Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் ஸ்டார்க் சாதனை! ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முறையாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி சாதனை படைத்துள்ளார். பெர்த் நகரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில் அவர் இத்தகைய மைல் கல்லை எட்டினார். 21வது ஓவரில் 4வது பந்தை ஸ்டார்க் 160.4 கிலோ மீட்டர் வேகத்தில் பந்தை வீசினார். இந்த யாக்கர் பந்தை நியூசிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெயிலர் எதிர் கொண்டார். இதற்கு முன், சர்வதேச அளவில் 4 பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீசியுள்ளனர். கட…

  2. கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. ஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற…

    • 2 replies
    • 486 views
  3. இந்த போட்டியில் இவங்க ஜெயிக்க தான் அதிக வாய்ப்பு இருக்கு – கங்குலி கணிப்பு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நேற்று அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 300 ரன்கள் அல்லது அதற்கு மேல் அடித்து சிறப்பாக போட்டியை ஆரம்பிக்கலாம் என்று நினைத்…

  4. வீரகேசரி இணையம் 7/27/2012 12:03:40 PM -டுவிட்டர்' இணையத்தளத்தில் இனவெறியை தூண்டும் வகையில் செய்தி வெளியிட்ட கிரீஸ் வீராங்கனை, ஒலிம்பிக் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். கிரீஸ் நாட்டின் "டிரிபிள் ஜம்ப்' வீராங்கனை பராஸ்கெவி பபாகிறிஸ்டோ, 23. தற்போது லண்டனில் உள்ள கிரீஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். கிரீசில் தற்போது பரவி வரும் வைரஸ் காயச்சலில் ஒருவர் பலியானார். ஐந்து பேர் வைத்தியசாலையில் உள்ளனர். இதுகுறித்து பராஸ்கெவி வெளியிட்ட "டுவிட்டர்' செய்தி, இனவெறியை தூண்டும் வகையில் இருந்தது. இதனால், ஒலிம்பிக் போட்டிக்கான கிரீஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து கிரீஸ் அணியின் தலைவர் இசிடோரோஸ் கூறுகையில்," ஒலிம்பிக்கின் அடிப்படை விதியைக் கூட மதிக்காமல் நடந்து, தவறு…

  5. 6 விக்கெட்டுகளால் சென்.ஜோன்ஸ் வெற்றி பி.துவாரகசீலனின் சகலதுறை ஆட்டத்தின் காரணமாக சென்.ஜோன்ஸ் கல்லூரி 6 விக்கெட்களால் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணியை வெற்றிபெற்றது. இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த சுற்றுப்போட்டியின் போட்டியொன்று சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் ஜா – எல கிறிஸ்ட் கிங் கல்லூரி அணிக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (02) மற்றும் சனிக்கிழமை (04) ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்.ஜோன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 60.4 ஓவர்களில் அ…

  6. கார்ல்சன்: வெல்ல முடியாத ராஜா! இந்தமுறையும் உலக செஸ் போட்டியை வென்று மூன்றாவதுமுறையாக மகுடம் சூடியுள்ளார் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன். செஸ் உலகின் தன்னிகரற்ற வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘நான் நிச்சயம் உலக சாம்பியன் ஆவேன். அதற்கான முயற்சிகளில் கட்டாயம் ஈடுபடுவேன்’ என்று 13 வயதில் சொன்னார் கார்ல்சன். கிளாசிகல், ரேபிட், பிளிட்ஸ் என மூன்று வகைப் போட்டிகளிலும் உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்று சொன்ன வாக்கைக் காப்பாற்றியுள்ளார். இளம் வயதிலேயே உலகின் நெ.1 வீரர், உலக சாம்பியன் என அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டதால் அவரை ஜீனியஸ் என்று செஸ் உலகம் கொண்டாடுகிறது. இந்த ஹாட்ர…

  7. ஆஸ்திரேலிய ஓபன்: செரினா சாம்பியன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதினர். இதில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்குகளில் தனது மூத்த சகோதரி வீனஸை வீழ்த்தி செரினா வெற்றி பெற்றார். இதன் மூலம் செரினா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். குறிப்பாக கிராண்ட் ஸ்லாம்களில் அவர் வெல்லும் 23-வது பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. http://www.vikatan.com/news/sports/79030-serena-williams-wins-in-australian-open-final.art

  8. அதிபர் சபாலிங்கதிற்கு அருகில் இருப்பவர் யோகி ,அவர் நேர் பின்னே பெனியனுடன் நிற்பவர் பொன்னம்மான் .

    • 2 replies
    • 585 views
  9. புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா - படம்உதவி: பேஸ்புக் செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார். இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்…

  10. மின்னலின் மகன் ஓய்வு... நன்றி உசேன் போல்ட்! #ThankYouBolt ஆகஸ்ட் 5, 2012. 50-ம் ஆண்டு சுதந்திர தின விழாவுக்காக தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறது ஜமைக்கா. உலகை ஆண்ட இங்கிலாந்திடமிருந்து 6-8-1962-ம் ஆண்டில் சுதந்திரம் அடைகிறது அந்தக் குட்டிக் கரீபியத் தீவு. வெறுமனே பள்ளிகளிலும் அரசு அலுவலகங்களிலும் மட்டும் கொடியேற்றினால் சுதந்திரத்துக்கு அர்த்தம் சேர்ந்துவிடுமா? தன் நாட்டு மக்களுக்கு சுதந்திர தினப் பரிசை வேறுவிதமாகக் கொடுக்க விரும்பினான் போல்ட். லண்டன், 30-வது ஒலிம்பிக் போட்டித் தொடர். தான் முன்பு பதக்கம் வென்றிருந்த 100 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் ஒலிம்பிக் சாதனையோடு தங்கம் வெல்கிறான் போல்ட். தங்களை ஆண்ட ஆங்கிலேயர்களின் தலைநகரில், ஆங்கிலேய மக்களின் ம…

    • 2 replies
    • 1.7k views
  11. பிரெஞ்சு ஒப்பன் சாம்பியனானார் ஜோக்கோவிச் பிரெஞ்சு ஒப்பன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நோவாக் ஜோக்கோவிச் இறுதிப்போட்டியில் வென்றார். இந்த பிரஞ்சு ஒப்பன் சாம்பியன் பட்டத்தைத்தான் ஜோக்கோவிச் இதுவரை பெறாமல் இருந்தார். சற்று முன்னர் முடிந்த இந்த இறுதிப்போட்டியில், அவர் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் ஆண்டி மர்ரியை 3-1 என்ற செட் கணக்கில் வென்றார். மர்ரியும் இந்தப் போட்டியில் 1937லிருந்து இறுதிச் சுற்றுக்கு வந்த முதல் பிரிட்டிஷ் ஆட்டக்காரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்திருக்கிறார். இந்தப் போட்டியின் முதல் செட்டில் ஆண்டி மர்ரி வென்றாலும் தொடர்ந்து ஜோக்கோவிச் மூன்று செட்களை வென்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டினார். http://www.bbc.com/t…

  12. இலங்கைக்கு வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் வெற்றியிலக்காக 156 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலி சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் சிம்பாபே அணியை துடுப்பெடுத்தாடுமாறு அழைப்பு விடுத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி, 33.4 ஓவர்களில் 155 ஓட்டங்களை பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது. சிம்பாபே அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மசகட்ஸா அதிகபட்சமாக 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.இதேவேளை இலங்கை அணி சார்பாக அபாரமாக பந்து வீசிய லக்‌ஷான் சன்டகன் நா…

  13. கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough "ஐந்து ஆண்டுகள் இந்த அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். செங்கல் செங்கலாக இந்த அணியை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய பேட்டிங் பொசிஷன்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். இந்திய வீரர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக எதிரணி கேப்டன்களோடு சண்டையிட்டிருக்கிறேன். இந்திய அணியை சுமார் 200 போட்டிகளில் வழிநடத்தியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென்று அணியைச் சீரழிப்பவனாக மாறிவிட்டேனா...?" - இது கங்குலியின் ஆதங்கம். இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமை, எதற்கும் அடங்காத அந்த வங்கப்புலி, சரத் பவார் சொன்ன வார்த்தைகளால் ஆட…

  14. முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா? சனி, 18 ஆகஸ்ட் 2007( 17:20 ஈஸ்T ) Wஎப்டுனிஅ இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பந்து வீச்சைப் பற்றி நம் பிஷன் சிங் பேடி அடிக்கடி தாறுமாறாகவும் கேலியாகவும் ஏதாவது கூறுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது போன்று தொடர்ந்து முரளிதரனை ஒரு கேலிக்குரிய வகையிலும் நியாயமற்ற முறையிலும் பிஷன் சிங் பேடி பேசி வருவதால், முரளிதரனின் வழக்கறிஞர்கள் பேடியின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முயன்று வருகின்றனர்! முரளிதரனின் பந்து வீச்சை ஈட்டி எறிவது போல் இருக்கிறது என்றார் பேடி. பிறகு, ஷாட்புட் எறிவது போல் உள்ளது என்றார். அனைத்திற்கும் மேலாக அவர் 1000 விக்கெட்டுகள் எடுத்தாலும் அனைத்தும் ரன் அவுட்க…

    • 2 replies
    • 1.5k views
  15. 22 AUG, 2024 | 12:29 PM (என்.வீ.ஏ.) வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் பெற்ற மொத்த பதக்கங்கள் அடிப்படையில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் முல்லைத்தீவு மாவட்டம் முதலாம் இடத்தைப் பெற்றது. பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட குத்துச்சண்டை போட்டி முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் சார்பாக பங்குபற்றிய வீர, வீராங்கனைகள் 12 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் உட்பட மொத்தமாக 27 பதக்கங்களை வென்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தைப் பெற்று வரலாறு படைத்தனர். பதக்கங்கள் விபரம் …

  16. பிளட்டர், பிளட்டினிக்கு 7 வருடத் தடை? இடைக்காலத் தடைக்குள்ளாக்கப்பட்டு உள்ளவர்களான, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரான செப் பிளட்டருக்கும் ஐரோப்பிய கால்பந்தட்டாச் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் மைக்கல் பிளட்டினிக்கும், ஏழு வருடத் தடை விதிக்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களிருவரின் மேலும் விதிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலேயே, இந்தத் தண்டனை வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பிளட்டரின் ஆலோசகராக 2002ஆம் ஆண்டில் செயற்பட்டமைக்காக, 2011ஆம் ஆண்டில் பிளட்டினிக்கு வழங்கப்பட்ட 1.35 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் தொடர்பாகவே, அவர்களுக்கெதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலோசனைப் பணிக்கா…

  17. ஒரே போட்டியில் முதலிடத்தை பெற்ற இலங்கை! சாதனை முறியடிப்பு! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேறுகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்திருந்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய …

  18. பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி. 'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். வ…

  19. இரட்டை சதம் அடித்தார் ஆம்லா: 552 ரன்கள் குவித்து தென் ஆப்பிரிக்கா டிக்ளேர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டத்த்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹஷிம் ஆம்லா 208 ரன்கள் எடுத்தார். அவர் 475 நிமிடங்கள் நின்று 371 பந்துகளைச் சந்தித்து 22 பவுண்டரிகளுடன் 208 ரன்களை எடுத்து சுலைமான் பென் பந்தில் ஒருவழியாக ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்காவின் வான் ஸில் என்பவரும் 130 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்த போது ஸ்கோர் 552 ரன்கள். இந்நிலையில் ஆம்லா டிக்ளேர் செய்தார். நேற்று 141 ரன்களில் இருந்த ஏ.பி.டிவிலியர்ஸ் இன்று 152 ரன்களில் பென் பந்தில் வெளியேறினார். முதல் நாள் ஆட்டத்தில் மே.…

  20. இங்கிலாந்து-ஆஸ்‌ட்ரேலிய கிரிக்கெட் அணிகள் இடையே வரலாற்று புகழ்மிக்க 'ஆஷஸ்` டெஸ்ட் தொடர் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி 65-வது ஆஷஸ் டெஸ்ட் கடந்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் முதல் 4 டெஸ்டில் இரு அணியும் தலா ஒரு வெற்றி பெற்றன. இரு போட்டி டிராவாகின. இதனால் தொடர் சமன் ஆன நிலையில் கோப்பையை வெல்வது யார் என்பதை நிர்ணயிக்கும் பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 20ஆ‌ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 332 ரன்களும், ஆஸ்‌ட்ரேலியா 160 ரன்களும் எடுத்தன. பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 9 …

  21. தந்தை வழியில் மகன்: ராகுல் திராவிட் வாரிசு சமித் அடித்த வெற்றிச் சதம் ராகுல் திராவிட் மகன் சமித். சச்சின் மகன் அர்ஜுன் தற்போது ராகுல் திராவிட் மகன் சமித் ஆகியோர் தந்தையர் கிரிக்கெட் வழியில் அடியெடுத்து வைத்துள்ளனர். அதே போல் சுனில் ஜோஷி மகன் ஆர்யன் ஜோஷியும் தன் தந்தை வழியில் கிரிக்கெட் உலகில் அடியெடுத்து வைத்துள்ளார். கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க பிடிஆர் கோப்பை யு-14 கிரிக்கெட் போட்டி ஒன்றில் திராவிட் மகன் சமித் 150 ரன்களை எடுத்து தன் அணியான மல்லையா அதிதி இண்டெர்நேஷனல் பள்ளிக்கு 412 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தார். விவேகானந்தா பள்ளி அணிக்கு எதிராக இந்த வெற்றியைப் பெற்றுத்தந்தார் …

  22. Bangladesh beat Sri Lanka to reach finals of Asia Cup Bangladesh stormed into the finals of the Asian Cup when they beat the struggling Sri Lankan side comprehensively in a rain-hit match at Shere Bangla National Stadium, Mirpur, yesterday. Even though the home side won a crucial match against the Indians, yesterday's game against the Lankans was a must win for them in order to get into the finals with the Pakistanis who are still unbeaten in the series. Electing to field first the Bangladeshis managed to get the best out of their decision as they went through the Lankan top order quickly, Lankans were three down for 32 with all their top guns,…

  23. தினேஷ் கார்த்திக் இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் தேர்வு: "கடின உழைப்பு தொடர்கிறது" என ட்வீட் 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@DINESHKARTHIK தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்த அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். 36 வயதான தினேஷ் கார்த்திக் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டி மற்றும் 32 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடியுள்ளார். கடைசியாக 2019ஆம் ஆண்டில் நியூசிலா…

  24. தூற்றினாலும் பரவாயில்லை, இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள்: கேப்டன் சுனில் உருக்கம் நீங்கள் தூற்றினாலும் பரவாயில்லை. தயவு செய்து களத்துக்கு வந்து இந்திய கால்பந்துக்கு ஆதரவு தாருங்கள் என இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான கோரிக்கையை முன்வைத்தார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட விடியோவில் பேசியதாவது: இதுவரை மைதானத்துக்கு வராமல் இருக்கும் ரசிகர்களாகிய உங்களுக்காக தான் இந்த விடியோ பதிவை வெளியிடுகிறேன். நீங்கள் கால்பந்து விளையாட்டை நேசிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து நேரில் வந்து எங்களு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.