அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி? - யதீந்திரா இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்…
-
- 0 replies
- 610 views
-
-
The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள் உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது? வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர். ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தபோது, அமைதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.…
-
- 0 replies
- 610 views
-
-
வடக்கு மாகாணத்தில் சூடுபிடிக்கும் தேர்தல் களமும் கட்சிகளின் நிலைவரமும் சண்முகவடிவேல் பாராளுமன்ற தேர்தல் வடக்கு மாகாணத்தில் அதி தீவிரமான நிலையை எட்டிவருகிறது. ஆதீக்கம் செய்த தரப்பு தோல்வியை அடையும் நிலையில் தமிழ் மக்கள் கூட்டணி மூன்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை நோக்கி நகர்கிறது. நீதியரசர் தலைமையிலான அக்கூட்டணிக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. வலிகாமம் பிரதேசத்திலும் வடமராட்சியிலும் விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கூட்டங்கள் அதனையே வெளிப்படுத்துகிறது. அதே நேரம் தேசிய மட்டத்தில் போட்டியிடும் கட்சிகளும் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளும் வடமாகாணத்தில் அதிக நெருக்கடியை நோக்கி பயணிக்கின்றன. பொதுவெளியில் அல்லது தென் இலங்கை…
-
- 1 reply
- 610 views
-
-
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …
-
- 0 replies
- 610 views
-
-
ஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா? நிலாந்தன்:- 02 மார்ச் 2014 இம்முறை ஜெனிவாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழ் லொபியானது, முன்னைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், துலக்கமான ஒரு கருத்தொருமைப்பாட்டை எட்டியிருப்பது தெரிகிறது. தமிழ் டயஸ்பொறாவிலும், தமிழகத்திலும் ஒழுங்கு செய்யப்படும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள், முன்வைக்கப்படும் சுலோகங்கள் என்பவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அது தெரியவரும். அதாவது, முன்னைய ஆண்டுகளைப் போலன்றி இம்முறை போர்க்குற்ற விசாரணை என்ற மையப்பொருளைக் கடந்து இனப்படுகொலை எனப்படுவதே மையப்பொருளாக மாறியிருக்கிறது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை நிறுவுவதன் மூலம் அதற்குரிய உச்சபட்ச பரிக…
-
- 2 replies
- 610 views
-
-
எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டிய கதை கடந்த வாரம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதம் சம்பந்தனின் நேர்காணலை, ‘தமிழ்மிரர்’ பத்திரிகையில் வாசிக்கக் கிடைத்தது. அது, ‘எருமை மாடு ஏரோப்பிளேன்’ ஓடுவதற்கான சாத்தியங்கள் குறித்து, ஆழமாக யோசிக்க வைத்தது. குறிப்பாக, மூன்று பதில்கள் இவ்வாறு யோசிக்க வைத்தன. “மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு உண்டா” என்ற வினாவுக்கு அளிக்கப்பட்ட பதில் யாதெனில், “நல்லாட்சி அரசாங்கத்தை, நாங்கள் தான் ஆட்சியில் இருத்தினோம். தமிழ் மக்களுக்குத் தீர்வைத் தர அவர்களும் முயன்றார்கள்; அவர்களால் முடியவில்லை. ஆனால், நாங்கள் ஏமாந்து விட்டோம் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ளவில்லை” என்பதாகும். இது, பூவைப் பூ என்றும் ச…
-
- 0 replies
- 610 views
-
-
அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…
-
- 0 replies
- 610 views
-
-
சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம் March 9, 2019 நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன. …
-
- 0 replies
- 610 views
-
-
வெறுந்தேசியம் விலையாகுமா? – அரிச்சந்திரன் ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. இம்முறை பொறுப்போடு நினைவுகூரப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் முள்ளிவாய்க்காலில் கூட வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்று பிரித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. வழமையாக பெருமளவில் மக்கள் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவி…
-
- 0 replies
- 610 views
-
-
வித்தியாவின் மரணத்தின் பின்னரான சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரல் நிர்மானுசன் பாலசுந்தரம் பல ஆயிரக்கணக்கான பாலியல் வல்லுறவின் கொடூரங்களையும், அது சுமந்து நிற்கும் பெரும் வலிகளையும் தமிழர் தேசம் கடந்து வந்திருக்கிறது. இவற்றில் பலவற்றிற்கு சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாத உரிமை மறுப்பு இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவை வெறும் துயர் பகிர்வோடு நிறைவுற்றன. கிரிசாந்தி, கோணேஸ்வரி மற்றும் ரஜனி போன்றவர்கள், குறிப்பாக கிரிசாந்தி மீதான சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படைகளின் கூட்டு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் பேசப்பட்டும் கூட, மக்கள் போராட்டத்திற்கான ஓர் உடனடியானதும் நேரடியானதுமான தோற்றுவாயாக மாற்றம் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புங்குடுதீவில் சிவலோகநாதன் வித்தியா என்னும் …
-
- 0 replies
- 609 views
-
-
-
- 1 reply
- 609 views
-
-
வரப் போகும் தேர்தல்களில் ஈஸ்டர் தாக்குதல்களின் தாக்கம் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 மே 29 புதன்கிழமை, பி.ப. 06:32 Comments - 0 தேசிய தவ்ஹீத் ஜமாஅத் பயங்கரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலால், நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள். ஆனால் அவர்கள், ‘நடந்தவை இறைவனின் நாட்டம்’ எனக் கருதி, அதற்காக முஸ்லிம்களைப் பழிவாங்கவோ, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை விதைக்கவோ முற்படாமல், அமைதியாக இருக்கிறார்கள். இலங்கை கத்தோலிக்கர்களின் பேராயரான கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் “நடந்தவை இறைவனின் சோதனை” என்றே வர்ணித்தார். ஆனால், பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஏனைய பேரினத்தவர்கள், அதனைப் பாவித்து, முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்தி வருகிறா…
-
- 0 replies
- 609 views
-
-
வடக்குக்கு ஏற்பட்ட கறை வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டு, கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள சூழலில் மிகப்பெரிய சோதனை ஒன்றைச் சந்தித்திருக்கிறது. இன்னமும் சுமார், 15 மாதங்கள் மாத்திரமே ஆயுள்காலத்தைக் கொண்ட மாகாணசபையின் தற்போதைய அரசாங்கம், இதுபோன்றதொரு சூழலை எதிர்கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. தமிழ் மக்களால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்ட வடக்கு மாகாணசபை, இந்த நான்கு ஆண்டுகளிலும் சாதித்தவற்றை விட, இப்போது அதற்கு ஏற்பட்டுள்ள கறையே பெரிதாகத் தெரிகிறது. வடக்கு மாகாணசபையில் அமைச்சர்களுக்கு எதிராக் குற்றச்சாட்டுகளை ஆளும்தரப்பினரே முன்வைத்ததும், அதுகுறித்து விசாரிக்க முதலமைச்சரே, ஓய்வுபெற்ற நீதிபத…
-
- 2 replies
- 609 views
-
-
Posted by: on Jul 24, 2011 சர்வதேச நீதிமன்றம் அல்லது உலக நீதிமன்றம் என அழைக்கப்படும் ஐ.சி.ஜே., 1946 ஆம் ஆண்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. உலக நாடுகளுக்கிடையே ஏற்படும் சில சர்ச்சைகளை இவ் ஐ.சி.ஜே. தீர்த்து வருகிறது. இவ் ஐ.சி. ஜே. நிறுவப்படுவதற்கு முன்னர் 1899 ஆம் ஆண்டு சி.பி.ஏ. என்ற நீதி நிறுவனம் 1922 தல் சி.பி.ஐ.ஜே. என்ற சர்வதேச நீதி மன்றம் நாடுகளுக்கிடையேயான சர்ச்சைகளை பேச்சுவார்த்தை விசாரணை, மத்தியஸ்தம் ஆகிய முறைகள் மூலம் தீர்த்து வந்துள்ளன. சில ஆய்வாளர்கள் உட்பட பலர் ஐ.சி.ஜே.யையும் ஐ.சி.சி.யையும் ஒன்றாக எண்ணிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதாவது உலக நீதிமன்றம் என்னும் சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice- I.C.J) என்பார்கள். இவ் ஐ.சி.ஜே. ந…
-
- 0 replies
- 609 views
-
-
தமிழர்க்கெதிரான இறுதிப்போரில் தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் கூறுகிறார்? அந்தோணி தேவசகாயம், கல்வி ஆராய்ச்சி-இல் அரசியல்த்துறை மாணவன் (2002-தற்போது) 16ம.நே. முன்பு அன்று புதுப்பிக்கப்பட்டது சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர். …
-
- 0 replies
- 609 views
-
-
சர்வதேசத்திடம் கையேந்தி நிற்போருக்கு... சர்வதேச அரசியலோ, இராஜதந்திர உறவுகளோ, வெறும் கூட்டல் கழித்தல் கணக்கல்ல. அவை எந்தவொரு பொதுச் சூத்திரத்தின் அடிப்படையிலும் விளங்கிக்கொள்ளக் கூடியவையல்ல. அவை, தேசநலன்களாலும் தந்திரோபாய, மூலோபாயத் தேவைகளின் அடிப்படைகளிலும் வழிநடத்தப்படுபவை ஆகும். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தமிழ் மக்களுக்கு ஆதரவானதெனவும் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம், இப்போது தமிழ் மக்களுக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக, முன்னெப்பொழுதையும் விட, மிகுந்த முனைப்புடனும் அக்கறையுடனும் செயற்படுகின்றது என்ற பொய்களின் சாயம், வெளுத்துக் காலம் கடந்து விட்டது. ஆனாலும், இன்னமும் சர்வதேசத்தின் மீது நம்பிக்கை …
-
- 0 replies
- 609 views
-
-
எனது கடந்த வாரக் கட்டுரை, �மகிந்த முன்னாலுள்ள தெரிவு � 13ஐ திருத்துவதா? ஒழிப்பதா?� என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது. ஆனால், பத்திரிகையின் முதல் பக்கச் செய்தித் தலைப்பு, 'சர்வஜன வாக்கெடுப்புக்கு மகிந்த அரசு தயாராகின்றது' என்று இடம்பெற்றிருந்தது. அதன் பக்கத்தலைப்பாக, '13ஐ இரத்துச் செய்யுமாறு நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல்' என்று பதிவாகியிருந்தது. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று முரணாகவும், வேறுபட்டதாகவும் இருப்பதை அவதானிக்கலாம். உண்மைதான்! 13வது திருத்தச் சட்டத்தை என்ன செய்வதென்று தெரியாமல் மகிந்த அரசு தடுமாறுவதன் வெளிப்பாடே இந்தச் செய்திகளும், அதன் தலைப்புகளும். அறிவித்தபடி தேர்தல் நடத்தவில்லையானால், பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஆபத்தாக முட…
-
- 0 replies
- 609 views
-
-
சு.கவின் கலைந்துபோன கனவு கே. சஞ்சயன் / 2019 செப்டெம்பர் 09 திங்கட்கிழமை, மு.ப. 10:43 Comments - 0 2015இல் தான் பொறுப்பு ஏற்ற நாட்டை மாத்திரமன்றி, தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் குழப்பமான நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. 1951ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமமான போட்டிக் கட்சியாக இருந்துவந்த; மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு, செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில், சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றே கடந்த…
-
- 0 replies
- 609 views
-
-
22 ஜூன் 2011 ஜே.சி.வெலிஅமுன பகுதி 2 - தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் இறுதிச் சடங்கும் அரச கைப்பற்றுகையும் அனேகமாக, அரசினுடைய நடவடிக்கைகளில் ஆகத் திகைப்பு ஊட்டுவதாக, கொல்லப்பட்டவரின் 'இறுதிச் சடங்கு' இருக்கிறது. ஒரு சனநாயக சமூகமானது அந்த இறுதிச் சடங்குகளில் என்ன நடந்தது என்பதை மறக்கக் கூடாது என்பது கட்டாயமானதாகும். மீண்டும் சொல்கிறேன், கட்டாயமானதாகும். குறிப்பாக, இனி வரப் போகும் காலங்களில், இதுதான் நடக்கப் போகிறதாக இருக்கலாம் என்பதனால்தான் அதனை மறைக்க வேண்டாம் என்கிறேன். இறுதிச் சடங்குகளை அரச ஊடகங்கள் கையாண்ட முறையானது, போர்ச் செய்திகளை அவை கையாண்ட முறையிலிருந்து வேறுபட்டதாக இல்லை. அச் செய்திகள் அரசுக்கு ஆதரவானதும் ஒரு பக்கச் சார்பானதாகவும்…
-
- 0 replies
- 609 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
2019-08-21 12:29:31 இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமை குறித்து ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளும் தமது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்டி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்களாகச் செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்து வதுதான் ஜனாதிபதி மைத்திரியின் நோக்கம். அந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடந்த கால நடவடிக் கைகள் அமைந்துள்ளன. ஜனாதிபதியும் பிரதமரும் நமக்குச் சமன். இருவரையும் வைத்துக் கொ…
-
- 1 reply
- 608 views
-
-
பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் Bharati October 13, 2020 பூகோள அரசியல் சக்திகளின் விளையாட்டு மைதானமா இலங்கை – கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்2020-10-13T11:37:48+05:30Breaking news, அரசியல் களம் FacebookTwitterMore கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியாவுக்கு அண்மையில் அமைந்திருப்பதனால் அதிகம் மூலோபாய முக்கியத்துவத்தை கொண்டுள்ளதைக் காணமுடிகிறது. அத்தகைய மூலோபாயமே அதன் அரசியல் பொருளாதார இருப்புக்கும் செழுமைக்கும் காரணமாக விளங்குகிறது. அத்தகைய மூலோபாய அமைவு இலங்கைக்கான வாய்ப்பே அன்றி பாதிப்பாக விளங்கிக் கொள்ள முடியாது. இலங்கையின் புதிய அரசா…
-
- 0 replies
- 608 views
-
-
-
- 0 replies
- 608 views
-
-
கச்சதீவை கையில் எடுத்த மோடி!இலங்கைக்கு நெருக்கடியா? | தாயகக்களம் | செல்வின் மரியாம்பிள்ளை
-
- 1 reply
- 608 views
-
-
புள்ளிகள் இல்லாத புள்ளிகள் கடந்த வாரம் முல்லைத்தீவில் நடைபெற்ற மரணக்கிரியையில் பங்குபற்றுவதற்காகச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு, அவலக் குரல் அழுகைக் குரல் கேட்டு வானமே ஒரு கணம் அழுதது. ஆனால், ஐம்பது வயதை அண்மித்த அம்மா ஒருவர், இம்மியளவும் அசராமல் இருந்தார். மெல்ல அவரை அணுகி, காரணத்தை வினாவியபோது, பதில் தூக்கிவாரிப் போட்டது. “2009ஆம் ஆண்டு மேமாதம் தொடக்கம், அழுதழுது எனது கண்ணீரீன் இருப்புத் தீர்ந்து விட்டது” என்றார். அன்றைய தினம், பொதுச்சந்தை செல்வதற்கான தேவை ஏற்பட்டது. நேரம் காலை பத்து மணி; சந்தை களை கட்டியிருந்தது. “ஒரு பக்கத்தால அடி விழுந்தா தாங்கலாம்; ஆனா எல்லாப் பக்கங்களாலும் அடி வி…
-
- 0 replies
- 608 views
-