அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
எஞ்சியிருந்த ஒரே தீர்வு முகம்மது தம்பி மரைக்கார் / 2018 ஒக்டோபர் 30 செவ்வாய்க்கிழமை, மு.ப. 06:29 எதிர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை, நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வழமை போலவே ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள் இடைநடுவில் கலைவது போல், இந்த ஆட்சியும் கவிழ்ந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ‘அரசியலில் …
-
- 0 replies
- 686 views
-
-
தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்.கே அஷோக்பரன் தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு …
-
- 0 replies
- 686 views
-
-
அரசைக் குழப்பும் ”20” – தாயகன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளதாக மார்தட்டிக்கொள்ளும் கோத்தபாய-மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன அரசு ,தமது முதல் இலக்கான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மிக இலகுவாக நிறைவேற்றிவிடலாமென்ற நினைப்பில் அவசர,அவசரமாக அதனை தம் விருப்பப்படி தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டுவிட்டு இப்போது அந்த 20 ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களுக்கு வரும் எதிர்ப்புக்களையும் தவறுகளையும் பார்த்து ”ஆப்பிழுத்தகுரங்கின்” நிலையில் தடுமாறுகின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்யும் அரசுகள் தமது அரசை பலப்படுத்தும் விதத்திலும் தமது பதவிகளை தக்கவைக்கும் ,நீடிக்கும் வகையிலும் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருவ…
-
- 0 replies
- 686 views
-
-
அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர் போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. இவ்வாறு சண்டே லீடர் வாரஇதழில், Tharidu Jayawardana, Idunil Ussgoddarachchi, Udaya Karthikan, R Indumathi ஆகியோர் இணைந்து எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். இதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவின் குருதி தோய்ந்த உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்த போது செல்வியும் தனது ரி-56 ரக துப்பாக்கியைத் தூக்கியெறிந்தார். இதன் பின்னர் மீண…
-
- 0 replies
- 686 views
-
-
தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்... - It is a powerful film மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம் - ஒரு சுருக்கமான வரைவு (The Battle of Algiers - By Gillo Pontecorvo) உலக வரைப்படத்தில் ஆப்பிரிக்காவின் தலைப்பகுதியில் துனிஷியாவுக்கும் மொராக்கோவுக்கும் இடையில் ஸ்பெயினுக்கும் கீழே இருக்கும் நாடுதான் அல்ஜீரியா. கொடிய மிருகங்கள் நிறைந்த அந்த காட்டு நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆதி பழங்குடியினர் மட்டுமே தங்களுக்கான வாழ்விடமாக புழங்கி வந்தனர். காலமெனும் மேகங்கள் அந்த காட்டுப்பகுதியின் மேல் மெல்ல கடந்து போக மொராக்கோ துனிஷியா வழியாக வந்த ஆப்பிரிக்கர்களும் ரோமர்களும் காஸ்தானியர்களும் இதர ஐரோப்பியர்களும் இந்த இடத்தைப் பண்படுத்தி நி…
-
- 0 replies
- 686 views
-
-
தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up country Tamils, The Vanishing people?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரை புது டெல்லியில் செயற்படும் Observer Research Foundation (ORF) என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக் கட்டு…
-
- 0 replies
- 686 views
-
-
1987 நிலைமைகள் மேல் எழுகின்றனவா ? இலங்கை அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.இலங்கை தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இது வலியுறுத்தப்பட்டு வருகின்றது.ஐக்கிய நாடுகள் சபையின் கூட்ட தொடரிலும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் அண்மைய கூட்டத்தொடரிலும் இந்தியா இதனையே வலியுறுத்தி இருந்தது. கடந்த 18 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இதனையே வலியுறுத்தி விட்டு சென்றிருந்தார். அவரைத் தொடர்ந்து இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் இதனையே குறிப்…
-
- 0 replies
- 686 views
-
-
யூதர்கள் ஏன் இத்தனை கொடூரமானவர்களாக இருக்கின்றார்கள்? யூதர்கள் ஏன் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள்? யூதர்களை இந்த உலகம் ஏன் வெறுக்கின்றது? யூதர்கள் ஏன் மிகக் கொடூரமாக செயற்படுகின்றார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடுவதற்கு முயல்கின்றது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி: இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Gokulan அவர்களால் வழங்கப்பட்டு 28 Sep 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. https://www.ibctamil.com/articles/80/106810
-
- 0 replies
- 686 views
-
-
சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட. மேற்குலக சமூகமும், அதனைச் சார்ந்த மனித உரிமை அமைப்புக்களும் அண்மைக் காலமாக சிறீலங்கா அரசு மீது மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் என்பது மிகப்பெரும் சவலாக எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதை தற்போதைய சிறீலங்கா அரசு நன்கு அறியும். சுருக்கமாக கூறப்போனால், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா நிம்மதியாக உறங்க முடியாத நிலை ஒன்றே மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது. சிறீலங்கா படை அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு கொண்டு வந்த பயணத்தடை ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் இடம்பெற்ற ம…
-
- 0 replies
- 685 views
-
-
பேசாப் புள்ளி விபரங்கள் - நிலாந்தன் 01 டிசம்பர் 2013 போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்திழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு கடந்த வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஒரு சிறப்புச் செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஜெனிவாக் கூட்டத் தொடரை முன்னிட்டு அரசாங்கம் செய்துவரும் மற்றொரு வீட்டு வேலையே இது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான போரில் ஏற்பட்ட இழப்பு விபரங்களைக் குறித்து திருத்தமானதும், விஞ்ஞானபூர்வமானதும் அனைத்துலகப் பெறுமனங்களிற்கு அமைவானதுமாகிய புள்ளி விபரங்களைக் காட்டவேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. உண்மையை அங்கீகரிப்பதிலிருந்தே நல்லிணக்கம் ஆரம்பமாகின்றது. புள்ளி விபரங்கள் உண்மையின் தவிர்க…
-
- 0 replies
- 685 views
-
-
கருணா கைது பின்னணி என்ன? விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்தவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உப தலைவருமான கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முதன்மையான தளபதிகளில் ஒருவராக இருந்த கேர்ணல் கருணா, 2004ஆம் ஆண்டு, புலிகள் அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறினார். அப்போது கருணாவுக்கு, ஐ.தே.க. அரசாங்கமும், அதற்குப் பின்னர் வந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுப் பிரிவும் போதுமான பாதுகாப்பை வழங்கியி…
-
- 0 replies
- 685 views
-
-
Tears of Gandhi 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நடத்தப்பட்ட கோரப் படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி நினைவுகூரப்பட்டது. அண்மையில் – கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆப்கானிஸ்தான், குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது அமெரிக்க வான் தாக்குதலால் 13 வைத்தியசாலை ஊழியர்…
-
- 0 replies
- 685 views
-
-
ஒற்றையாட்சியைத் தாண்டி வருவேன் என தேர்தலுக்கு முன்னர் கூட்டமைப்புக்கு சிறிசேன உறுதியளித்தது உண்மையா? - குமாரவடிவேல் குருபரன் 15 மே 2015 அன்று யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எம். ஏ. சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் திரு. சுமந்திரன் அவர்கள் முன்னர் பகிரங்கமாக அறியப்படாத செய்தி ஒன்றை வெளியிட்டார். மைத்ரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது அதில் ஒற்றையாட்சி அரசை மைத்ரிபால விட்டுக்கொடுக்க மாட்டார் என்ற வாசகம் சேர்க்கப்பட இருந்ததாகவும், தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த வார…
-
- 0 replies
- 685 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கருத்துருவாக்கத் தளத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு முன்வைத்தவர் மு. திருநாவுக்கரசு.அவர் அதனை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எழுதியிருந்தார். அதற்குரிய தர்க்கங்களை முன்வைத்து அவர் “பொங்குதமிழ்” இணையத் தளத்தில் ஒரு கட்டுரையும் எழுதினார்.அதன்பின் 2015 ஆம் ஆண்டும் ஒரு கட்டுரையை எழுதினார்.அதன் பின் 2019 ஆம் ஆண்டும் ஒரு காணொளியில் பேசியிருக்கின்றார்.ஆனால் அவருடைய கருத்தை எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல்வாதியோ கிரகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. 2019 ஆம் ஆண்டு ஜனாதிபத…
-
- 6 replies
- 685 views
- 1 follower
-
-
கடும் நிபந்தனைகளுடன் கால அவகாசத்தைப்பெற்ற அரசாங்கம் ஜெனிவாவிலிருந்து எஸ்.ஸ்ரீகஜன் கடந்த ஒரு மாதகாலமாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையானது உலகநாடுகளின் மனித உரிமை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை குறித்தும் பரபரப்பான விவாதங்கள் இடம்பெற்றன.இலங்கை தொடர்பாக இம்முறை கூட்டத் தொடரில் மூன்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதுடன் ஒரு பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் இலங்கை தொடர்பாக விவாதம் ஒன்றும் நடைபெற்றது. இவ்வாறு கிட்டத்தட்ட ஒரு மாதகாலம் முழுவதும் இலங்கை தொடர்பான விடயங்கள் பரபரப்பாக ஆராயப்பட்டு வந்த நிலையில் மிக அதிகளவான உப குழுக்கூட்டங்களும் நடைபெற்றன. அந்தவகையில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் புலம்பெயர் அம…
-
- 0 replies
- 685 views
-
-
புதிய யுக்தி பயனளிக்குமா? இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்குரிய இறுதிச்சந்தர்ப்பம் இது மட்டுமன்றி இறுதி அரசாங்கமும், ஆட்சியும் இதுவாகத்தான் இருக்க முடியுமென்பது உணரப்படுமுண்மை. காரணம் இலங்கையிலுள்ள இரு பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றுகூடி, ஆட்சி அமைக்கக்கூடிய இன்னுமொரு சந்தர்ப்பம் இலங்கை அரசியலில் உருவாகுமா? என்பது எதிர்பார்க்கக்கூடிய விடயமல்ல. புதிய அரசியல் சாசனத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதற்கு புதிய யுக்தியைக் கையாளப்போவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்…
-
- 0 replies
- 685 views
-
-
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள் அமைதியின்மையை தூண்டுகிறார்கள்? கனடாவின் அமைதியான பயணத்தில், ஒரு குழப்பமான கதை வெளிப்படுகிறது. வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கத்துடன் சாலையோரப் பலகைகள் மற்றும் சுவரொட்டிகள் எழுந்துள்ளன.இது நாட்டின் பல்வேறு சமூகங்களின் அமைதியான சகவாழ்வைக் குழப்புகிறது. இந்த அறிகுறிகள்; ஒரு இடத்தை ‘போர் மண்டலம்’ என்று பிரகடனப்படுத்துமளவிற்கு உள்ளது. இந்த தூண்டுதலின் சின்னங்கள், மொல்டன் குர்தாவாராவிற்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், காணப்படுவதோடு மொல்டன் அல்லது ஒட்டுமொத்த கனடா கூட போர் மண்டலமா? என்ற கேள்வியை ஏற்படுத்துகின்றன. கிரேட்டர் டொராண்டோ பகுதியிலஉள்ள ஒரு கோவிலில் சமீபத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை கு…
-
- 0 replies
- 685 views
-
-
பிரதமர் நியமித்த குழுவின் கதி என்ன? – நஜீப் பின் கபூர் இந்தக் கட்டுரையை நாம் எழுதி நிறைவு செய்கின்ற நேரத்தில் 20 தொடர்பில் புதிய பல அதிரடித் தீர்மானங்களுக்கு அரசு வந்திருக்கின்றது. அதனால் பிரதமர் நியமித்த குழுவால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. அவர்களது எந்த சிபார்சுகளும் அதில் உள்வாங்கப்படவில்லை. அது எப்படி வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதோ அதே போன்று தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது என்று ஆளும் தரப்பினர் தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். எனவே ஜனாதிபதி விரும்பியவாறுதான் அது தற்போது பாராளுமன்றத்துக்கு விரைவில் வருகின்றது. திருத்தங்கள் இருப்பின் அங்கே பார்த்துக் கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி கடும் தெனியில் கட்டளை போட்டதால் பிரதமர் …
-
- 0 replies
- 685 views
-
-
பிரித்தானியத் தமிழர் பேரவை கூட்டமைப்பை எச்சரிக்கை செய்கிறதா? கலாநிதி சர்வேந்திரா பிரித்தானியத் தமிழர் பேரவை சிறிலங்காவின் 68வது சுதந்திரநாளை முன்னிட்டு ஊடக அறிக்கையொன்றை கடந்த 04.02.2016 அன்று விடுத்திருந்தது. இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட பல விடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைமைக்கு இடித்துரைக்கப்பட்ட விடயங்கள் போலவே தோன்றின. இது பிரித்தானியத் தமிழர் பேரவை குறித்த பலரது அண்மைக்கால எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்த அறிக்கையாகவும் இருந்தது. கடந்த செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பிரித்தானியத் தமிழர் பேரவை பங்குபற்றிய பின்னர், இவர்களும் உலகத…
-
- 0 replies
- 685 views
-
-
[size=6]இலங்கைத்தீவில் தமிழ்தேசியத்தின் இருப்பும் அதன் எதிர்காலமும் – மீள் சிந்திப்புக்கான முன்மொழிவுகள்[/size] [ வியாழக்கிழமை, 19 யூலை 2012, 09:50 GMT ] [ புதினப் பணிமனை ] /images/t/Art/thinking-statue.jpg 'புதினப்பலகை'க்காக ம.செல்வின். [அண்மையில் நோர்வே ஒஸ்லோ பல்கலைகழகத்தில் நடைபெற்ற ‘போருக்கு பின்னான இலங்கையில் நிலஅபகரிப்பும் இனப்பிரச்சனையும்'; என்ற கருத்தரங்கில் பேராசிரியர் நடராஜா சண்முகரத்தினம் இலங்கையின் தேசியஇனப்பிரச்சனை சார்ந்த அரசியலினை ‘மீள்சட்டகப்படுத்தல்’ [Reframing] செய்யவேண்டிய அவசியம்பற்றி பேசியிருந்தார். இக்கட்டுரை அவர்குறிப்பிட்ட விடயத்தினை விளங்கிக்கொள்ளும் ஆரம்ப முயற்சியே]. 01. பிர…
-
- 0 replies
- 685 views
-
-
அச்சுறுத்தலில் பிராந்திய பாதுகாப்பு ! மழைவிட்டும் தூவானம் நிற்கவில்லை என்பது போல் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடைபெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாளுக்கு நாள் அதன் பிரதிபலிப்புக்கள் இடம்பெற்றுக்கொண்டே இருக்கின்றன. தற்கொலை தாக்குதல்களை அடுத்து பாதுகாப்புத்துறையினரின் உடனடிச் செயற்பாடுகள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அடுத்து நிகழாத வகையில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எனினும் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது அதிர்ச்சி விடயங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அந்த விடயங்கள் பரஸ்பரம் உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனாலும் தீவிரவாதத்…
-
- 2 replies
- 685 views
-
-
தூண்டப்பட வேண்டிய அச்ச உணர்வு தினந்தோறும் அல்லது வாராந்தம், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக, பாலியல் வன்முறை தொடர்பான செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இது, இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் காணப்படும் வழமையாகவுள்ளது. பாலியல் வன்முறைகள், அதனைத் தொடர்ந்து சில வேளைகளில் நடத்தப்படும் படுகொலைகள் தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டாலும் சிலர் தண்டிக்கப்படுவதுடன், பலர் விடுதலையாகின்றனர். சரியான சாட்சியங்கள் இல்லாமையும், பாதிக்கப்பட்டவர், தனக்கு ஏற்பட்ட வன்முறையை பகிரங்கமாகத் தெரிவிக்க மறுப்பதும் அல்லது மறைப்பதுமே பலரின் விடுதலைக்குக் காரணமாகிறது. தனிநபரொருவருக்கு எதிராகவோ,…
-
- 0 replies
- 684 views
-
-
-
- 0 replies
- 684 views
-
-
ஜெனிவாத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. திருவிழாவின் பிரதான உபயகாரர் தன்னுடைய திக்குப் பாலகர்களை இலங்கைக்கு அனுப்பத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே சொன்னபடி திருவிழாவுக்கு ஏற்ற ஆயத்தங்களை இலங்கை செய்து முடித்திருக்கிறதா அல்லது முருங்கை மரத்திலிருந்து இன்னமும் இறங்காமல் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்பதை அறியவேண்டியது உபயகாரரின் கடமை. இல்லாவிட்டால் திருவிழா நடத்தியும் பயனில்லை. ஒருவேளை இன்னமும் முருங்கை மரமே தஞ்சமென்று இலங்கை வேதாளக் குணங்களோடு இருந்தால், திருவிழா மங்கலகரமாக இருக்காது. மாறாக பேயோட்டும் சடங்காக மாறிவிடும். திக்குப் பாலகர்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பி, தாம் குடிகொண்டிருக்கும் முருங்கை மரம் பற்றிய கணிப்புகளைக் கலைக்க இலங்கையில் மணிமுட…
-
- 1 reply
- 684 views
-
-
ஈழத்தமிழரின் எதிர்காலம் என்ன? - கற்பனையும் யதார்த்தமும் தத்தர் பெருவல்லரசுகளும், வல்லரசுகளும் 21ஆம் நூற்றாண்டின் மத்தியின் பின்னான தமது எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுத்துள்ளன. சிங்கள அரசு ஈழத்தமிழினத்தை முற்றிலும் அடையாளம் அற்றவர்களாகவும், நாதியற்றவர்களாகவும் ஆக்குவதற்கான நீண்டகால திட்டங்களுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது ஈழத்தமிழர்கள் தன்நிலையை விருப்பு வெறுப்பின்றி காய்தல் உவர்த்தல் இன்றி சரிவர மதிப்பிட்டு எதிரிகளின் பிடிகளிலும் அழிப்புக்களிலும் இருந்து எப்படி தப்பிப்பிழைத்து முன்னேறுவது என்பதற்கான ஒரு நீண்டகால பார்வை கொண்ட திட்டத்தை வகுத்தாக வேண்டும். ஈழத்தமிழர்கள் புவிப்பரப்பில் அறியப்பட்ட அளவுக்கு அவர்களின் பிரச்சனைகளும் உரிமைகளும் இலட்சியங்களும் அறியப…
-
- 0 replies
- 684 views
-