Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. 246 . Views . இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக (அமைச்சரவை) – இருந்தபோது, இராணுவத்திற்கு மிகப்பிடித்தமான நபராக இருந்தார். இராணுவம் இழைக்கும் அத்தனை அநீதிக்கும் தான் பொறுப்பு எடுத்துக் கொள்வது போன்ற உறுதிப்பாட்டை வழங்கி எந்த பாரதூரமான செயலுக்கும் அஞ்ச வேண்டாம் என்று அவர் வழங்கிய அனுமதியே அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி யுத்தகாலத்தின் போது அவர் இராணுவத்திற்கு வழங்கிய உரையில் குறிப்பிட்ட “தமிழ் ஆண்கள் அனைவரும் கடலுக்கு; தமிழ் பெண்கள் அனைவரும் உங்களுக்கு…” என்ற கூற்று மிகப் பிரபல்யமானதாக இருந்தது. தமிழர்கள் உளவியல் கோட்டாபய ராஜபக்ச மீது அச்சமும், வெறுப்பும் கொண்டிருந்தார்கள். அவருக்கு தமிழர்களின் உயிர் பொருட்டாக ஒருபோதும் இரு…

  2. குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை பரிந்துரை செய்ய வேண்டும் – கனடாவெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை இலங்கை அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், ந…

  3. குலையுமா கூட்டு அரசாங்கம்? கூட்டு அர­சாங்­கத்தில் அங்கம் வகிக் கும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்கள் சிலர், இப்­போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக் குத் தலை­வ­லியைக் கொடுக்கத் தொடங்­கி­யுள்­ளனர். வரும் செப்­டெம்பர் மாதம், பிரதி அமைச்­சர்கள், இரா­ஜாங்க அமைச்­சர்கள் 18 பேர் வரை, அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறி தனிக் குழு­வாகச் செயற்­படப் போவ­தாகக் கூறி வரு­கின்­றனர். உட­ன­டி­யாக உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்த வேண்டும், பிர­தமர் பத­வியில் இருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்க வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்­கை­களை முன்­னி­றுத்­தியே, இந்தக் குழு­வினர், அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேறத் திட்­ட­மிட்­டி­ருக…

  4. குளப்பிட்டிச் சம்பவம் -மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன் குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து…

  5. குளிர்கால ஒலிம்பிக்ஸ்: உறையும் பனியில் முகிழ்த்த உறவு கோடைகால ஒலிம்பிக் போட்டியை அறியும் அளவுக்கு நாம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியை அறிவதில்லை. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியே பலவற்றைச் சாதித்திருக்கின்றன. இம்முறையும் அதற்கு விலக்கல்ல. தென்கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, அதன் போட்டிகளுக்காகவன்றி, அதைச் சூழ நிகழும் அரசியல் விடயங்களுக்காக மிக்க கவனிப்புக்கு உள்ளாகிறது. தென்கொரியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு வடகொரியா கொடுத்த முக்கியத்துவம் இவற்றுள் ஒரு முக்கிய விடயமாகும். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க அணிவகுப்பில், போரால் ப…

  6. குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? - நிலாந்தன் 05/08/2018 வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. நேற்றுக் காலை அராலி அம்மன் கோவிலடியில் நடந்த சந்திப்பில் பெருந்தொகையான குடும்பத்தலைவிகள் கூடியிருக்கிறார்கள். இன்று நடக்கவிருக்கும் புலமைப் பரிசில் பரீட்ற்சைக்குத் தோற்றும் மாணவர்களால் நிம்மதியாகப் படிக்க முடியவில்லை என்று அவர்கள் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.அப்பகுதி பிதேச சபை தவிசாளர் தரும் தகவலின் ப…

  7. குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள் சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள். கடந்த சில வாரங்களாக உலகத்தின் கவனம், சிரியா மீது மீண்டுள்ளது. சிரியாவில், குழந்தைகள் சாகும் படங்கள் வெளியிடப்பட்டு, அங்கு ஒரு மனிதப் பேரவலம் நடந்தேறுவது போல, ஊடகங்களும் சமூக ஊடாட்டத் தளங்களும் சொல்கின்றன. திடீரென்று சிரியா மீது என்றுமில்லாத …

  8. குழப்பங்களுக்கு காரணம் யார்? கடந்த பெப்­ர­வரி மாதம் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்த போது, கூறிய விடயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும். தமிழ் மக்களின் இலக்குகளை அடைவதற்கு ஒற்றுமை மிகவும் அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயும் வெளியேயும், தமிழர் தரப்பில் பிளவு காணப்படுகிறது. எனவே ஒற்றுமை முக்கியமானது” என்று திரும்பத் திரும்பக் கூறியிருந்தார். வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விவ­கா­ரத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­படக் கூடிய பிள­வுகள், இரா.சம்­பந்­தனின் எதிர்க்­கட்சித் தலைவர் பத­விக்கும் கூட ஆபத்தை ஏற்­ப­டுத…

  9. குழப்பங்களைத் தீர்ப்பாரா ஜனாதிபதி? கே. சஞ்சயன் / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:13 Comments - 0 ஐக்கிய தேசியக் கட்சி, பெரும்பான்மை பலத்தை நிரூபித்தாலும் கூட, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிடிவாதம், அவர் நாட்டின் தலைவராகச் செய்யப்படுகிறாரா அல்லது, தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒருவராகச் செயற்படுகின்றாரா என்ற ஐயத்தை எழுப்பி இருக்கிறது. இதன்மூலம், தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணும் எல்லா வழிகளையும் அடைக்கின்ற ஒருவராகவே அவர் மாறியிருக்கிறார் . நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை பலமில்லாத ஒருவரைப் பிரதமராக நியமித்து, குழப்பத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, பெரும்பான்மை …

  10. குழப்பதற்கு காரணம் கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்களா…? நரேன்- ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் தேசிய இனம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் அரசாங்கமும் தமிழ் மக்களின் உடைய மனநிலையை புரிந்து உளப்பூர்வமானதாக அவர்களது நாளாந்தப் பிரச்சனைகளைக் கூட தீர்க்க முன்வரவில்லை. தமிழ் மக்கள் தமது தலைமையாக கருதுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூட தமிழ் மக்களது அபிலாசைகளை புரிந்து அதற்கு ஏற்றவகையில் காத்திரமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றத…

  11. குழப்பத்தில் சிக்கிக் கொண்ட வட மாகாண ‘ஊழல் எதிர்ப்பு’ மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பெருமளவில் விலகி, சுயமாக இயங்குவதன் மூலம், வட மாகாண சபை ஏனைய எட்டு மாகாண சபைகளை விட, மிகவும் வித்தியாசமான நிறுவனமாகவே இயங்குகிறது. ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் வயதாகிவிட்ட ஏனைய எட்டு மாகாண சபைகளில் ஒன்றேனும் வட மாகாண சபையின் சுயாதீனத் தன்மையில் பத்தில் ஒன்றையேனும் கொண்டதில்லை. ஏனைய மாகாண சபைகள், அனேகமாக எப்போதும் மத்திய அரசாங்கத்தின் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதே இதற்குக் காரணமாகும். அவை எப்போதும், மத்திய அரசாங்கத்தின் தலைவர்களின் சொல்லுக்கிணங்கவே செயற்பட்டு வந்துள்ளன. …

  12. குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேர­வையின் கூட்டம் பெரும் பர­ப­ரப்­பையும், விமர்­ச­னங்­க­ளையும் தோன்­று­வித்­தி­ருக்­கி­றது. காரணம், பேர­வையில் அங்கம் வகிக்கும் பங்­கா­ளி­க­ளுக்குள் தோன்­றி­யுள்ள முரண்­பா­டுகள் தான். இதனால், தமிழ் மக்கள் பேர­வையின் எதிர்­காலம் குறித்த கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்ற நிலையும் தோன்­றி­யி­ருக்­கி­றது. தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்­டதே, ஒரு குழப்­ப­மான அர­சியல் நிகழ்ச்சி நிர­லுடன் தான். பேரவை உரு­வாக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்­பு­களும், தமிழ்த் தேசிய அர­சி­யலை வலுப்­ப­டுத்­து­வது என்ற பெயரில், முன்­னெ­டுத்த…

  13. குழப்பத்தில் மக்கள்…..? ருத்திரன்- கடந்த 30 வருடகாலமாக தமிழ் மக்களின் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட ஆயுதவழிப்போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளியவாய்கால் பேரவலத்துடன் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் அபிலாசைகளையும், உரிமைக் கோரிக்கைகளையும், அவர்களுக்கான தேவைகளையும் தொடர்ந்தும் முன் கொண்டு சென்று அதனை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் தோள்களில் சுமத்தப்பட்டிருந்தது. ஆனால் யுத்தம் முடிவடைந்து கடந்த எட்டரை ஆண்டுகளில் அதன் நகர்வுகள், செயற்பாடுகள் என்பன எவ்வாறு அமைந்திருக்கின்றது என்ற கேள்வி உள்ளது…? அவர்களின் தற்போதைய நகர்வு தமிழ் மக்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க வழிவகுக்குமா என்ற கேள்வி…

  14. குழப்புகிறாரா? குழம்புகிறாரா? வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் மீண்டும் அர­சி­யலில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் ஒரு­வ­ராக மாறி­யி­ருப்பதாக கூறப்படு­கிறது. அவ­ரது அண்­மைய அறிக்­கைகள், கருத்­து­களில் ஏற்­பட்­டுள்ள தளம்பல் அல்­லது குழப்ப நிலை, பல்­வேறு தரப்­பி­னரும் அவரை வைத்து அர­சியல் செய்யும் சூழ­லையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. உள்­ளூ­ராட்சித் தேர்தல் தொடர்­பாக முத­ல­மைச்சர் தனது நிலைப்­பாட்டை விளக்கி ஓர் அறிக்­கை­யுடன் நிறுத்திக் கொண்­டி­ருந்தால், அர­சியல் சார்­பற்­றவர் என்ற நடு­வு­நி­லை­யுடன் நின்று கொண்­டி­ருக்க முடியும். அவ்­வா­றான ஒரு நிலைப்­பாட்டை எடுப்பார் என்றே பல­ராலும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. 2015 ப…

  15. குழப்புதலும் அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் Editorial / 2018 நவம்பர் 06 செவ்வாய்க்கிழமை, மு.ப. 05:33 Comments - 0 - அகிலன் கதிர்காமர் பதினொரு நாள்களுக்கு முன்னர், அதிகாரம் கைப்பற்றப்பட்டமையும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற நிகழ்வுகளிலும், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்த பின்னர், அவரால் போடப்பட்ட திட்டங்களின் உச்சநிலையே என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. அது தொடர்பான உத்தியாக, சிறிசேன - விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் குழப்புதலும், பின்னர் இயக்கச் செயற்பாடுகள், தேர்தல்கள் மூலமாக, அதிகாரத்தை ஒன்றுதிரட்டலும் என்ற வகையில் அமைந்திருந்தது. இவ்வாண்டு பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ராஜபக்‌ஷ பிரிவினர் பெற்ற…

  16. குழம்பவேண்டாம் அரசியல் தீர்வுக்கா அபிவிருத்திக்கா முன்னுரிமை கொடுப்பது என்ற விடயத்தில் பல தசாப்தங்களாகவே தமிழ் அரசியல் தரப்புகள் குழம்பிப் போயிருக்கின்றன. அந்தக் குழப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இப்போதும் விட்டுப் போகவில்லை. தமிழர்களைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்தல் இவையிரண்டும் முக்கியமான விடயங்கள். ஆனாலும் காலம் மற்றும் தேவைக்கேற்ப இவற்றைக் கையாள்வதில் தமிழ் அரசியல் தரப்புகள் சரியாகச் செயற்பட்டுள்ளனவா என்ற கேள்வியுள்ளது. தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்திய விடுதலைப் புலிகளாகட்டும், அவர்களுக்குப் பின்னர் அதனைக் கையாண்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகட்டும், அபிவிருத்தி சார்ந்த …

  17. குழம்பிப் போயுள்ள வடக்கு அரசியல் புதிய கட்சிகளின் உருவாக்கம், உள்ளூராட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள், ஏட்டிக்குப் போட்டியான விமர்சனங்கள், எதிர்கால முதலமைச்சர் யார் என்ற அனுமானங்கள் போன்றவை, வடக்கின் அரசியல் களத்தை மீண்டும் சுவாரசியப்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அடுத்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. எனவே கொள்கை, கோட்பாடுகளுக்கு அப்பால், எல்லாக் கட்சிகளும், அதற்குத் தயாராக வேண்டிய நிலையில் உள்ளன. ஜனவரி மாதம் நடக்கவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் முறையில், மாற்றங்கள் அறிமுகமாக இருப்பதாலும், மாகாண சபைத் தேர்தலும் கூட, தொகுதிவாரி முறையுடன் கூடியதாக நடக்க இருப்பத…

  18. குழம்பிப்போயுள்ள கட்சிகள்! : செல்வரட்னம் சிறிதரன் 07/11/2015 இனியொரு.. நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியாக மூன்றாவது தடவையாகவும் பதவி வகிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டு மக்கள் மீது வலிந்து ஜனாதிபதி தேர்தலைத் திணித்தார். இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு வருடங்கள் இருந்த நிலையிலேயே இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அறிவித்தலை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தடவையாக ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதற்கு அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவருடைய அரசியல் எதிர்பார்ப்பு சுக்கு நூறாகியது. வீசிய கையும் வெறும் கையுமாக அவர் தென்மாகாணத்தில் உள்ள தனது வீட்டிற்…

  19. குழம்பும் தென்னிலங்கை – தமிழர் பிரச்சனை என்னாகும்? யதீந்திரா இலங்கை அரசாங்கம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியாதளவிற்கு நாளுக்குநாள் தென்னிலங்கை அரசியலில் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாரம் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றவுள்ளதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்து. ஆனால் பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்பங்களைத் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் என்றுமில்லாதவாறு நாடாளுமன்ற வளாகத்திற்குள்ளேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்ணாவிரதமிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக செய்திகள் வெளியாயிருக்கின்றன. பா…

  20. பாகம் 1 பாகம் 2 விவாதத்தில் கலந்து கொள்பவர்கள் ஊடகவியலாளர் அகமட் இர்சாட் நடராஜர் காண்டீபன் சுரேந்திரன்.

  21. குஷ்பு முற்ற வெளிக்கு வர மாட்டார்? நிலாந்தன். யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா. adminNovember 19, 2023 மற்றொரு இசை நிகழ்ச்சியும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் 21 ஆம் தேதி யாழ்.முத்த வெளியில் தமிழகப் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அந்நிகழ்ச்சியைப் பிரபல்யப் படுத்துவதற்காக களமிறக்கப்பட்ட இரண்டு தமிழகப் பிரபல்யங்கள் சர்ச்சையாக மாறியிருக்கிறார்கள். ஒருவர் நடன ஆசிரியர் கலா மாஸ்டர். மற்றவர் நடிகை குஷ்பு. கலா மாஸ்டர் கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடாத்தியவர். இறுதிக்கட்டப் போரில் ஈழத் தமிழர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர் தமிழக மக்களைத் திசை திருப்புவதற்காக அந்த நிகழ்ச்சியை நடாத்தினார் என…

  22. கூடங்குளமும் வேண்டாம் என்றால் மின் தட்டுப்பாட்டை எப்படித் தான் தீர்ப்பது? இத்தனை நாட்கள் கழித்து இப்போது கூடங்குளத்தில் போராட வேண்டிய தேவை என்ன? இதற்கு நேரடியாக விடை சொல்வதை விடக் கூடங்குளத்தில் பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்ற கவிஞர் மாலதி மைத்ரியின் விடையைச் சொல்கிறேன். ‘உங்கள் மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து, திருமணம் பண்ண முடிவு செய்துவிட்டீர்கள். திருமண நாள் குறித்தாகிவிட்டது; மண்டபத்திற்குப் பணம் கொடுத்தாகிவிட்டது; சொந்தக்காரர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழும் அனுப்பிவிட்டீர்கள். நாளை காலை திருமணம். இன்று இரவு தான் உங்களுக்கு அதிர்ச்சியான ஒரு செய்தி தெரிய வருகிறது – நீங்கள் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்கு எயிட்சு நோய் இருக்கிறது என்று! இப்போது சொல்லுங்கள்! பல்ல…

    • 4 replies
    • 1.2k views
  23. கூடங்குளம் போராட்டம் - நாம் கற்க வேண்டிய பாடம் நீண்ட நாட்களாக மனதில் புரண்டு கொண்டிருந்த ஆவலை கடந்த சனி, ஞாயிறுகளில் தீர்த்துக் கொண்டேன். நண்பர்கள் இருவருடன் கூடங்குளம், இடிந்தகரை சென்றிருந்தேன். கூடங்குளம் பகுதியில் இருக்கிற ஒரு பொறியியல் கல்லூரியில்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் கணிப்பொறியியல் படித்தேன் என்பதால், அந்தப் பகுதியின் நிலவமைப்பு எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றுதான். மிகவும் வறண்ட பூமி. அரிதாகத் தென்படும் மரங்கள், உரத்து வீசும் காற்று, 150 மீட்டர் உயர வெள்ளைக் கொக்குகளாக நிற்கும் காற்றாலைகள், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் ஆண்கள் - இவை இந்தப் பகுதியின் பொதுவான அடையாளங்கள். படித்தவர்கள் என்ணிக்கை அதிகமாக இருந்தாலும், மிகவும் பிற்போக்கான பகுதி இது. சாத…

    • 1 reply
    • 585 views
  24. [size=5]கூடங்குளம், அடுத்த தமிழின அழிப்பின் ஆரம்பமா? [/size] [size=1][size=4]இன்று பலவகை போராட்டங்களை அகிம்சை வழியில் தமிழக மக்களின் ஒரு பகுதியினர் முன்னெடுத்து வருகின்றனர். இன்று யாழில் ஒட்டியதாக கூறப்படும் ஒரு சுவரொட்டியில் முள்ளிவாய்க்காலின் பின்னராக இந்திய நடுவண் அரசு திட்டமிட்டு அரங்கேற்றிய தமிழின அழிப்புன் அடுத்த கட்டமோ என அஞ்சப்படுவதாக கூறுகின்றது. [/size][/size] [size=5] சில பயனுள்ள திரிகள் : [/size] [size=5]அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?[/size] [size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=108177[/size] [size=5]ஒரு கைக்கூலியின் கதை.. கூடங்குளம் உதயகுமாரின் கதை[/size] [size=…

  25. கூடவே இருந்து குழி பறிக்க ஆள் தேவை? அண்மையில் வடக்கு மாகாண அரசியல் அரங்கில் அநாவசியமான, அநாகரிமான, அசிங்கமான விடயம் நடந்தேறியுள்ளது. கொடிய போரால் அனைத்தும் இழந்த தமிழ் மக்கள், ‘குடிக்கும் கஞ்சிக்கு உப்பு இல்லையே’ என்று நாளாந்தம் கதறுகின்றார்கள். ஆனால், அவர்களைப் பிரதிநிதித்துவம் ( ? ) செய்யும் அரசியல்வாதிகள் ‘கொண்டைக்கு பூ இல்லையே’ என்று அடம் பிடிக்கின்றனர் என்பது போல, களநிலைவரம் உள்ளது. தற்போதைய வடக்கு மாகாண அமைச்சர்களின் ஊழல் விவகாரமும் அதற்கான தீர்ப்பும் பின்னர் அதன் வழி வந்த போராட்டங்களும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, முப்படையினரின் காணி அபகரிப்பு, முன்னாள் போராளிகளின் பிரச்சினைகள், முழுமை அடையாத …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.