீக்க வேண்டும் : நாசர் குசைன் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-5 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணித் தலைவர் அலிஸ்டர் குக் மீது விமர்சனம் எழுந்து உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் நாசர் குசைன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், உலகக் கிண்ணத்திற்கு முன்பு ஒருநாள் போட்டி அணித் தலைவர் பதவியில் இருந்து அலிஸ்டர் குக்கை மாற்ற வேண்டும். அவர் டெஸ்ட் போட்டிக்கு ஏற்றவராக இருக்கிறார். இளம் வீரருக்கு அணித் தலைவர் பதவி அளிக்க வேண்டும் என்றார். http://www.virakesari.lk/articles/2014/12/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE…
-
- 3 replies
- 577 views
-