Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்? - நிலாந்தன். adminFebruary 9, 2025 தையிட்டி விகாரை ஒரு தனியார் காணியில் கட்டப்படுறது என்பதனால் அது சட்டவிரோதமானது என்று கூறி அதனை ஒரு சட்ட விவகாரமாக மட்டும் குறுக்குவது தமிழ் மக்களுக்குப் பொருத்தமானது அல்ல. அது சட்டப் பிரச்சினை மட்டுமல்ல, அதைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். இன ஒடுக்குமுறையின் ஆகப் பிந்திய வெளிப்பாடுகளில் ஒன்று. அது ஓர் ஆக்கிரமிப்பு. ஒரு மரபுரிமைப் போர். இலங்கைத் தீவின் சட்டங்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு எதிராக வளைக்கப்படும் என்பதற்கு அது ஒரு சான்று. 2009க்கு பின்னரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை என்பதற்கு அது ஒரு சான்று. சம்பந்தப்பட்ட சில தமிழர்களின் காணி உரிமை பற்றிய ஒரு …

  2. ராஜபக்ஷ சகோதரர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் பொது உளவியலின் பிரதான கூறாகக் காணப்படுகிறது. ஆனால், இதன் அர்த்தம் தமிழ் மக்கள் மைத்திரியை நம்புகின்றார்கள் என்பதல்ல. படித்த, நடுத்தர வர்க்கத் தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு மாற்றம் தேவை என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இதன் அர்த்தம் மைத்திரி மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள் என்பதல்ல. மைத்திரி எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற கேள்விக்கு அவர்களில் பலரிடம் துலக்கமான பதில் இல்லை. தமிழ்ப் பொது உளவியலின் பெரும் போக்கைக் கருதிக் கூறின், தமிழ் மக்கள் அரசுக்கு எதிராக காணப்படுகிறார்கள் என்பதே சரி. இவ்விதம் அரசுக்கு எதிராக காணப்படும் வாக்குகள் அவற்றின் தவிர்க்கப்படவியலாத தர்க்கபூர்வ விளைவாக மைத்திரி…

  3. தமிழில்: ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (லக்மல் ஹரிஸ்சந்திர, Colombo Telegraph)‘வெறுப்புணர்ச்சி என்பது நாம் தாங்கிக் கொண்டு திரிகின்ற வீண் சுமை. அது வெறுக்கப்படுபவரை விட வெறுப்பவருக்கே அதிக இன்னல் தரும்’ என்பது மேற்கத்தேய தத்துவவியலாளர் ஸ்கொட்கிங் என்பவற்றின் பிரபலமான கூற்றாகும். ஏலவே முஸ்லிம்களுக்கெதிரான இனவாத முன்னெடுப்புக்கள் முன்னெப்போதுமில்லாதளவுக்கு தறிகெட்டுத் தலைவிரித்தாடுகின்ற சமகால இலங்கை சமூகத்தில், புதிதாக முளை விட்டிருக்கின்ற இந்து அடிப்படைவாதிகளின் நடவடிக்கைகள் முஸ்லிம், இந்து சமூகங்கள் மத்தியில் வெறுப்புணர்வை மேலும் தூண்டி விடும் நோக்கத்தை உட்கிடக்கையாகக் கொண்டவை என்பதை புரிந்து கொள்வதற்கு ஒருவர் ஏவுகணைத் தொழில்நுட்பம் அறிந்திருக்க வேண்டியதில்லை.அண்மையில் திருகோ…

    • 0 replies
    • 715 views
  4. உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் கா…

  5. சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்! - நக்கீரன் ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள - பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று …

  6. இலங்கையை மிரட்டும் இந்திய அமெரிக்க ஆயுதம்

    • 0 replies
    • 714 views
  7. ஈழத் தமிழர் – சீனாவிலிருந்து கற்றுக்கொள்ள முடியுமா? - யதீந்திரா இன்றைய நிலையில் உலக அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்திருக்கும் பிரதான விடயம் என்ன? சந்தேகமில்லாமல், சீனா என்பதே இதற்கான பதில். சீனாவின் அபார பொருளாதார வளர்சியே இதற்கான காரணமாகும். பொருளாதாரம் வளர்ச்சிடைகின்ற போது, கூடவே இராணுவ ஆற்றலும் அதிகரிக்கும். இன்றைய நிலையில் உலகின் பிரதான சக்தியாக அமெரிக்காகவே இருக்கின்றது. சோவியத் – அமெரிக்க பனிப் போருக்கு பின்னரான உலகத்தில், அமெரிக்காகவே ஒரேயொரு தனிப்பெரும் சக்தியாக இருந்தது. ஆனாலும், அமெரிக்கா முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இப்போதும் முதல் இடம் அமெரிக்காவிடம்தான் இருக்கின்றது எனினும், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக…

  8. மே தினம் யாருக்கு? சடங்காதலும் சங்கடங்களும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஆண்டுதோறும் மே தினம் வந்துபோகிறது. அந்நாள் ஒரு விடுமுறை நாள்; அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் என்ற படிமங்களே, இலங்கையர் மனதில் ஆழப்பதிந்துள்ளது. மே தினத்துக்கு என்று உன்னதமான வரலாறு உண்டு. உலகெங்கும் உழைக்கும் மக்களின் ஒரே தினம், மே தினம் மட்டுமே என்ற உண்மை, எம்மில் பலருக்கு உறைப்பதில்லை. உலகளாவிய ரீதியில், உழைக்கும் மக்கள் போராடிப் பெற்ற சுதந்திரமே, மே தினமெனப்படுகின்ற சர்வதேச தொழிலாளர் தினமாகும். நீண்ட போராட்டங்களின் பின்னரே, உழைக்கும் மக்கள் தங்களைக் கொண்டாடுதற்கும் தங்கள் உரிமைகளுக்கான குரலை எழுப்புவதற்குமான தினமாக, இது அங்கிகரிக்கப்பட்டது. எனினும், பல நாடுகளில் மே தின…

  9. கருணா குழு என்றால் என்ன?

  10. பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா” – பா.கிருபாகரன் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா கொத்தணி சமூகத்துக்குள் இறங்கியதனால் 1050 க்கும் மேற்பட்டோர் ஒரு சில தினங்களுக்குள் கொரோனா தொற்றாளர்களானதுடன் இலங்கையின் 16 மாவட்டங்கள் கொரோனாவின் ஆட்சிக்குள் வந்துள்ள போதும் கடந்த வார பாராளுமன்ற அமர்வுகள் எவ்வித தடையுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளன. பாராளுமன்ற அமர்வுகளுக்கு கொரோனாவினால் தடை ஏற்படாதபோதும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பில் அரச,எதிர்க்கட்சியினரிடையில் சபையில் ஏற்பட்ட கருத்து மோதல்களினால் கொரோனாவின் தாக்கம் பாராளுமன்றத்திலும் வெளிப்பட்டது. முதல் நாள் அமர்வான செவ்வாய்க்கிழமையே கொரோனா கொத்தணியை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்குமென எதி…

  11. ஐக்கிய இராச்சியத்தில் அதிகாரப் பகிர்வு : ஸ்கொட்லாந்து, வடஅயர்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளின் சுயாட்சி முறைகள் – பகுதி 1 கனடா, பெல்ஜியம், சோவியத் ஒன்றியம், சுவிற்சர்லாந்து, இந்தியா, ஸ்பானியா (Spain) ஆகிய ஆறு நாடுகளின் சமஷ்டி அரசியல் முறைமைகளைப் பற்றி ஆழமான ஆய்வுகளாக இக்கட்டுரைத்தொடர் அமைகிறது. மேற்குறித்த நாடுகளின் அரசியல் வரலாறும், அரசியல் யாப்பு வரலாறும், போருக்கு பிந்திய இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளுக்கு வழிகாட்டியாக அமையும், அரசியல் பாடங்களை (political lessons) கற்றுக்கொள்வதற்கு உதவுவனவாக ‘சமஷ்டி அரசியல் முறைமைகள்’ என்ற இத்தொடர் அமைகின்றது. இக்கட்டுரைத்தொடர் அரசியல் கோட்பாடுகள் (Political theories) அரசியல் யாப்பு தத்துவங்கள் (constitutional princ…

  12. ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்களை முன்வைக்க ஏற்பாடு? -அ.நிக்ஸன்- 30 டிசம்பர் 2013 சர்வதேச அழுத்தம் என்பது அரசாங்கத்துக்கு அவ்வப்போது சிறிய அச்சத்தை ஏற்படுத்தினாலும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான கருவியாக அமைந்து விடுகின்றன. சிங்கள பௌத்த தேசியவாத வளர்ச்சிக்கும் வலுச்சேர்க்கின்றன. அதன் காரணமாக சஜித் பிரேமதாசாவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைச் சபையின் பொறுப்பை பௌத்த தேரர்கள் எற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் அமெரிக்கா சமர்ப்பிக்கவுள்ள பிரேரணையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககள் தீவிரமடைந்து வருகின்றன. வெளியுறவு அமைச்சுக்கும் மனித உரிமைகள் அமைச்சுக்கும் ஜனாதிபதி கடும் உத்தரவுகளை பிறப்ப…

  13. சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்? புருஜோத்தமன் தங்கமயில் / 2018 செப்டெம்பர் 12 தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர்…

  14. கிழக்கு: அரசியலை தூக்கி எறிந்துவிட்டு... சீனாவால் அமைக்கப்பட்டுவரும் கொழும்புத் துறைமுக நகரத்தையும் சேர்த்த கொழும்பின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையாளர் நாயகம் பி.எம்.பி. உதயகாந்த இதை வெளியிட்டு வைத்ததுடன், இலங்கையின் புதிய வரைபடத்திலும் பல மாற்றங்கள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், கிழக்கின் அரசியல் வரைபடத்தில் மாற்றங்களை யார் கொண்டு வருவது என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும். அரசியலை வெறுக்காதவர்கள், அடி மட்டம் முதல் உயர்நிலை வரையில் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும் அரசியலைத் தூக்கி எறிந்து விட்டு, எதைத்தான் செய்துவிட முடியும். ‘அரசியலும் மண்ணாங்கட்டியும்’ என்று இப்போது இருந்…

  15. பொதுப்பட்டியல்’ யோசனை புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலான உரையாடலொன்று ஆரம்பித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், முதல் காலாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின், வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் வாய்ப்புள்ளது. புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் ஊடாக, 13ஆவது திருத்தத்தை மலினப்படுத்தி, மாகாண சபைகள் என்கிற அலகை இல்லாமல் செய்யும் திட்டத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரின் அண்மைய இலங்கை விஜயம், கோட்டாவின் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. …

  16. ‘கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்’ என்.கே. அஷோக்பரன் / 2020 ஓகஸ்ட் 03 மன்னர் ஆட்சிக்காலத்தில் ஓர் அரசின் இறைமை என்பது, ஆளும் முடியிலேயே தங்கியிருந்தது. அம்முடிக்குரிய மன்னர் எவரோ, அவரே இறைமையைப் பயன்படுத்தும் ஏகபோக அதிகாரத்தைப் பெற்றிருந்தார். ஆட்சிக் கட்டமைப்புகள் பல உருவாக்கப்பட்டு இருப்பினும்கூட, இறைமை மன்னனிலேயே தங்கியிருந்தது. மன்னனின் முடிந்த முடிவை மறுதலிக்கும் அதிகாரம், எங்கேனும் இருக்கவில்லை. இதனால் மன்னன் வல்லாட்சியாளனாக மாறும் போதும் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யும் போதும் அதைச் சட்டரீதியாகக் கட்டுப்படுத்த வழிகள் இருக்கவில்லை. ஆகவே, புரட்சியொன்றே அந்த எதேச்சாதிகாரத்தைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே வழியாக இருந்தது. மக்கள் புரட்சி செய…

    • 2 replies
    • 714 views
  17. சந்தேகங்களை களைவாரா ‘மாவை’? -புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்தும் செயன்முறையாக மாத்திரம் இருந்து விடக்கூடாது என்று, சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் சுட்டிக்காட்டி இருந்தார். இதையடுத்து, அவரை அவசர அவசரமாகச் சந்தித்த மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமையின் தேவையையும் அதன் செயற்பாட்டு நோக்கங்களையும் குறித்து விளக்கமளித்து இருக்கின்றார். தியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக, தமிழ்த் தேசிய கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைத்திட்டமொன்றைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்கிற அடிப்படையில் மாவை சேனாதிராஜா முன்னெடுத்திருந்த…

  18. விக்கினேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? யதீந்திரா தமிழ்ச் சூழலில் உள்ளுராட்சி தேர்தல் என்றுமில்லாதவாறு பரப்பரப்புக்குள்ளாகியிருக்கிறது. தென்னிலங்கையிலும் அவ்வாறானதொரு பரப்பரப்பு காணப்படுகிறது. தென்னிலங்கையின் பரபரப்பு விளங்கிக் கொள்ளக் கூடியது ஆனால் வடக்கு கிழக்கில் ஏன் இந்தப் பரபரப்பு? இதற்கான அரசியல் காரணங்கள் அனைத்துமே தமிழரசு கட்சியின் மீதான, அதன் தலைமையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான அரசியல் முரண்பாடுகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்கின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஆரம்பித்து தற்போது தமிழ்த் தேசிய பேரவையாக வெளிப்பட்டிருக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அரசியல் கூட்டாக இருந்தாலும் சரி, கூட்டமைப்பின் பங்கா…

  19. தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் - நிலாந்தன் 04 ஆகஸ்ட் 2013 ஈழப்போருக்கு முற்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. அது ஒரு தேர்தல் காலம். பீற்றர் கெனமன் வடமராட்சியில் ஒரு தேர்தல் பிரசார மேடையில் உரையாற்றினார். மைதானம் முழுவதும் சனங்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். விசிலடியும், கைதட்டும் பிரமாதமாக இருந்தது. கூட்டம் முடிந்ததும் கெனமன் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னார் ''இம்முறை எமக்கு வடமராட்சியில் ஒரு சீற்றாவது கிடைக்கும்' என்று. ஆனால், தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. பீற்றர் கெனமனுடைய வேட்பாளர் தோல்வியடைந்துவிட்டார். இச்சம்பவத்தின் பின் கெனமன் பின்வரும் தொனிப்படக் கருத்துத் தெரிவித்திருந்தார்.... ''தமிழர்கள் எம்மை நன்கு உபசரித்து விருந்தோம்புவர்கள். தேர்தல…

  20. 'ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம்': ஜனா­தி­ப­தியின் இன்­னொரு குத்­துக்­க­ரணம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவின் ஆகப் பிந்­திய குத்­துக் க­ரணம், 19 ஆவது திருத்தச்சட்­டத்­துக்கு எதி­ராகத் தூக்­கி­யி­ருக்­கின்ற போர்க்­கொடி தான். ஆடத்­தெ­ரி­யா­தவன் மேடை கோணல் என்­றானாம், என்­பது பழ­மொழி. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை இல்­லாமல் செய்ய வேண்டும் என்று வெளி­யிட்­டி­ருக்­கின்ற கருத்து, அந்தப் பழ­மொ­ழியைத் தான் நினை­வு­ப­டுத்­து­கி­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் இன்­னமும் அவ்­வப்­போது முட்டி மோதிக் கொண்­டி­ருக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, அவ­ருக்கு முன்­பா­கவே இந்தக் கருத்தை முதலில் வ…

  21. "சமஷ்டி என்பது பிரிவினை அல்ல" என்ற தலைப்பில் அண்மையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக சுமந்திரன் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையும், அது தொடர்ந்து மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலும். Hon Sumanthiran's Speech 1 Hon Sumanthiran Speech 2 Hon Sumanthiran Q&A 1 Hon Sumanthiran Q&A 3 Hon Sumanthiran Q&A 4

  22. NEWS & ANALYSIS செய்திகள் 19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை சிவதாசன் சிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்! தேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்…

    • 0 replies
    • 713 views
  23. மக்களின் உணர்வுகளை மதிக்குமா -வடக்கு மாகாணசபை? வடக்கு மாகா­ண­ச­பை­யின் ஆயுட்­கா­லம் இன்­ன­மும் மூன்றே மாதங்­க­ளில் நிறை­வு­ பெ­ற­வுள்ள நிலை­யில், முன்­னாள் அமைச்­சர் ஒரு­வ­ரின் பதவி நீக்­கம் தொடர்­பான சர்ச்சை, அதன் நிர்­வா­கச் செயற்­பா­டு­களை முடக்கி வைத்­துள்­ளதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. நீதி­மன்­றத் தீர்ப்பை உதா­சீ­னம் செய்­யும் விதத்­தில் செயற்­ப­டும் முத­ல­மைச்சர் இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ர­னின் செயற்­பா­டு­கள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­வையாகத் தெரி­ய­வில்லை. நீதி­மன்­றத்­தின் தீர்ப்பை மதிக்க வேண்­டி­யது இல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.