விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7858 topics in this forum
-
Hall of Fame விருதைப் பெற்று வரலாற்றில் பதிவானார் முத்தையா முரளிதரன் Hall of Fame விருதைப் பெற்ற முதல் இலங்கையராக முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வரலாற்றில் பதிவாகியுள்ளார். இதன் மூலம் சேர். பிரட்மன், இயன் செப்பல், காபில்ட் சோபர்ஸ், கர்ட்லி அம்புரோஸ் ஆகியோரின் வரிசையில் முரளிதரனும் இணைந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் உலகில் அதீத ஆற்றலை வெளிப்படுத்தி புகழ்பூத்த வீரர்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கின்றது. அந்த வகையில், இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் இன்றைய தினம் Hall of Fame விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட…
-
- 4 replies
- 877 views
-
-
நாடே ஒழுங்கீனமாக இருக்கும் போது என்னை ஒழுக்கமற்றவன் என்று சொல்வதா? என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கடிவாளம் இல்லாத குதிரை போல் செயற்படக்கூடியவர் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர். இதனால், அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வதுண்டு. ஊக்க மருந்து விவகாரம் இரவு விடுதி நடனம் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அவர் சில மாதங்களாக போட்டிகளில் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒழுங்கீனமாக நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித…
-
- 0 replies
- 876 views
-
-
இறுதி வரை போராடிய முஷ்பிகுர் ! அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 48 ஓட்டத்தினால் தோல்வியடைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நொட்டிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் 381 ஓட்டங்களை குவித்தது. 382 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பங்களாதேஷ் அணியின் ஆரம்ப வீரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமி சர்கார் ஆகியோர் களமிறங்கி துடு…
-
- 0 replies
- 876 views
-
-
ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரரானார் பொல்லார்ட் இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு : 20 போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணித் தலைவர் கிரான் பொல்லார்ட் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதனால் மேற்கிந்திய தீவுகள் அணியின் சூப்பர் ஸ்டாரான சகலதுறை ஆட்டக்காரர் பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆன்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் மு…
-
- 7 replies
- 875 views
-
-
இலங்கை-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 2ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப்;பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்த்தன ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இலங்கை அணிக்கு மஹேல - ஜீவன் மெண்டிஸ் (25) ஆகியோரின் சிறப்பான இணைப்பாட்டம் கைகொடுக்க 16ஆவது ஓவரில் 100 ஓட…
-
- 6 replies
- 875 views
-
-
பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7…
-
- 0 replies
- 875 views
-
-
இம்முறை உலகக் கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று பலராலும் கருதப்பட்ட அணி. உலகின் மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளரைக் கொண்ட அணி. தலை சிறந்த துடுப்பாட்டக் காரர்களையும், களத் தடுப்பாளர்களையும் கொண்ட அணி. இப்படிப் பலவிதமான பலரையும் கொண்ட அணி. பலமுறை கிண்ணத்தைத் தூக்குவார்கள் என்று எதிர்வுகூறப்பட்டு எல்லாமுறைகளிலும் மிகவும் கேலித்தனமான முறைகளில் கிண்ணத்தைக் கோட்டைவிட்ட அணி. அதிலும் குறிப்பிடத்தக்க விடயம், வெல்லக் கூடிய வாய்ப்பிருந்தும்கூட, அணித்தலைவரின் பிழையான கணக்கினால் (டக் வேர்த் லுயிஸைத்தான் சொல்கிறேன்) அடுத்த கட்டத்திற்குப் போகக் கிடைத்த சந்தர்ப்பத்தை வேண்டாம் என்று தூக்கியெறிந்த அணி. இன்னொருமுறை இறுதி ஓவரில் 9 ஓட்டங்கள் எடுத்தால் போதுமென்றிருக்க, லான்ஸ் குளூஸ்னர் இறுத…
-
- 7 replies
- 874 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக அஞ்சலோ மெத்தியூஸின் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான தலைராக செயற்டவுள்ளார். அத்துடன் தினேஷ் சந்திமால் டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான உப தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். டுவென்டி டுவென்டி சர்வதேச போட்டிக்கான உப தலைவராக லசித் மலிங்க அறிவிக்கப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/58909-2013-02-14-07-11-06.html
-
- 7 replies
- 874 views
-
-
ஜடேஜா உலகத்தர ஸ்பின்னர் இல்லை... ஏன்? - ஒரு பார்வை ஜடேஜா, தோனி, பின்னால் அஸ்வின். | கோப்புப் படம். உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்…
-
- 0 replies
- 873 views
-
-
கோபா அமெரிக்கா கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - கால் இறுதி சுற்றில் அர்ஜென்டினா பிரேசிலியா கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா. பிரேசிலின் பிரேசிலியா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கைடோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற பப்பு கோமஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் பந்து கோல்கம…
-
- 4 replies
- 873 views
-
-
'வடக்கின் போர்' நாளை ஆரம்பம் 'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நாளைய தினமான 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது. 113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு, போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளதோடு, இப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்தி…
-
- 2 replies
- 873 views
-
-
கிரிக்கெட் வேண்டாம்- ஷான் டெய்ட் ஓட்டம் புதன், 30 ஜனவரி 2008( 11:04 IST ) பெர்த்தின் அதிவேகமான ஆட்டக்களத்தில் இந்திய வீரர்களை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவார் என்று அதிகப்படியாக கூறப்பட்டு கடைசியில் ஒன்றும் இல்லாமல் ஆன ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஷான் டெய்ட் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் சிறிது காலம் ஒதுங்கியிருக்க முடிவு செய்துள்ளதாக கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா தெரிவித்துள்ளது. ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்திய வீரர்கள் சிறப்பாக வீசிய பெர்த் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு முன்னால், டெய்ட் வந்து விட்டார், இந்திய வீரர்களின் தலை பத்திரம் என்று அளவுக்கு அதிகமாக உயர்த்திப் பேசப்பட்ட ஷான் டெய்ட் அந்த டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்…
-
- 0 replies
- 873 views
-
-
இலங்கையை வீழ்த்தியது இந்தியா Tuesday, 19 February, 2008 09:36 AM . அடிலெய்டு, பிப்.19: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி வரிசையில் இந்தியாஇலங்கை மோதும் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். . இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா களமிறங்கினர். முதல் ஓவரியிலேயே தில்சன் முனாப் பட்டேல் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயசூர்யா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். அவர் ரன் அவுட் முறையில் …
-
- 0 replies
- 872 views
-
-
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளராக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் ஜெயசூரிய நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாத இறுதியில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களின் எண்ணிக்கையில் ஒருவர் அதிகரிக்கப்படவுள்ளார். இதற்கான பரிந்துரைக்கான நபர்களின் விபரங்கள் இலங்கை விளையாட்டு அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலேயே சனத் ஜெயசூரியவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 11 பேரின் விபரங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் பட்டியலில் மேலும் சிலர் சேர்க்கப்படலாம் எனவும், இவர்களில் ஒருவர் இலங்கைக் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்படவுள்ளார். சனத் ஜெயசூ…
-
- 12 replies
- 872 views
-
-
வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று 05 Dec, 2025 | 08:17 PM (நெவில் அன்தனி) கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன. உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும். 2…
-
- 1 reply
- 872 views
- 1 follower
-
-
விம்பிள்டன்: யாக்கோவிச் புதிய சாம்பியன் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ள ரஃபேல் நடாலை இறுதிப் போட்டியில் அவர் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற ஆட்டத்தில் யாக்கோவிச், நடாலை 6-4, 6-1, 1-6, 6-3 என்கிற நேர் செட்டுகளில் வென்றார். மேலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை வெல்லும் முதல் செர்பியர் என்கிற பெருமையையும் யாக்கோவிச் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை தான் விளையாடியுள்ள 51 போட்டிகளில், 50 போட்டிகளில் யாக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நான்கு போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அவர் ரஃபேல் நடாலை தோல்வியு…
-
- 1 reply
- 871 views
-
-
3 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது மகிழ்ச்சியளிப்பதாக சஹீர்கான் தெரிவித்துள்ளார். பங்களாதேஷுக்கு எதிரான 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்டில் இந்தியா இனிங்ஸ் மற்றும் 239 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் `டிரா' ஆனதால் இந்தியா 1-0 என்ற தொடரை கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இந்த டெஸ்டில் வாசிம் ஜாபர், தினேஷ் கார்த்திக், டெண்டுல்கர், கப்டன் டிராவிட் ஆகியோர் சதமடித்து சாதனை புரிந்தனர். சஹீர்கானின் பந்து வீச்சு வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. முதல் இனிங்ஸில் 5 விக்கெட்டும், 2 ஆவது இனிங்ஸில் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக அவர் தேர்வு பெற்றார். இது குறித்து சஹீர்கான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் …
-
- 0 replies
- 871 views
-
-
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து வீரர் கப்தில் வீசிய ஓவர் த்ரோவுக்கு 6 ரன்கள் வழங்கி தவறு செய்துவிட்டேன் என்று கூறிய இலங்கை நடுவர் தர்மசேனா ஆனால் அந்த தவறுக்கு ஒருபோதும் நான் வருத்தம் தெரிவிக்கமாட்டேன் என்று கூறி உள்ளார். இலங்கை சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறாக கூறி உள்ளார். உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 241 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த ஓவரின் 4-வது பந்தில் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் ஓட முயற்சிக்கும்போது, கப்தில் பீல்டிங் செய்து விக்கெட் கீப்பருக்கு பந்தை எறிந்தார். ஆனால், தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில், பாய்ந்தபோது அவ…
-
- 0 replies
- 870 views
-
-
9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி! மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது. 1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீ…
-
- 0 replies
- 870 views
-
-
தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த அவுஸ்திரேலியா இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 04 ஓட்டத்தினால் இந்தியாவை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியை பதவி செய்தது. பிரிஸ்போனில் ஆரம்பமான இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அவுஸ்திரேலிய அணியை பணித்தார். அதன்படி அவுஸ்திரேலிய அணி ஆடுகளம் நுழைந்து அதிரடியாக துடுப்பெடுத்தாடி வரும் போது 16.1 ஓவரில் 153 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டது. இதன் பின்னர் மழை விட்டதும் ஆட்டம் ஆரம்பிக்க போட்டி 17 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது. இறுதியாக அவுஸ்திர…
-
- 1 reply
- 870 views
-
-
உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 8 நாடுகள் முன்னேறியுள்ளன Published By: VISHNU 12 OCT, 2023 | 07:27 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) உலகக் கிண்ண ரக்பி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சம்பியனான தென் ஆபிரிக்கா, போட்டி ஏற்பாடு நாடான பிரான்ஸ் உள்ளிட்ட இங்கிலாந்து, வேல்ஸ், ஆர்ஜென்டீனா, அயர்லாந்து, நியூஸிலாந்து மற்றும் பிஜி ஆகிய 8 நாடுகள் முன்னேறியுள்ளன. டி குழுவுக்கான லீக் சுற்றில் ஆர்ஜென்டீனாவுடனான தீர்மானமிக்க போட்டியில் ஒரேயொரு ஆசிய நாடாக பங்கேற்றிருந்த ஜப்பான் 27 க்கு 39 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியைத் தழுவியிருந்தமையால் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த…
-
- 12 replies
- 870 views
- 1 follower
-
-
உலகக்கோப்பை: இந்திய அணியில் இடம்பெற ஹர்பஜன் இலக்கு ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதே இலக்கு என்று ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை தனது கேப்டன்சி மூலம் இறுதிப் போட்டி வரை அழைத்துவந்த ஹர்பஜன் சிங் கூறியதாவது, “நான் உலகக் கோப்பை போட்டிகளுக்கு திரும்ப இலக்கு நிர்ணயித்துள்ளேன். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எந்த ஒரு வீரருக்கும் உலகக் கோப்பை என்பது மிக முக்கியமான ஒன்று, நான் நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். தினமும் நான் விழித்தவுடன் நினைப்பதெல்லாம் உலகக் கோப்பைக…
-
- 0 replies
- 870 views
-
-
முரளி மச்சானுடன் இணைந்து பணியாற்றுவதில் மெக்ஸ்வெல் மகிழ்ச்சி 2014-10-17 கிரிக்கெட் விளையாட்டின் மேதையான முத்தையா முரளிதரனுடன் இணைந்து பணியாற்றுவது முழுமையான மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் கிளென் மெக்ஸ்வெல். தனது பேஸ்புக் பக்கத்தில் இக்கருத்தை வெளியிட்டுள்ள கிளென் மெக்ஸ்வெல், மச்சான் என்ற பதத்தையும் குறிப்பிட்டுள்ளார். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7330#sthash.S6gwuhRd.dpuf
-
- 7 replies
- 869 views
-
-
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை 18 மாதங்களாக குறைப்பு! by : Anojkiyan பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரான உமர் அக்மல் மீது விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் மூன்று ஆண்டுகள் விளையாடுவதற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது 18 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து உமர் அக்மல் மேன்முறையீடு செய்து இருந்த மனுவை விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி பாகிர் முகமது கோக்ஹர், உமர் அக்மலுக்கு விதிக்கப்பட்டு இருந்த 3 ஆண்டு கால தடையை 18 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டார். கருணையின் அடிப்படையில் இந்த தண்டனை குறைப்பு செய்யப்…
-
- 1 reply
- 869 views
-
-
அவுஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் இறக்கும் போது அவருக்கு வயது 59 ஆகும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் கிரிக்கெட் வர்ணனைக் குழுவில் ஒருவராக பணியாற்றும் ஜோன்ஸ் உயிரிழந்த தருணம் மும்பையில் உள்ள ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார். டீன் ஜோன்ஸ் ஒரு தீவிர கிரிக்கெட் ஆய்வாளராகவும் வார்ணனையாளராகவும் இருந்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டித் தொடரின் வர்ணனைக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார். ஜோன்ஸ் இந்திய ஊடகங்களில் பிரபலமான நபராக அறியப்பட்டுள்ள நிலை…
-
- 2 replies
- 869 views
-