அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9224 topics in this forum
-
ஐ.நா தீர்மானம் வெற்றி பெற்றவர்கள் யார்? – வேல்ஸ் இல் இருந்து அருஸ் 147 Views சிறீலங்கா தொடர்பில் முன்வைக்கப்பட்ட ஏழாவது தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் என்பது தமிழ் அமைப்புக்களின் அல்லது அரசியல் கட்சிகளின் உழைப்பினால் கொண்டுவரப்பட்டது அல்ல. இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் பூகோள அரசியல் நெருக்கடியின் எதிர்விளைவு இது. நாம் முயன்றாலும், இல்லை என்றாலும் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கும். ஏனெனில் இந்த தீர்மானத்தில் தமிழ் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் முன்வைத்த எந்த கோரிக்கைகளும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக மேற்குலகத்தின் அழுத்தம் இந்தியாவின் அரசியல…
-
- 0 replies
- 361 views
-
-
பிரித்தானிய தமிழர் பேரவை ஊடக சந்திப்பு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் நேரலை அண்மையில் 'தமிழ் அமெரிக்கா'த் தொலைக்காட்சியில் இடம் பெற்ற கலந்துரையாடலுக்கான காணொளி. இலங்கைத் தமிழ் அமைப்புகள் பல இதில் கலந்துகொண்டு தம் கருத்துகளை வழங்கியிருந்தன. குறிப்பாகப் பிரித்தானியத் தமிழர் பேரவையின் சார்பில் ரவிகுமார் (ஆனந்தகுமார்), நாடு கடந்த தமிழீழம் சார்பில் அதன் பிரதமர் வி.ருத்திரகுமாரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறு நாடுகளிலிருந்து தம் கருத்துகளைத் தெரிவித்தார்கள். கலந்துரையாடலின் பின்னர் கேள்வி -பதில் இடம் பெற்றது. மேற்படி கலந்துரையாடலைத் தலைமையேற்று நடத்தியவர் 'டொரோண்டோ'விலிருந்து ஞானி ஞானேசன் அ…
-
- 3 replies
- 709 views
-
-
தேர்தலைக் குறித்துச் சிந்திப்பது எப்படி? - ராஜன் குறை March 28, 2021 தமிழகம் தேர்தல் பிரச்சார அனலில் மூழ்கியிருக்கும்போது, மார்ச் 2021 இறுதி வாரத்தில் இந்தக் கட்டுரையைத் தமிழினிக்காக எழுதுகிறேன். ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல். இதில் என்னுடைய அரசியல் சார்புகள் குறித்தும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் எழுதப்போவதில்லை. அவற்றை மின்னம்பலம் வலைத்தளத்தில் வாராவாரம் திங்களன்று எழுதி வருகிறேன். அவற்றில் பல கட்டுரைகளை தி.மு.க நாளேடான முரசொலி மறுபிரசுரம் செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. அதனால் என் தேர்வினைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு கட்டுரைக்குள் சென்றுவிடுகிறேன். இந்தியத் தேசம் பார்ப்பனீய இந்து அடையாளத்தின் பேரில் கட்டமைக்கப்படுவதை நான் எதிர்க்க…
-
- 2 replies
- 420 views
-
-
ஜெனீவாவுக்குப் பின்னரான நெருக்கடிகள் -மொஹமட் பாதுஷா இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட பிரேரணை, நிறைவேற்றப்பட்டு இருக்கின்றது. அரசாங்கம் இதை எதிர்பார்த்திருக்கவில்லை என்றாலும், இம்முறை ஜெனீவா அமர்வில், ‘பிடி’ இறுகப் போகின்றது என்பது பரவலாகவே எதிர்வுகூறப்பட்ட விடயம்தான். இப்பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளன. 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறாமல் செயற்பட்ட இலங்கை அரசாங்கத்துக்கு, இது நல்லதோர் ஆரம்பப் பாடம் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேநேரம், இலங்கையர் என்ற அடிப்படையில் நோக்கினால், இது நமக்…
-
- 0 replies
- 455 views
-
-
ஐ.நா வில் ஈழ அரசியலின் தோல்வியும் எதிர்கால அபாயமும்: சபா நாவலன் உலகின் அத்தனை நிகழ்வுகளையும் மூடிவைத்துவிட்டு புலம் பெயர் நாடுகளின் அரசியல் “ஆய்வாளர்களும்” “அறிஞர்களும்” தாம் யாரையெல்லாம் சந்தித்தோம் எங்கெல்லாம் பேசினோம் என வாதப் பிரதிவாதங்களை நடத்திகொண்டிருக்கிறார்கள். பதினொரு வருடங்களாக இலங்கையிலோ அன்றி உலகின் எந்தப் பகுதியிலுமோ போராட்டங்கள் எதுவும் நடைபெற்றுவிடதாவாறு ஐ.நாவையும் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் நம்பியிருங்கள் என்று நடந்துமுடிந்த இனப்படுகொலையை ஒரு சிறிய வட்டத்தினுள் அடக்கிய இவர்கள் இம்முறை இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றியதை வெற்றி எனக் கொண்டாடுகிறார்கள். எதுவுமே அற்ற வெற்றுத் தீர்மானத்தை இலங்கை அரசும், ப…
-
- 0 replies
- 580 views
-
-
பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு -என்.கே. அஷோக்பரன் மூலைக்கு மூலை, ‘உங்கள் பிள்ளைகளைப் பட்டதாரியாக்குங்கள்’ என்று விளம்பரங்கள் நிறைந்து வழியும் காலகட்டத்தில், ‘பட்டப்படிப்பு’ என்பது சமூக அந்தஸ்தின் முக்கிய குறிகாட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில், எப்படியாவது எமது பிள்ளையும் ஒரு பட்டத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற பெற்றோரின் அவாவின் விளைவாக, அதிகளவிலான பட்டதாரிகள் உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். கல்வியின் இலக்கு, அறிவு என்பதற்குப் பதிலாக பட்டம் என்ற நிலையில்தான் கல்வித்துறை இங்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கு கேள்வி இருக்கிறதோ அங்கு, அதற்குரிய நிரம்பலை, வணிகம் வழங்குவது என்பது இயல்பானது. இந்தப் பட்டப்படிப்புக்கான அதீ…
-
- 1 reply
- 768 views
-
-
ஜெனிவா பிரேரணையும் இந்தியாவும் - யதீந்திரா கடந்த ஒரு சில மாதங்களாக ஜெனிவாவை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் முடிவுக்குவந்திருக்கின்றன. எதிர்பார்த்தது போன்று வாக்கெடுப்பில் பிரேரணை வெற்றிபெற்றிருக்கின்றது. வெற்றிபெறக் கூடிய நிலைமை இருந்ததால்தான், பிரித்தானியா பிரேரரணையை வாக்கெடுப்புக்கு சமர்ப்பித்திருந்தது. முதலாவது பார்வையில் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் அதன் முதலாவது ராஜதந்திர தோல்வியை பதிவு செய்திருக்கின்றது. ஆனால் அரசாங்கம் ஒரே நேரத்தில் இரண்டு தோல்விகளை ஒரே களத்தில் சந்தித்திருக்கின்றது. பிரேரணையின் போதான வாக்கெடுப்பின் போது, இலங்கையின் உடனடி அயல்நாடும், பிராந்திய சக்தியுமான இந்தியா வாக்கெடுப்பை தவிர்த்திருக்கின்றது. இது ரா…
-
- 0 replies
- 374 views
-
-
-
- 6 replies
- 794 views
-
-
ஜெனிவா 2021 – நிலாந்தன்! March 28, 2021 புதிய ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை ராஜதந்திர ரீதியாக இது ஒரு பின்னடைவு. ஆனால் அதற்காக தமிழ் மக்களைபொறுத்தவரையில் இது ஒரு மகத்தான வெற்றி என்று கூற முன்வருவது உண்மையல்ல. அரசாங்கத்துக்கு எதிரானவை எல்லாம் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்பது மிகவும் எளிமையாக்கப்பட்ட தட்டையான ஒரு தர்க்கமே. தீர்மானம் அரசாங்கத்துக்குஎதிரானதுதான். ஆனால் அது தமிழ் மக்களுக்கு மகத்தான வெற்றி அல்ல. ஏனென்றால்தாயகத்திலிருந்து மூன்று தமிழ் தேசியக் கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் சேர்ந்து அனுப்பிய பொதுக்கோரிக்கைக்கு சாதகமான பிரதிபலிப்புகள் புதிய…
-
- 0 replies
- 644 views
-
-
ஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன். March 27, 2021 கடந்த சில கிழமைகளுக்குள் நிலம் அதாவது தாயகம்தொடர்பாக இரண்டு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. முதலாவது இம்மாதம் ஒன்பதாம் திகதி யாழ்ஊடக அமையத்தில் நடந்த ஒரு மெய்நிகர் நிகழ்வு. இதில் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்டியங்கும் ஒக்லாண்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிந்தனைக் குழாம் முதல்நாள் எட்டாம் திகதிவெளியிட்ட ஓர் ஆவணத் தொகுப்பு தாயகத்தில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. முடிவற்ற யுத்தம் என்ற பெயரிலான இந்த ஆவணத் தொகுப்பு தமிழ்ப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு பற்றிய தகவல்களைத் திரட்டித் தருகிறது. 2009க்கு பின் தமிழ் பகுதிகளில் …
-
- 1 reply
- 620 views
-
-
2022ல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஆரம்பம்!- தயான் எச்சரிக்கை வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட நீதிமன்றத்தை நிறுவி உள்ளக விசாரணையை இலங்கை முன்னெடுக்காவிட்டால் சர்வதேச பொறிமுறை செயற்படத் தொடங்கிவிடும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.- இவ்வாறு ஐ.நாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் சிரேஷ்ட இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் அமர்வுகளில் என்ன நடக்கும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 2 replies
- 464 views
-
-
ஜெனீவா பிரேரணை: கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை -புருஜோத்தமன் தங்கமயில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணை செவ்வாய்க்கிழமை (23) நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பில், மனித உரிமைகள் பேரவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை, ராஜபக்ஷ அரசாங்கம் முற்றாக நிராகரித்திருந்த நிலையில், புதிய பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்று, இறுதி நேரம் வரையில், தீவிர முயற்சியில் ஈடுபட்டது இலங்கை அரசாங்கம். ஆனாலும், 46/1 என அடையாளப்படுத்தப்படும் புதிய பிரேரணை, 11 மேலதிக வாக்குகளால் நிறைவேறி இருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ள 47 நாடுகளில், இலங்கை தொடர்பான பிரேரணையைக் கொண்டு வந்த பிரித்தானியா, …
-
- 1 reply
- 559 views
-
-
திருவிழா முடிந்தது: இனி என்ன செய்யலாம்? -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கடந்த ஒரு மாத காலமாகக் களை கட்டிய ஜெனீவாத் திருவிழா, ஒருவாறு செவ்வாய்கிழமை (23) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் வெற்றியாளர்கள் யார் என்ற கேள்விக்கான பதிலை நாமறிவோம். அது, நிச்சயமாகத் தமிழர்களோ அரசாங்கமோ அல்ல! ஆசியாவின் மீதான ஆவலின் விளைவால், உதித்துள்ள பூகோளஅரசியல் ஆட்டத்தின் ஒரு கட்டமே ஜெனீவாவில் அரங்கேறியது. வாக்குகள் எவ்வாறு அளிக்கப்பட்டன என்பதைப் பார்ப்பதன் மூலம், அதை இலகுவில் புரிந்துவிட முடியும். இலங்கை, இன்று பாரிய நெருக்கடிக்குள் இருக்கிறது. இதன் மோசமான விளைவுகளை இலங்கையர்கள் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். குறிப்பாக, பொருளாதாரச் சங்கிலியில் கீழ்நிலையில் உள்ளவர்கள், மோசமாகப் பாதிக…
-
- 0 replies
- 671 views
-
-
காணி தொடர்பான பிணக்குகளை தீர்த்தாலே இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் -ஜானு முரளிதரன் 47 Views காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாக தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தினையும் நல்லிணக்கத்தினையும் விரைவாக ஏற்படுத்தமுடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் தெரிவித்தார். சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தினை உறுதிசெய்யும் காணி பிணக்குகளுக்கான விசேட மத்தியஸ்த முயற்சிகள் என்னும் தொனிப்பொருளிலான இரண்டுநாள் செயலமர்வு இன்று மட்டக்களப்பில் ஆரம்பமானது. உள்ளூர் முயற்சிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளையின் நிதியுதவியுடன் …
-
- 0 replies
- 539 views
-
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் ! March 24, 2021 இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் இங்கிலாந்து அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது மோடி அரசு. ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், போலந்து, நெதர்லாந்து உள்ளிட்ட 22 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. அதே சமயத்தில் சீனா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட 11 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்துவிட்டது. பெரும்பான்மை அடிப்…
-
- 0 replies
- 355 views
-
-
கொரோனா அரசியலும் மனிதமும்-பா.உதயன் இந்த உலகின் எல்லா தேவைகளையும் அரசியலும், பணமும் ,சுய நலன்களுமே தீர்மானிக்கின்றன.மனித உரிமைகளும் மனிதாபிமானமும் இதற்கு இப்போ பெறுமதி இல்லை. இன்று உலகை பொருள்முதவாதமும்(materialism)தனிநலனுமே உலகை ஆள்கிறது.தனிநபர்களுக்கிடையில் அன்போ கருணையே அமைதியான வாழ்வோ இருக்காது. சரி, தவறு, நீதி, அநீதி போன்ற கருத்துக்களுக்கு இடமில்லை என்கிறார் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய தத்துவஞானி தாமஸ் ஹோப்ஸ் Thomas Hobbes “இயற்கையின் நிலை ”the state of nature ‘ இதுவே என்று அழைப்பதை இந்த உலகத்தின் விதியோடு ஒப்பிட்டு சமூக ஒப்பந்த கோட்பாட்டோடு தனது புத்தகமான லெவியத்தனில் (leviathan ) விளக்குகிறார் இயற்கையின் நிலையை ஒரு சட்டம் அல்லது தார்மீக நெறிமுறை…
-
- 0 replies
- 409 views
-
-
-
- 6 replies
- 962 views
-
-
ஜெனீவாவும் இறைமையும் -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை தொடர்பாக, பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணையொன்று, நேற்று (23) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னர் அது, நேற்று முன்தினம், அதாவது திங்கட்கிழமையே வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. “இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக, பேரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த நாடுகளை விட, அதற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நாடுகளே அதிகம்” எனக் கூறிக்கொண்டு இருந்த இலங்கை அரச தலைவர்களும் அதிகாரிகளும், பின்னர் நிலைமை மாறிவிட்டதை ஒப்புக் கொண்டனர். அரச தலைவர்கள், இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறை, விந்தையானது என்றே கூற வேண்டும். ஒருபுறம், தாம் பிரேரணையை நிராகரிப்…
-
- 0 replies
- 724 views
-
-
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்… 15 Views 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. அதில் சிலவற்றை செயல்படுத்த முடியும். சிலவற்றை செயல்படுத்த முடியாதவை. இதில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதின் நோக்கம் என்னவென்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையின் செயலாக…
-
- 0 replies
- 538 views
-
-
-
- 5 replies
- 995 views
-
-
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக…
-
- 2 replies
- 634 views
- 1 follower
-
-
இளையோர்களே எழுமின்! இனஒதுக்கலை ஒழிமின்!- சூ.யோ. பற்றிமாகரன் 5 Views ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில…
-
- 0 replies
- 451 views
-
-
சமகால அரசியல் தொடர்பான இளைஞர்களின் எதிர்பார்ப்பு எனும் தொனிப்பொருளில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் கேள்வி பதில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.
-
- 19 replies
- 805 views
-
-
மேலும், மேலும் பலவீனமடையும் தமிழர் அரசியல் - யதீந்திரா தமிழர் அரசியல் அதிகம் அதிகம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வெளியிலிருப்பவர்கள் எவரும் காரணமல்ல. மாறாக, தமிழர் அரசியல் தமிழர்களாலேயே பலவீனப்படுத்தப்படுகின்றது. அண்மையில் போராட்டம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும், இதற்கு சிறந்த உதாரணமாகும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை – என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக பேரணியில் மக்கள் தன்னியல்பாகவே பெருமளவில் திரண்டிருந்தனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு தன்னியல்பான எழுச்சியாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை குறிப்பிடலாம். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்ப…
-
- 0 replies
- 410 views
-