Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. என்னைப் போன்ற யாழ்ப்பாணியைப் புரிந்துகொள்ளல் இளங்கோ-டிசே சில நாட்களுக்கு முன் தற்செயலாய் ஒரு செய்யுளை வாசித்திருந்தேன். நீங்கள் நினைப்பது சரிதான் , அது ஒரு பெண்ணை வர்ணிப்பதுதான் . அந்தப் பாடல் தந்த பரவசத்தில் ஒரு கதை எழுதுவதற்கான விதை இதற்குள்ளே இருக்கிறதேயென்று அதன் மூலத்தைத் தேடிப் போனபோது இறுதியில் சென்று வீழ்ந்தது 'யாழ்ப்பாண வைபவ மாலை'யில்.யாழ்ப்பாணத்தின் வரலாற்றை (பிற பகுதிகளையும் தொட்டும்) நாம் ஆதியில் இருந்து வாசிக்கக் கூடியதான ஒரு நூலாக மாதகல் மயில்வாகனத்தார் எழுதிய இந்நூலே இருக்கின்றது. ஒல்லாந்தர் (டச்சுக்காரர்) காலத்தில் எழுதப்பட்டது எனச் சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வைபவமாலை போர்த்துக்கேயரிடமிருந்து (பறங்கியரிடமிருந்து) ஒல்லாந்தார் ஆட்சியைக் கைப்பற்…

  2. மலையக தெலுங்கரும், மலையாளிகளும் ஒரு நோக்கு - ஆர்.மகேஸ்வரன் மலையகத்துடன் ஒன்றித்துள்ள திராவிடர்களான தெலுங்கரும், மலையாளிகளும் தமிழர்களாகவே வாழ்கின்றனர். பெரும்பாலானோர் இந்துக்கள். இவர்கள் "ஆண்ட பரம்பரை” என மார்தட்டுபவர்கள். தமிழ் பரம்பரையை போலவே இவர்களது பரம்பரையும் ஆண்ட பரம்பரையே. இவர்கள் முற்றுழுதாக இந்து, தமிம் கலாசாரத்தினை கொண்டிருந்தாலும் வீட்டில் பேசும் மொழி மூலம் தனித்துவம் பேணுகின்றனர். இவர்களது வரலாற்றினையும் மலையக வரலாற்றுடன் ஆய்வு செய்ய வேண்டும். இக் கட்டுரை ஒரு அறிமுகம் மட்டுமே. திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி மலையான்ம, மலயாய்ம எனவும் அழைக்கப்பட்டது. மலையாளம் என்பது ஒரு நாட்டையும் பின்னர் மொழியையும் குறித்தது. மலையாள நாட்…

  3. பள்ளிக்கூடங்கள் கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல?: கவிஞர் தீபச்செல்வன். நான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க முடியாமல் மெல்ல நகருகின்ற மாணவர்களுக்கும் உரியதுதான். ஒரு ஆசிரியராக பாடசாலைக்குள் நுழைகின்ற போது நிறையப் பாடங்களைக் கற்க முடிகிறது. கொரேனா பேரிடர் காலத்தில் முடப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது ஈழக் கல்விச் சமூகம். எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் பெ…

  4. மாவீரன் பண்டாரவன்னியன் வரலாறு கற்பனையா? நிஜமா? சுரேஸ்குமார் சஞ்சுதா… June 8, 2020 பண்டார வன்னியனது வரலாறு கற்பனையா? நிஜமா? இந்தக்கேள்வி எழுந்ததன் விளைவாக தான் திரு.முல்லைமணி அவர்களுக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்தவர்கள் இதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது. பண்டார வன்னியனின் வரலாறானது கற்பனையில் உதித்ததல்ல. அது கருணதந்திர கதையாக அல்லது வாய்மொழி மூலம் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இக்கதையை உண்மை என்று எவரும் ஆரம்பகாலத்தில் உறுதிப்படுத்தவில்லை. திரு.முல்லைமணி அவர்களின் முயற்சியாலும் வன்னியில் எழுந்த பிரதேச விழிப்புணர்வினாலும் பண்டார வன்னியனின் கதை நிஜமென்றும் கற்சிலை மடுவில் பண்டார வன்னியனின் நினைவ…

  5. குவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன் குவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் மகாவம்சத்தில் கூறப்படாத மகாவம்சக் கதைகளையும், கதை மாந்தர்கள் பற்றியும் மேலதிக விபரங்களைத் தந்துள்ளன. மகாவம்சம சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கொண்டாடப்படுகிற போதும் மானுடவியலாளர்கள் மகாவம்சத்தின் முழுக் கதைகளையும் உண்மை நிகழ்வுகளாக பரிந்துரைப்பதில்லை. அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தும் பல புனைவுகள் அதில் உள்ளமை தான் அதற்குக் காரணம். ஆனாலும் சிங்கள இலக்கியங்களில் மகாவம்ச உபகதைகள் பல தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளாகவும், நூல்க…

  6. போராட்டத்தில் விதையான வணபிதா சந்திராவின் கொலையின் பின் புலம் On Jun 7, 2020 எமதுதேசிய விடுதலைப் போராட்டம் பல வரலாற்றுப் பதிவுகளை எமக்கு ஏற்படுத்தியுள்ளது.அறுபது வருடகால விடுதலைப் போராட்ட வரலாற்றில் தன்னலம் கருதாது செயற் பட்ட பல மகத்தான மனிதர்களை நாம் இழந்திருக்கின்றோம். இவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வதற்கும் எமது சமூகத்தில் இவர்களின் வகிபாகத்தினை இட்டு நிரப்புவதற்கு இன்றுவரை யாருமில்லாத நிலைகாண ப்படுவதால் இவர்களின் தேவை உணர்ந்து இவர்களை இன்று நினைத்துப்பார்க்க காரணமாகின்றன. மட்டக்களப்பில் பங்குத்தந்தை சந்திரா என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட கத்தோலிக்க மத துறவி அவர்களை காலம் கடந்து நினைவு கூர்வதற்கு அவரின் மக்கள் நலன் ஒன்றே எமக்கு முன் காரண கின்றது. தமி…

  7. ஒடுக்குமுறைக்கு எதிராய் தனி ஒருவனாகப் போராடிய பொன். சிவகுமாரன். அண்மைய நாட்களில் இலங்கையின் ஆட்சியாளர்களும் எதிர்த்தரப்பினரும் தலைவர் பிரபாகரன் அவர்களை சிறந்த தலைவர் என போட்டி போட்டு பேசியபடியுள்ளனர். வரலாறு உன்னதமான தலைவர்களையும் போராளிகளையும் ஒரு நாள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும். இதனால்தான் வரலாறு என்னை விடுவிக்கும் என்றார் பிடல் காஸ்ரோ. இத்தகைய தலை சிறந்த போராளிகளின் ஒரு அதிசய நாயகனாக, வியப்பூட்டும் உன்னத போராளியாக மதிப்பு பெறுகிறார் மாவீரன் பொன். சிவகுமாரன். இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தெழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொ…

    • 1 reply
    • 1.1k views
  8. மந்திரிமனைக்குள் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட் இலங்கையைப் பொறுத்தவரை தொல்பொருள் சார்ந்த பிரதேசங்கள் மிக மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டுவருவது வளக்கம். இலங்கையில் உள்ள புராதன ஸ்தலங்களில் சிறிதொரு அசம்பாவதம் நடந்தாலே, முழு தேசமும் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால், யாழ்பாணத்தில் உள்ள புராதன கட்டிடமும், இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பேணப்பட்டு வருகின்றதுமான ‘மந்திரிமனை’ என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளத்திற்குள் ஒருவர் குடும்பமாகவே குடிபுகுந்துள்ள விடயம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடந்தது? ஒரு நேரடி ரிப்போர்ட்: https://www.ibctamil.com/articles/80/144638

  9. என‌க்கு யாழ்ப்பாண‌ம் என்றால் என் நினைவுக்கு அதிகம் ‌ வ‌ருவ‌து இந்த‌ மூன்று க‌ரும்புலி க‌ண்ம‌ணிக‌ளின் ப‌ட‌ம் தான் , யாழ்ப்பாண‌ ஆரிய‌குள‌ ச‌ந்தியில் இந்த‌ மூன்று க‌ரும்புலிக‌ண்ம‌ணிக‌ளின் ப‌ட‌ம் சிறு க‌ட‌ல்ப‌ட‌கு செய்து அதில் வைக்க‌ ப‌ட்டு இருந்த‌து , அந்த‌ இட‌த்தை க‌ட‌க்கும் போதெல்லாம் இவ‌ர்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து விட்டுத் தான் செல்வேன் 🙏 , இப்ப‌ அந்த‌ இட‌ங்க‌ளை பார்த்தா உண்மையில் வெறிசோடிப்போய் கிட‌க்கு , எம்ம‌வ‌ர்க‌ளுக்கு வைத்து இருந்த‌ சிறு சிறு நினைவிட‌ங்க‌ள் எல்லாம் இருந்த‌ இட‌ம் தெரியாம‌ல் இருக்கு / சிறித‌ர் திரைய‌ர‌ங்கு இன்னொரு மாவீர‌ர் ம‌ண்ட‌வ‌ம் மாதிரி , 1992ம் ஆண்டில் இருந்து 1995ம் ஆண்டு க‌ட‌சி வ‌ரை எம்ம‌வ‌ர்க‌ள் இய‌க்கிய‌ அனைத்து ப‌ட‌ங்க‌ளும…

  10. இறுதிப்போர் நடந்த இரவுகளில் பதுங்குகுழிகளுக்குள்ளேயே இருந்ததால் எந்த நாளென்று தெரியவில்லை... நாங்கள் இரண்டு நாட்களாக எந்த உணவும் எடுத்துக்கொள்ளவில்லை...சில மிடறுகள் தண்ணீர் கிடைத்ததோடு சரி... இரண்டு நாட்களாக எங்களை சுற்றி மக்கள் பதுங்கியிருந்த ஆழம்குறைந்த பல பதுங்குகுழிகளுக்குள் கையெறி குண்டுகளை வீசி "புலிகள் இருக்கிறார்களா" என இராணுவத்தினர் சோதித்து கொண்டிருந்தார்கள்...!! அன்று இரவு மட்டும் நான் 50 முறைகளுக்கும் மேலாக ஜெபம் செய்திருப்பேன்...எங்கள் பதுங்குகுழிகள் இராணுவத்தினர் கண்ணில் பட்டு விடக்கூடாதென்று...!! இறுதியில் அணிந்திருந்த வௌ்ளை உடையை உயர்த்தி பிடித்தவாறு வௌியேற முற்பட்டோம்...இராணுவத்தினர் சிரித்துக்கொண்டே எங்களைநோக்கி துப்பாக்…

  11. யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்: "தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமாக போற்றப்பட்ட யாழ்பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை)37 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் அத்துயர சம்பவம் ஏற்படுத்திய வடு இந்த கணம்வரை மாறாது உள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அ…

  12. அளவெட்டி நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்? என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மை திறமிருந்தால்? நேர்மை திறமிருந்தால்? நேருக்கு நேராய் வரட்டும்... உழைப்போர் அனைவரும் ஒன்று எனும் உணர்வினில் வளர்வது இன்று! வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது! இனியொரு நாளும் நடக்காது! நேருக்கு நேராய் வரட்டும்... பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு பாதையில் தவிக்குதடா! சில பாவிகள் ஆணவம் பஞ்சையின் உயிரைத் தினம் தினம் பறிக்குதடா! மாறினால் மாறட்டும்! இல்லைய…

    • 1 reply
    • 721 views
  13. திரு நங்கைகளுக்கு விடுதலைப் புலிகள் கொடுத்த மரியாதை.! யாழ் திரு நங்கை ஈழநிலா நெகிழ்ச்சி.! வெகுகாலமாக விடுதலைப்புலிகள் பற்றிய விமர்சனங்கள் எழுத்தவண்ணமே உள்ளன. குறிப்பாக சாதியப்பாகுபாகு மற்றும் LGBTIQ சமூக மக்கள் இந்த இரண்டு விடயங்களிலும் பாராபட்சம் இருந்ததாக பலருடைய பதிவுகளில் பார்த்தேன். சாதியபாகுபாடுகள் பற்றி விடுதலைப்புலிகள் கைக்கொண்ட நடவடிக்கைககள் பற்றி நான் அறியவில்லை அதனால் அது பற்றி பேச நான் விரும்பவில்லை. LGBTIQ மக்கள் பற்றி குறிப்பாக திருநங்கைகள் நிலை அவர்கள் காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதை பற்றி அனுபவித்தவர்கள் வாயினால் கேட்டறிந்த உண்மைகளை நான் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். 1989ல் . யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் வசித்த ஒரு திருந…

  14. பெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது. ஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து. ‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது. 2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள்…

  15. 'வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்' இராணுவ நடவடிக்கையின் புலிகள் முறியடிப்பு சமரின் 33வது ஆண்டு நினைவுகள். 1987ம் ஆண்டு, மே மாதம் 10 ஆம் தேதி. பொலிகண்டி கொற்றாவத்தை பகுதியில் அமைந்திருந்த புலிகள் பயிற்சி முகாமில் செல்வராசா மாஸ்டர் தலைமையில் தெரிவுசெய்யப்பட்ட 40 போராளிகளுக்கு சிறப்பு கொமாண்டோ பயிற்சி கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. புலிகள் ஒரு வலிந்த தாக்குதல் நடத்துவதற்காக தான் இந்த பயிற்சி நடத்தப்பட்டு கொண்டிருந்தது. மே 20ஆம் தேதி அன்று இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. இந்த பயிற்சி நிறுத்தப்பட்டதற்கான காரணம், சிங்கள ராணுவத்தால் ஒரு பெரிய தாக்குதல் யாழ்குடா நாட்டில் நடத்தப்பட்ட போகிறது என்ற தகவல் கிடைத்ததால் இந்த பயிற்சி நிறுத்தப்பட்டது. மே 25 இரவு…

    • 1 reply
    • 1.7k views
  16. தடம் அழியா நினைவுடன் … மே-13 அ . அபிராமி ‘டமார்’ என்ற ஒரு பேரோலி, அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த என்னை திடுக்கிட்டு விழிக்க வைத்தது. பொலுபொலு என்ற சத்தத்துடன் எறிகணைத் சிதறல்கள் ஆங்காங்கே தகரத்தில் பட்டுத் தெறித்தன. எறிகணைத் துண்டொன்று மண்மூட்டைக்கு மேல பட்டிருக்க வேணும் , சொர சொர என்று கழுத்துக்கு நேரே மண்ணைக் கொட்டியது. வாய் மூக்கு எல்லாம் ஒரே மண் சடாரென்று எழுந்து முகத்தைத் துடைத்துக் கொண்டேன். இப்போதும் வானத்தில் எரிந்து கொண்டிருந்தன வெளிச்சக் குண்டுகள். தலைக்கு மேலே நின்று இரைந்தபடி, படம்பிடித்துக் கொண்டிருந்தது ஆளில்லா விமானம். கொஞ்சம் கூட ஓய்வே இல்லாமல் அருகருகே வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்த ரவைகள், மோட்டார் ரக எறிகணைகள். எதுவும் சற்றுக்கூட ஓய்ந்…

  17. பிரபாகரனும் பூரியும் -கார்வண்ணன் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து, இணை அமைச்சராக இருக்கும், ஹர்தீப் சிங் பூரி, மே 18ஆம் திகதி தனது டுவிட்டர் தளத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் படத்துடன் ஒரு பதிவை இட்டிருந்தார். இந்திய வெளிவிவகாரச் சேவையில் மூத்த இராஜதந்திரியாக இருந்த பூரி, ஓய்வுபெற்ற பின்னர், பாஜகவில் இணைந்து மத்திய இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார். கடைசியாக இவர், இராஜதந்திரப் பதவியில், ஐ.நாவுக்கான இந்திய தூதுவராக பணியாற்றியிருந்தார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்ட மே 18 ஆம் திகதி அவர், சுமார், 33 ஆண்டுகளுக்கு முன்னர், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட ஒரு படத்துடன், பதி…

  18. #பிரபாகரனை ராஜீவ் ஏமாற்றினாரா? ராஜீவை பிரபாகரன் ஏமாற்றினாரா? ............................................... ராஜீவ் காந்தி கள்ளம், கபடம் இன்றி பிரபாகரனை நம்பினார். ஆனால், பிரபாகரன், ராஜீவ் காந்தி உள்பட அனைவரையுமே ஏமாற்றிவிட்டார் என முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் தனது சுயசரிதையான, ‘One life is not enough’(ஒரு வாழ்வு போது) என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். பிரபாகரனை ராஜீவ் காந்தி ஏமாற்றினாரா? அல்லது, ராஜீவ் காந்தியை பிரபாகரன் ஏமாற்றினாரா? எது உண்மை? 1987-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் யாழ்ப்பாணத்துக்கு இந்திய விமானப்படையைச் சேர்ந்த உலங்கு வானூர்தியை அனுப்பி பிரபாகரனையும் அவரது தோழர்களையும் தில்லிக்கு வரவழைத்தார் பிரதமர் ராஜீவ் காந்தி. ஆனால், இலங்கைத் தூதுவராக இர…

  19. தமிழர்களால் மறக்கவே முடியாத 1958 இனவழிப்பு - தீபச்செல்வன் இன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை இன்னொரு இனம் தாக்கி அழிக்கின்ற செயல். அப்படி ஒரு நிகழ்வுதான் 1958இல் மே 22ஆம் திகதியிலும் துவங்கியிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்கு மே மாதம் என்பது கனத்துப்போனவொரு காலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவேறிய நாட்கள். இதே காலத்தில்தான் 1958இனப்படுகொலையும் நடந்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முதல் வன்செயல் இது. தமிழர்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வன்முறையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.