Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. (ஜெரா) இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில், வல்லிபுரம், பருத்தித்துறை, மாதகல், கந்தரோடை எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம். ஆனால், எம்மில் எவருக்கும் இலகுவில் நினைவுக்கு வராத வட பாகத்தின் தனித்துவ அடையாளங்கள்தான், யாழ்ப்பாணத்தைச் சூழக் காணப்படும் தீவுக் கூட்டங்கள். மண்டைதீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு, காரைநகர் என நீளும் தீவுக்கூட்டங்களுக்குள்தான், வட பாகத்தின் மனித நிலவுகைக்கான தொடக்கம் நிகழ்ந்ததென்பார், பேராசிரியர் பொ. ரகுபதி. அவரின் தொல்லியல் ஆய்வு நூலான “Early Settlement of Jaffna” (யாழ்ப்பாணத்தின் ஆரம்பகாலக் குடியேற்றம்) என்பதில், இந்த விடயம் ஆதாரபூ…

    • 0 replies
    • 529 views
  2. யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது. இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவ…

  3. ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் நினைவு வணக்கநாள் இன்றாகும். புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே தமிழீழ விடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013 அன்று சுவிஸ்லாந்து நாட்டில் ஜெனிவா ஐ.நா முன்றலின் முருகதாசன் திடலிலே தன்னுடலில் தீமூட்டி ஈகைச் சாவைத் தழுவிக்கொண்ட “ஈகைப்பேரொளி” இரத்தினசிங்கம் செந்தில்குமரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும். நீளும் நினைவுகளாகி… தமிழீழ மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்புப்போரைத் தடுக்கக் கோரியும், தமிழீழ விடுதலைக்கு ச…

  4. ENVIRONMENTAL CONSEQUENCES OF EELAM WAR -V.I.S.JayapalaN (1991 NORAD Oslo 1991) * ஈழப்போரும் சூழலும் * ஈழப்போரும் சூழலும் பற்றிய என்னுடைய அறிக்கை நோர்வீஜிய அபிவிருத்தி நிறுவனமாகிய நோராட் ஒஸ்லோ ஆதரவில் இரணு மாதங்கள் மேற்கொள்ளபட்ட என் ஆய்வின் பெறுபெறாகும். இந்த அறிக்கை பாராட்டுகளைப் பெற்றபோதும் அதனைப் புத்தகமாக விரிவாக்கி வெளியிடும் என் முயற்ச்சியை தொடர முடியவில்லை. வசதியின்மையால் தடைபட்ட என் முயற்சிகளில் இதுவும் ஒன்று. * என்னுடைய ஆய்வறிக்கைகளை மொழி பெயர்க்க வேண்டுமென விரும்பினேன்.. என் கண்புரை நோயால் கண்கள் ஒத்துழைக்கவில்லை. குறைந்த பட்சம் ஆங்கிலத்திலாவது பதிவுசெய்து விடவேணும் என மனசு அலட்டிக் கொள்கிறது. உங்களில் யாராவது இதனை மொழி பெயர்க்க…

    • 0 replies
    • 529 views
  5. கிழக்கு பல்கலைக்கழக மாணவி மிதுசியா செய்யும் செயல் யாருக்காவது தெரியுமா.? செல்வந்தர்கள் தமது பிள்ளைகளை வசதி வாய்ப்புகளுடன் கற்பித்து வரும் கல்வி யுகத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையில் தகரக் கொட்டகை ஒன்றை அமைத்து தன்னலம் கருதாது கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர். மாணவர்கள் பாடசாலை முடிந்து வந்ததும் பிற்பகல் வேளையில் அவர்களுக்குக் கற்பித்து வருகிறார் இந்த யுவதி. பின்தங்கிய வறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த இந்த மாணவி தற்போது பல்கலைக்கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தனது பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காக அனுபவ…

  6. வணக்கம் தாய்நாடு .... யாழ் நகர்

  7. வணக்கம் தாய்நாடு..... யாழ் முற்றம்! உலகமே வியர்ந்து பார்த்த எம் மண்ணின் பாரம்பரியம்!

  8. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட‌ முடியாது 2007ம் ஆண்டு எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அட‌ந்த‌ 21க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் ப‌ட‌த்தை எடிட் செய்து போட்டேன் , போட்ட‌தும் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பெரியவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் பார்த்து இருக்கின‌ம் அந்த‌ ப‌ட‌த்தை த‌லைவ‌ர் 21க‌ரும்புலிக‌ளுட‌ன் இருந்து எடுத்த‌தை போட்டு இருந்தால் உட‌ன‌ நீக்கி இருப்பின‌ம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த‌ ப‌ட‌த்தையும் தாய‌க‌ பாட்டு வ‌ரியையும் இணைத்து செய்தேன்............. இப்போது எல்லாரும் பார்க்கும் ப‌டி இருக்கு................கால‌ங்க‌ள் மாறினாலும் எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது.........…

  9. இன்றைய நாட்கள் ஒரு கடுமையான நாட்களாகவே நகர்கின்றது. எப்போது? யாருக்கு ? என்ன ஆகும் என்ற உண்மை நிலை புரியாது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது இந்தப் பூமிப்பந்து. சீனாவில் தொடங்கி இன்று அநேகமான நாடுகளைத் தொட்டு நிற்கும் கொரோனா வைரஸ்தான் இன்றைய பேசு பொருள். இந்த உண்மையை யாராலும் மறுதலிக்க முடியாது. இந்த நிலையில் தான் இன்று கியூபா நாட்டினை அதிசயமாக நோக்குகிறது இந்த உலகம். கியூபா நாடு ஒரு மருத்துவ வல்லரசு என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டுகின்றன. தனது மருத்துவ அணிகளை பல நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் மனித நேய செயற்பாட்டை கியூபா மேற்கொள்வதாக கியூபா மீது மருத்துவ வல்லரசு முத்திரை குத்தப்படுகின்றது. இவ்வாறான நிலையில் தான் தமிழீழத்தில் கியூபாவின் …

  10. சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்த…

  11. வணக்கம் தாய்நாடு.... ஐபிசி தமிழ் யாழ் கலையக திறப்புவிழா

  12. இருதயத்தில் வீசும் புக்காரா குண்டுகள்.! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள் - தீபச்செல்வன் இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. இலங்கை அரசின் புக்காரா விமானங்க…

  13. போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் On Jun 7, 2020 எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமி…

  14. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ் நகரம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் புத்தூர் பகுதி விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ரக்கா வீதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் குப்பிளான் சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  15. ஈழத்தின் தேச உணர்வுப் பாடல்களைத் தந்த கணீர் என்ற குரலிற்குரிய பாடகர் சங்கீத கலாபூசணம் செல்லத்துரை குமாரசுவாமி (வரதன் ஆசிரியர்- வயது 72) அவர்கள் இன்று (16.08.2023) புதன்கிழமை இயற்கையெய்தினார். அவர் மறைந்தாலும் அவர் பாடிய பூத்தகொடி_பூக்கள் இன்றி தவிக்கின்றது ….உள்ளிட்ட உணர்வூட்டும் பாடல்கள் அவரை நினைவூட்டும்!. வரதன் ஆசிரியரின் மறைவு குறித்து அவருடைய மாணவர்கள் விடுத்த இரங்கல் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது. காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” இசை ஆசிரியர் இசைப் பேராசான் சங்கீதபூசணம் செல்லையா குமாரசாமி அவர்கள் (வரதன் சேர்) காலத்தால் அழியாத நாயகன் எங்கள் “பூத்தகொடி” நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் அவர் வீட்டிலும் கற்ற காலங்க…

  16. வணக்கம் தாய்நாடு.... கிளிநொச்சி திருவையாறு

  17. எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 27 ஏப்ரல் 2014 சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து நேற்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தங்கள் ஊருக்குத் திரும்பாமல் அகதிமுகாங்களில் வாழும் இந்த மக்களின் போராட்டம் என்பது உக்கிரமானதொரு வாழ்தலே. ஈழத் தலைநிலம் திருகோணமலை மாவட்டத்தின் இத் துயர் என்பது ஒட்டுமொத்த ஈழம்மீதும் படிந்திருக்கும் பெருந்துயர். உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம்…

  18. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன் துறை கடற்கரையில் இடம்பெற்ற பட்டம் ஏற்றும் விழா பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் நகரில் உள்ள பெரிய கடை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் நீர்வேலி பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  19. போர்க்காலத்தில் உயிர்காக்கும் பதுங்குகுழிகளில் பயன்பாடு நீங்கள் அனைவரும் அறிந்ததே. சுப்பசொனிக் மேல சுத்தினாலோ அல்லது இராணுவமுகாமிலிருந்து எறிகணை குத்தினாலோ அதற்குள் போய் ஒழிந்துகொள்ளலாம் என்பது அப்பயன்பாடுகளில் முதன்மையானதும் முக்கியமானதுமாகும். புலிகளின் ஆளுகைக் குட்பட்ட பகுதிகள் மீது இலங்கை அரசால் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடையை வெல்லும் உபாயங்களாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கனவிளக்கு, பனங்காய்ச் சோப்பு, தேங்காயெண்ணை, டீசல், போன்ற இன்னொன்றுதான் பதுங்கு குழியைச் சவுண்ட் புறூப் (sound proof) அறையாகப்பபாவிக்கும் பழக்கமும். ஆனால் முன்னையவற்றைப்போல அரசின் தடைகளை வெல்லும் உபாயங்களில் இது ஒன்றல்ல. இது விடுதலைப்புலிகளால் விதிக்கப்பட்டிருந்த தடையை வெல்லும் உபாயம். …

  20. புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே! - சம்பந்தர் இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனார் ஈழத்தின் மன்னாரில் மாதோட்டத்தில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ள திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடிய பதிகமாகும். ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக உள்ளவை கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமுமாகும். அத்தகைய ஆலயத்தை கொண்டமைந்த மன்னாரில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் இப…

  21. சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Li…

  22. வணக்கம் தாய்நாடு.... தாயகத்திலிருந்து பாரம்பரிய விளையாட்டுகள்

  23. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் இருபாலைச்சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் இரட்டையபுலம் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சொர்க்கத்திடல் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.