Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. '146 ரன்; 18 சிக்ஸர்' - டி20-யில் எதிரணியை மிரளவைத்த கெய்ல்! இந்தியன் பிரிமியர் லீக்கான ஐபிஎல் போல வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் (பிபிஎல்) தொடர் ஒவ்வோர் ஆண்டும் நடக்கிறது. வங்க தேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் இன்று தாக்கவில் நடந்து வருகிறது. இதில், தாக்கா டைனமைட்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் ஆகிய அணிகள் கோப்பைக்கு போட்டா போட்டிப் போட்டு வருகின்றன. இந்தப் போட்டிக்கான டாஸை வென்ற தாக்கா டைனமைட்ஸ், ரைடர்ஸை பேட்டிங் ஆடச் சொல்லி பணித்தது. அந்த அணி சார்பில், கிறிஸ் கெய்ல், தொடக்க வீரர்களில் ஒருவராகக் களமிறங்கினார். கடைசி வரை நின்றாடிய கெய்ல், 69 பந்துகளுக்…

  2. வரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை ஆவடி பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கும் விளையாட்டு வீரர் நந்தினி (22) தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். முதல்முறையாக தேசிய அளவிலான கோப்பையை வென்ற தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணியின் தலைவர்தான் நந்தினி. Image captionநந்தினி எளிமையான குடும்ப பின்னணி, அரசுப்பள்ளியில் படித்து, வ…

  3. சிங்கர் கிண்ண தொடரிலிருந்து காலிறுதியுடன் வெளியேறும் யாழ். மத்திய கல்லூரி 19 வயதின் கீழான டிவிஷன் – III பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட “சிங்கர் கிண்ண” கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டியொன்று இன்று (18) இப்பாகமுவவில் முடிவடைந்தது. இந்த காலிறுதிப் போட்டியில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியினை வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 148 ஓட்டங்களால் அதிரடியாக வீழ்த்தியிருப்பதுடன், இவ் வெற்றியோடு லைசியம் பாடசாலை சிங்கர் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினையும் பெற்றிருக்கின்றது. அணிக்கு 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டி…

  4. ஆஸ்திரேலியா மீண்டும் முதலிடம் அக்டோபர் 12, 2014. துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில், ஆஸ்திரேலிய அணி மீண்டும் ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறியது. சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில், ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் தலா 113 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டன. தசம புள்ளிகள் வித்தியாசத்தில் மூன்று அணிகளுக்கும் ‘ரேங்க்’ வழங்கப்பட்டது. இதன்படி, பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணிக்கு ‘நம்பர்–1’ இடம் வழங்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்ட…

  5. பார்சிலோனா அணி வெற்றி அக்டோபர் 22, 2014. பார்சிலோனா: அஜாக்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் மெஸ்சி, நெய்மர் தலா ஒரு கோல் அடிக்க பார்சிலோனா அணி வெற்றி பெற்றது. ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. பார்சிலோனாவில் நடந்த இதன் லீக் போட்டியில் அஜாக்ஸ், பார்சிலோனா அணிகள் மோதின. போட்டியின் 7வது நிமிடத்தில் பார்சிலோனா இளம் வீரர் நெய்மர் ஒரு கோல் அடித்தார். நட்சத்திர வீரர் மெஸ்சி 24வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா முதல் பாதியில் 2–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் (88வது நிமிடம்) அஜாக்ஸ் அணி சார்பில் எல் காஜி ஒரு கோல் அடித்தார். பார்சிலோனா அணியின் சாண்ட்ரோ (90+4) ‘ஸ்டாப்பேஜ் நேரத்தில்’ கோல் அடித்து பதிலடி தந்தார். முடி…

  6. மேற்கிந்திய தீவுகளை அடுத்து இலங்கைக்கு தென்னாபிரிக்காவின் சவால் கடந்த ஆண்டு கத்துக் குட்டி அணிகள் தொடக்கம் ஜாம்பவான் அணிகள் வரைக்கும் அனைவரிடமும் வலிதரக் கூ டிய தோல்விகளை சந்திந்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, முன்னணி வீரர்களின் உபாதைகள், போட்டித் தடைகள் என்பன வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிகழ்வுகளாக இருந்தன. இலங்கையின் இந்த தொடர் தோல்விகள் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இருந்தே ஆரம்பித்திருந்தன. 2017ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி அதில் முதற்கட்டமாக இடம்பெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-0 என தென்னாபிரிக்க அணியினால் வ…

  7. இலங்கை வலைப்பந்தாட்ட அணியில் இரு தமிழ் வீராங்கனைகள் இலங்கை வலைபந்தாட்ட அணியில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு தமிழ் வீராங்கனைகள் இடம்பெறுகின்றனர். ஆசியாவின் உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையும் அதி சிறந்த கோல் போடும் வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கம் (செலான் வங்கி), எழிலேந்தினி சேதுகாவலர் ஆகிய இருவர் இடம்பெறுகின்றனர். சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட அணியில் இரண்டு தமிழர்கள் ஏக காலத்தில் இடம்பெறுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கை அணி சத்துராங்கனி ஜயசூரிய (தலைவி), தர்ஷிகா அபேவிக்ரம (உதவித் தலைவி), கயனி திசாநாயக்க, தர்ஜினி சிவலிங்கம், சுரேக்கா குமாரி, திலினி வத்தேகெதர, கயாஞ்சலி அ…

  8. இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை October 4, 2018 இலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவு இலங்கையில் நடத்தி வருகின்றது. இதன்போது ஜனாதிபதி, பிரதமர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் அவர்களுக்கு விரிவான விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார். குறித்த விசாரணைகள் சில காலமாக நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள அவர் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள இலங்கை, இங்கிலாந்து தொடருக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்ற போதிலும் எதிர்வரும் …

  9. விம்பிள்டன்: யாக்கோவிச் புதிய சாம்பியன் செர்பியாவின் நோவாக் யாக்கோவிச் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் பட்டத்தை இரண்டு முறை வென்றுள்ள ரஃபேல் நடாலை இறுதிப் போட்டியில் அவர் வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஞாயிறன்று மாலை இடம்பெற்ற ஆட்டத்தில் யாக்கோவிச், நடாலை 6-4, 6-1, 1-6, 6-3 என்கிற நேர் செட்டுகளில் வென்றார். மேலும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை வெல்லும் முதல் செர்பியர் என்கிற பெருமையையும் யாக்கோவிச் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இதுவரை தான் விளையாடியுள்ள 51 போட்டிகளில், 50 போட்டிகளில் யாக்கோவிச் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் நான்கு போட்டிகளில் இறுதி ஆட்டத்தில் அவர் ரஃபேல் நடாலை தோல்வியு…

    • 1 reply
    • 871 views
  10. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் சர்வதேசக் கால்பந்து சம்மேளனமான ஃபிஃபாவின் தலைவராக செப் பிளாட்டர் மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் தலைவராக பிளாட்டர் தேர்வு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோர்டான் நாட்டு இளவரசர் அலி பின் அல் ஹுசைன் இரண்டாம் சுற்றின்போது போட்டியிலிருந்து விலகியதால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் பரபரப்புக்கு இடையே இந்தத் தேர்தல் ஜூரிக் நகரில் நடைபெற்றது. முதல் சுற்று வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் கிடைக்காததால், போட்டி இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. எனினும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது, அலி பின் அல் ஹுசைன் விலகுவதாக தெரிவித்த பின்னர், பிளாட்டர் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டத…

  11. அழகிய ஆலப்புழையில் கிரிக்கெட் மைதானம்... கேரளாவும் தமிழகத்தை முந்தியது....! தென் மாநிலங்களில் தெலுங்கானா பிரிவதற்கு முன்னரே ஆந்திராவில் ஹைதரபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவது உண்டு. கர்நாடகாவில் பெங்களூருவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. தற்போது மங்களூவில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கேரளாவை பொறுத்தவரை கொச்சியில் மட்டும்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது அங்கேயும் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. கீழை நாடுகளின் வெனிஸ் என்று அழைக்கப்படும் ஆழப்புலை நகரில்தண்ணீரால் சூழ்ந்த இடத்தில் அழகிய கிரிக்கெட் மைதானம் உருவ…

  12. கோல் கீப்பரையே தூக்கி சென்ற பவர்ஃபுல் கிக் : பிரேசில் வீரர் ஹல்க் மிரட்டல் (வீடியோ) பிரேசிலை சேர்ந்த இளம் வீரரான ஹல்க், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அணியில் இடம் பெற்றிருந்தார். கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில், அவர் பிரேசில் அணியில் இடம் பெறவில்லை. தற்போது அவர், ரஷ்யாவை சேர்ந்த செனித் செயின்ட பீட்டர்ஸ்பர்க் அணிக்காக விளையாடி வருகிறார். அடுத்த சீசன் தொடங்கவுள்ளதையடுத்து ஹல்க், அந்த அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். http://youtu.be/66z1p5jLKYw நேற்று பயிற்சியில் ஈடுபட்டபோது ஹல்க் அடித்த பவர்ஃபுல் கிக், கோல்கீப்பரை பந்துடன் சேர்ந்து தூக்கி சென்று விட்டது. இந்த வீடியோ காட்சியை செனித் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அணியே வெளியிட்டுள்ளது. http://www.v…

  13. யாழ்ப்பாணம்தென்மராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கைதடி நாவற்குழி அ.த.க. பாடசாலை பெண்கள் அணி வெற்றிபெற்றது. சாவகச்சேரி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலை அணியை எதிர்த்து கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை அணி மோதியது. 15 :11 என்ற செற் கணக்கில் கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண் டது. https://newuthayan.com/story/17/நாவற்குழி-அ-த-க-மகளிர்-அணி.html

  14. முதலில் இஷாந்த் சர்மா முடி வெட்ட வேண்டும்.. மாஜி தெ. ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் அட்வைஸ் மும்பை: இஷாந்த் சர்மாவின் இன்றைய நிலைக்கு அவர்தான் பொறுப்பாவார். அவர் முதலில் பல நல்ல பழக்கங்களை தன்னுள் கொண்டு வர வேண்டும். முதலில் தலைமுடியை சீரமைக்க வேண்டும். அவரது தலைமுடியால் அணிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் பானி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார். அவரைப் பார்த்தால் எனக்கு ஸ்போர்ட்ஸ்மேன் போலவே தெரியவில்லை. அவரது ஹேர்ஸ்டைல் மிக மோசமாக உள்ளது. கெட்டப் பையன் போன்ற தோற்றத்தையே அது தருகிறது என்றும் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். இமேஜ்தான் முதலில் அவருக்குப் பெரும் பிரச்சினை. அதை அவர் சரி செய்தாக வேண்டும். அவரிடம் நல்ல கிரிக்கெட் உள்ளது.…

  15. வரி ஏய்ப்பு விவகாரம் : லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் சிறைத்தண்டனை? வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும் பார்சிலோனா அணியின் நம்பிக்கை வீரருமான லயனல் மெஸ்சி கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். கடந்த 2005ஆம் ஆண்டு ஸ்பெயின் குடியுரிமையும் மெஸ்சிக்கு வழங்கப்பட்டது. லயனல் மெஸ்சியின் புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதியளித்த வகையில், கிடைத்த வருவாய்க்கு மெஸ்சி முறையாக வரி செலுத்தவில்லை என்று ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். …

  16. இலங்கைக்கான கிரிக்கட் சுற்றுலா பயணத்தினை மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணியின் குழாம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை ஒருநாள் சர்வதேச போட்டிகள் 03 இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த போட்டி கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டரங்கில் பகல் இரவு போட்டிகளாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைய பங்களாதேஸ் அணியின் குழாம் விபரங்கள்.. Mashrafe Mortaza Mahmudullah Mohammad Mithun Mosaddek Hossain Mustafizur Rahman Sabbir Rahman Anamul Haque Mehidy Hasan Mohammad Saifuddin Mushfiqur Rahim Rubel Hossain Soumya Sarkar Tamim Iqbal http://www.hirunews.lk/tamil/sports/220438/பங்…

    • 1 reply
    • 523 views
  17. உலக சாதனை படைத்த தடகளவீரர் மாரிஸ் கிரீன் ஓய்வுபெற்றார் [06 - February - 2008] [Font Size - A - A - A] உலகசாதனை படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் மாரிஸ் கிரீன் தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாரின் கிரீன். 33 வயதான கிரீன் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான வசதிகளை நேரில் பார்வையிடச் சென்றுள்ள கிரீன், தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அங்கு அறிவித்துள்ளார். இது குறித்து மாரிஸ் கிரீன் கூறுகையில்; `கடந்த சில வருடங்களாக எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் எனது பயிற்சியை தடுத்தது. எனவே ஓய்வு பெற இது சரியான நேரம் என்று ஓய்வு முடிவை எடுத்தேன். ஓய்வு முட…

  18. Ravi Shastri: இந்தியா அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி என விராத் கோலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரே பயிற்சியளராக தொடர்கிறார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி (Ravi Shastri) மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 2021 உலகக்கோப்பை டி20 தொடர் வரை பொறுப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் (Ravi Shastri) ஒப்பந்த காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன் பின் அவருக்கு 45 நாட்கள் நீடிப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வது தொடர்பாக கபில்தேவ், அன்சுமான் கெக்வாத், சாந்தா ரங்…

    • 1 reply
    • 763 views
  19. சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…

  20. முதலில் துடுப்பாடிய இந்துக்கல்லூரி 50 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 491 ஓட்டங்களைக்குவித்தது . யாழ் மாவட்ட பாடசாலைகளின் 17வயதுப் பிரிவு கிறிக்கட் அணிகளிற்கிடையிலான மட்டுப்படுத்திய ஓவர்களைக் கொண்ட போட்டித்தொடர் கடந்த சனிக்கிழமை 07.07.2012 ஆரம்பமாகியது. தனது முதல்ப் போட்டியில் மகாஜனாக் கல்லூரியினை எதிர்கொண்டது யாழ்.இந்து அபாரமாக வெற்றியீட்டியது. இடம்பெற்றுவரும் இரண்டாவது போட்டியில் ஜூனியன் கல்லூரியை இந்துக்கல்லூரி இன்று 09.07.2012 எதிகொள்கின்றது. காலை 9.00 மணியளவில் இந்தப்போட்டி யாழ்.இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச்சுழற்சியில் வென்ற ஜூனியன் கல்லூரி இந்துக்கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாடப்பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய…

  21. இந்தியாவை பின் தள்ளியது இலங்கை புனேயில் நேற்று நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபது 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்றதை தொடர்ந்து இருபது20 போட்டித் தொடர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 117 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது. தொடர்ந்து மேற்கிந்திய தீவுகள் 118 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. http://www.virakesari.lk/article/2992

  22. டெஸ்ட் கிரிக்கெட்டே முக்கியம்: உலகக் கோப்பை டி20-யை உதறிய டேரன் பிராவோ டேரன் பிராவோ. | படம்: பிடிஐ. பணமழை பொழியும் டி20 கிரிக்கெட் உலகில் நுழையும் வாய்ப்பை உதறிய அதிசய வீரரானார் மே.இ.தீவுகளின் இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் கெய்ரன் பொலார்ட் காயத்திற்குப் பிறகான சிகிச்சை முழுமை பெறாததைக் காரணம் காட்டி விலகியுள்ளார். சுனில் நரைன் பந்து வீச்சு முறை இன்னமும் சீராகவில்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார். இதில் பொலார்ட், நரைனுக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும…

  23. ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்ட உத்தியோகபூர்வ டெஸ்ட் குழாத்தில் 18 வீரர்கள் Published By: VISHNU 16 JUN, 2025 | 02:49 AM (நெவில் அன்தனி) பங்களாதேஷுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டது. இந்த டெஸ்ட் தொடரில் காலியில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிரேஷ்ட வீரர், முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வெளியான பூர்வாங்க குழாத்தில் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் லஹிரு குமார, பயிற்சியின்போது உபாதைக்குள்ளானதால் இந்தத் தொடரில் விளையாடமாட்டார் என ஸ்ரீலங்கா கி…

  24. சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.