அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதியும் இந்தோ- பசுபிக் பிராந்திய நலனும் நாடாளுமன்றத்தில் அரை மணித்தியாலம் நடைபெறும் கேள்வி நேரத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றியும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கை இராணுவத்துக்கு வழங்கும் உதவிகள் பற்றியும் கேள்வி எழுப்ப முடியும். ஆனால் அப்படிக் கேட்கப்பட்டதாகத் தெரியவில்லை அ.நிக்ஸன் ஒதுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் நடைபெறும் வரவுசெலவுத் திட்ட அறிக்கை தொடர்பான விவாதத்தில் குற்றம் சுமத்தி வருகின்றன. குறிப்பாக 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான கடந்த பத்து ஆண்டுகளில் பாதுகா…
-
- 0 replies
- 352 views
-
-
அஜித் டோவால் விஜயமும் இலங்கை அரசியலும்! - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை அரசியல் உறுதிப்பாடு என்பது இந்தியாவுடனான உறவிலே அதிகம் தங்கியிருப்பதான தோற்றப்பாடு உண்டு. அதனை நிராகரிக்க முடியாது விட்டாலும் இலங்கை இந்தியாவை கையாளுவதனைப் பொறுத்ததாகவே அத்தகைய எண்ணம் வளர்ந்துள்ளது. அதிலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறைமை இலங்கை ஆட்சிக்கு விரோதமாக அமைய ஆரம்பித்ததன் பின்பாடு இந்தியாவைக் கையாளும் திறன் இலங்கை ஆட்சியாளருக்கு அவசியமானதாக அமைந்தது. ஆனால் இந்தியத் தரப்பு இலங்கையைத் திருப்திப்படுத்த முடியாத சூழலிலேயே இலங்கைத் தமிழரை அரவணைத்துக் கொண்டது. ஈழத் தமிழரின் ஆயுதப் போராட்டத்தின் தொடக்கமும் முடிவும் அதனையே வெளிப்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந…
-
- 0 replies
- 381 views
-
-
ஹிட்லரின் வல்லாட்சியில் இருந்து கற்றுக்கொள்ளுதல் -என்.கே. அஷோக்பரன் இருபதாம் நூற்றாண்டில் மிக முக்கியமான வார்த்தைகளுள் ஒன்றாக 'ப்ளிட்ஸ்க்றீக்' (Blitzkrieg) இருந்தது. ஜேர்மன் மொழியில் 'பிளிட்ஸ்' (Blitz) என்றால் மின்னல்; 'க்றீக்' (Krieg) என்றால் யுத்தம் என்று பொருள். 'மின்னல் யுத்தம்' என்பது, ஹிட்லர் தலைமையிலாக நாஸிகளுக்குப் பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த போர்த்தந்திரோபாயம் ஆகும். முதலாவது உலக யுத்தத்தில் தோற்று, தனது பொருளாதாரம், நிலம் என்பவற்றைப் பறிகொடுத்திருந்த ஜேர்மனியின் தலையெழுத்து, 1933இல் ஹிட்லரின் நாஸிகளின் ஆட்சியுடன் மாறுகிறது. வெறும் 43.9% வாக்குகளுடன் 1933இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஹிட்லரின் நாஸிகள், சர்வாதிகாரத்துக்குள் ஜேர்மனியை கொண்டு வருகிறார்கள்.…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
-
மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம் 32 Views சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இதனால் அவர்கள்பால் காட்டப்பட வேண்டிய அரசின் மனிதாபிமான அணுகுமுறையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றது. நாட்டில் பரவலாகத் தொற்றிப் பரவியுள்ள கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றது. இதற்கென விசேட சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சட்ட…
-
- 0 replies
- 552 views
-
-
கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான் 17 Views வடகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல்வேறு தளங்களில் பேசி வருகின்றோம். ஆனால் அந்தத் தளங்கள் எந்தளவுக்கு தமிழ்த் தேசியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். குறிப்பாக தமிழர்களின் காணி, நிலம், பொருளாதாரத்திற்கு முன்னோடியாக கல்வி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்று உணரப்படுகின்றது. கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே எதிர்காலத்தில் தமிழ்த் தேசியத்தினையும் வேரூன்றச் செய்ய முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ஆனால் இந்த நம்பிக்கை தமிழர் பகுத…
-
- 0 replies
- 282 views
-
-
தவராசா கலையரசன் | இந்திரன் ரவீந்திரன்
-
- 0 replies
- 588 views
-
-
தமிழ்க் கட்சிகள் நாடாளுமன்றத்துக்குள் சுருங்கிவிடக் கூடாது -புருஜோத்தமன் தங்கமயில் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சாணக்கியன் இராசமாணிக்கமும், கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகள், கவனம் பெற்றிருந்தன. குறிப்பாக, சமூக ஊடகங்களில் கொண்டாடித் தீர்க்கப்பட்டன. கஜேந்திரகுமார், முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் தொடர்பில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து, தீர்க்கமான உரையொன்றை ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறுக்கீடுகளுக்கு மத்தியில் உரையாற்றி இருந்தார். சாணக்கியன், முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்க உரிமையை, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் விதிமுறைகளைப் பயன்படுத்தி, அரசாங்கம் தடுத்துள்ள நடவடிக்கை தொடங்கி, தற்…
-
- 0 replies
- 485 views
-
-
-
தமிழர்களும் புதிய அரசியல் அமைப்பும்.! கொரோனா பிரச்சனைக்கும் மத்தியிலும் இலங்கையின் அரசியல் அரங்கிலே புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தைத்தயாரிப்பதற்கு நீதி அமைச்சு பொதுமக்களிடமிருந்து கருத்துக்களையும் யோசனைகளையும் கோரியுள்ளது. சுருக்கமான கருத்துகளையும் யோசனைகளையும் நிபுணர்குழு வரவேற்பதாகவும், மக்கள் தமது கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பதிவுத்தபால் மற்றும் expertscommpublic@yahoo.com என்னும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றினூடாக அனுப்பி வைக்க முடியுமென்றும், இது சம்பந்தமாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு சம்பந்தமான வரலாறுகளைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆங்கிலேய ஆட்சியினால் அறிமுகம் செ…
-
- 0 replies
- 610 views
-
-
குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் – கனடாவெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை இலங்கை அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், ந…
-
- 0 replies
- 465 views
-
-
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான பரிகாரநீயினை வலியுறுத்தும் வகையில், இனப்படுகொலையை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான ஐ.நா பிரகடனத்தின் அனைத்துலக (டிசெம்பர் 9) நாளில் கருத்தரங்கொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கின்றது. இனப்படுகொலைக்கு உள்ளாகி பலியாகியவர்களை ஐ.நாவினால் நினைவு கொள்கின்ற அனைத்துலக உடன்படிக்கையின் 72வது ஆண்டாக இவ்வாண்டு அமைகின்றது. இந்நாளினை முன்னிட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அடுத்த தலைமுறை இளையோர் பிரிவான அலைகளினால் முன்னெடுக்கப்படுகின்ற இக்கருத்தரங்கில் Prof Francis Boyle அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்கின்றார். டிசெம்பர் 9ம் நாள் புதன்கிழமை, நியு யோர்க் நேரம் மாலை 4மணிக்கு இணைவழி இடம்பெற இருக்கின்ற இந்நிகழ்வினை t…
-
- 3 replies
- 927 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 571 views
-
-
-
-என்.கண்ணன் - இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலிடம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒரு வேண்டுகோளை முன்வைத்திருக்கிறார். வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதைப் போன்று, தென்னிலங்கையின் அபிவிருத்தி மீதும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும், என்பது தான் அது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/140329/fafaf.jpg வடக்கு, கிழக்கு, மலையகத்தில் இந்தியா 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. அதுபோல, தென்னிலங்கையிலும் வீடமைப்புத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த கோரியிருக்கிறார். சாதாரணமாக, தென்னிலங்கையில் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரியிருந்தால், பரவாயில்லை. வடக்…
-
- 0 replies
- 764 views
-
-
ஈழத்தமிழர் மனிதஉரிமைகள் குறித்த சிறப்பான அணுகுமுறை தேவை 12 Views இம்மாதம் 9ஆம் திகதி அனைத்துலக மன்றத்தின் ‘இனஅழிப்பால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நினைவு கூரும் அனைத்துலக நாளாக’ இக்குற்றச் செயல் இடம்பெறாது முன்கூட்டியே தடுப்பதை வலியுறுத்தும் நோக்கில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 10ஆம் திகதி உலகின் முக்கியமான நாள், ‘அனைத்துலக மனித உரிமைகள் தினம்.’. ஆயினும் இந்த அனைத்துலக மரபுசாசனங்களுக்கோ அல்லது அனைத்துலக சட்டங்களுக்கோ, முறைமைகளுக்கோ சிறிதளவேனும் மதிப்பளிக்காது ஈழத்தமிழர்களைச் சிறீலங்கா இனஅழிப்புச் செய்து, இன்று இனத்துடைப்புச் செய்து வருவது உலகறிந்த உண்மை. சிறீலங்கா தனது ஈழத்தமிழின அழிப்பின…
-
- 0 replies
- 472 views
-
-
தவறிய தருணம் - மாவீரர் நாள் நினைவுகூரல் -ஆர்.ராம்- அன்று நவம்பர் 27ஆம் திகதி, மணி மாலை 6ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. வழமையாக கண்ணீரால் தோயும், கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் இம்முறை சீருடைக்காரர்களால் நிறைந்திருந்தது. ஆட்சிமாற்றத்தின் போதே இந்த மாற்றமும் எதிர்பார்க்கப்பட்டது தான். மாவீரர்கள் நினைவுகூரலுக்கு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தமையாலும், வழமைக்கு மாறான பாதுகாப்பு அதிகரிப்பாலும் ‘நிலைமை’ உணர்ந்த ஊடகவியலாளர்கள் சிலர், துயிலுமில்லத்தினை அண்மித்த பகுதியில் காத்திருந்தனர். அவர்களுக்கும், புகைப்படக் கருவியை வெளியில் எடுத்து விடக்கூடாது என்பதுள்ளிட்ட சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. அச்சமயத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் ஒரு…
-
- 0 replies
- 821 views
-
-
இலங்கை தொடர்பான அமெரிக்க இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும் —2009ஆம் ஆண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்களை அந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டு இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்புகளே உண்டு– -அ.நிக்ஸன் இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முன்வைத்திரு…
-
- 1 reply
- 562 views
- 1 follower
-
-
கஜனின் உரை: ஓரினமாகத் திரள்வது! நிலாந்தன்… December 6, 2020 நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டின் மீதான விவாதத்தின் போது கஜேந்திரகுமார் ஆற்றிய உரை அருமையானது. அந்த உரைக்கு சிங்கள பிரதிநிதிகள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களுடைய குறுக்கீட்டால் கஜனின் நேரம் சுருங்கிய போது சிறீதரன் தமது கட்சியின் நேரத்தை அவருக்கு வழங்குவதாக அறிவித்தார். இது விடயத்தில் சிங்களத் தரப்பு கட்சி வேறுபாடுகளை கடந்து ஓர் இனமாக திரண்டு நின்ற பொழுது தமிழ் தரப்பும் அவ்வாறு ஓர் இனமாக திரண்டு நின்றது. பின்னர் நடந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்த்து வாக்களித்தத…
-
- 0 replies
- 881 views
-
-
நினைவு கூர்வதற்கான வெளி? – நிலாந்தன் நிலாந்தன் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன. இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. இவை இரண்டையும் சற்று விரிவாக பார்க்கலாம். ஒரு…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 646 views
-
-
“I am just a small instrument. If I win, it is people’s victory. If I lose, it is people’s loss. I request people to be with me,” -Rajinikanth அரசியலுக்கு வாறேன் அரசியலுக்கு வாறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த ரஜனி அரசியலுக்கு வந்திருக்கிறார்.அரை நூற்றாண்டுகளாக ஆண்டு கொண்டிருக்கும் அந்த திராவிட கட்சிகளையும் இப்படி பாரம்பரிய பெரிய கட்சிகளான காங்கிரசையும் இந்து கட்சியையும் இப்ப வந்த ரஜனி எப்படி கையாளப்போகிறார்.ஊழலை ஒழித்து ஏதோ பல புதிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக கூறுகிறார். எது எப்படி இருப்பினும் முப்பது வருடத்துக்கு மேல் மாறி மாறி ஆட்சியில் இருக்கும் திராவிட கட்சிகளின் முகத்தை மாற்ற முடியுமா என்பது சந்தேகமே.அவ்வளவு சீக்கிரமாக அந்த நடிகரால் மாற்றத்தை உண்டு பண்ண …
-
- 0 replies
- 655 views
-
-
இலங்கையும் மியன்மாரும் ஒரு நோக்கு -பி.மாணிக்கவாசகம் 34 Views இலங்கையைப் போலவே மியன்மாரும் இனப்பிரச்சினையின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. இரண்டு நாடுகளிலும் பௌத்த தேசியம் மேலோங்கி, ஏனைய சிறுபான்மை இன மக்களை அடக்கி ஒடுக்குகின்ற போக்கில் ஒத்திசைவைக் காண முடிகின்றது. மியன்மாரின் பௌத்த தேசியம் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து அரசியல் ரீதியாக அடக்கி ஒடுக்கி வருகின்றது. இலங்கையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அதன் மேலாதிக்கப்பிடியில் இன மத ரீதியாக நசுக்கப்படுகின்றார்கள். இரண்டு நாடுகளுமே இன முரண்பாட்டின் காரணமாக நீண்ட…
-
- 0 replies
- 809 views
-
-
-
- 0 replies
- 725 views
-
-
சீனாவின் புதிய போர்முறைக் கோட்டுபாடுகளின் விளைவு என்ன? – கேணல் ஆர் ஹரிஹரன் கேணல் ஆர் ஹரிஹரன் நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கடந்த நவம்பர் 7ந் தேதி, சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளை “ஒருங்கிணைந்த சீன மக்கள் விடுதலைப் படையின் போர்முறைகள்; ஓர் வரைவடிவு” என்ற பெயரில் சீனப் படைகளில் செயலாக்கத்தில் கொண்டு வந்தது. அதைப் பற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் நவம்பர் 13ந…
-
- 0 replies
- 1k views
-