எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஈழம் இன்றோ நேற்றோ தோன்றிய பெயரல்ல.! ஒருமுறை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து இலங்கை இராணுவ சோதனைச்சவாடி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, எனது புத்தகப் பையில் இருந்த இருபதாம் நூற்றாண்டு ஈழத் தமிழ் இலக்கியம் என்ற புத்தகத்தை ஒரு வெடிகுண்டைப் போல மீட்டெடுத்தனர் இராணுவத்தினர். அப் புத்தகத்தில் இருந்த ஈழம் என்ற சொல்லைக் கண்டே அவர்கள் பீதியுற்றனர். அந்தக் காலத்தில் தமிழீழம் என்ற சொல்லுடன் ஈழம் என்ற சொல்லும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியிலும் புழக்கத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் காலத்தில் மாத்திரமல்ல இன்றும் ஈழம் என்ற பெயர் மாத்திரமல்ல தமிழ் என்ற பெயரும்கூட சிங்கள தேசத்திற்கு ஒவ்வாமையாகத்தான் இருக்கின்றது. போருக்கு…
-
- 1 reply
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் தாக்குதலின் எதிர்விளைவே கறுப்புஜூலை என்பது பொய்- அதற்கு முன்னரே தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பமாகிவிட்டன- பேர்ள் July 23, 2020 பேர்ள்- இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவராணத்திற்கான மக்கள் கறுப்பு ஜுலையின் போது- அதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்களை நாங்கள் பதிவிடுகின்றோம். 1983 கறுப்பு ஜூலை இனக்கலவரம் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்விளைவே என்ற கட்டுக்கiதை தொடர்ந்து சொல்லப்பட்டுவருகின்றது. இது பொய் அரசாங்கத்தை சேர்ந்தவர்களின் வன்முறைகள் ஜூலை மாததத்துக்கு முன்னரே அதிகரித்து வந்தன.தமிழர்களை தங்கள் விருப்பம் போல கொலை செய்தனர். மனித உரிமை செயற்பாட்டாளர்கள்,அரசியல் செயற்பாட்டாளர்கள்,ப…
-
- 4 replies
- 950 views
-
-
யூலை மாதம் ஈழத்தமிழரின் வரலாற்றில் ஆழமாகப் பதிந்துவிட்ட ஒன்று. பல வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றுக்கொண்டது இந்த மாதத்தில் தான். 1957 ஆம் ஆண்டு யூலை 26ஆம் நாளன்றுதான் தமிழரின் பிரதிநிதி தந்தை செல்வாவுக்கும் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகிய நாள். வரலாற்றில் “பண்டா – செல்வா ஒப்பந்தம்” என்று பெயர்பெற்றுவிட்ட இவ்வொப்பந்தம் பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு யூலை 27ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதலாவது ஆயுத வழித்தாக்குதல் நடத்தப்பட்ட நாள். அல்பிரேட் துரையப்பா மீது நடத்தப்பட்ட தாக்குதலே …
-
- 1 reply
- 707 views
-
-
(மீள் பதிவு ) 1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது…
-
- 1 reply
- 2k views
-
-
1972 களிலேயே தோற்றம் பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஓர் மாபெரும் திருப்பு முனையை, ஓர் புதிய சகாப்தத்தைப் படைத்தது, 1983 யூலை 23ம் திகதி திருநெல்வேலியில் இடம்பெற்ற 13 இராணுவவீரர் மீதான தாக்குதலாகும். இம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதலில் பங்கேற்ற விடுதலைப்பு புலிகளின் பலர் (தலைவர் பிரபாகரன் தவிர) இன்று எம்முடன் இல்லை. போராட்டத்தை ஆரம்பித்து வைத்த, இத்தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களான செல்லக்கிளி, பொன்னம்மான், விக்ரர், கணேஸ், ரஞ்சன், ரெஜி, லிங்கம் ஆகியோரின் நினைவாக………. அன்று கிட்டண்ணா அவர்களால் “போராட்டத்தை ஆரம்பித்த வரலாற்று நாயகர்களுக்காக…” எழுதப்பட்ட கட்டுரையே இது. திருநெல்வேலித் தாக்குதலில் பங்கேற்ற வரலாற்று நாயகர்களில் ஒருவரான கிட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்.. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன். https://velupillaiprabhakaran.wordpress.com/category/தலைவரின்-சிந்தனைகள்/
-
- 2 replies
- 2.2k views
-
-
கறுப்பு ஜூலை; “காயாத இரத்தம்” July 21, 2020 தாயகன் இலங்கைத் தமிழர் வரலாற்றில் 1983 ஜூலை 23ஆம் திகதி ஒரு திருப்பத்தை எற்படுத்திய நாள். தமிழர்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட நாள் . இலங்கையின் தலைநகர் கொழும்பு உட்பட நாட்டில் சிங்களவர்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்ந்த பகுதிகள் எங்கும் ஓடிய தமிழர்களின் குருதியும் பறிக்கப்பட்ட உயிர்களும் இதயங்களை உறைய வைத்த கதறலும், கண்ணீரும் காடைக் கும்பல்களால் கூட்டாக வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட தமிழ் பெண்களின் அபயக் குரல்களும் இலங்கை வீதிகளை நிறைத்த அந்த நாளை எப்படி மறக்க முடியும்? கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த தமிழினப் படுகொலை நடந்து எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் 37 ஆண்டுகள். வாகனங்களில் ச…
-
- 0 replies
- 984 views
-
-
திருக்கோணேஸ்வரமும் எல்லாவல மேதானந்த தேரரரும் – சுரேஸ்குமார் சஞ்சுதா… July 19, 2020 திருக்கோணேஸ்வரம் மற்றும் நல்லூர் முருகன் ஆலயம் தொடர்பாக தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாக்கும் ஜனாதிபதியின் செயலணியின் உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேர் வெளியிட்டுள்ள கருத்தானது எம்மவர் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழர் வரலாறு தொடர்பாக அதிகார வர்க்கத்திலுள்ளவர்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்கள் எவ்வகையானவை என்பதை உணர்த்தும் வண்ணமாகவே வேதனைக்குரிய இவ்விடயத்தை அங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. அத்துடன் தேரரின் கருத்தில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களையும் அபத்தமான வாதங்களையும் எடுத்துக்காட்டி உண்மையை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இவ்வகையில் அவர…
-
- 0 replies
- 813 views
-
-
தமிழில் பற்று சீட்டு பெற.. 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்! யாழ்.பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக பொலிசாரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகஸ்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது, குறித்த இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டில் எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார். அதன் போது உத்தியோகஸ்தர், நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப…
-
- 4 replies
- 756 views
-
-
சிங்களத்தின் தலையில் பேரடி கொடுத்த புலிகளின் ஓயாத அலைகள் – 01 Last updated Jul 17, 2020 ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர் (ஆய்வு) யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக …
-
- 2 replies
- 831 views
-
-
இன்று ஆடிப்பிறப்பு – ஈழ தமிழரின் பண்பாட்டுப் பண்டிகை.! கவிஞர் தீபச்செல்வன் ஆடிப்பிறப்பு என்ற பண்டிகை ஈழ தமிழ் சமூகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். குறிப்பாக ஈழத் தமிழர்கள் இந்தப் பண்டிகையை தமது கலாசார, பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக கொண்டாடி வந்துள்ளார்கள். அன்றைய நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள். இம்முறையும் ஆடிப்பிறப்பை ஒட்டி ஈழத்தில் பல வீடுகளில் கூழ்காய்ச்சி, கொழுக்கட்டை அவித்து கொண்டாடினாலும் இதையெல்லாம் கொண்டாட முடியாத நிலையிலும் பல வீடுகள்வெளித்துக் கிடக்கின்றன என்பதே சோகமானது. சூ…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பெருவெளி அகதிமுகாம் படுகொலை 15 யூலை 1986 On Jul 15, 2020 திருகோணமலை கொட்டியாபுரத்திலிருந்து மட்டுநகர் நெடுஞ்சாலையில் ஏழு கி.மீ தொலைவில் மல்லிகைத்தீவுச் சந்தியுள்ளது சந்தியின் வலப்புறமாக ஒரு கி.மீ தூரத்தில் பெருவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உளள்து. இக்கிராமம் மல்லிகைத்தீவு கிராமசபை எல்லைக்குட்பட்ட தமிழ் மக்கள் அதிகளவு வாழும் பிரதேசமாகும். 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்தப் பாடசாலை தமிழ் மக்களின் அகதி முகாமாக இயங்கிவந்தது. கிராமசபை இயங்கி வந்த காலங்களில் மல்லிகைத்தீவு கிராமசபை பெரும்பான்மையான தமிழ்க் கிராமங்களையும், சில சிங்களக் கிராமங்களையும் உளள்டக்கியிருந்தது. அவற்றில் தெகிவத்தை, நீலாப்பொல போன்ற சிங்களக் கிராமங்களில் இருந்த மக்களில் பலர் ஊர்காவற்பட…
-
- 0 replies
- 665 views
-
-
75 ஆண்டுகால ‘பாரதி வாசிகசாலை’! இன்றைய துயர நிலை.! ஜூலை 15, 1945 ம் ஆண்டு எங்கள் ஊரின் வாசிகசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று 75 ஆண்டுகள் கடந்தும் இயக்கத்தில் உள்ளது. வாசிப்பு பழக்கம் என்பது இன்று வேறு வடிவம் பெற்றுள்ளது. முன்னோர்கள் காலத்தில் அதன் வடிவமும் தேவவையும் எவ்வாறு இருந்து பின்னைய காலங்களில் எவ்வாறான மாற்றம் கொண்டு வந்துள்ளது என்பதனையும் அறிவோம். குறிப்பாக இன்று நிலவும் இந்த உலகடங்கு நிலையில் பொது இடத்தில் சென்று வாசிப்பது என்பதோ அல்லது நூல்கள், புதினங்கள் வாசிப்பது என்பதோ உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது. அன்றொருநாள் எங்கள் ஊரில் ஒருவருக்கு தந்தி வந்ததாம். அதனை வாங்கிப் பார்த்து தகவலை அறியமுடியாமல் அந்த தந்தி கொண்டுவந்த அஞ்சலக ஊழியரிடமே…
-
- 0 replies
- 619 views
-
-
தேரர்களும் இராணுவமும் கிழக்கின் தலைவிதியை மாற்றப்போகின்றனர் – விக்கினேஸ்வரன் காட்டம் கிழக்கின் தொல்பொருளியல் செயலணி எதற்காக ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது எல்லாவல மேதானந்த தேரரின் கருத்துக்களை கவனிக்கும் போதே தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. தேரர்ககளினதும் இராணுவத்தினதும் உதவியுடன் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை மாற்றப் போகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்க ஜனாதிபதி நியமித்துள்ள செயலணியில் அங்கம் வகிக்கும் எல்லாவல மேதானந்த தேரர் அண்மைக்காலமாக முன்வைத்து வருகின்ற கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற…
-
- 1 reply
- 574 views
-
-
திருக்கோணேஸ்வர ஆலயம் பற்றி 189 ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்க வர்த்தமானியில் வெளியானது என்ன? பேரறிஞர் சேர். வில் பலியம் ஜோன்ஸ் "இலங்கைத் தீவில் நினைவுக் கெட்டாத காலம் முதல் இந்து சாதியினர் வாழ்ந்து வருகிறார்கள்' என்று அபிப்பிராயம் தெரிவிப்பதற்கு காரணமாகவிருந்த இலங்கையில் காணப்படும் இந்துக்களின் பல்வேறு பழம்பெரும் நினைவுச் சின்னங்களில் திருமலையில் இருக்கும் கோவில் என்றுமே மறக்க முடியாதது. மதவெறி கொண்ட போத்துக்கீயர் 1622 ம் ஆண்டு தங்களது கோட்டை ஒன்றைக் கட்டுவதற்காக இக்கோவிலை இடித்துதுத் தள்ளியும் இற்றை நாளிலும் இக் கோவில் வணக்கத்துக்குரிய புனிதஸ்தலமாக விளங்கிவருகிறது. சிலகாலத்திற்கு முன் ஓர் நண்பனின் உதவியுடன் கவி ராஜவரோதயன் என்ற புல…
-
- 0 replies
- 543 views
-
-
சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை 00 யாழ்ப்பாண நகருக்குச் சமீபமாக ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தண்ணீர்க் கிணறு இருக்கிறது. அந்தக் கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனிமனிதருக்குச் சொந்தமானது. அந்தத் தனிமனிதர் தன்னை ஒரு “உயர்சாதிக்காரர்” என எண்ணிக்கொள்பவர். அந்தக் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் எனப்படும் ஒரு மக்கள் பிரிவும் இருக்கிறது. இந்த மக்களுக்கு குடிதண்ணீர் வசதியில்லை. இவர்கள் இந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள். தண்ணீர் அள்ளுவதற்கு முயற்சிக்கிறார்கள். இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடிவருகிறார். தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்டக்கூடாது என்கிறார். இதே போன்று வட…
-
- 2 replies
- 787 views
-
-
நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம், முருகன் ஆலயம் மீதான தாக்குதல்: 25ஆம் ஆண்டு நினைவுகூரல் இன்று! யாழ்ப்பாணம், நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயம் மீதான விமானத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் திகதியன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்கள் மீது விமானப் படையினரின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசியதில் 147 பேர் மரணமடைந்தனர். அன்று அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல், விமானத் தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward ) எனும் இராணுவ நடவடிக்கையை மேற…
-
- 3 replies
- 884 views
-
-
இருதயத்தில் வீசும் புக்காரா குண்டுகள்.! இன்று நவாலி தேவாலய படுகொலை நாள் - தீபச்செல்வன் இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. இலங்கை அரசின் புக்காரா விமானங்க…
-
- 0 replies
- 525 views
-
-
தமிழர் தாயகத்தில் சிங்களபௌத்த ஆக்கிரமிப்பை தடுக்க இந்தியாவின் காத்திரமான பங்களிப்பு அவசியம் - ப.சத்தியலிங்கம்.! தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காகவே அரச தலைவரால் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாத தனிச்சிங்களவர்களை உள்ளடக்கிய தொல்பொருள் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை பாதுகாக்க வரலாற்று ரீதியாக மத, கலாசார, மொழி, பண்பாட்டு விடயங்களில் எமக்கு தாய்நாடாக இருக்கும் பாரத தேசம் தலையீடு செய்யவேண்டுமென வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் வன்னி தேர்தல் தொகுதியின் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளருமாகிய மருத்…
-
- 0 replies
- 469 views
-
-
மட்டக்களப்பு எல்லைகளில் பறி போகும் நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் July 2, 2020 பார்த்தீபன் வரதராஜன் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுள் ஒன்றான புல்லுமலை மற்றும் தாந்தாமலை, கச்சகொடி, சுவாமி மலை போன்ற பிரதேசங்களில் யாழ். எய்ட் என்ற தனியார் அமைப்பு, அங்குள்ள மக்களுக்கான இடர்காலப் பணிகளை முன்னெடுத்தபோது அவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாது அல்லல்படுவதை அவதானிக்க முடிந்தது. தமிழ் நிலம் பறிபோவதைத் தடுக்க வேண்டுமாயின் உண்மையிலேயே அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடடைய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில், அந்தக் கிராம மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களைக் பறிகொடுத்திருக்கின்றனர். அதேபோல் மீண்டும் பறிபோய்விடக்கூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பல வாத்தியங்களை அனாசயமாக வாசிக்கின்றார் - பாராட்டுக்கள் துவாரகன் -
-
- 0 replies
- 737 views
-
-
தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேவலப்படுத்திய முன்னாள் எம்பி ஸ்ரீதரன்
-
- 0 replies
- 590 views
-
-
-
- 1 reply
- 1.1k views
-